Tuesday, August 13, 2013

ஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு




.
ஆயிரமாவது பதிவு ...

Number one floral, vector. See more on my portfolio Stock Photo - 9077510Number zero floral, vector.  stock photographyNumber zero floral, vector.  stock photographyNumber zero floral, vector.  stock photography

animation, counter, gif, love, numbers
 photo SHIVA_FAMILY_by_VISHNU108.gif



நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்த விநாயகர் அகவல் விநாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குகிறது.

விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார் ..எனவே பொருளுணர்ந்து சொல்லிப் பலனடைவோம் ..

நம் அனுபவங்கள் கூடக்கூட வயது ஏற ஏற பொருளும் அதற்கேற்றபடி மெருகேறும் அற்புதத்தை உணரலாம் ..!

அற்புதம் நின்ற கற்பகக் களிறாய் ’ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை  வழிபட்டு உய்வதற்காகவும்  அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளிய  விநாயக வடிவம் திருவருளால் மட்டுமே நிகழ்வது.....!

அரும்பி மலர்ந்த திருநெறிகளின் வழியே திருவருள் வெளிப்பட்டுத் தோன்றிய அழகிய ஞானநூல்களில் ஒன்று, ஔவையார் அருளிய விநாயகர் அகவல். 

அகவல் பாவால் ஆகிய துதிநூல் மயில் அகவுவது போலும் ஒலி கொண்டதால் அகவல் எனப் பெயர் பெற்ற , எழுபத்துஇரண்டு அடிகளைக் கொண்டு   கோலமயில் போல் துதித்து மனதில் எண்ணிப்பார்க்கும் தோறும் புதிய அர்த்தங்கள் தோன்றும் பொருள் பொதிந்த பெருமை கொண்டது ...




விநாயகர் அகவல் :

சீதக்களபச் செந்தாமரைப் பூம் 
பாதச் சிலம்பு பலஇசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் 
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப் 

பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் 
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்


குளிர்ச்சியும் நறுமணமும்  பொருந்திய செந்தாமரை போன்ற பாதத்ததில் இருக்கும் சிலம்பு பல விதமான இசைகளை ஒலித்து சப்திக்க, 

இடுப்பினில் பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற,அழகு ததும்ப அணிந்து கொண்டு இருக்கின்ற.. 

பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், 

அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும் 

நான்ற வாயும் நாலிறு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் 
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்

ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், 

அங்குசம் என்பது அடக்குவதற்கான கருவி.யானையை அடக்குவதற்காக அங்குசத்தை யானைப்பாகன் உபயோகிப்பதைப்போல எப்போதும் யானை போல அசைந்துகொண்டிருக்கும் மனதை  .அடக்கும்  அங்குசத்தையும் , 

பாசம் என்பது தளைப்பது,பிணைப்பது-உலகில் பலவித பொருள்கள் மற்றும் மனிதர்கள் உறவுகள் ஆகியவற்றின் மீது ஏற்படும் பாசத்தினாலும் ஆசையினாலும்தான் பல வித உலகியல் நடவடிக்கைகளுப் அவை சார்ந்த துன்பங்களும் நேர்கின்றன.

விநாயகர் தளைகளை ஏற்படுத்துகின்ற பாசத்தையும் அவற்றை கட்டுறுத்தி,மட்டுறுத்தி வைக்கின்ற அங்குசத்தையும் ஒருங்கே கொண்டு இலங்குகின்றார்

அகன்ற பெரிய வாயும்,நான்கு புயங்களும், மூன்று கண்களும்-இரண்டு கண்கள் முகத்திலும் தும்பிக்கையில் நடுவில் ஒரு கண்ணும்- 

மும்மதம் பொழிந்த சுவடான அடையாளமும், இரண்டு செவிகளும், பொன்னாலான கிரீடமும் அணிந்து, திரண்டு விளங்குகின்ற மூன்று நூல்களால் முறுக்கி அமையப்பெற்ற முப்புரி நூல் விளங்குளின்ற ஒளி பொருந்திய மார்பும்...

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான 
அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூசிக வாகன 
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந்தருளி 
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே

திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே 
வந்தென் னுளந் தன்னில் புகுந்து

குருவடிவாகிக் குவலயந்தன்னில் 
திருவடி வைத்து திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி 
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே


சொற்களால் விவரிக்க இயலாத வண்ணம்  துரிய நிலையில் அற்புதமாகத் திகழ்கின்ற உண்மையான ஞானமானவனே,

 ( உடல் புற வெளியின் உலகியல் காரணிகளால் ஆளப்பட்டிருப்பினும் ஆன்மா அருள் உணர்வில் இறைத்தத்துவத்தில் ஒடுங்கி நிற்கும் நிலையில் விழிப்போ,மயக்கமோ அல்லது உறக்கமோ அல்லாத ஒரு நிலை கை கூடும்,அந்த நிலையை துரிய நிலை என்று அழைக்கப்படுகிறது ..!)

மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே,

மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே,

இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே,

மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே,

திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க

ஆன்மாவிற்கு குருவின் வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, 

எது திறம் எது உண்மையான மெய்ப் பொருள் என்று விளக்கி, 

துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, என்னை ஆட்கொண்டு, என்னை வாட்டத்திலிருந்த மீட்டு மெய்யான மகிழ்வு நிலையை அருள்வதற்காக உனது கையில் இருக்கும் தந்தத்தினால் அமைந்த கோடாயுதத்தால் எனது தீவினைகள்,கொடு வினைகள் அனைத்தையும் அகற்றி அருளும் பெருமானே...


உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து 
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி 
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே

உபதேசம் கேட்பது சலிப்பேற்படுத்தும் ஒரு செயல்;விரும்பி ஏற்கமுடிவதில்லை; ஆனால் ஔவையார்  அமுத வாக்கில் விநாயகரின் வாக்கில் வரும் உபதேசம் சலிப்பேற்படுத்தாத,இனிமையுடன் கூடியதாக இருப்பதோடு ஞானத் தெளிவையும் காட்டுகிறது.

உலகில்  பிறந்த உயிர் விடுதலை பெற்று இறைத் தன்மை அடைவதற்கு ஐம்புலன்களின் பிடியில் இருந்து உயிர் விடுபட வேண்டும்.


ஐம்பொறிகளையும் அவித்தவன் இறைவனாகவும் கூடும் -பொறி வாயில் ஐந்தவித்தான் என்பது திருக்குறள்.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு

என்று இறை நிலையை அடையும் ஆசை அல்லாத ஒருவனுக்கும் கூட, இந்த உலகம் ஐம் பொறிகளையும் தன் கைக் கொண்டு அவற்றை அடக்கி ஆளத் தெரிந்தவனிடம் , அவனது கைப்பிடிக்குள் இருக்கும் என்கிறது.


அந்தப் பெருநிலையை,சிறப்பு நிலையை அடையும் வழியாக ஐமபுலன்களையும் அடக்கி ஆளும் உபாயத்தை, என்மீது இயல்பாகவும்  இனிமையாகவும் பிரியமாகவும்  இருக்கும் அன்பின் பாற் பட்ட கருணையினால் இனிதாக எனக்கு அளித்து ரட்சிக்கும் விநாயகப் பெருமானே....


வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி,

தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி,

ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து,

நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி,

இருவித நிலைகளில் திகழும் சுவாச சூட்சுமத்தை அறிவித்து கடைசி ஆதாரமாகிய சுழிமுனைக் கபாலத்தில்,சூரிய சந்திர அக்னி மண்டலங்களில் இழைந்து முட்டி நிலவும் ஆன்ம சக்தியான குண்டலினி சக்தியை,அசையாது சுழிமுனையில் நிறுத்தி நிலைபெறச் செய்வதோடு மட்டுமல்லாது ,அந்த நிலைபெறச் செய்த ஆன்ம சக்தியின் சுவையை எனது நாவிலும் உணர்த்தும் வல்லமை பெற்று அருளுகிற விநாயகப் பெருமானே.....

1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் தந்து,

 நான்கு தலங்களின் வழியாக உயிர் நான்கு விதமான நிலைகளை அடைய முடியும்.இந்த மொத்த செயல்பாடுகளுக்கிடையே மும்மலங்கள் ஏற்படுத்தும் மாயா நிலைகளும் உயிரை அலைக்கழிக்கும்.

 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து,

உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி,

1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி

அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,
-சிவமே தன்னுள் கலந்து தான் அவன் வேறுபாடு இல்லாத நிலை- ஆகிய நிலைகளை இனிதாக அடையும் வண்ணம் எனக்கருளும் விநாயகப் பெருமானே...

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறு ஆதாரத்து அங்குச நிலையும் 
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே

ஒன்பது வாயில்- இரு கண்,இரு செவி,இரு நாசி,வாய்,கருக்குழி,எருக்குழி என்னும் ஒன்பது வாயில்களைக் கொண்டது உடலம்.

