Tuesday, September 30, 2014

செல்வ வளம் செழிக்கும் நவராத்ரி



நவகோண நடுமையாய் நவரத்ன மணிபீடம்
நவக்கிரஹ நாயகியைச்சுற்றி நவசக்தி அவதாரம்

நவராத்திரி ஒளியேற்றி நலம்பாடி துதி செய்வோம்
நவ நிதி அருளும்  மீனாட்சி புகழ்சேர்க்க வருவாயே  

கருவாகும் உயிர்க்கெல்லாம் கருணைமாரி பொழிந்து
கசிந்துருகும் மனத்திலே இசைந்திருக்கும்  அன்னை..!

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்

சக்தி வழிபாடு   ஒன்பது நாள் விழாவாக    நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாக நவராத்திரி விழா பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் வகையில்  கொண்டாடப்படுகிறது..!
நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்து ,கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்கிறோம்..!

துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும். 

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்து  . நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது. 

பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும்; சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும்; சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம். 

மகேஸ்வரி, கவுமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்து நலம் பெறுகிறோம்.!

ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும்.

நவராத்திரி காலத்தில் மங்கல தீபம் ஏற்றி ,விடிய விடிய  விளக்கு எரிவது வீட்டிற்கு செல்வ வளத்தை தரும்.  

Monday, September 29, 2014

நவராத்திரி ஸ்ரீ மகாலஷ்மி பூஜை










அகணித தாரா கணங்களின் நடுவே ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
சகலசரா சரத்தும் தங்க சிலம்பொலிக்க ஜெகதீஸ்வரியவள் ஆடுகின்றாள் 

அயன் என வருவாள் அனைத்தையும் படைப்பாள்
ஹரிஎன அழைப்பாள் அரண்என அழிப்பாள்
அழிவில் இருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம்
அகிலாண்டேஸ்வரி ஆடுகின்றாள்

கிலம் முழுவதும் உள்ள ஆருயிரினங்களும்
ஆழப் பெருங்கடலில் வாழுயிரினங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகின்றாள்  

கனக கமலம் தன்னில் கனிந்த சிவப் பொருளைக்
கலந்து பேரின்பம் காட்டும் கனல் வடிவானவளாம்
நானற்ற நல்லோர்க்கெல்லாம் நானிதோ என்று தோன்றும்
ஞான பரமேஸ்வரி ஆடுகின்றாள்

இதயவீணை எழும் இன்னிசை அவளே
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே
நாற்பத்து மூன்று கோண நாகமணி மண்டபத்தில்
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஆடுகின்றாள்  

அழைக்கும்முன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக் காட்படுவாள் ஆனந்த கல்யாணிஅவள்
அருட்கவி மாலைபாடும் அகத்தியன் அகத்திலே
அமுத சுந்தரேஸ்வரி ஆடுகின்றாள் ஆனந்த நாடகம் ஆடுகின்றாள்
அகஸ்திய ஸித்தேஸ்வரி ஆடுகின்றாள்   

. ""திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் 
புரிந்து வருக வருகவென்றே கிளியே. மகிழ்வுற்றிருப்போம் என்று
 மகாகவி பாரதி போற்றிய மஹாலட்சுமி : மலரின் அழகு பொலிய அருள் பார்வையுடன் அழகாக விளங்கும் செல்வத்தின் தெய்வம். செல்வ வளம் தந்து அருள் புரிகிறாள்..

விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருந்து  நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுவதில் திளைகிறாள்..

நவராத்திரி பூஜையில் லஷ்மி பூஜை மிகவும் சிறப்பானது..

. "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க " என்று பெரியோர் வாழ்த்தும் பதினாறு செல்வங்களான சௌந்தர்யம், சௌபாக்கியம், கீர்த்தி, வீரம், வெற்றி, சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, புஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்கியம், மோட்சம் ஆகியவற்றிற்கு அதிபதியானவள்
ஸ்ரீ மகாலஷ்மி

Sunday, September 28, 2014

கோலாகல தசரா கொண்டாட்டங்கள்..




உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா அரசு விழாவாக பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு உற்சாக உற்சவ நிகழ்ச்சிகளாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது..! 

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனை வதம் செய்தது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி (வெற்றி தசமி) என்றும் கொண்டாடப்படுகிறது... 

துர்கா தேவி வதம் செய்த எருமைத்தலை அசுரன் மகிஷாசுரனின் பெயராலேயே மைசூர் நகரம் 'மஹிஷுர்' என்று பெயர்பெற்று பின்பு மைசூர் என்றாகிவிட்டது. எனவே இங்கு நவராத்திரியின் 9 நாட்களும், 
10-ஆம் நாளான விஜயதசமியும் 'தசரா' என்ற பெயரில் வெகு விமரிசையாகவும்,. உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது

தசரா திருவிழா  மைசூர் அரண்மனை, ஜகன்மோகன் அரண்மனை, கலாமந்திர், கானபாரதி, சிக்க கடியாரா, குப்பண்ணா பார்க், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

உணவுத்திருவிழா, தசரா திரைப்பட விழா, மல்யுத்தப்போட்டி, மலர் கண்காட்சி, தசரா பட்டம் விடும் திருவிழா போன்ற கொண்டாட்டங்களை பார்த்து ரசிக்க முடியும்.

