Wednesday, August 24, 2011

அருள்பொங்கும் சூலூர் திருப்பதி


250 வது பதிவு..
அருள்பொங்கும் சூலூர் திருப்பதி











  சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஆர்.வி.எஸ் கல்லூரி வளாகத்தில் 
வட திசை நோக்கி மனநிறைவாக வழிபடும் வகையில் அழகாக அருள்மிகு 
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோவில் நின்ற திருக்கோலத்தில் 
இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்து அருள் பொழிகிறது.
சூலூர் திருப்பதி என்றே சிறப்புப் பெற்றிருக்கிறது.

கும்பாபிஷேகத்தின் போது திருப்பதி திருக்கோவிலில் இருந்து வந்த அர்ச்சகர்கள் அலங்காரம் செய்து சிறப்பித்தது கண்கொள்ளாக் காட்சி .
நாம் வணங்கும் தலம் திருப்பதி ஷேத்திரம் என்றே அருள் பொங்கிய உணர்வு அன்று நிரம்பியது.
கோவிலில் மூன்று நிலைகள் கொண்ட விமானம், கருவறை முகமண்டபம், அழகிய சிம்மத்தூண்கள அழகான சிற்பத்தூண்கள் அனைத்தும் சோழர்கால நுணுக்க வேலைப்பாடுகள் கொண்டு விளங்குகிறது.


கோவில் கட்டும்போது சென்று பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ராஜராஜசோழன் தஞ்சைப்பெரிய கோவில் கட்டிய திரைப்படக்காட்சியாக பிரமிக்கவைத்தது.ஆரம்பித்த ஒரு வருடம் நிறைவதற்குள்ளாகவே பிரம்மாண்ட கோவிலும் கோலாகல கும்பாபிஷேகமும் வியக்கவைத்தது.


பக்த ஆஞ்சநேயரும், கருடாழ்வாரும் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.


கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியின் ஞான குருவாகிய ஹயக்கிரீவரின் தரிசனம் கல்விக்கடல் வளாகத்தில் பொருத்தமாக திகழ்கிறது.

அலங்கார சிற்பத்தூண்கள் நிரம்பிய மகாமண்டப்த்தில் தனி விமானத்துடன் கூடிய ஆலயத்தில் ஞான முத்திரையுடன் சரஸ்வதி தேவி அருள்பாலிக்கும்  அற்புத காட்சி கூத்தனூரை நினைவுபடுத்துகிறது.




கும்பாபிஷேகத்தின் போது சிலநாட்கள் தொடர்ந்து இடைவிடாத 
அன்னதான நிகழ்வுகள் சிறப்பான ஏற்பாடுகளுடன் பிரமிக்கவைத்தது.க்குக்குக்ம்



சிற்பக்கலையழ்கோடு திகழும் திருமாலின் தசாவதார சிறபங்கள் ரசிக்கவைக்கிறது. 



நே

[thiru.jpg]

நேற்று வணங்கிய குமரன் கோட்ட முருகன் ஆலயமும் -வெங்கடேசப் பெருமாளும் ஒரே வளாகத்தில் அருகருகே அமைந்து அருள்பாலிக்கிறார்கள். சூலூர் சென்று வணங்கி ஆனந்தப்படலாம்..










படங்கள் தகவல்களுக்கு மனம் நிறைந்த நன்றி 
http://www.rvstemples.com/sulurthirupathi/index.html

48 comments:

  1. கடவுள் ஸ்தலங்களை படங்களுடன் காடியிருக்கிறீங்க..
    பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. காலையிலேயே வேங்கடவன் தரிசனம். தங்களுக்கு நன்றி.

    250-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்...

    மேலும் பல பதிவுகள் எழுதவும் எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  3. காலைவணக்கங்கள்!
    பதிவும் படங்களும் அருமை!

    ReplyDelete
  4. உங்கள் பதிவுகளில், படங்கள் ஸ்பெஷல் இடத்தை பெறுகின்றன. அருமை.

    ReplyDelete
  5. @வெங்கட் நாகராஜ் said...
    காலையிலேயே வேங்கடவன் தரிசனம். தங்களுக்கு நன்றி.

    250-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்...

    மேலும் பல பதிவுகள் எழுதவும் எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.//

    வேங்கடவன் தரிசனம் -@
    வெங்கட் நாகராஜ் -- நிறைந்த நன்றி.

    ReplyDelete
  6. @ கோகுல் said...
    காலைவணக்கங்கள்!
    பதிவும் படங்களும் அருமை!//

    நிறைந்த காலை வணக்கம். நன்றி.