ஐம்புலன்கள் - கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் வழி பார்த்து,கேட்டு,முகர்ந்து,ருசித்து,உணர்ந்து ஆன்மா வினைகளின் வழிப் படுகிறது.
ஆறாதாரம்-மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆஞ்ஞை போன்ற ஆறு ஆதார நிலைகள்.ஆன்ம சக்தி நிலைபெறும் ஆறு இடங்களாக இவை வகைப் படுத்தப் படுகின்றன.
பேறா நிறுத்தி- அசையாது நிறுத்தி நிலைபெறச் செய்வது


ஆன்மா செயல்படும் மனித உடலானது ஒன்பது வாயில்களைக் கொண்டது;இந்த ஒன்பது வாயில்களைப்  பயன்படுத்தி ஐம்புலன்களின் வழியாக கருவிகள் செயல்பட்டு ஆன்மாவை வினைகளின் வழி செலுத்துகிறது;

கருவிகள் ஐம்புலன்களின் வழி ஒன்பது வாயில் உடலில் குடி கொண்டிருக்கும் ஆன்மாவை வினைப்படாமல் தவிர்க்க, ஒரு மந்திரம் போல  தனது எல்லையற்ற அருளைச் செலுத்துவதன் மூலம், புற உலக மாயை,கருவிகளை நிறுத்தி, பேச்சற்ற மோன நிலையை நல்கி,ஆன்மசக்தியை ஆஞ்ஞை எனப்படும் சுழிமுனையில் அசையாது நிறுத்தி அருளும் விநாயகப் பெருமானே...



இடை பிங்கலையின் எழுத்தறிவித்து 
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்


குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே .

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் 
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி,

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறி அதுவாமே - என்பது  திருமந்திரம்...

 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம்

நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி,

மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து,

குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும்

குண்டலினி எனப்படும் ஆன்மசக்தியை சுழிமுனையில் அசையாது நிலைநிறுத்திய நிலையை குண்டலி அதனில் கூடிய அசபை என்ற வாக்கியம் விளக்குகிறது;இந்த நிலையை ஒரு சொல்லவொன்னாத இனிய ஆன்மநிலை என்று யோகம் கூறுகிறது.


சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி,

இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும்,

உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,

யோகப் பயிற்சி வழிகளின் ஊடாக சுழிமுனையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரைக் குறியீட்டு நிலைக்கு, ஆன்ம சக்தியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பி சந்திர மண்டலத்தினின்று கீழ் வழி உயிர்ச்சக்தி வழியாது மேல்வழி திருப்பி,சுழி முனைப் பீடத்தை திறக்கும் வல்லமை பெறும் போது,ஆன்ம சக்தி பேரானந்த நிலைக்கு, பிறப்பற்ற நிலைக்குச் செல்கிறது.

இந்த வழிமுறைகளை உடலியக்க சக்கரங்கள் மற்றும் உறுப்புக்களின் இயக்க நுணுக்கங்களை விளங்கச் செய்து சூரிய இடைச் சக்கரத்தின் நிலை, திங்கள் மண்டலத்தினின்று வழியும் உயிர்ச் சக்தி, அது இயங்கும் ஆதித்த-சூரிய மண்டல இயக்க விளக்கம், இவற்றையெல்லாம் ஆன்ம சக்தி கடந்து சுழி முனைப் பீடத்தை உடைத்துத் திறக்கும் வித்தையை அறிவித்து அருளும் விநாயகப் பெருமானே....

சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும் 
எண்முகமாக இனிதெனக்கு அருளி

புரியட்ட காயம் புலப்பட எனக்கு 
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்து


அறு கோணம் ஞான நிலையைச் சார்ந்தது; பல எந்திரச் சக்கரங்கள் எழுதும் போதும், வீடுகளில் எளிய கோலம் போடும் போதும் கூட இரண்டு முக்கோணங்களை ஒன்றன் மீது ஒன்று தலைகீழாகப் பொருத்தி அறுகோணச் சக்கரம் வரையப்படும் ...!

சிவசக்தியின் உட்பொருள் சக்தி ,நான்முகத்தின்னுள் அமைந்த அறுகோண வடிவத் தூலத்தில் திகழ்கிறது என்பதை உணர்த்தவே, முருகனுக்கு அறுகோணச் சக்கரத்துடன் தொடர்பு ஏற்படுத்தி வைக்கப்பட்டது.

இந்த சிவ சக்தி உட்பொருளை ஆன்ம உயிர் உணரும் வண்ணம் உடலின் எட்டு நிலைகளிலும் எனக்கு அறிவிக்கச் செய்து, சிந்தனை வழி எண்ணித்தெளியும் முகமாக(எண்முகமாக) உடலியக்கத்தின் எட்டு நுட்பத் தன்மைகளை புலப்படும் வண்ணம் எனக்கு அறிவித்து அருளும் விநாயகப் பெருமானே....

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி,

மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி

அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி
கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து,

சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி,

நான் யார் என்பதை எனக்கு அறிவித்து,

பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி,

சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து
அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி,

இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி,

அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாக கூறி

உடலில் உயிர் நிலவவும்,உடலத்திலிருந்து விடைபெறும் நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது கபாலப் பெருவெளி.

உயிர் உடலில் நிலவும் ஆயுட்காலத்திலேயே ஆன்ம உயிர் சக்தியை சுழிமுனை மற்றும் கபாலப் பெருவெளி வரை உலவச் செய்யும் திறனை அடைபவர் ஆன்ம உயிரை உயர்நிலையில் செலுத்தும் நிலையை அடைகின்றனர்.

அந்த நிலையே யோகத்தின், ஞானத்தின் உயர்நிலை.


எனது ஆன்ம உயிர்ப் பொருளை எனது சிந்தனைக்கு அறிவித்து, ஆன்மா தோன்றிய காலம் தொட்டு சேர்த்து வைத்திருக்கின்ற வினைகளை முதல் வரை களைந்து,முற்றாகக் களைந்து அருள்கிறார் விநாயகப் பெருமான் என்பது நுண்ணிய பொருள்)

எனது ஆன்ம உயிரை ஆதாரத்தின் இறுதி நிலையான சுழிமுனை மற்றும் பெருவெளியில் வாயிலைக் காட்டி நிறுத்தி எனது ஆன்மாவுக்கான பேரானந்த நிலையை எனக்கு அருளும் விநாயகப் பெருமானே....


வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன 
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில்

வாக்கும் மனமும் இறந்த நிலை காணில் யாக்கைக்கு அழிவில்லையாம் என்பார் ஔவைப் பிராட்டி.

அத்தகு மோன நிலையை காட்ட மட்டும் செய்யாது,அந்த நிலையில் ஆன்மா தேங்கி நிலைத்து நிற்கும் வண்ணம் எனது சிந்தனையைத் தெளிவித்து, இருளும் ஒளியும் ஒன்றே என உணரும் நிலையில் எனது ஆன்மாவை அருளானந்த நிலையில் அழுந்தி இருக்கச் செய்தருளும் விநாயகப் பெருமானே....

எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட 
வித்தக வினாயக விரை கழல் சரணே!
               
அளவில்லாத ஆனந்தத்தை தந்து,
 துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி,
அருள் வழி எது எனக்காட்டி,
சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி,

சித்தாந்தத்தின் மேன்மையான அனைத்தையும் கடந்த சதாசிவ நிலையை
 சிந்தனையில் சிவ சொரூபத்தை விளங்கச் செய்து,
மாயையின் பாற்பட்டும்,கருவிகளின் வினைகளின் பாற்பட்டும் அல்லலுறும் உலகாதாய சப்த சூழலிலும் ஆன்மாவிற்கு அந்த அல்லல்கள் அனைத்தையும் விலக்கி, ஆன்ம சக்தி சிவத்தின் இறுதி நிலையை அடையவல்ல அருள் வழியைக் காட்டி அருளி,

முடிவற்ற ஆனந்த நிலையை எனக்கு அருளச் செய்து,சிவத்தின் இறுதி நிலையான சதாசிவ நிலையை காட்டி அருளச் செய்யவல்ல விநாயப் பெருமானே..... .

மேன்மையான சிவத்தின் சக்தி அணுவிலும் அணுவிற்கு அணுவிலும்(போஸான் என்னும் கடவுள் துகள் !?) அவற்றிற்கு அப்பாலாகவும் திகழும் தன்மையை முற்றி நின்ற கரும்பின் இனிமை போலக் காட்டியருளி,

சிவ வேடமும் நீறணிந்த மேனியும் கொண்ட சிவத் தொண்டர் கூட்டத்தினருடன் எம்மை இணைத்து ,சிவத்தின் மேன்மைப் பொருளை விளக்கி அருளும் விநாயகப் பெருமானே.

ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்லப் பட்ட நமசிவாய .மந்திரத்தின் விளக்கப் பொருள்தன்னை என்னுடைய நெஞ்சமும் அறிவும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எனது சிந்தனை அறிவு நிலையையும் கருத்தில் கொண்டு, ஆன்மா சிவத்தினை அடைந்து திகழும் தத்துவ நிலையை எனக்குத் தந்து ஆட்கொண்டருளக் கூடிய,மேன்மை பொருந்திய,எனது நிலையைக் கடைத்தேற்ற விரும்பி ஆட்கொள்ளும் வண்ணம், விரைவாகச் செயல்படும் பாதாரவிந்தங்களைக் கொண்ட விநாயகப் பெருமானே....உனது கழல்களே சரணம் ! சரணம் !! சரணம் !!!


Lord Ganesh high resolution wallpaper








204 comments:

  1. [1]

    2
    ஸ்ரீராமஜயம்

    VERY VERY GOOD MORNING !

    HAVE A VERY NICE DAY !!

    MY HEARTIEST CONGRATULATIONS, TO YOU MADAM.

    இந்த நாள் ஓர் இனிய நாள் !!! ;)

    >>>>>

    ReplyDelete
    Replies


    1. ஆயிரம் மலர்களுக்கும்
      வாழ்தோவியம் வரைந்ததற்கு இனிய நன்றிகள்..!

      ஆக்கமான கருத்துகள் தந்து
      வாழ்த்தியமைக்கு இனிய நன்றிகள்..!

      சிறப்பிடம் கொடுத்து சிறப்பித்து
      அமிர்தவர்ஷிணியாய் அன்பை வர்ஷித்தமைக்கு
      அன்பான வந்தனங்கள்..!

      பொங்கிடும் மகிழ்ச்சிக்கு வாழ்த்துகள்..!

      அத்தனை பதிவுகளையும்
      ஆராய்ச்சி செய்து தரப்படுத்தியதற்கு
      தங்கமான நன்றிகள்..!

      மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய
      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்..!

      தங்கள் கருத்துரைகளினால் பதிவுகளுக்கு
      வண்ணமும் வாசமும் ஊட்டி மிளிரவைத்தமைக்கு
      இனிய நன்றிகள் ஐயா..

      கருத்தான கருத்துரைகளால்
      பதிவை வளப்படுத்தும்
      தங்களுக்கு இனிய நன்றிகள்..!

      முத்திரை பதிக்கும்
      சித்திரக் கருத்துரைகளுக்கு நன்றிகள்..

      சிரத்தையான சிரமம் எடுத்து
      பெருமைப்படுத்தியதற்கு மனம் கனிந்த நன்றிகள்..!

      Delete

  2. [2]

    ஆயிரம் நிலவே வா !

    ஓர் ஆயிரம் நிலவே வா !!

    பதிவோடு ...... படம் சேர ...............

    புதுப்பதிவு .... நீ ..... போடப்போட ...

    [ஆயிரம் நிலவே வா]

    >>>>>>>>

    ReplyDelete
  3. [3]

    ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ !

    உலகம் அறிந்திடாத தெய்வீகப் பிறவியம்மா நீ !!

    பார்வையிலே செந்தாமரையம்மா !

    பழக்கத்திலே சொக்கத் தங்கமம்மா !!

    [ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ]

    >>>>>>>>

    ReplyDelete
  4. [4]

    ஆயிரம் பதிவுகள் மலரட்டுமே !

    ஆயிரம் கண்கள் ரஸிக்கட்டுமே !!

    உன் ஒருத்தியின் நெஞ்சம் தினசரிப் பதிவுகளுக்கென்றே

    சொல் சொல் சொல் ... தோழி ... சொல் சொல் சொல் !!

    >>>>>>>

    ReplyDelete
  5. [5]

    தாமரை எண்ணங்கள் .....

    தேன்மலர் எழுத்துக்கள் .....

    எத்தனை வண்ணங்கள் .....

    சித்தமாய்ச் சிந்தும்போது .....

    பொங்கிடும் மகிழ்ச்சிகள் .....

    ஏற்படுத்துதே எழுச்சிகள் !

    >>>>>

    ReplyDelete
  6. [6]

    ஆயிரம் மலர்களே மலருங்கள்

    ஆனந்த கீதம் பாடுங்கள் ..... ஆடுங்கள்.

    ஆனந்த தேவியின் காவியம்

    அந்த அழகோவியம் நீங்களோ?

    நெருங்கி வந்து பதிவுகளில் பதிலாகச் சொல்லுங்கள்.

    >>>>>>>

    ReplyDelete
  7. [7]

    ஆயிரம் கரங்கள் நீ....ட்....டீ

    அணைக்கின்ற தாயே போற்றீ !

    அருள் பொங்கும் முகத்தைக்காட்டீ

    இருள் நீக்கும் தாயே போற்றீ !!

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. கதிரவனைக்கண்டு மலரும்
      கமலமாய்
      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete

  8. [8]

    ஆயிரம் வாசல் இதயம் ... அதில்

    ஆயிரம் எண்ணங்கள் உதயம் !

    யாரோ வருவார் ... பின்னூட்டம் தருவார்

    வருவதும் போவதும் தெரியாது !!

    >>>>>>

    ReplyDelete

  9. [9]

    ஆயிரம் இடுகைகள் வருவதுண்டு ...

    ஆனால் இதுதான் முதலாயிரம் இடுகை !

    ஆயிரம் பதிவுகள் வருவதுண்டு

    ஆனால் இதுதான் முதல் முத்திரைப்பதிவு !!

    >>>>>

    ReplyDelete
  10. [10]

    காலத்தை வென்றவள் நீ ....

    காவியமானவள் நீ ...............

    ஆயிரம் பதிவுகள் தந்தவள் நீ ......

    அனைத்துப் படங்களில் நிறைந்தவள் நீ .....

    வெற்றித்திருமகள் நீ ..........

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. காவியக் கருத்துரைகளுக்கு நன்றிகள்..!

      Delete
  11. [11]

    வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,

    பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள்

    ஆயிரமாவது பதிவிடுகின்றாள் என்று

    பூரண பொற் கும்ப கலசங்கள் வைத்து

    தோரணம் கட்டுவது போலக்

    கனாக்கண்டேன் தோழி ! ;)

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. பூரணப் பொற்கலசமாய்
      ஜொலிக்கும் கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      Delete

  12. [12]


    இன்றைய தங்களின் பதிவு, வெற்றிகரமான ஆயிரமாவது பதிவு என்பதைக் காண எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

    இந்த மாபெரும் வெற்றிக்கனியை எட்டிப்பிடித்துள்ள தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள், மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>>>

    ReplyDelete
  13. [13]

    மிகக்குறுகிய காலத்தில் எட்டியுள்ள அபார சாதனை இது.

    தங்களின் அன்றாட கடும் உழைப்பும், ஆத்மார்த்தமான ஈடுபாடும், ஆர்வமும், ஆற்றலும், அறிவும், சுறுசுறுப்பும், தனித்தன்மையும் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. எளிய சாதனைக்கு
      இனிய பாராட்டுகளுக்கு நன்றிகள்..!

      Delete

  14. [14]

    21.01.2011 அன்று குழந்தைபோல் பதிவுலகில் முதல் அடி எடுத்து வைத்த தாங்கள் இன்று 13.08.2013 தங்களின் ஆயிரமாவது பதிவினைக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    இடைப்பட்ட நாட்களோ 9 3 6 மட்டுமே.

    9 3 6 நாட்களில் 1000 பதிவுகள் என்பது அபார சாதனையன்றோ !

    தங்களைப்பெற்றெடுத்த மகராசியான தங்கள் தாயாரை விட்டு உடனடியாக தங்களுக்கு திருஷ்டி கழித்து, ஹாரத்தி சுற்றச்சொல்லுங்கோ.

    மறக்காமல் சொல்லுங்கோ.

    நான் சொன்னதாகச் சொல்லுங்கோ.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும் ஆசிகளுக்கும்
      நிறைவான நன்றிகள் ஐயா..!

      Delete

  15. [15]

    எண்ணிக்கையின் அடிப்படையில் ஒருசிலர் தங்களின் இந்த சாதனையை முந்தியிருக்கலாம்.

    ஆனால் அவைகள் தங்கள் பதிவுகள் போல

    புனிதமானவைகள் அல்ல.

    அழகானவைகள் அல்ல.

    அற்புதமான விஷயங்கள் நிரம்பியவைகள் அல்ல.

    தெய்வாம்சத்துடன் கூடியவைகள் அல்ல.

    பார்க்கப்பார்க்க பரவஸம் ஊட்டக்கூடியவைகள் அல்ல.

    சொந்தச்சரக்குகளும் அல்ல.

    கற்பனை வளத்துடன் கூடியவைகள் அல்ல.

    நல்ல விஷயங்களை நல்லவிதமாகச் சொல்லும் எழுத்துக்களும் அல்ல.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவர் பதிவும்
      ஒவ்வொரு விதம் ..!

