Monday, September 8, 2014

இறைவன் அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்




மதுரையம்பதியில் பிறந்து பாண்டிய நாட்டிற்க்கே அரசியாகி 
எட்டு திக்கிலும் வெற்றி பெற்று பேரரசியாக திகழ்ந்து, இறைவனாகிய சொக்கநாதரையும் போர்களத்தில் வெற்றி கொண்டு அவரையே கரம்பிடித்த மிக பெரும் வரலாற்று பெருமை வாய்ந்த  மதுரை மாநகரின் சிறப்புகளுக்கு  மகுடம் சூட்டுவது போல் இறைவனாகிய சிவ பெருமான் பாண்டிய நாட்டிலேயே தங்கி  நாட்டிற்க்கு அரசனாகி பல திருவிளையாடல்களை நிகழ்த்தி  அருள் புரிந்த தலம் ..!

இறைவனின் திருவிளையாடல் நிகழ்வுகளை ஆண்டு தோறும் நிகழ்த்தி காட்டும் நிகழ்வாக தான் ஆவணி திருவிழா மதுரை மாநகரில் 
நடை பெறுகிறது ., 

இறைவியும் இறைவனும் மன்னர்களாக முடி சூடிக்கொண்டு மதுரையை விட்டு செல்லாமல் இங்கு இருந்து எல்லோர்க்கும் அருள் புரிந்து வந்துள்ளனர் என்பது தான் மதுரை க்கு கிடைத்த மிக பெரிய சிறப்பு ., 

 ஆவணி மூலவிதியில் அம்மை அப்பனின் திருவிளையாடல் படலம் தினமும் அரங்கேறுவது கண்கொள்ளாக் காட்சிகளாக் மனம் நிறையும்..!
மதுரை ஆவணி திருவிழாவின் சிறப்பான  நிகழ்வு சுந்தரேஸ்வரர்க்கு பட்டம் சூட்டபடும் வைபவம் ஆகும்.!
Photo: மாறியது ஆட்சி !

பாண்டிய நாட்டின் மன்னனாக இறைவன் :

வரலாற்று சம்பவங்களில் அம்மன் பல நோக்கத்திற்காக மண்ணுலகில் அவதரித்து அந்த அவதாரத்தின் நோக்கம் நிறைவேறும் வேலையில் கைலாய நாதர் எல்லோருக்கும் காட்சி தந்து இறைவியை அழைத்து செல்வது வழக்கம் ஆனால் மதுரையம்பதியில் பிறந்து பாண்டிய நாட்டிற்க்கே அரசியாகி எட்டு திக்கிலும் வெற்றி பெற்று பேர்அரசியாக திகழ்ந்து இறைவனாகிய சொக்கநாதரையும் போர்களத்தில் வெற்றி கொண்டு அவரையே கரம்பிடித்த மிக பெரும் வரலாற்று பெருமை வாய்ந்த நகர் மதுரை இவை எல்லாவற்றிக்கும் மகுடம் சூட்டுவது போல் இறைவனாகிய எம் பெருமான் மற்ற அவதாரங்களை போல இல்லாமல் பாண்டிய நாட்டிலே தங்கி இன் நாட்டிற்க்கு அரசனாகி பல திருவிளையாடல்களை நிகழ்த்தி பக்தர்களுக்கு அருள் புரிந்த தளம் இறைவனின் திருவிளையாடல் நிகழ்வுகளை ஆண்டு தோறும் நிகழ்த்தி காட்டும் நிகழ்வாக தான் ஆவணி திருவிழா மதுரை மாநகரில் நடை பெறுகிறது ., இப்படி இறைவியும் இறைவனும் மன்னர்களாக முடி சூடிக்கொண்டு மதுரையை விட்டு செல்லாமல் இங்கு இருந்து எல்லோர்க்கும் அருள் புரிந்து வந்துள்ளனர் என்பது தான் மதுரை க்கு கிடைத்த மிக பெரிய சிறப்பு ., இப்படி பட்ட மதுரை மாநகரில் வாழ்வதை எண்ணி பெருமை படுவது மட்டும் அல்ல இப்படி பட்ட வரலாற்று நிகழ்வை எல்லாம் கண் எதிர் பார்க்கும் வண்ணம் நான் பிறந்தையே பெருமையாக கருதுகிறேன் கோவில் அருகில் வீடு அம்மை அப்பனின் திருவிளையாடல் படலம் தினமும் அரங்கேறும் ஆவணி மூலவிதியில் இருப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன் ., 