மாலையில் பண்ணிமண்டபத்தில் 'பஞ்சின கவாயத்து' என்று கன்னடத்தில் அழைக்கப்படும் தீப ஒளி அணிவகுப்பு நடத்தப்படும்.மக்கள் வெள்ளத்தின் நடுவே வானவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஆரவாரத்துடனும், வெகு உற்சாகத்துடனும் நடைபெறும்.

தசரா திருவிழாவின் முக்கிய அம்சமாக 10-ஆம் நாளான விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி என்று பிரபலமாக அழைக்கப்படும் தசரா ஊர்வலம்  நன்றாக அலங்கரிக்கப்பட்ட யானையின் தங்க அம்பாரியில் சாமுண்டேஸ்வரி அம்மனின் சிலை வைக்கப்பட்டு மைசூர் நகர வீதிகளில்  ஊர்வலம்  மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கி பண்ணிமண்டபத்தில் சென்று முடியும்

அரச வம்சத்தின் தற்போதைய பிரதிநிதிகளை வரவேற்று பல ஆண்டுகளாக தசராவின் போது நடந்து வரும் அரச தர்பார் நடந்தேறும்.

அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து நின்றிருந்த அர்ஜுனா யானையின் தலைமையிலான யானைகள் ஊர்வலத்தை  பலராமா வாயிலில் நந்தி பூஜை செய்துமலர்தூவி பூஜை செய்து மைசூர் அரண்மனையின்  யானைகள் ஊர்வலம்:  தொடங்கப்படும் ..

 14 யானைகள் முன்னால் செல்ல, அதைத் தொடர்ந்து யானைப் படைகள், 116 கலைக்குழுக்கள், 36 அணிவகுப்பு வாகனங்கள் அணிவகுக்க. 
தசரா கொண்டாடப்படும் 9

தசரா கொண்டாட்டத்தில் மைசூர் அரண்மனை  லட்சக்கணக்கான விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு வானிலிருந்து இறங்கி வந்த நட்சத்திர கூட்டத்திற்குப் போட்டியாக ஜொலிஜொலிக்கும் ..!

Saturday, September 27, 2014

கருணைதெய்வம் திருவேங்கடமுடையான் -உலக சுற்றுலா தினம்


திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம் (திரு)

வரும் துயர் பகையாவும் மாற்றிடும் தெய்வம்
வாய் திறந்தே கேட்டால் வழங்கிடும் தெய்வம்  (திரு)

மன்னுபுகழ் கோசலைக்கு மைந்தனான...தெய்வம்
மண்மகளும் மலர்மகளும் மருவுகின்ற...தெய்வம்

தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கடதெய்வம்
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்

கொண்டாடும் அன்பர் நெஞ்சில் கோவில் கொண்ட தெய்வம்
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் - தெய்வம்

சந்தமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற...தெய்வம்
சாரங்கபாணியென்ற பார்புகழும் தெய்வம்
வேங்கடேஸோ வாஸீதேவ வாரி ஜாஸன - வந்தித 
ஸ்வாமி - புஷ்கரிணீ - வாஸ  ஸங்க - சக்ர  - கதாதர 
பீதம்பர - தரோ தேவ: கருடாரூட - ஸோபித 
விஸ்வாத்மா விஸ்வ- ஸோகேஸ:  விஜயோ வேங்கடேஸ்வர 
ஏதத் த்வாதஸ நாமானி  த்ரிஸந்த்யம்ய: படேந்நர: 
ஸர்வபாப- வினிர் முக்தோ  விஷ்ணோஸ்ஸாயுஜ்யம் ஆப்னுயாத். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவேங்கடேச சுவாமியின் சன்னதியில்  காலையிலும், மாலையிலும் இந்த மந்திரசுலோகத்தை  ஜபித்து அருள் பெறுகிறார்கள்..

இல்லத்தில்  இருந்தபடியே இந்த ஸ்லோகத்தை ஜபித்து  
திருப்பதி ஏழுமலையானின்  அருளைப் பெறலாம்
திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்
ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக் கொண்டவரே, வெங்கடேசா நமஸ்காரம். மங்களமான சரீரத்தை உடையவரே, ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே, அதே கரங்களில் சர்ப்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே, கோரிய அனைத்தையும் அருள்பவரே, வெங்கடேசா, நமஸ்காரம். என்னைக் கை கொடுத்துக் காத்தருள்வீராக. 

(புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் துதியை பாராயணம் செய்து வந்தால்  விருப்பங்களையெல்லாம் வேங்கடவன் நிறைவேற்றித் தருவார்.
திருப்பதி புகைப்படங்கள் - திருமலா வெங்கடேஸ்வரர் கோயில் - இராமர் விக்ரகம்
கருணையே உருவான தெய்வம் திருவேங்கடமுடையான் கருணையாக நோக்கி, லேசாகச் சிரிக்கும் கண்களில் கருணை பொங்கிப் பிரவகிக்கும் அற்புதத்தை   உணர   முடியும்..