      Delete
  16. [16]

    சிங்கம் எப்போதும் தினமும் சிங்கிளாகத்தான் வரும்.

    தங்களின் தினசரிப் பதிவுகளும் அதுபோலவே தான்.

    கூட்டமாக வருபவை சிங்கங்கள் அல்ல .... அசிங்கங்கள் மட்டுமே.

    >>>>>

    ReplyDelete

  17. [17]

    ஒரு பதிவை வெளியிட்டால், அதைப்படிக்கும் சிலரின் மனமாவது மலர வேண்டும்.

    இறை நம்பிக்கை வளர வேண்டும்.

    மனதுக்கு இதமாகவும், ஆறுதலாகவும், மகிழ்ச்சி அளிக்கக்கூடியவைகளாகவும் இருக்க வேண்டும்.

    நல்ல எண்ணங்களையும், நற்சிந்தனைகளையும் தூண்டுவதாக இருக்க வேண்டும்.

    என்றைக்காவது ஒருநாள் நம் வாரிசுத்தங்கங்களே நம் பதிவுகளைப்படிக்க நேர்ந்தாலும், அவற்றை கண்களில் ஒத்திக்கொள்ளுமாறு இருத்தல் வேண்டும்.

    இதெல்லாம் தங்களால் மட்டுமே, தங்களின் அன்றாடப்பதிவுகளால் மட்டுமே சாத்தியமாகக்கூடியவை.

    தங்களின் அன்றாடப் பதிவுகளை வரிக்குவரி படித்து, படத்துக்குப்படம் அணுஅணுவாக மிகவும் ரஸித்து அனுபவித்தவன் என்ற முறையில், மனம் திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

    என் மனமார்ந்த இனிய நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  18. [18]

    ஆன்மிகக் கலப்பு அதிகம் இல்லாமல் தாங்கள் வெளியிட்டுள்ள பல பதிவுகளில், என்னை மிகவும் கவர்ந்து, என் மனதைக்கொள்ளை கொண்ட பதிவுகளாக கீழ்க்கண்ட 35 பதிவுகளை அடையாளம் காட்ட விரும்புகிறேன்:


    http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_6028.html
    1] யானை விளையாட்டு

    http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_21.html
    2] மிடுக்காய் கடுக்காய்

    http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_03.html
    3] பஞ்சவர்ணக்கிளிப்பூ

    http://jaghamani.blogspot.com/2011/06/blog-post_06.html
    4] கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்

    http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_03.html
    5] வியத்தகு விமான நிலையங்க்ள்.

    http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_24.html
    6] கை வண்ணம் கலை வண்ணம்

    http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_10.html
    7] கண்ணாடிப்பாலமும் தொட்டிப்பாலமும்

    http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_04.html
    8] அன்பு நண்பனுக்கு ஆராதனை

    http://jaghamani.blogspot.com/2011/09/blog-post_10.html
    9] ஆஹா, ஹாங்காங்

    http://jaghamani.blogspot.com/2011/09/blog-post_22.html
    10] இரயில் பயணங்களில்

    http://jaghamani.blogspot.com/2011/09/blog-post_21.html
    11] புதுமை புதுமை கொண்டாட்டம்

    http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_16.html
    12] வானில் வண்ணக்கோலங்கள்

    http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_03.html
    13] பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்.

    http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_27.html
    14] மிஞ்சிய பலன் தரும் இஞ்சி

    http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_06.html
    15] பந்தாட்ட யானைகள்

    http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_25.html
    16] கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்.

    http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_10.html
    17] லயிக்க வைக்கும் லங்காவி

    http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_24.html
    18] பட்டையின் பராக்கிரமம்

    http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_25.html
    19] ஹாங்காங் நோவாவின் கப்பல்

    http://jaghamani.blogspot.com/2012/02/blog-post_05.html
    20] பூப்பூவாய்ப் பூத்த புதுப்பூக்கள்

    http://jaghamani.blogspot.com/2012/02/1.html
    21] மலர்களே மலர்களே

    http://jaghamani.blogspot.com/2012/02/blog-post_26.html
    22] உல்லாச உலகம்

    http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_11.html
    23] கருத்தான கருவேப்பிலை

    http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_25.html
    24] தேன் மதுரத் தேன் சிட்டுக்கள்

    http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_7471.html
    25] உலக பொம்மலாட்ட தினம்

    http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_03.html
    26] நிஷாகந்தி - பூப்பூக்கும் ஓசை

    http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_08.html
    27] பஞ்ச வர்ணக்குருவிகள்

    http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_19.html
    28] செல்லப்பிராணிகள்

    http://jaghamani.blogspot.com/2012/11/blog-post.html
    29] கடலுக்குள் கலாட்டா

    http://jaghamani.blogspot.com/2013/02/blog-post_6.html
    30] சர்வ தேச யானைகள் திருவிழா

    http://jaghamani.blogspot.com/2013/03/blog-post.html
    31] பட்டத்திருவிழா

    http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_26.html
    32] பாசப்பறவைகள்.

    http://jaghamani.blogspot.com/2013/06/blog-post_2.html
    33] பூமரங்கள் வீசும் சாமரங்கள்

    http://jaghamani.blogspot.com/2013/06/blog-post_15.html
    34] பச்சைக்கிளிகள் பரவும் பக்த அனுமன் !

    http://jaghamani.blogspot.com/2013/06/blog-post_30.html
    35] கடல் பசுக்கள்

    >>>>>>

    ReplyDelete
  19. [19]

    தாங்கள் அன்று முதல் இன்றுவரை வெளியிட்டுள்ள தங்களின் அனைத்து ஆயிரம் பதிவுகளுக்குமே வருகை தந்து கருத்துக்கள் கூறியுள்ளவன் நான் ஒருவனே என்பதில், ’பூவோடு சேர்ந்த நாராக’ ஓர் மிகப்பெரிய சந்தோஷம் எனக்குள் இப்போது ஏற்பட்டுள்ளது. ;)))))

    மேலும் ஓர் விஷயம் தெரியுமா, உங்களுக்கு?

    நீங்கள் இன்றுவ்ரை வெளியிட்டுள்ள மொத்தப்பதிவுகள் வெறும் 1000 மட்டுமே.

    அந்த ஆயிரம் பதிவுகளிலும் சேர்த்து என்னுடைய பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை மட்டுமே ஆறாயிரத்துக்கும் [6000 +] மேல் உள்ளன.

    அதுவும் நடுவில் காக்கா-ஊஷ் ஆனவைகளை கணக்கில் சேர்க்காமலேயே. ;)

    >>>>>>

    ReplyDelete
  20. 20]

    தங்களின் இந்த வெற்றிகரமான 1000வது பதிவினை, இனிமேல் தான், நான் பொறுமையாகப் படிக்கப் போகிறேன்.

    படித்து விட்டு மீண்டும் கருத்துக்கள் கூற கட்டாயம் வருவேன்.

    >>>>>

    ReplyDelete

  21. [21]

    தங்களின் இந்த மாபெரும் வெற்றிவிழாவினைக் கொண்டாட, இன்று என் வலைத்தளத்தில் சிறப்பான ஸ்பெஷல் பதிவு ஒன்று தந்துள்ளேன்.

    ’ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அமுத மழை பொழிவு’த் தொடருக்கு இடையே தங்களுக்கோர் சிறப்பிடம் கொடுத்து கெளரவிக்கப்பட்டுள்ளது.

    தலைப்பு:

    ஆயிரம் நிலவே வா ..... ஓர் .....
    ஆயிரம் நிலவே வா ........ ! ;)))))

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

    >>>>>

    ReplyDelete
  22. சிறப்பான கருத்துக்களால் எல்லோரது மனத்தையும் கவர்ந்து நிற்கும் உங்கள் தளத்தில் விளைந்து கிடக்கும் இந்த ஆயிமாவது ஆக்கம் மென்மேலும் பெருகிட வாழ்த்துக்கள் தோழி !...........

    ReplyDelete

  23. 22]

    இன்றும் என் தொடர்பு எல்லைக்குள் நீடித்து வரும் என் நட்பு வட்டத்தை, பல்வேறு வழிகளிலும் நான் தொடர்புகொண்டு, தங்களின் இந்த வெற்றிப்பதிவுக்கு வாழ்த்துச்சொல்ல வேண்டி, இங்கு கட்டாயம் அனுப்பி வைப்பேன்.

    மெயில் மூலம், சாட்டிங் மூலம், தொலைபேசி மூலம், பின்னூட்டப்பெட்டிகள் மூலம், எனச்சுமார் 150 நபர்களைத் தொடர்பு கொள்ள உத்தேசித்து உள்ளேன்.

    அதில் ஒரு 100 பேர்களாவது தங்களை வாழ்த்த நிச்சயமாக இங்கு வருவார்கள் என்று நம்புகிறேன். பார்ப்போம்.

    LET US WAIT & SEE.

    >>>>> அதுவரை இப்போது நீண்ட இடைவேளை >>>>>

    ReplyDelete
  24. அற்புதம் சகோதரியாரே. ஆயிரத்தைத் தொட்டமைக்கு வாழ்த்துக்கள். இலட்சத்தை இலட்சியமாக்கி முன்னேறுங்கள் உங்களால் முடியும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான கருத்துரைகளால்
      ஊக்கமளித்ததற்கு இனிய நன்றிகள்..!

      Delete
  25. ஆனைமுகன் தரிசனம் அதிகாலையில்!! அருமையான ஆயிரமாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அருமையான தென்றலாய் வாழ்த்துரை தந்தமைக்கு
      இனிய நன்றிகள்..!

      Delete
  26. பல்லாண்டு பல்லாண்டு என்று ஆனந்தமாய் பாடத் தோன்றுகிறது.. இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் பதிவுகள் நீங்கள் எழுத வேண்டும்.. நாங்கள் தெய்வீக அருளில் திளைக்க வேண்டும்..

    இரு கரம் கூப்பி அன்பின் வணக்கம் :)

    ReplyDelete
    Replies
    1. ஆனந்தமாய் பாடிய வாழ்த்துரைக்கு இனிய நன்றிகள்..

      இருகரம் கூப்பிய அன்பின் வணக்கத்தை
      நானும் தெரிவித்துக்கொள்கிறேன்..!

      Delete
  27. ஆயிரம் பதிவுகளை அளித்தவளே
    ஆயிரம் நாமம் கொண்டவளின்
    அருளின்றி சாத்தியமோ அது உனக்கு ?

    உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில்
    ஒளி உண்டாகும் என்றான் பாரதி
    வலையில் ஒளிரும் படங்கள்
    மனதில் பதியும் கருத்துக்கள்

    ஞான முதல்வனின் ஓவியங்களும்
    அவன் தத்துவ விளக்கங்களும் அருமை
    அருமை.

    தத்துவன் எங்குள்ளானோ அங்கு
    அங்கு தத்துவனும் உண்டு என்றார் திருமூலர்.

    இறைவனை வணங்கும்போது
    அந்த தத்துவத்தை உணர்ந்து
    வணங்கினால்தால் ஆன்மீக விழிப்பு ஏற்படும்.
    அந்த வகையில் உங்கள் பதிவுகள்
    பயனுள்ளவை ஆன்மீக சாதகர்களுக்கு.

    தொடரட்டும் உங்கள் பணி
    தொய்வில்லாமல் என்றென்றும்
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் இனிய வாழ்த்துப்பாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..!

      தத்துவங்களை நாடி புரிந்துகொள்ளும் முயற்சியில்
      புரிந்தவற்றைப் பதிவாக்கும் முயற்சிக்கு ஆக்கமும்
      ஊக்கமும் தரும் நல் உள்ளங்களுக்கு இனிய நன்றிகள்..!

      Delete

  28. பொன்னும் பொருளும் மறைந்த பொழுதிலும்
    எண்ணும் எழுத்தும் மறையாதுலகினில்
    கண்ணும் கருத்துமாய் நீ வடித்த காவியம்
    மின்னும் உலகினில் மிளிர் கொன்றை நிலவெனவே

    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மிளிர் கொன்றை நிலவென வாழ்த்துப்பா பாடி
      மிளிரும் பதிவினால் வாழ்த்திய அன்புத்தோழிக்கு
      மிளிரும் நன்றியுரைகள் .. நன்றி..! நன்றி..!!

      Delete
  29. முதல் ஆயிரம் பதிவுகளை அடைந்ததற்கு வாழ்த்துகள் மேடம். பிரமிக்கத்தக்க, பாராட்டத்தக்க, வியக்கத்தக்க வணங்கத்தக்க பதிவர் நீங்கள். பல்வேறு விநாயகர்கள் மனத்தைக் கவரும் வேளையில் ஊஞ்சல் ஆடும் விநாயகர் உவகைக் கொள்ள வைக்கிறார்.

    பொருள் கூறி, பொருளையும் விளக்கமாக கூறியிருப்பது சிறப்பு. படங்கள் அழகூட்டுகின்றன. இது ஒரு pdf ஆகக் கிடைத்தால் நலம். படங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

    மறுபடியும் வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. உவகை தரும் வண்ணக் கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      pdf வடிவில் கொண்டுவர முயற்சிக்கிறேன் ..

      Delete
  30. இதுவரை என்றுமே காணாத அழகான படங்கள்... ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆயிரமாவது பதிவுக்கு
      வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  31. பெண்பதிவர்களில் ஆயிரத்தை தொட்ட முதல் பதிவர் தாங்கள்தான். ஆயிரம் பதிவேழுதிய அபூர்வ பதிவர் இராஜேஸ்வர அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்பும் நீங்கள் சேகரித்து அளித்த அழகான படங்களும் , தெய்வீக செய்திகளும் எங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாய் அமைந்திருக்கின்றன. தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
    Replies
    1. அன்பின் முரளிதரன் - இராஜ இராஜேஸ்வரி மூண்றாண்டுகளில் ஆயிரத்தைத் தொட்டவர். இது சாதனை தான் - பாராட்டுகளுக்குரியவர் - ஆனால் இன்னொரு பெண் பதிவரும் இருக்கிறார் - அவர் நியீஸிலாந்தைச் சேர்ந்த திருமதி துளசி கோபால் அவர்கள். http://thulasidhalam.blogspot.co.uk - 2011லேயே 1000 வது பதிவினை எழுதி விட்டார். ஆகவே இராஜ இராஜேஸ்வரி இரணடாவது சாதனையாளர் ஆகிறார். ஒரு நாள் கூட தவறாமல் பதிவிட்டவர். இவரது சாதனை முறியடிக்க இயலாத ஒன்றாகிறது. நல்வாழ்த்துகள். பாராட்டுகள். நட்புடன் சீனா

      Delete
    2. பின் தடம் அறிவதற்காக - இம்மறுமொழி

      Delete
    3. பதிவுலகம் என அறிமுகமாகும் முன்பே ஆயிரம் பதிவுகள் எழுதியவர்களை தொடர்ந்து படித்திருக்கிறேன் ..

      திருமதி துளசி கோபால் அவர்கள் ,
      திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்..,

      சிறப்பாக எழுதக்கூடிய நிறைய பெண்பதிவர்களைப்
      பார்த்துத்தான் பதிவுலகில் அடியெடுத்து வைத்தேன் ..

      தங்கள் வாழ்த்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  32. சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு
      இனிய நன்றிகள் ஐயா.!

      Delete
  33. தமிழ்ப் பதிவு உலகத்தில் ஆன்மீகத்தில் மிகச் சிறப்பான பதிவுகளுடன், எண்ணத்தில் உதித்திட்ட வண்ணக் கோலங்களை அழகு ததும்பும் சீரிய படங்களுடன்...ஆஹா! அழகு...! அற்புதம்! என வியக்கவைத்திடும் உன்னதமான கலைப்பொக்கிஷங்கள்....போற்றி பாதுகாத்திட வேண்டிய பொக்கிஷங்களாய் ....
    இறைவனுக்கு செய்யும் சேவையை விட அறியாதோர் மனதினில் இருக்கும் மாசுகளை படிக்கும் போதே களைந்தெரிந்திட்ட புண்ணியம் நல்கும் பதிவுகள்!....

    தங்களின் பதிவுகளை படித்து வந்த பிறகே ஆன்மீக பதிவுகள் எழுத நினைத்து எழுத்துப் பணியை தொடங்கினேன்...

    என்னைப் போல பலருக்கும் ஊக்கமும் ஆதரவும் நல்கும் அம்மாவிற்கு என் வந்தனங்கள்!

    என் அன்னை அபிராமியின் அருளாலும், நண்பன் கிருஷ்ணனின் அருளாலும் மென்மேலும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்க! வளர்க!

    கலைத்தாயின் தவப்புதல்வியே இனிய பதிவுகளைத் தொடர்க!

    தொடருகின்றோம் ....இன்றும் என்றும்....

    தங்களின் அன்பிற்கு நன்றி! நன்றி அம்மா!

    ReplyDelete
    Replies
    1. வண்ண கோலங்களாய் வாழ்க வளர்க
      எனச்சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள்..!

      Delete
  34. ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். முதலில் பிள்ளையார் சுழி போட்டு பதிவை துவக்குவது போல் 1000 க்கு அப்புறம் முதலில் இருந்து மறு படி தொடர பிள்ளையார் சுழி போட்டு ஆனை முகனை வணங்கி இருக்கிறீர்கள்.
    வை. கோபலகிருஷ்ணன் சார் சொன்னது போல் தெய்வீக பெண்மணிதான் நீங்கள்.
    நானும் அப்படித்தான் நினைப்பேன் தெய்வீக அருள் இருந்தால் தான் இப்படி தங்கு தடங்கல் இன்றி எழுத முடியும் தினமும். தினம் தெய்வங்களின் அழகிய படங்களும் சிறப்பான செய்திகளும் தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!
    திருமதி துளசி அவர்களும் 1000 பதிவுகள் எழுதி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
    இன்று வழங்கியபதிவு மிக சிறப்பு.
    இதே உற்சாகத்துடன் எப்போதும் நீங்கள் பதிவுகள் தர வாழ்த்துகிறேன்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான உற்சாகத்துடன்
      வாழ்த்தியமைக்கு இனிய நன்றிகள்..!