மதுரை ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரர்க்கு பட்டம் சூட்டபட்டது ., 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆவணி மூலத்திருவிழாவில், பட்டாபிஷேகம் நடந்தது. பட்டம் சூட்டிய சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆவணி மூலத்திருவிழாவில், பட்டாபிஷேகம் நிகழ்ந்து. பட்டம் சூட்டிய சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் எழுந்தருளுவார்
உலவாக்கோட்டை அருளிய லீலையில் பிரியாவிடையுடன் அருள்பாலித்த சுந்தரேசுவரர். (வலது) சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு மீனாட்சியம்மன்.
ஆவணி மூலத் திருவிழாவினை முன்னிட்டு, ஸ்வாமி சந்நிதி - கம்பத்தடி மண்டபத்தின் அருகே புனிதநீர் நிறைந்த பதினோரு கலசங்களுக்கு சிறப்பு  பூஜைகள் நடத்தப்படும்..
கம்பத்தடி மண்டபத்தில் ஸ்வாமியும் பிரியாவிடையும்  அன்னை மீனாட்சியும்  பல்லக்குகளில் எழுந்தருளிய வேளையில் - அவர்தம் முன்னிலையில் - தங்கக் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்..

 புதிய தங்கக் கொடி மரத்தில்  மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க ஆவணி மூலத் திருவிழாவின் கொடி ஏற்றப்படும்..!
கருங்குருவிக்கு உபதேசம் செய்தருளல்,
 நாரைக்கு முக்தி கொடுத்தருளல்,.
  வணிகனாக வந்து மாணிக்கம் விற்று விளையாடுதல்.
 புலவனாக வந்து தருமிக்குப் பொற்கிழி தந்தருளல்,.
செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்த அன்பனுக்கு என்றும் குறையாத உலவாக்கோட்டை அருளி
நரிகளைப்பரிகளாக்கி திருவிளையாடல் புரிதல்
Photo: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணிமூலத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு நரியை பரியாக்கிய லீலை கோலத்தில் அருள்பாலித்த அருள்மிகு சுந்தரேசுவரர்-பிரியாவிடை. (உள்படம்) நரியின் திருவுருவம்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அருள்மிகு சுந்தரேசுவரர் நரியைப் பரியாக்கிய லீலை சனிக்கிழமை நடைபெற்றது.

புராண காலத்தில் மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் மாணிக்கவாசகர், தென்னவன் பிரம்மராயன் எனும் சிறப்புப் பெயருடன் அமைச்சராக இருந்தார். படைக்காக குதிரைகள் வாங்க பெரும் பொருளை மாணிக்கவாசகரிடம் அரசர் கொடுத்தனுப்பினார். திருப்பெருந்துறைக்குச் சென்ற மாணிக்கவாசகர் தன்னிடமிருந்த செல்வத்தை அங்குள்ள சிவாலயத் திருப்பணிக்குச் செலவிட்டார்.

குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் திரும்பாதது கண்டு கோபமடைந்த அரசர், அவரை உடனடியாக மதுரைக்கு வருமாறு அழைத்தார். குதிரையின்றி திரும்பிய மாணிக்கவாசகரை அரசர் சிறையிலடைத்தார். மாணிக்கவாசகரோ மனமுருகி இறைவனை வேண்டினார்.

மாணிக்கவாசகரின் வேண்டுதலை ஏற்ற இறைவன், சிவகனங்களை குதிரைப் பாகர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் ஆக்கி, மதுரை வந்தடைந்தார். குதிரைகளைப் பெற்ற அரசன் மனம் மகிழ்ந்து மாணிக்கவாசகரை விடுவித்தார். ஆனால், அன்றிரவே குதிரைகள் நரிகளாகி ஓடிவிட்டன. இதையறிந்த அரசர் கோபமடைந்து, மாணிக்கவாசகரை ஆற்று சுடுமணலில் கட்டிப் போட்டார். ஆனால், இறைவன் திருவருளால் வைகையில் வெள்ளம் ஓடியது. இதையறிந்த அரசர், இறைவனின் திருவிளையாடலை உணர்ந்து வணங்கி, மாணிக்கவாசகரை விடுவித்ததாக புராணம் கூறுகிறது.

இந்த நிகழ்வை விளக்கும் வகையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வடக்காடி வீதி 16 கால் மண்டபத்தில் நரியைப் பரியாக்கிய லீலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், குதிரை வாகனத்தில் அருள்மிகு சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றத்திலிருந்து வந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வயானை மற்றும் திருவாதவூரிலிருந்து வந்த மாணிக்கவாசகர் ஆகியோர் எழுந்தருளினர்.

அப்போது, சிவாச்சாரியார் மன்னர்போல வேடமணிந்தவரிடம் குதிரையை ஒப்படைப்பது போலவும், அவை பின்னர் நரியாக மாறுவதுபோலவும் நிகழ்ச்சி நடந்தது.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை: ஞாயிற்றுக்கிழமை காலையில் பொன்னகரம் புட்டுத்தோப்பு பகுதியில் வைகை ஆற்றோரம் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக திருக்கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் மற்றும் சுப்பிரமணிய சுவாமி, மாணிக்கவாசகர் எழுந்தருள்கின்றனர்.
போன்ற பல இறைவனின் விளையாடல்கள் காட்சியாக்கப்படும் ..!
கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்வாமியும் - வெள்ளி சிம்ம வாகனத்தில் மீனாட்சியும்  - தங்க சப்பரத்தில் ஸ்வாமியும் - யானை வாகனத்தில் மரகதவல்லியும் எழுந்தருளல் போன்று பல்வேறு வாகன சேவைகளும் கண்களுக்கு விருந்தாக்கப்படும்.!
Photo: மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருகோவிலில் ஆவணி மூல திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று நாரைக்கு முக்தி  கொடுத்த லீலையில் சொக்கநாதரும், பிரியாவிடை அம்மனும் நான்கு ஆவணி மூல வீதிகளிலும் வளம் வந்து பக்தர்களுக்கு 
காட்சிதந்தருளினர் .,Photo: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள இந்த சிற்பங்கள் தமிழனின் சிற்பக்கலையை உலகம் அறிய செய்து கொண்டிருக்கின்றது

7 comments:

  1. அருள்மிகு சுந்தரேசுவரர் பட்டாபிசேகம் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
    படம் அதிலும் இந்த மண்டபப் படம் அழகோ அழகு

    ReplyDelete
  2. படங்கள் ஒவ்வொன்றுமே அழகு......

    பல வருடங்களுக்கு முன்னர் மதுரைக்குச் சென்றது. பிறகு அந்த வழியே பயணித்திருந்தாலும் கோவிலுக்குச் சென்றதில்லை. பார்க்க வேண்டும்.....

    ReplyDelete
  3. கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய பதிவு.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. காணக் கண் கோடி வேண்டும்! அத்தனை அழகு!
    எனக்கும் நல்வினை கொஞ்சம் இருந்ததினால் நானும் மதுரை மீனாட்சியின் அழகினை 15 வருடங்கள் முன்பு வந்து கண்டு களித்திருந்தேன்!.. மிக அருமை!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  5. அழகிய படங்களுடன் ஆவணி மூல விழா நிகழ்ச்சிகள் பற்றிய பதிவு சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. மதுரை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். நாங்களுந்தான் உங்கள் பதிவினைக் காண.

    ReplyDelete
  7. அழகிய படங்களுடன் அருமையான பதிவு. அதிலும் அந்த மண்டபப் படம் மிக அழகு...

    ReplyDelete