கலியுகவரதனாக எல்லையற்ற கருணைவெள்ளம் கண்கள் வழியே கார்மேகம் போல் அமுதாய் வர்ஷிக்க  கருணை வள்ளலாகத் திகழ்வர் திருமலைதெயவம்..

 கருணை வர்ஷிக்கும் . திருமாலின் பெருமை பன்னிரண்டு ஆழ்வார்களது திகட்டாத தெள்ளமுதாக  திவ்விய பிரபந்தத்திலும்  பிரவஹிக்கிறது.  



மிகவும் போற்றுதலுக்குரிய காப்பதில்காட்டிய  வேகத்துடன்  

கருணையின் வெளிப்பாடு கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தது. 
திரௌபதியின் மானம் காக்க ஆடை கொடுத்தது. 
[Draupadi.jpg]
ஒவ்வொரு முறையும் சிவன் கொடுத்த வரத்தினால் மக்களைத் துன்புறுத்திய அரக்கர்களையும் அழித்து, அந்த அரக்கர்களுக்கும் உலகுள்ள அளவிற்கு அழியா புகழையும் கொடுத்தது.

நாமஜபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கத்தை சுரங்கத்தில் வெட்டி எடுத்தாலும் அப்படியே பயன்படுவதில்லை. 

கலைநுட்பம் மிக்க கலைஞரின் கையில் பட்டு ஆபரணமாக மாறினால் தான், அதன் மதிப்பும் மெருகும் கூடுகிறது. 

ஊரும், பேருமில்லாமல் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரே நமக்காக வடிவம் தாங்கி ராமர், கிருஷ்ணர் என்ற திருநாமம் கொண்டு அவதரிக்கிறார். கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் .. ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை  சொல்லி,  எளிதாகச் சேமிக்கலாம்.
[acharya_vamsa_viruksham.jpg]



திருப்பதி புகைப்படங்கள் - திருமலா வெங்கடேஸ்வரர் கோயில் - தங்க கோபுரம்
தனது திருமணத்திற்காக குபேரனிடம் பொருள் பெற்று, அந்தக் கடனை நிவர்த்தி செய்ய வராஹ க்ஷேத்திரமான திருப்பதியில் ஸ்வயம்புவாகக் குடியேறி, - குபேரனுக்கே செல்வம் தரும் ஸ்ரீதேவி தன் மார்பில் இருக்கும்போது, ஒரு க்ஷணத்திலேயே அத்தனை கடனையும் அடைக்கும் செல்வ இலக்குமி தன்னிடம்  இருந்தாலும்,  கருணை கொண்டுதன்னை நாடிவரும் பக்தர்களின் குறை தீர்க்கும்- வினை தீர்க்கும் பெருமாளின் விளையாட்டை போற்றுகிறோம்..


புரட்டாசி சனிக்கிழமை அன்று  சனி பகவான் வீரியம் குறைந்திருக்கும் சனிக்கிழமையில் பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. சனியின் பாதிப்பு இல்லாதவர்கள் புரட்டாசி புதன்கிழமையிலும் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிக்கலாம்.






   உலக சுற்றுலா தினம் 


சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டில் ஐ.நா. சபை அங்கீகரித்து அறிவித்தது. அன்று முதல் சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களை காண்பதால்  மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எனவேதான், உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் வெவ்வேறு முறைகளில் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன.

சுற்றுலா செல்வது என்றாலே, கொண்டாட்டம் தான். சுற்றுலா என்பது லட்சக்கணக்கான கோடி ரூபாய் வியாபாரம். சுற்றுலா மூலம் தான், பல்வேறு கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. உலகை ஒருங்கிணைக்கவும் முடிகிறது. 
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொருளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27ம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
"சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம்' என்பது போன்ற  மையக்கருத்துகளை வலியுறுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது..! 
கல்வி சுற்றுலா, இன்ப சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. 
ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங்களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி அடையும் வகையில் மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், பீச் என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன. 

சுற்றுலா மனிதனுக்கு பல்வேறு உலகங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக் கொள்ள வழிவகுக்கிறது. 


இந்தியாவில் பழங்காலம் முதலே தீர்த்த யாத்திரை என்ற பெயரில் புனித யாத்திரைகள் செல்வது இருந்துள்ளது. 

இமயம் தொடங்கி குமரி வரை கடல், மலை, நதி, கோயில் போன்றவற்றை பார்ப்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் சுற்றி வந்துள்ளனர். - 

சுற்றுலா மூலமாகவே பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு தொழில்கள் வளர்ந்து வந்துள்ளன. 

 பல நாடுகளில் உணவு தொழில் செழித்து வளர சுற்றுலா துறையும் ஒரு காரணம் . 

   சுற்றுசூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என சுற்றுலா பல்வேறு வகைகளாக பிரிந்து வளர்ந்துள்ளது. 
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன.  

இதே செப்டம்பர் 27ம் தேதியை, சர்வதேச நீர் பகிர்வு தினமாகவும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது.