Thursday, July 2, 2015

அமிர்தேஸ்வரர் கோவில்






கர்நாடக மாநிலம், சிக்மகளூரிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில், டரிகெரே என்ற கிராமத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமிர்தேஸ்வரர் (சிவன்) கோவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள கோவிலுக்கருகில் ராமாயண காவியம் முழுவதும் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்ட ஆலயம். இரண்டாம் ஹொய் சாள மன்னன் வீரபல்லாலா என்பவரால் கட்டப்பட்டது.

 எழுபதுக்கும் மேற்பட்ட ராமாயண சிற்பங்கள் சதுர- நீள் சதுர கட்டங்களில் உள்ளன. இவற்றில் தற்போது 16 சிற்பங்கள் மட்டுமே பார்த்து மகிழும் நிலையில் உள்ளன. மற்றவை சேதமுற்றுள்ளன.

ஏழு காண்டங்கள் கொண்ட வால்மீகி ராமாயணக் கதையில், 
ஆறு காண்டங்கள் இங்கு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்குள் நுழைந்ததுமே ஹொய்சாள நாட்டின் வெற்றிச் சின்னம் சிற்பம் பிரம்மிக்கச் செய்கிறது.
நல்ல நிலையிலுள்ள 16 சிற்பக் கட்டங்கள்

1. அசோகவனத்தில் அனுமன் சீதையை வணங்குதல்.

2. இலங்கையில் அரக்கர்களுடன் அனுமன் சண்டை யிடுதல்.

3. இலங்கையைக் காவல் காக்கும் அரக்கர்கள்.

4. ராம- லட்சுமணர்களின் மாயத் தோற்றத் தலைகளை சீதைக்குக் காட்டும் பெண்.

5. வானரர்கள் இலங்கை செல்ல பாலம் அமைத்தல்.

6. இராவணனால் தாக்கப் படும் ஜடாயு.

7. இந்திரஜித்தும் லட்சுமண னும் போரிடுதல்.

8. மயக்கமுற்ற லட்சுமணன் ராமன் மடியில் கிடத்தல்.

9. மாயமானைப் பார்க்கும் ராம- லட்சுமணர்.

10. ராமர் போரிட, பின்னால் நிற்கும் லட்சுமணன்.

11. தூங்கும் கும்பகர்ணனை எழுப்பும் அரக்கர்கள்.

12. அங்கதனுக்கு ராமர் முடிசூட்டுதல்.

13. சீதையிடம் அனுமன் கணையாழியைக் கொடுத்தல்.

14. விஸ்வாமித்திரரைத் தொடர்ந்து செல்லும் ராம- லட்சுமணர்கள்.

15. சீதையை சிறையெடுத்தல்.

16. லட்சுமணன் சூர்ப்பனகையின் அழகை சிதைத்தல்.

ஆலயத்துக்குள் நுழைந்ததுமே ஒரு சிற்பம் பிரம்மிக்கச் செய்கிறது.
அது ஹொய்சாள நாட்டின் வெற்றிச் சின்னம்.

சிறுவன் ஒருவன் சிங்கத்துடன் சண்டை யிடுவதுபோன்ற மிகப்பெரிய சிற்பம்!

இக்கோவில்களின் உட்புறச் சுவர்களிலும், வெளிப்புறச் சுவர்களிலும் தெய்வங்கள், பறவைகள், மிருகங்களின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

டரிகெரே அமிர்தேஸ்வரர் கோவிலிலும் அருகிலுள்ள ராமாயணக் கோவிலிலும் தினசரி பூஜைகள் காலை 6.00 மணிக்குத் தொடங்கிவிடுகின்றன.



முதலில் மணியோசை கேட்கிறது, பின்னர் ஒலிபெருக்கிகள் மூலம் ராமாயணம் சம்பந்தப்பட்ட சுலோகங்களும், பக்திப் பாடல்களும் இனிமையாக ஒலிக்கின்றன.

சாதுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலமர்ந்து ராமநாம பஜனை செய்கின்றனர்.

பூசாரிகள் நித்திய பூஜைகளை ஒவ்வொரு சந்நிதியாக ஓடி ஓடிச் செய்கிறார்கள்.

இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் இந்த அழகிய ஆலயங்களைப் பற்றி கர்நாடக மக்களுக்கே பெரும்பாலும் தெரியவில்லை. உள்ளூர்வாசிகள்தான் வந்து வணங்குகிறார்கள்.

பேளூர், ஹளபேடு போல கலைஹளபேடு போல கலை பொக்கிஷமாக விளங்குகிறது இத்தலம்...



15 comments:

  1. வணக்கம்
    அம்மா
    படமும் சொல்லிய தகவலும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. டரிகெரே அமிர்தேஸ்வரர் கோவில் பற்றிய சிறப்பான தகவல்களை அறிந்தேன் அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. தொன்மை வாய்ந்த அழகிய ஆலயத்தை பார்க்கையில் மனம் நிறைவு ஏற்படுகிறது கூர்ந்து கவனித்து சிறப்புகளை கூறயதற்கு நன்றி.வாய்ப்பிருந்தால் சென்று வர வேண்டும்

    ReplyDelete
  4. செல்லும் ஆவலைத் தருகிறது இக்கலைக் கோவில். அருமையான பகிர்வு.

    ReplyDelete
  5. பேலூர், ஹலேபேட் கோயிலுக்குச் சென்றுள்ளேன். அக்கோயில்களைப் போலவே இக்கோயில் அமைப்பு காணப்படுகிறது. இக்கோயிலுக்குச் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். நன்றி.

    ReplyDelete
  6. வாருங்கள் அம்மா...நீண்ட நாட்களுக்கு பிறகு....நலம் தானே..?
    படமும் விளக்கமும் ஆசையைத்தூண்டுகிறது செல்ல...நன்றி

    ReplyDelete
  7. நல்லதொரு கோயில் அறிமுகம்! நன்றி!

    ReplyDelete
  8. புதுப் பொலிவுடன் மீள்வருகை நல்வரவாகுக. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அழகான படங்களுடன் இனிய பதிவு..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  10. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  11. அறியத் தந்தீர்கள் அம்மா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நீண்ட நாட்களுக்குப் பிறகு த்ங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரேஹ
    நன்றி

    ReplyDelete
  13. சிறப்பான சிற்பங்கள் இங்கே காணக் கிடைக்கும் எனத் தோன்றுகிறது. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete