Saturday, July 30, 2011

வற்றாத வரமருளும் வடதிருநள்ளாறு







அத்திமுகத்து இறைவன் -ஆனைமுகன் -சிவன்திருக்குமரன் விநாயகனும், ராமதூதன், சிவ அம்சமானவன் -சுந்தர ஐந்து முகங்களைக்கொண்டு இன்னல் களைபவன் -ஒன்றாய் இணைந்து அருளும் ஆலயம்......


பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை என்று வேடிக்கையாகக் குறிப்பிடும் பழக்கம் உண்டு.


வியாசபகவான் பாரதம் சொல்ல ஆனைமுகன் தன் கொம்பினை உடைத்து எழுத,பிள்ளையார் சுழியிட்டுத் தொடங்கி கிருஷ்ணபரமாத்மா தேரில் கொடியில் இருந்து அருள்பாலித்த பராக்கிரமசாலி அனுமன் கொடியிலிருந்து இறங்கியதோடு பாரதம் முடிவடையும் மிகப்பெரிய தத்துவத்தை உணர்த்தும் ஆழமான மொழி அது.


ஆதியும், அந்தமும் சேர்ந்து அருளும் தலம் மகத்துவம் மிக்கதாகத்தானே திகழும்!

ஸ்ரீ யக்ஞ விநாயகர், ஸ்ரீ நீலாம்பிகை ஸமேத சனீஸ்வர பகவான், ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆகியோர் ஒன்றாகக் குடி கொண்டு அருளாட்சி செய்யும் ஒரு அற்புதத் திருத்தலம்தான் சென்னை மேற்கு மாம்பலம், வெங்கடாசலம் தெருவில் கிழக்குப் பார்த்து அமைந்த அருமையான வட திருநள்ளாறு என்று சிறப்பிக்கப்படும் இடர்களையும் அற்புத ஆலயம்-
 “அருள்மிகு சனீஸ்வர-ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆலயம்’ .

ஆதியில் இந்த இடம் “புலியூர் கிராமம்’ என்று வழங்கப்பட்டு, ஒரு ஜமீன் பராமரிப்பில் இருந்து வந்தது.   


கோயிலில் விநாயக சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, சனிப்பெயர்ச்சி, ஸ்ரீராம நவமி ஆகிய நான்கு விசேஷங்களை ஒட்டி திருவிழா நடந்து வருகிறது. 


அந்த உத்ஸவங்களில் திரளான மக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, தெய்வ அருளாசி பெறுகின்றனர்.
தேவாதி தேவ கணபதியே அழகிய திருமுடி கொண்டவரே
திறமிகு ரிஷிகள் கணபதியே யாகத்தலைவனை ஒத்தவரே
பிறவியழிக்கும் கணபதியே பத்ம சரீரமுடையவரே
வெல்க வெல்க கணபதியே வேண்டி உம்மை வணங்குகிறேன்



யக்ஞ விநாயகர் என்று சிறப்புடன் அருட்காட்சி தந்து கற்பகவிநாயகராய் செல்வம்,கல்வி, திருமணம், மக்கட்செல்வம் அனைத்தும் அருளும் வரப்பிரசாதி. 


யக்ஞ விநாயகர் சிறப்பு :அரச மரத்தடியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ யக்ஞ விநாயகர்.எந்தச் சுப காரியம் என்றாலும் நாம் விநாயகரை துதிக்காமல் தொடங்குவது இல்லை. 


யாகத்தில் (யக்ஞம், வேள்வி) நாம் அக்னி தேவனையும், இதர தெய்வங்களையும் ஆராதனை செய்யும் முன்னர் விநாயகரை பூஜித்து, சுப காரியங்கள் தடங்கலின்றி நடந்தேறப் பிரார்த்திக்கின்றோம். 


அதை முன்னிட்டே இங்குள்ள பிள்ளையாருக்கு யக்ஞ விநாயகர்’ என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. யக்ஞ விநாயகர்’  சந்நிதியில் அநேக ஹோமங்கள் நடந்து வருகின்றன

சனீஸ்வரர்நவக்கிரஹ நாயகர் சனி பகவான், நவக்கிரஹ மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே அசுர கிரகமாக விளங்குபவர். 


மானுடராய்ப் பிறந்த அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அற்புத சக்தி படைத்த இவர்,  அண்டினவர்க்கு அருள் புரியும் வள்ளல்! 


சூர்ய பகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த சனி பகவானை “சனைச்சரன்’, “சனீஸ்வரன்’ என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். 


காசியில் சிவனை குறித்து கடும் தவம் இயற்றி, லிங்கப் பிரதிஷ்டை செய்து கிரஹ பதவி அடைந்து “சனீஸ்வரன்’ என்ற பெயரை இவர் பெற்றதாகச் சொல்கின்றனர்.


சனி பகவானை “ஆயுஷ்காரகன்’ என ஜோதிட நூல்கள் வர்ணிக்கின்றன. “சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழி. 


சனியின் பிடியில் சிக்கித் தவிக்காமல் வாழ, இவரை விசேஷமாக வழிபடுதல் அவசியம்.
பஞ்ச முக ஆஞ்சநேயர்

சனியின் பிடியிலிருந்து தப்பியவர்கள் ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ ஆஞ்சநேயரும் என்பது வழக்கு. 


அதிலும் பஞ்ச முக ஆஞ்சநேயரின் சிறப்பே தனி! 


தன் பக்தனைக் காக்க உடனே எழுந்தருளிய நரஸிம்ம மூர்த்தியின் அருள், 


விஷத்தை அடக்கி விரட்டும் கருட மூர்த்தியின் அருள், 


எதையும் புனருத்தாரணம் செய்து நிலை நிறுத்தும் சக்தி பெற்ற வராஹ மூர்த்தியின் அருள், 


பக்தர்களின் ஸர்வ மந்திர சுலோக முறையீடுகளையும் சித்தியாக்கும் ஹயக்ரீவ மூர்த்தியின் அருள், 


ராமநாம ஜெபம் செய்வோரைப் பாதுகாக்க உடன் தோன்றும், சகல சக்தி படைத்த ஆஞ்சநேய மூர்த்தியின் அருள் 


என இவ்வைந்து மஹா சக்திகளின் வடிவத்தை ஐந்து முகங்களாகக் கொண்டு ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேய மூர்த்தியாக அற்புதத் தோற்றத்துடன் திகழும் மூர்த்தத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! 
அவ்வளவு அழகு!

[anjaneya5a.jpg]
ஸ்ரீ சனிபகவானுடன், அரச மரத்தடியில் எழுந்தருளிய இந்தப் பஞ்ச முக ஆஞ்சநேயரையும் சேவிப்பதால் சனி தசை, சனி புக்தி, அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி ஆகியவற்றால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்கியம், மன நிம்மதி, காரிய சித்தி, வழக்குகளில் சாதகம், குடும்ப சுகம் ஆகியவை ஏற்படும்.



காஞ்சி பரமாச்சரியார் சனிபகவனுக்கென்றே சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு, காகவாகனத்தில் நீலாம்பிகையுடன் இணந்து அருட்காட்ச்தரும் ஆலயத்தை  வட திருநள்ளாறு என்று அருளிய சிறப்புவாய்ந்த தலம்.

56 comments:

  1. வினை தீர்க்கும் விநாயகன் இன்றைய பொழுது
    ஒரு சிறந்த ஆக்கத்தைக் கண்டுகொண்ட கண்களுக்கு
    நற் செய்திகளும் கிட்டட்டும்!....நன்றி சகோ எப்போதும்போல
    அதேதான் அருமை அருமை அருமை அழகான படங்களுடன்
    தோன்றும் ஆக்கம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி.என்
    வீட்டில் இன்று சோககீதம் (ஆடி அமாவாசை சிறப்புப் பதிவு)
    உங்கள் கருத்தை தவறவிடாதீர்கள். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. பெருமை வாய்ந்த திருத்தலம் !

    ReplyDelete
  3. @FOOD said...
    வினை தீர்க்கும் விநாயகன்.//

    நன்றி ..

    ReplyDelete
  4. @ koodal bala said...
    பெருமை வாய்ந்த திருத்தலம் !//

    நன்றி.

    ReplyDelete
  5. @அம்பாளடியாள் said...//
    நன்றி.

    ஆறுதல் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  6. திருநள்ளாறு சென்றிக்கிறேன் வடதிருநள்ளாறு பற்றியதகவல்கள் புதிது. பதிவுக்குநன்றி.

    ReplyDelete
  7. பஞ்சமுக அஞ்சனேயரை பார்ப்பதற்காகவே செல்லலாம் போல, அழகான விக்கிரகம்.

