Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

Sunday, June 8, 2014

மலைமகாராணி சூடும் மலர் மகுடம்..


பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை

பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங்க் ரிங்க் ரிங்க்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே

காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே..

பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லம் அட ..ச ரி க ம ப த நி ச ரி..ஸ்..

பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல்....




ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே 
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

ஜப்பானில் உள்ள மலைப்பிரதேசத்தில் டேக்கினோயி பூங்காவில்
 மே மற்றும் ஜூன் மாதங்களில், எங்கு பார்த்தாலும், இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும்.

ஷிபாசகுரா எனும் இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்து, அந்த மலைப்பகுதி முழுவதும், கம்பளம் விரித்தது போன்று காணப்படும் அழகை கண்டு களிக்க, உலகின் பல பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

பூக்கள் பார்க்கும் போதே மனதை கொள்ளை கொள்ளும்.  பூக்கும் பூக்களை பார்க்கும் போது மனசெல்லாம், உற்சாகம் நிரம்பி வழியும் ..

பூமியே பூப்பூத்து சிரிக்கும் எழிலை எல்லாம் 
வார்த்தையால் வர்ணிக்கமுடியுமா என்ன...!

மலைமகாராணிக்கு மலர் மகுடம் சூட்டி 
மகிழ்ச்சிப்படுத்தும் பூப் பூக்கும் புன்னகைப்பூக்கள்..

காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்....

தொடர்புடைய பதிவுகள்..
மலர்க்கடலில் மகாராணி நகரம்


enjoy eating plum blossoms, as this Wild Parrot

பூமரங்கள் வீசும் சாமரங்கள்...
க்


Sunday, November 10, 2013

வண்ண மலர்'கள்..!


ஹெலிகோனியா கொய்மலர் "கிளிமலர்', கிளி வாழை, 
பொய் வாழை என்று அழைக்கப்படுகிறது. 
கிளிமலர்' கொய்மலராகவும், மேடை அலங்காரம், கல்யாண வரவேற்பு ஆகியவற்றில் அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது.
காற்றில் ஈரப்பதம் உள்ள இடங்களில் செழித்து வளரும். 
கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரம் வரை உள்ள 
பகுதிகளிலும் வெப்பமண்டல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.
திறந்தவெளியில் அதிக வெளிச்சம், நீர்ப்பாசன வசதி 
கொண்ட இடங்களில் நன்கு வளரும்.
ஹெலிகோனியாவில் சில ரகங்களின் பூக்கள் கொத்தாகவும், 
ஒரு சில ரகங்களின் மலர்கள் தலைகீழாகவும் 
மலரும் தன்மை உடையவை.
கிழங்குகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப் படுகிறது.
 "வௌவால்கள்'' மலரின் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. 
பொதுவாக ஹெலிகோனியா 8 மாதங்களில் அதாவது ஜனவரி மாதத்தில் நடவு செய்தால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை உள்ள காலங்களில் மலரும். 
அதற்கடுத்த வருடத்திலிருந்து ஏப்ரலிலிருந்து தொடங்கி 
டிசம்பர் வரை தொடரும். 
மொட்டு உருவானதிலிருந்து 15ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். முதல் வருடம் விளைச்சல் குறைவாகக் காணப்படும். 

அறுவடை செய்யும்போது பூத்தண்டின் நீளம் 70 செ.மீ. முதல் 1 மீ. 
வரை இருக்க வேண்டும்.