      துளசி கோபால் முன்னோடி அல்லவா..!

      Delete
  35. Vaazhthukkal ma. Wish you all the very best to achieve more and more milestones.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துரை வழங்கியதற்கு
      இனிய நன்றிகள்..!

      Delete
  36. ஆனை முகனின் பாதம் தொட்டு வணங்கி ஆயிரம் பதிவுகள்.. வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்க வளர்க என வாழ்த்தி
      சிறப்பித்தமைக்கு இனிய நன்றிகள் மதுரையம்பதியாரே..!

      Delete
  37. வாழ்த்துக்கள் *1000
    நன்றிகள்
    பல்லாயிரமாகப் பெருகட்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப்பிறகான தங்கள் வருகைக்கும்
      1000* வாழ்த்துகள் வழங்கியதற்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் தோழி ..!

      Delete
  38. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள் தோழி ..!

      Delete
  39. ஆயிரமாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! ஆனைமுகனின் அருளுடன் தொடரட்டும் பயணம்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு
      இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  40. தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies

    1. வாழ்த்துகள் வழங்கியதற்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

      Delete
  41. திரு VGK (வை. கோபாலகிருஷ்ணன் ) அவர்கள் உங்களின் இந்த பதிவினைப் பாராட்டி எழுதிய “ ஆயிரம் நிலவே வா ! ... ... ... ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !! ” http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html#comment-form என்ற பதிவினில் நான் இட்ட கருத்துரைகள் .....

    1. // காலையில் எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்ததும் உங்களின் நற்செய்தி! அப்புறம் எனது வலைப்பதிவின் முகப்புப் பலகையில் ( Dashboard ) சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆயிரமாவது பதிவு மின்னியது. அவரது பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

    தீபாவளிக்கு முதல்நாள், கொண்டாட்டத்தை எதிர்பார்த்து எப்பொழுது பொழுது விடியும் என்று இருந்த குழந்தையின் மனதுபோல் உங்கள் பதிவு இருக்கிறது. திறந்த மனதோடு பாராட்டி இருக்கிறீர்கள்.

    சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! //


    2. // ஒரு பதிவு எழுதுவதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆயிரம் பதிவுகளை எப்படித்தான் வெளியிட்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
    மேலும் தனது வலைப்பதிவைத் தொடரும் பதிவர்களின் பதிவுகளுக்கும் விடாது கருத்துரைகள் த்ருவதிலும் உங்களைப் போலவே சலிப்படைவதில்லை. கைகள் ஆயிரம் உடையவள் காளி என்று படித்து இருக்கிறேன். அந்த காளியின் அருள் பெற்ற கவி காளிதாஸைப் போல சகோதரிக்கு புகழ் உண்டாகட்டும்!

    அவர் எழுதிய பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் ஒரு ஆராய்ச்சியே செய்து எழுதி இருக்கிறீர்கள். இந்த பதிவில் அவருடைய எழுத்தின் பாதிப்பு (வண்ண படங்கள் ) தெரிகிறது //.

    ReplyDelete
    Replies
    1. தனிப்பதிவுடன் அமர்க்களமாய்
      தீபாவளிக் கொண்டாட்டமாய்
      இனிமை சேர்த்த பதிவு எதிர்பாராதது ..

      தங்கள் வாழ்த்துகளுக்கும் இனிய கருத்துரைகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்

      Delete
  42. ஆயிரமாவது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வண்ண வண்ண வித விதமான பிள்ளையார்களின் படங்கள் அணிவகுத்து வந்து எங்களை திக்குமுக்காட வைத்துள்ளன. அதுவும் குறிப்பாக ஊஞ்சல் ஆடும் விநாயகரையும் கோலாட்ட விநாயகரையும் பார்த்துக் கொண்டே இருக்கலாமன் போலிருக்கிறது.பாராட்டுக்கள் பாராட்டுக்கள்.
    6000க்கு மேல் பின்னூட்டங்களிட்ட வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவரது மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விநாயகரை ரசித்து வணங்கியதற்கும்
      மகிழ்ச்சியில் பங்கேற்றதற்கும் பாராட்டிற்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  43. உங்களது ஆயிரமாவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    உங்கள் பணி மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies

    1. மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்

      Delete
  44. பதிவுலகில் இது ஓர் நிகரற்ற சாதனை. மிகக் குறுகிய காலத்தில் மலைக்க வைக்கும் அளவுக்குப் பதிவுகள் இடுவது என்பது சாதாரண விஷயமல்ல. போற்றுதலுக்குரிய சாதனை. தங்களை வணங்குகிறேன் அம்மா. இது போன்ற சாதனைச் சிகரங்கள் பல கண்டு பதிவுலகில் சாதனைப் பெண்மணியாக என்றேன்றும் திகழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இனிய கருத்துரைகள் அளித்தமைக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள்

      Delete
  45. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள். திரு வைகோ அவர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் ஈடு இணையற்ற அன்புக்கும், பாசத்துக்கும் தலை தாழ்ந்த வணக்கம். விநாயகர் அகவல் பொருத்தமாக அமைந்துள்ள இந்தப் பதிவைப் படிக்கக் கொடுத்து வைத்தது. வைகோவுக்கும் உங்களுக்கும் மீண்டும் நன்றி, பாராட்டுகள். விரைவில் இரண்டாயிரத்துக்கும் மேல் பதிவுகள் காணவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சில ஆண்டுகள் முன்பே ஆயிரம் பதிவுகள் கடந்ததை
      அறிந்திருக்கிறேன் ..

      பல வலைத்தளங்களில் தங்கள் சிறப்பான படங்களையும் முனைப்பான ஆக்கங்களையும் கண்டு வியந்திருக்கிறேன் ..!

      தங்கள் வாழ்த்துரைகளுக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள் ..!

      ஐயா அவர்களின் அன்பும் பாசமும் நிறைந்தவர் ..!

      Delete
  46. ஆக்கபூர்வமான பதிவுகளை வெளியிடும் தோழிக்கு வாழ்த்துக்கள்

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன் கருத்துக்களை பதிவு சில நேரம் பிரமித்து நின்று விடுகிறேன் ....

    ஆன்மீகத்தில் ஆழ்ந்த நுணுக்கமான கருத்துகளையும் அதற்க்கு தகுந்த படங்களை வெளியிடுவதிலும் உங்களை விட்டால் ஊருக்குள் ஆளில்லை தோழி அற்பதமான படைப்பாக்கம் .......

    ஒட்டுமொத்த ஆன்மீக விசயங்களையும் உங்கள் தளத்தில் தரிசித்து விடும் பாக்கியம் கிடைக்கிறது எங்களுக்கு ....
    நன்றி மென்மேலும் பல பதிவுகளை கொடுத்து படிக்கும் மனதை தூய்மை ஆக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆக்கபூர்வமான கருத்துரைகளால் உற்சாகம் அளித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் தோழி..!

      Delete
  47. தோழிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.. எண்ணிக்கை கொள்ளவியலாதவாறு எண்ணற்ற பதிவுகள் தொடர மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன். என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்..:)

    ReplyDelete
    Replies
    1. வாழ்க வளமுடன் ..!

      மகிழ்ச்சியுடன் மனம் நிறைந்த வாழ்த்துகள் கூறி
      சிறப்பித்தமைக்குஇனிய அன்பு நன்றிகள் தோழி ..!

      Delete
  48. ஆயிரமாவது பதிவுக்கு மனம் நிறந்த வாழ்த்துக்கள் மேடம்.

    மேலும் மேலும் பல ஆயிரம் பதிவுகள் நீங்கள் வெளியிட வேண்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் கூறி சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் தோழி..!

      Delete
  49. தங்களது ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் கூறி சிறப்பித்தமைக்கு
      இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  50. not an easy feat.. congratulations.
    manamaarndha vaazthukkal.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த வாழ்த்துகளுக்கு
      இனிய அன்பு நன்றிகள்..!

      Delete
  51. ஆர்வமும் தரமும் எந்த விதத்தில் குறைவுபடாமல்
    என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதுபோல்
    ஆயிரமாவது பதிவைத்தரும் தங்களைச்
    சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துச் சொல்வதில்
    மிக்க பெருமிதம் கொள்கிறேன்
    நிச்சய்ம் இது இமாலயச் சாதனையே
    சாதனைகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. வாழ்த்துகூறி ஆசியளித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா ..!