    ReplyDelete
  8. முதலில் காட்டியுள்ள நர்த்தன கணபதிகள் அருமையோ அருமை.
    ஆடி அமாவாசை தர்ப்பணம் முடிந்தபின் மீண்டும் மாலை [மாலையுடன் - (பிள்ளையாருக்கு)]வருவேன்.

    ReplyDelete
  9. விநாயகப் பெருமானின்
    அருள் திருமுகத்தைப்
    பார்த்ததும் பரவசம்.
    கட்டுரை அருமையாக இருந்தது.
    நன்றி சகோதரி.

    ReplyDelete
  10. @ gokul said...
    திருநள்ளாறு சென்றிக்கிறேன் வடதிருநள்ளாறு பற்றியதகவல்கள் புதிது. பதிவுக்குநன்றி.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. @ சாகம்பரி said...
    பஞ்சமுக அஞ்சனேயரை பார்ப்பதற்காகவே செல்லலாம் போல, அழகான விக்கிரகம்.//

    அழகான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  12. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    முதலில் காட்டியுள்ள நர்த்தன கணபதிகள் அருமையோ அருமை.
    ஆடி அமாவாசை தர்ப்பணம் முடிந்தபின் மீண்டும் மாலை [மாலையுடன் - (பிள்ளையாருக்கு)]வருவேன்.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. @மகேந்திரன் said...
    விநாயகப் பெருமானின்
    அருள் திருமுகத்தைப்
    பார்த்ததும் பரவசம்.
    கட்டுரை அருமையாக இருந்தது.
    நன்றி சகோதரி.//

    பரவசமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  14. எங்கிருந்து இது போன்ற தகவல்களைத் திரட்டுறீங்க.. நிறைய தடவ கேட்டுட்டேன்..பதில் ப்ளீஸ்..
    விருப்பமிருந்தால் ஈமெயிலில் சொல்லுங்க...அனைத்தும் அருமை..

    ReplyDelete
  15. வடதிருநள்ளாறு பற்றிய அபூர்வமான, ஆழமான தகவல்கள். நிறைய ஆன்மீக விஷயங்கள் தங்களின்
    பதிவுகள் மூலம் அறிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  16. அருமையான பதிவு.
    விநாயகரின் நடனமும் அருமை.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  17. பக்தி கட்டுரை அருமை ,

    பஞ்சமுக ஆஞ்சநேயர் படமும் அருமை

    முகப்பில் விநாயகர் மேளதாளத்தோடு நடனம் புரிவது அருமையிலும் அருமை
    அவரின் வாகனமும் இசைத்துக்கொண்டு
    நடனம் புரிவது அருமை .

    ரசித்தேன் பக்தியுடன் .நன்றி

    ReplyDelete
  18. திருநள்ளாருதான் பார்த்திருக்கிறேன்..

    இந்த ஆலயத்தைப்பற்றி தற்போதுதான் அறிகிறேன்...


    நன்றிகள்..

    ReplyDelete
  19. ஐந்து கரத்துடன்,
    கழுத்து மாலையுடன்,
    கையில் நழுவும் மிருதங்கத்துடன்,
    தோளில் பச்சை அங்கவஸ்திரத்துடன்,
    இடுப்பில் மஞ்சள் பஞ்சக்கச்சத்துடன்,
    செந்தாமரைக்கலரில் துண்டுடன்,
    தலைக்குமேல் கோலாட்டமிட்டபடி,
    குதியாட்டம் போடும்
    நர்த்தன கணபதி
    (அதுவும் டபுள் ஆக்டில்)
    குதூகலமளிக்கிறார்.

    அவர் கால் பட்டு நசுங்கிவிடுவோமோ என்று பயந்தபடி அந்த சுண்டெலியாரும் வாலைத் தூக்கி ஆட்டம்போடுவது அருமையோ அருமையல்லவா!

    நல்லதொரு நிறைவான படம் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நன்றி!

    ReplyDelete
  20. பிள்ளையாரின் படங்கள் அருமை! பதிவில் புதுத் தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  21. //பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை என்று வேடிக்கையாகக் குறிப்பிடும் பழக்கம் உண்டு//

    நாம் எந்த சுப காரியம் தொடங்கினாலும் பிள்ளையாரை பூஜித்தே துவங்க வேண்டும். அது அப்போது தான் வெற்றியாக முடிவடையும். முடிவடையும் வெற்றி என்பது தான் ‘குரங்கு’ ஆன ஹனுமார்.