    ReplyDelete
  7. @ vidivelli said...
    கடவுள் ஸ்தலங்களை படங்களுடன் காடியிருக்கிறீங்க..
    பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..//

    அன்புடன் பாராட்டுக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. @ Chitra said...
    உங்கள் பதிவுகளில், படங்கள் ஸ்பெஷல் இடத்தை பெறுகின்றன. அருமை.//

    ஸ்பெஷல் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வழக்கம் போல படங்களும்
    பதிவும் அமர்க்களமா இருக்கு.

    ReplyDelete
  10. தங்களின் வெற்றிகரமான 250 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், ஆசிகள்.

    இப்படிக்கு படிக்குப்பாதிகூட தாண்டாத vgk

    [தங்களின் ஆகாயவிமானம் போன்ற வேகத்திற்கும், கடுமையான உழைப்புக்கும் மேலும் மேலும் 500, 750, 1000 என்ற இலக்குகளை வெகு விரைவில் எட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு சந்தோஷத்துடன் கூடிய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் - அன்புடன் vgk]

    ReplyDelete
  11. செல்வோம் எனும் செல்வத்தை
    சொல்லாமல் தரும் திருப்பதி கடவுளைப் பற்றிய
    பக்திக் கட்டுரை
    பக்தி கொண்டோம் சகோதரி.

    ReplyDelete
  12. சுழலும் உலக உருண்டையைச் சுற்றி வரும் WELCOME. ஆஹா! அருமை.

    என்னப்பொருத்தம் .. ஆஹா இந்தப்பொருத்தம்!

    உலகமே இன்று திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் தினசரிப் படைப்புகளையும், அழகழகான படங்களையும் WELCOME சொல்லி வரவேற்பதாக எனக்குத் தோன்றியது.

    vgk

    ReplyDelete
  13. அருள்பொங்கும் சூலூர் திருப்பதி கோயில் பற்றிய அனைத்து விபரங்களும், அசத்தலான படங்களும் வழக்கம் போல் அருமையான உள்ளன.

    //கும்பாபிஷேகத்தின் போது .... பிரமிக்கவைத்தது.//

    என்பதற்கு கீழே பக்தர்கள் கூட்டத்தினை அழகாக coverage செய்து காட்டியுள்ளது பிரமிக்கத்தான் வைக்கிறது.

    அந்தக்கும்பலில் தங்களைத் தேடிப்பார்த்தேன். தலை சுற்றியது. நேரில் பார்க்காத தங்களை எப்படி நான் தேடமுடியும் என்பது தானே தங்கள் சந்தேகம்!

    Yes, You are correct! என் தலை சுற்றியதற்கும் அதுவே காரணம்.

    [இருப்பினும் தாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் ஓர் கற்பனை செய்து வைத்துள்ளேன் ..
    தெரியுமோ!] vgk

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. @ Lakshmi said...
    வழக்கம் போல படங்களும்
    பதிவும் அமர்க்களமா இருக்கு.//

    அமர்க்களமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  16. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    தங்களின் வெற்றிகரமான 250 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், ஆசிகள்.

    இப்படிக்கு படிக்குப்பாதிகூட தாண்டாத vgk

    [தங்களின் ஆகாயவிமானம் போன்ற வேகத்திற்கும், கடுமையான உழைப்புக்கும் மேலும் மேலும் 500, 750, 1000 என்ற இலக்குகளை வெகு விரைவில் எட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு சந்தோஷத்துடன் கூடிய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் - அன்புடன் vgk]//

    எமது பதிவுகளுக்கு நீங்கள் தரும் பிராணவாயு இருக்கும்வரை சந்தோஷமான பதிவுகள் தொடருமே!

    நம்பிக்கைக்கும் சந்தோஷ வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  17. @ மகேந்திரன் said...
    செல்வோம் எனும் செல்வத்தை
    சொல்லாமல் தரும் திருப்பதி கடவுளைப் பற்றிய
    பக்திக் கட்டுரை
    பக்தி கொண்டோம் சகோதரி.//

    பக்தி கொண்ட அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  18. @வை.கோபாலகிருஷ்ணன் said...//

    [இருப்பினும் தாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் ஓர் கற்பனை செய்து வைத்துள்ளேன் ..
    தெரியுமோ!] vgk

    வேங்கடவனையே வேண்டுவோம் ஒரு பதிவர் சந்திப்பிலோ திருச்சியிலோ கோவையிலோ சந்திக்க.