      Delete
  52. பெருமையில் பங்கு கொள்வதே பெருமையாக இருக்கிறது. சோர்வற்ற உங்கள் உழைப்பு வாசித்தோருக்கு விளைவித்த மகிழ்ச்சியே அதற்கான பலன். இறை இன்பத்தில் முகிழ்த்த பக்தியாக அது மலர்ந்திருப்பது இன்னும் விசேஷம். வாழ்த்துக்கள், ராஜி மேடம்.

    ReplyDelete
    Replies
    1. விஷேசமான வாழ்த்துகளுடன் சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  53. 1000 மாவது பதிவு!வியத்தகு முறையில் இந்த சாதனை செய்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அத்தனை பதிவுகளும் முத்து, வைரம், வைடூரியம் என்று சொல்ல வேண்டும். எத்தனை புகைப்படங்கள்! எத்தனை எத்தனை இடங்கள் பற்றிய தகவல்கள்.
    பிரமிப்புடனேயே மற்றுமொருமுறை வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

    திரு வைகோ அவர்களுக்கும் பாராட்டுக்கள். உங்கள் மேல் அவர் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்னொரு பிரமிப்பை உண்டு பண்ணுகிறது!

    ReplyDelete
    Replies
    1. நவரத்தினமாய் ஜொலிக்கும் வாழ்த்துரைகள் வழங்கி சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள்

      Delete
  54. ஆயிரம் பதிவுகள்... அடேங்கப்பா..! வாழ்த்துக்கள் பல! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் பல கூறி சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  55. congrats madam,...!!!!i have heard about ur greatness from my father in law,V.Gopalakrishnan..one of ur fans.. today i have got d chance to look at ur page..iam lucky to read abt vinayagar agaval and its in depth meaning..presentation is very pleasing...wish u to contribute N number of articles in ur subsequent days.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அருமையான வருகைக்கும் அழகான இனிய கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      அருமையான மாமியார் - மாமனாரை உறவாகக்
      கொண்டதற்கு வாழ்த்துகள்..

      பல்லாண்டுகள் இனிது வாழ
      இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ..!

      Delete

  56. எத்தனையோ பேர் வலைப்பூவில் பதிவெழுதுகிறார்கள்.ஆனால் இந்த DEDICATION அமைவது அபூர்வமே. ஜீனியஸ் இராஜராஜேஸ்வரி அம்மா தலை வணங்குகிறேன். எனக்கு ஒரு சந்தேகம் எழுவதுண்டு. ஒரு தொழிற்சாலையில் PRODUCTION LINE- இலிருந்து சீராகவரும் ப்ராடக்ட் போல பதிவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அழகான படங்களுடன் வெளியாவதுராஜராஜேஸ்வரியின் கை வண்ணத்தில் இருந்தா அல்லது அவர் இயக்கும் இடுகை தொழிற்பேட்டையிலிருந்தா? திரு. கோபாலகிருஷ்ணன் மனம் திறந்து பாராட்டி யிருக்கிறார். அதில் நானும் பங்கு கொள்கிறேன். பாராட்டுக்கள், பாராட்டுக்கள்...!!!.

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் பெரியவர்களிடம் கிடைக்கக் கொடுத்துவைத்திருப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா..

      மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..!1

      Delete
  57. அற்புதமான செய்திகளை படங்களுடனும் தகுந்த விளக்கத்துடனும் சிறப்பாக பகிரும் தங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் சிறப்பான வாழ்த்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் தோழி..!

      Delete
  58. 1000 மாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விநாயகனின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் ,வாழ்த்துகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  59. congrats for 1000 posts madam it not easy for all to achieve this especially in aanmeegam we are still learning a lot of information about solving life problems in simple way through this blog

    ReplyDelete
    Replies

    1. அருள் நிறைந்த வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  60. மூலமே கணத்திற்கெல்லாம் முதல்வனாம் என்னப்ப காஞ்சி
    ஆலடிப் பிள்ளையாரே அடியேனுக்கருள் செய்வாய்.
    அம்மா, நீ இராஜராஜேஸ்வரிதான். அருளில்லாமல் எழுதுவது கடினம்.
    கொட்டும் நயகரா நீர் வீழ்ச்சியோ உனது அருள் பொதிந்த இடுகைகள்.
    பிடியுங்கள் எனது பாராட்டுகளையும், ஆச்சரியத்தையும்.
    1000 பதிவுகள் தந்த நீங்கள் பல்லாயிரக் கணக்கான பதிவுகளைத் தந்திட
    வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அளிக்கிறேன்.
    அருமையான வினாயகர் பதிவு. வை.கோவிற்கும் நன்றி. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. அனுதினம் வணங்கும் காஞ்சி காமாட்சி
      அன்னையே பிரத்யட்சமாகி வாழ்த்துகள் வழங்கி
      ஆசீர்வதித்ததாய் உணர்கிறேன் அம்மா..

      ஐயா அவர்களுக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  61. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - இத்தனை மறுமொழிகளூக்குப் பிறகு எனது மறுமொழி வருகிறது. தற்சமயம் அயலகத்தில் இருப்பதனால் நேர வித்தியாசத்தினால் இப்பொழுது தான் வருகிறேன்.

    1000 வது பதிவினை 936 நாட்களிளேயே எழுதி சாதனை படைத்த முதல் பதிவர் தாங்கள் தான். அத்தனையும் ஆன்மிகப் பதிவுகள் . ஒவ்வொரு ஆன்மீகப் பதிவினிலும் பலப் பல படங்கள் - அத்தனையும் இறைவனின் படங்கள் - விளக்கங்களோ இது வரை யாரும் அளீக்காத விபரமான விளக்கங்கள். தல வரலாறு கொண்ட பதிவுகள். பாடல்கள் கொண்ட பதிவுகள்.

    தங்களுக்கு வந்திருக்கும் மறுமொழிகளீன் கணக்கு தெரியவில்லை. அருமை நண்பர் வை.கோ மட்டுமே 1000 பதிவுகளிலும் 6000க்கு மேல் மறுமொழிகள் இட்ட சாதனையாளராகிறார். தங்களீன் ஆன்மீகப் பணியினால் வரும் புண்ணியங்கள் அவருக்கும் நிச்சயம் சென்றடையும்.

    ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வலைப் பதிவர்கள் தங்கள் பதிவினை நிச்சயம் படித்து விட்டு குறிப்பெடுத்துக் கொண்டு அவைகளின் அடிப்படையில் தான் செல்கிறார்கள். வழிகாட்டுவது தங்கள் பதிவுகள் தான். ஐயமே இல்லை.

    தங்களீன் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. இறையருள் பெற்ற தங்களீன் எழுத்துகள் அனைவரையும் கவர்வதில் வியப்பில்லை.

    ஆனை முகனின் அடி பணிந்து 1000 வது பதிவினைத் துவங்கி இருக்கிறீர்கள். காயத்ரி மந்திரத்தினை வைத்துத் துவங்கிய தங்களீன் சேவை முதல் பதிவு - ஆன்மீகப் பதிவெழுதுவது ஒரு சேவை தான் - ஆனைமுகனை முன்னிறுத்தி ஆயிரமாவது பதிவு எழுதி இருக்கிறீர்கள் .

    தங்கள் சாதனைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நண்பர் வை.கோவினிற்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. லேட்டஸ்ட்டாய் நிறைய தகவல்களை ஆராய்ந்து அயலகத்தில் இருந்தாலும் சிரமம்பாராமல் வாழ்த்துரைத்த சாதனைக்கு இனிய நன்றிகள் ஐயா..

      இந்த நிமிடம் வரை கருத்துரைகளின் கணக்கு -
      Published comments 22429 »

      பெரியோர்களின் ஆசியுரைகளுக்கு மனம்
      நிறைந்த நன்றிகள் ஐயா..

      Delete
  62. romba romba great madam. I salute ur dedication, ellaa padhivum irai nambikkaiyum ,bhakthiyum, santhoshamum tharuvathaay amainthirukkirathu sirappu. elloorukkum ippadi oru arivum seyal thiranum vaaypathillai. you are blessed.

    anbudan,
    shakthi.

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் தருவதாய் அமைந்திருக்கும் தங்கள்
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் தோழி..!

      Delete
  63. மனம் கனிந்த வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும். வளரட்டும் உங்கள் பணி. விரைவில் 2000 எட்டுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் கனிந்த வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா..!

      Delete
  64. ஆயிரமாவது பதிவுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் இராஜிம்மா...

    வை.கோ அண்ணா எப்போதும் புதிய பதிவு இட்டால் மெயில் இடுவதோடு சரி.. ஆனால் இன்று மெயில் இடும்போது பிரத்யேகமாக குறிப்பிட்டதால் வந்து பார்த்தேன்.. இராஜிம்மா யூ டிசர்வ்ட்....

    முதல்ல உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.. ஏன்னா எங்க செல்லம்.. எங்க குட்டி.. எங்க பட்டு.. எங்க ராஜு.. எங்க லட்டு கீர்த்தி வினாயகரை விதம் விதமா படம் பிடிச்சு எங்க லட்டுக்குட்டியோட படங்கள் கண் வழிச்சென்று மனம் நிறைந்துவிட்டதுப்பா...

