Saturday, January 25, 2014

ஸ்ரீ ஆஞ்சநேய மகாப்பிரபு மகிமை



அனுமான் அன்பின் வடிவ-அறத்தின் வடிவம்-
அருளின் வடிவம்-
ஆனந்தத்தின் வடிவம்-
இன்பத்தின் இருப்பிடம்-
இகபர சுகத்தின் உருவம்-
ஈகையின் ஈடில்லாத் தலைவர்-
உத்தம குணத்தோடு கூடிய உதார புருஷர்-
ஊர்த்தவ மூர்த்தியின் மோகன வடிவம். 
எங்கும் நிறைந்திருக்கும் எழில் வடிவம்- 
ஏகாந்த சேவையால் எழுந்தருளிய ஞான வடிவம்- 
ஐசுவரியங்களை அள்ளித் தரும் காம தேனு-
ஒப்பற்ற வரம்தரும் கற்பகத்தரு-
ஓங்கார ரூபத்தின் சிருங்கார வடிவம்- 
ஒளஷதமாக வந்தருளும் அமுத கலசம்-
என்றெல்லாம் ஆஞ்சநேயப் பெருமானை வார்த்தைகளால்-
உள்ளன்போடு பிரார்த்தித்துக் கொண்டே இருக்கலாம்

நவவியாகரண பண்டிதரும், சர்வ மந்திர தந்திரயந்திர சொரூபியுமாக நம்மோடு எழுந்தருளி, என்றும் சீரஞ்சீவியாக வாழ்ந்துவரும் அனுமான் தமது அன்பு பக்தர்களைக் காத்து ரட்சிக்க சதாசர்வ காலமும் சித்தமாயிருக்கிறார்.
கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வமாக விளங்கும் அனுமான் அன்புக்கும் தொண்டுக்கும், 
வீரத்திற்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் உத்தம பிரபுவாகத்திகழ்பவர்..!

ஈரேழு பதினான்கு லோகங்களிலும் வியாபிப்பவர். 

சொர்ண குண்டலங்கள் அணி செய்ய ஸ்படிகம் போன்ற திருமேனியில் 
மௌஞ்சி யக்ஞோபவீதம் விளங்க-உதாரமான புஜபலத்துடனும் 
அபாரமான சக்தியோடும் காட்சி தரும் வாயு புத்திரரான 
அனுமனைப் பிரார்த்திப்போர்க்கு நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் விருத்தியாகும். 
வலது திருக்கரத்தில் கதையைத் தாங்கி 
அணி மார்பில் சீதா ராமரைத் தாங்கித் 
திருத்தோற்றம் தரும் சிரஞ்சீவி ஸ்ரீ ராமபக்த அனுமானை 
ஆராதிப்பவருக்கு அனுமன் அபயவரத ஹஸ்தம் அளித்து 
என்றென்றும் ஆனந்தம் பொங்க அருள் புரிகிறார். 
ஸ்ரீ ஆஞ்சநேய மகாப்பிரபுவை கொண்டாடுவதால் நமக்கு கசல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். 

குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆத்மபலம், மனோபலம், புத்திபலம், தேகபலம், பிராணபலம், சம்பம்பலம் ஆகிய அறுவகைப் பலங்களையும் நாம் நிரந்தரமாகப் பெறுவதற்கு `சிறிய திருவடி' என்று அழைக்கப்படும் ஆஞ்சநேய மகாப்புரபுவின் சீரிய திருவடியை நாம் பற்றிக்கொள்ள வேண்டும் 

ஸ்ரீராமபிரானின் அருளாணைப்படி சேது சமுத்திரக்கரையில் அமர்ந்து ராம தியானம் செய்துவரும் சீரஞ்சீவி மாருதி, ராமநாமம் ஒலிக்கும் இடமெல்லாம் எழுந்தருளுகிறார். 
ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களிலெல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்- பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால்தான் துளசி தாஸர் ஸ்ரீ ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதஷணமாக வருவார். 