    ReplyDelete
  19. @ Rathnavel said...
    அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//

    அற்புதமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  20. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    250-க்கு வாழ்த்துகள்.//

    வாழ்த்துகளுக்கு நன்றி நண்டு @ நொரண்டு. அழகான நாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் நொரண்டுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    சுழலும் உலக உருண்டையைச் சுற்றி வரும் WELCOME. ஆஹா! அருமை.

    என்னப்பொருத்தம் .. ஆஹா இந்தப்பொருத்தம்!

    உலகமே இன்று திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் தினசரிப் படைப்புகளையும், அழகழகான படங்களையும் WELCOME சொல்லி வரவேற்பதாக எனக்குத் தோன்றியது.//

    பொருத்தமான அழகிய கவனிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  22. 250 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். வழக்கம்போல படங்களுடன் பதிவு அருமை.

    ReplyDelete
  23. 250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்கள் எழுத்தால் எங்களை மகிழ்விக்க வேண்டும்.

    வேங்கடவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

    ReplyDelete
  24. தகவல்களுக்கும்,படங்களுக்கும் நன்றி தோழி..

    ReplyDelete
  25. 250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.பதிவு வழக்கம்போல நன்று.

    ReplyDelete
  26. அழகிய படங்களின் வாயிலாக சூலூர் வேங்கடவனின் தரிசனத்துக்கு நன்றி,இராஜராஜேஸ்வரி மேடம்.
    250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. 250-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்...
    பக்திக் கட்டுரை... படங்கள்...அமர்க்களமா இருக்கு

    ReplyDelete
  28. வழக்கம் போல அனைத்தும்
    அருமை
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. @கோவை2தில்லி said...
    250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்கள் எழுத்தால் எங்களை மகிழ்விக்க வேண்டும்.

    வேங்கடவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.//

    தம்பதி ச்மேதராக எழுந்தருளியுள்ள தலைநகர தங்கங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  30. @shanmugavel said...
    250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.பதிவு வழக்கம்போல நன்று.//


    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  31. @ RAMVI said...
    அழகிய படங்களின் வாயிலாக சூலூர் வேங்கடவனின் தரிசனத்துக்கு நன்றி,இராஜராஜேஸ்வரி மேடம்.
    250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//

    தரிசனத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  32. இருநூற்றைம்பது பதிவு. வாவ்.வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  33. அனைத்து படங்களும் அருமையாக உள்ளது .
    அதிலும் ஆஞ்சநேயர் ,சரஸ்வதி விக்கிரகங்கள் அருமை நேரில் பார்ப்பது போன்று,
    கோவிலுக்கு சென்றால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க முடியுமா என்பது சந்தேகமே மேடம் .
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  34. @FOOD said...
    இருநூற்றைம்பது பதிவு. வாவ்.வாழ்த்துக்கள் சகோ.//

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  35. @ DrPKandaswamyPhD said...
    ஆஜர்.//

    ஆஜருக்கு நன்றி.

    ReplyDelete
  36. @ M.R said...
    அனைத்து படங்களும் அருமையாக உள்ளது .
    அதிலும் ஆஞ்சநேயர் ,சரஸ்வதி விக்கிரகங்கள் அருமை நேரில் பார்ப்பது போன்று,
    கோவிலுக்கு சென்றால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க முடியுமா என்பது சந்தேகமே மேடம் .
    பகிர்வுக்கு நன்றி//

    ஜருகண்டி கூட்டமெல்லாம் இருக்காது. கல்வி வளாகத்துக்குள் இருப்பதால் சிறப்பாக தரிசனம் செய்யலாம்.
    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  37. @ ஸ்ரீராம். said...
    250 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். வழக்கம்போல படங்களுடன் பதிவு அருமை.//

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  38. @
    புலவர் சா இராமாநுசம் said...
    வழக்கம் போல அனைத்தும்
    அருமை
    புலவர் சா இராமாநுசம்//

    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  39. @ ரெவெரி said...
    250-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்...
    பக்திக் கட்டுரை... படங்கள்...அமர்க்களமா இருக்கு//

    அமர்க்களமான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  40. தங்களது 250-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.... ஆன்மீக பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... படங்களும் பதிவுகளும் அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  41. ;)
    புத்திர் பலம் யசோ தைர்யம்
    நிர்ப்பயத்வ - மரோகதா

    அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.

    ReplyDelete
  42. 932+4+1=937 ;)))))))))))))))))

    Excellent Comments + Excellent Replies.

    என் பின்னூட்டங்களையும் தங்கள் பதில்களையும் மூன்று முறை மீண்டும் படித்துப்பாருங்கோ. ;)))))

    ReplyDelete