    அதனால் தான் ராதா கல்யாணம், ஸீதா கல்யாண உத்சவங்களில், திவ்ய நாம பஜனைகளில் முதலில் பிள்ளையார் பூஜை செய்து துவங்குவார்கள். கடைசி நாள் கடைசி நிகழ்ச்சியாக ஹனுமத் ஜயந்தி என்று ஜெய் ஹனுமான் ஸ்லோகங்களுடன் பஜனை நிகழ்ச்சிகளை பூர்த்தி செய்வார்கள்.

    பிள்ளையாரை (நாம்) ப்பிடிக்க குரங்கில்(வெற்றியில்)தான் முடிய வேண்டும்.

    தாங்கள் சொல்லிய ’மஹாபாரதக்கதை’ விளக்கமும் அருமையாகவே பொருந்துகிறது.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. துபாய் சென்றபோது, துபாய் மியூசியம் அருகில், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஒரு அழகான பெரிய விக்ரஹரம் வைத்து சிறப்பாக வழிபாடு செய்து வருவதை நான் அங்கிருந்த 45 நாட்களில் 4-5 வியாழக்கிழமைகளில் சென்று தரிஸித்து வந்தேன்.

    அந்தநாள் (2004) ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ...
    உங்கள் இந்தப்பதிவைப்படித்ததும்.

    ReplyDelete
  23. //காஞ்சி பரமாச்சரியார் சனிபகவனுக்கென்றே சிற்ப்பாக ஏற்படுத்தப்பட்டு, காகவாகனத்தில் நீலாம்பிகையுடன் இணந்து அருட்காட்ச்தரும் ஆலயத்தை
    வட திருநள்ளாறு என்று அருளிய சிறப்புவாய்ந்த தலம்.//

    ”குருப்ப்ரும்மா குருவிஷ்ணுர்
    குருதேவோ மஹேஸ்வர:
    குரு சாக்ஷாத் பரப்பிரும்ம
    தஸ்மை ஸ்ரீ குரவே நம:”

    நல்லதொரு புதிய தகவல். நன்றி.

    ReplyDelete
  24. வழக்கம்பொல் அருமை. அனைத்தும் அருமை. வேறு விதமாக கருத்து எழுத நீங்கள் மாறவேண்டும். வேண்டாமே நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் வேகத்துக்கு ஈடு கொடுப்பதுதான் சற்று கஷ்டமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. வழக்கம்பொல் அருமை. அனைத்தும் அருமை. வேறு விதமாக கருத்து எழுத நீங்கள் மாறவேண்டும். வேண்டாமே நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் வேகத்துக்கு ஈடு கொடுப்பதுதான் சற்று கஷ்டமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. நர்த்தன விநாயகரும், பஞ்சமுக ஆஞ்சநேயரும் அழகோ அழகு.

    ReplyDelete
  27. பக்திப் பதிவுகளை நாளும் படங்
    ளோடு வெளியிடும் சகோதரி
    நன்றி!
    ஒரு வேண்டுகோள் நீங்கள் இவைகளைத் தொகுத்த புத்தகமாக
    வெளியிடுங்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. வழக்கம்போல உங்க பதிவு சூப்பர்.

    ReplyDelete
  29. தெய்வ தரிசனம் இங்கு வந்தாலே..

    ReplyDelete
  30. @ குணசேகரன்... said...
    எங்கிருந்து இது போன்ற தகவல்களைத் திரட்டுறீங்க.. நிறைய தடவ கேட்டுட்டேன்..பதில் ப்ளீஸ்..
    விருப்பமிருந்தால் ஈமெயிலில் சொல்லுங்க...அனைத்தும் அருமை..//

    எப்படி பதில் சொல்வது? ஒவ்வொருவர் தனித்திறன் அது.- ஓவியம் போல், சங்கீதம் போல்....

    ReplyDelete
  31. @சத்யா said...
    வடதிருநள்ளாறு பற்றிய அபூர்வமான, ஆழமான தகவல்கள். நிறைய ஆன்மீக விஷயங்கள் தங்களின்
    பதிவுகள் மூலம் அறிந்து கொள்கிறேன்./

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  32. @ Rathnavel said...
    அருமையான பதிவு.
    விநாயகரின் நடனமும் அருமை.
    வாழ்த்துக்கள் அம்மா.//

    அருமையான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  33. @M.R said...//

    பக்தியுடன் ரசித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  34. @ # கவிதை வீதி # சௌந்தர் said...
    திருநள்ளாருதான் பார்த்திருக்கிறேன்..