அந்த பக்தர்களோடு பக்தராக மாருதி எழுந்தருளியிருப்பார் என்பது அவருக்குத் தெரியும். 
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி ஆராதிக்கவேண்டும். 
வாலில் குங்குமப் பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். 
அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து அக மகிழ்வர். 
கொழுப்பு நிறைந்த அரக்கர்களைப் போர்க்களத்திலே தமது புஜபலத்தால் வடை தட்டுவது போல் தட்டி சம்ஹாரம் செய்தவர் ஆஞ்சநேயர். 


















எனவேதான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தைச் சேர்த்து, 
அவருக்கு வடை மாலை செய்து சாத்துகிறார்கள். 

சீதாபிராட்டியார் பரிசளித்த முத்து மாலையைச் சுவைத்து, ராமநாம சுகம் 
அதில் உள்ளதா என்று பார்த்து பிய்த்து எறிந்தவர் ஆஞ்சநேயர். 
அது போலவே வடை மாலையையும் அவர் கழுத்தில் போட்டவுடன் சுவைத்துப் பார்த்துப்போட்டு விடுகிறார். 
அனுமன்  திருவமுது செய்த அந்த உச்சிஷ்டம் மிகவும் விசேஷமானது!

14 comments:

  1. வணக்கம்
    அம்மா..

    சிறப்பான பாடல்கள் விளக்கமும் அழகிய படங்களும் பதிவுக்கு ஒரு மகுடம் அம்மா...காலைப்பொழுதில் நல்ல இறை தரிசனம்... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆஞ்சநேய மகிமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
    அனுமன் புகழ்பாடும் பகிர்வு அருமை. படங்கள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சிரஞ்சீவியான ராம பக்தரின் மகிமைகளை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி அழகான படங்களையும் காணக் கண் கோடி வேண்டும். அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
  5. வணக்கம் அம்மா
    அனுமனின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மிக அழகான படங்களோடு கருத்தைக் காட்சியாக பகிர்ந்த தங்களுக்கும் எனது அன்பான நன்றிகள், தங்கள் ஆன்மிகப்பயணம் பலரையும் நல்வழிப்படுத்தும். பகிர்வுக்கு நன்றிகள் அம்மா.

    ReplyDelete
  6. ராம ஜெயம். ஸ்ரீ ராம ஜெயம். வடைமாலைப் பிரசாதத்துடன் ஆஞ்சி தரிசனம்.

    ReplyDelete
  7. அனுமனின் புகழை பறைசாட்டும் பகிர்வு...

    ராம் ராம் ராம் ராம்...

    ReplyDelete
  8. ஆஞ்சநேய அரிச்சுவடி அருமை.
    அழகிய படங்கள். ஆஞ்சநேயரின் பெருமைகளை விவரிக்க இந்த ஒரு பதிவும் போதுமோ!..

    ReplyDelete
  9. இன்றளவும் பிரத்தியட்சமாய் அருள் புரிபவர் ஸ்ரீஆஞ்சனேயர். ராம் ராம் என்றாலே துணையாய் வரும் அவரின் பெருமைக்கு ஏது எல்லை ? அழகழகான படங்களுடன் விவரித்த உங்களுக்கும் வாசித்த எங்களுக்கும் அவர் அருள் கிடைக்க வேண்டுவோம் !

    ReplyDelete
  10. அனுமன் குறித்த அத்தனை தகவல்களும் சிறப்பு! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  11. சிறப்பான தகவல்கள், மற்றும் படங்கள். நன்றி அம்மா

    ReplyDelete
  12. ராமா! ராமா! ராமா!
    ஆஞ்சநேயரின் மகிமையே மகிமை..
    சிறந்த அபத்னகளுடன், விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
  13. பார்க்கப்பார்க்க அலுக்காத அனுமனின் படங்கள். அதைவிட அலுக்காத வடை மாலைகள்.

    கீழிருந்து 5வது படம் மிகப்பழமை வாய்ந்தது. அதில் தொங்கும் 15 வடைகள் ஆஹா, ருசியோ ருசியாக உள்ளன. ;)

    கீழே போட்டுள்ள சஞ்சீவிமலைக்கோலம் சூப்பர்.

    மொத்தத்தில் மிகவும் ஜோரான பதிவு. மனதுக்கு நிம்மதி தருகிறது.

    ReplyDelete