    இந்த ஆலயத்தைப்பற்றி தற்போதுதான் அறிகிறேன்...


    நன்றிகள்..//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  35. @ sparkkarthi said...
    nach padhivu//

    நன்றி.

    ReplyDelete
  36. @வை.கோபாலகிருஷ்ணன் sa//
    //குதியாட்டம் போடும்
    நர்த்தன கணபதி
    (அதுவும் டபுள் ஆக்டில்)
    குதூகலமளிக்கிறார்.

    அவர் கால் பட்டு நசுங்கிவிடுவோமோ என்று பயந்தபடி அந்த சுண்டெலியாரும் வாலைத் தூக்கி ஆட்டம்போடுவது அருமையோ அருமையல்லவா!

    நல்லதொரு நிறைவான படம் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நன்றி//

    நிறைவான தங்கள் ரசிப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம்நிறைந்த நன்றி ஐயா..

    ReplyDelete
  37. @ ரியாஸ் அஹமது said...
    OK//

    நன்றி.

    ReplyDelete
  38. @ G.M Balasubramaniam said...
    வழக்கம்பொல் அருமை. அனைத்தும் அருமை. வேறு விதமாக கருத்து எழுத நீங்கள் மாறவேண்டும். வேண்டாமே நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் வேகத்துக்கு ஈடு கொடுப்பதுதான் சற்று கஷ்டமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

    கருத்துரை சிறப்பாக இருக்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  39. @ ஸ்ரீராம். said...
    நர்த்தன விநாயகரும், பஞ்சமுக ஆஞ்சநேயரும் அழகோ அழகு.//

    அழகான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  40. @ middleclassmadhavi said...
    பிள்ளையாரின் படங்கள் அருமை! பதிவில் புதுத் தகவல்களுக்கு நன்றி//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  41. வை.கோபாலகிருஷ்ணன் s
    பிள்ளையாரை (நாம்) ப்பிடிக்க குரங்கில்(வெற்றியில்)தான் முடிய வேண்டும். //

    அழ்கான நிறைவான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  42. @ புலவர் சா இராமாநுசம் said...
    பக்திப் பதிவுகளை நாளும் படங்
    ளோடு வெளியிடும் சகோதரி
    நன்றி!
    ஒரு வேண்டுகோள் நீங்கள் இவைகளைத் தொகுத்த புத்தகமாக
    வெளியிடுங்கள்

    புலவர் சா இராமாநுசம்//

    புத்தக வெளியீடு பற்றி ஒன்றும் தெரியாது.
    அறிந்து முயற்சிக்கிறேன்.
    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  43. @வை.கோபாலகிருஷ்ணன் said...
    துபாய் சென்றபோது, துபாய் மியூசியம் அருகில், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஒரு அழகான பெரிய விக்ரஹரம் வைத்து சிறப்பாக வழிபாடு செய்து வருவதை நான் அங்கிருந்த 45 நாட்களில் 4-5 வியாழக்கிழமைகளில் சென்று தரிஸித்து வந்தேன்.

    அந்தநாள் (2004) ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ...
    உங்கள் இந்தப்பதிவைப்படித்ததும்.//

    பகிர்வைப் படித்ததும் அழகான பெரிய விக்ரஹரம் வைத்து சிறப்பாக வழிபாடு செய்து வருவதை த்ரிசித்த நிறைவு. நன்றி ஐயா.

    ReplyDelete
  44. @ பாலா said...
    வழக்கம்போல உங்க பதிவு சூப்பர்.//

    நன்றி.

    ReplyDelete
  45. @ ரிஷபன் said...
    தெய்வ தரிசனம் இங்கு வந்தாலே..//

    நன்றி.

    ReplyDelete
  46. பக்தி கட்டுரை அருமை...பதிவுக்கு நன்றி...

    ReplyDelete
  47. @ Reverie said...
    பக்தி கட்டுரை அருமை...பதிவுக்கு நன்றி...//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  48. தொடக்கமே அனிமேசன் வினாயகர் படம் கொள்ளை கொள்ள வைக்கிறது... நன்றி

    ReplyDelete
  49. தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html

    ReplyDelete
  50. 823+6+1=830 ;)))))

    தங்கள் பதில்களில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி ;)))))

    ReplyDelete