    ReplyDelete
    Replies
    1. மனம் கனிந்த பாராட்டுக்களுக்கும் ,வாழ்த்துகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் தோழி ..!

      வை கோ அண்ணா நிறைந்த சிரத்தை எடுத்து
      விழாக்கோலமாய்கோலாகலமாய் சிறப்புற கொண்ட்டமாய் அமைத்தது எதிர்பாராதது ..!

      Delete
  65. சீனா சார், 20011-ஆம் வருடம் என்னுடைய எண்ணங்கள் பதிவும் ஆயிரம் கண்ட அபூர்வ சிந்தாமணியாக ஆகி இருக்கிறது. இப்போது ஆயிரத்து அறுநூறாவது பதிவை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மூர்க்காரங்களே நம்மளை மறந்துட்டாங்களே என்ற ஆற்றாமை தான்! வேறே ஒண்ணும் இல்லையாக்கும்! :))))))))))

    ReplyDelete
    Replies
    1. அன்பின் கீதா சாம்பசிவம் - நான் எனக்குத் தெரிந்த துளசி தான் 1000 பதிவுகள் எழுதி உள்ளார் என நினைத்து விட்டேன் - மூத்த பதிவர்கள் இன்னும் எனக்குத் தெரிந்தவர்களே இருக்கிறார்கள் என்பதனை மறந்து விட்டேன் . தங்களீன் பதிவும் 20011ம் ஆண்டு ஆயிரம் கண்ட அபூர்வ சிந்தாம்ணை ஆகி விட்டதென தெரிவித்ததை அடுத்து தங்கள் வலைப்பூ சென்று தேடினேன். என் கணக்குப் படி 02.08.2010 அன்று எழுதிய கண்ணன் வருவான் கதை சொல்லுவான் என்ற பதிவு 1000 வது பதிவென நினைக்கிறேன். மூத்த பதிவரான - 2005ல் இருந்து எழுதுகிற பதிவரான தங்களை மறந்தது தவறு தான். வருந்துகிறேன். பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
    2. அட! இப்படியெல்லாம் இங்கே சர்வே ஓடுதோ!!!!!!

      சரி. நம்ம பங்குக்குக் கொஞ்சம் ஓட்டலாம்.

      துளசிதளத்தின் ஆயிரம் 16 ஏப்ரல் 2010 இல் வந்தது:-)

      Delete
  66. இனி உங்க பதிவுகள் பற்றி....


    இராஜிம்மா நீங்க பகிர்வது முழுக்க முழுக்க ஆன்மீகப்பதிவு மட்டுமில்லாமல் ஒவ்வொரு பதிவுக்கும் தேர்ந்தெடுக்கும் படங்களில் இருந்து ஒவ்வொரு விளக்கமும் ஸ்லோகங்களும் பகிரும் நேர்த்தியும் கண்டிப்பாக ஃபுல் மார்க்ஸ் உங்களுக்கு தர வேண்டும்...


    ஒவ்வொரு முறை உங்க பதிவுக்கு வந்துவிட்டால் படங்களை ரசித்து கோயிலுக்கு உள் நுழைந்து கர்ப்பகிரஹத்தில் அருகிருந்து விளக்கொளியில் பிரகாசமாக ஒளிரும் தெய்வங்களை தரிசித்த பூரண மன நிறைவு எனக்கு எப்போதும் ஏற்பட்டதுண்டுப்பா..

    ஒரு முறைக்கூட நான் ஏமாற்றத்துடன் திரும்பியதே இல்லை.. பெரும்பாலும் நான் அறிந்திராத ஸ்தல புராணத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் உங்கள் வலைப்பூ...

    ஷீர்டி என்றால் சாய்பாபா, திருப்பதி என்றால் வெங்கடாச்சலப்பதி, பழனி என்றால் முருகன் என்பது போல வலைப்பூவில் ஆன்மீகப்பதிவுகள் என்றால் கண்டிப்பாக எல்லோர் கண்முன் மலர்வது உங்க தாமரைப்பூ படமும்... தெய்வப்படங்களும் நீண்ட விளக்கமும் அருள் தரும் ஸ்லோகங்களும் மட்டுமே இராஜிம்மா...

    வை.கோ அண்ணாவின் சிரத்தை என்னை ஆச்சர்யப்படுத்தவே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. பூரண மனநிறைவுடன் அழகாகக் கருத்துரை வழங்கி நிறைவளித்திருக்கிறீகள் தோழி..!

      வை கோ .அண்ணா எதையும் முழுமையாக திட்டமிட்டு செய்பவர்.. அவர் பணிபுரிந்த இடம் அப்படி..!

      Delete
  67. ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி!

    உங்கள் அரும்பணி சொல்லிலடங்காது சோதரியே!
    எங்கள் மனங் குளிரத் தந்திடும் உங்கள் பணி
    இன்னும் தொடர்ந்திட வேண்டும்!

    இதயங் கனிந்த நல்வாழ்த்துக்கள் இனிய சகோதரியே!

    ReplyDelete
    Replies
    1. மனங்குளிரத்தந்திட்ட இதயங்கனிந்த நல்வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் தோழி..!

      Delete
  68. எத்தனை கோவில்கள் எத்தனைதெய்வங்கள்,தரிசித்து,தரிசிப்பித்து உங்கள் புண்னியத்தில் எங்களுக்கும் பங்கு கொடுத்து.....இமாலய சாதனை அம்மா!
    தலை வணங்குகிறேன்
    தொடருங்கள் ஆயிரம் ஆயிரமாய்

    ReplyDelete
    Replies
    1. குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தந்த மாதிரி
      சந்தோஷம் தரும் கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  69. ஏனெனில் வை.கோ அண்ணாவின் பணி எப்போதுமே பர்ஃபெக்ட்.. உங்கள் பதிவினைப்போலவே... ஆழ்ந்த பகிர்வும், அன்பும் இருவரின் நட்பு எத்தனை அற்புதம்...

    இறைவன் உங்களுக்கு என்றும் நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் தந்து.. உடல்நலத்துடன் இருந்து இன்னும் இதுபோல் இரண்டாயிரம் பகிர்வுக்கும் வை.கோ அண்ணா வாழ்த்துச்சொல்லி எங்களிடம் சந்தோஷமாய் பகிர்ந்து நம் வீட்டுக்குழந்தைகளின் வெற்றியை கொண்டாடும் ஒரு தகப்பனின் சந்தோஷத்தை பார்க்கிறேன்....

    நிறைவான நன்றிகள்பா...

    ReplyDelete
    Replies
    1. பர்ஃபெக்ட் ஆன ஏற்பாடுகள் எதிர்பாராதவை..!

      சந்தோஷமான நன்றிகள் .

      Delete
  70. அட, மன்னிப்பெல்லாம் அதிகம் சீனா சார், சும்ம்ம்ம்ம்ம்மா என் வழக்கப்படி உங்களைக் கொஞ்சம் வம்பு பண்ணினேன், அம்புடுதேன்! என் நினைவு வராதது குறித்து வருத்தம் எல்லாம் ஒண்ணும் இல்லை. அதனால் ஒண்ணும் தப்பில்லை. :))))))))

    ReplyDelete
    Replies
    1. அன்பின் கீதா சாம்பசிவம் - வழக்கப் படி வம்பு பண்ணினது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. - ந்டபின் நெருக்கத்தினைக் காட்டுகிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
  71. ஆயிரமாவது பதிவுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்! இந்தப் பதிவையும், உங்கள் ஏனைய பதிவுகளையும் படிக்கும் போது ஏற்படும் வியப்புக்கு அளவே இல்லை!!!

    ReplyDelete
    Replies
    1. இத்தனை பிரபலமான எழுத்தாளரே வியப்படைகிறாரே..! ஆச்சரியம் தான் ..

      தங்கள் இனிய கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!!

      Delete
  72. ஆயிரம் பதிவுகள்! சாதனைதான். உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இமாவின் அன்பு வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்

      Delete
  73. ஆயிரத்திற்குப் பல்லாயிரம் வாழ்த்துக்கள் !
    மேன்மேலும் பதிவுகளும் புண்ணியங்களும்
    பெருகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தங்கச்சுரங்கத்தின் இனிய வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

      Delete

  74. வணக்கம்!

    பல்லாண்டு பாடி படைக்கின்றேன் ஓா்பாட்டு!
    சொல்லாண்டு! நல்ல சுவையாண்டு! - நல்லழகாய்
    வில்லாண்டு மின்னும் வியனடியை நன்காண்டு
    மல்லாண்டு வாழ்க மகிழ்ந்து!

    பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பாகவாழ்த்துகளைச்
    சொல்லி மகிழ்கின்றேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. பல்லாண்டு பாடி வாழ்த்தி
      சொல்லில் மகிழ்வித்த
      பிரான்சு கம்பன் கழகத்திற்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

      Delete
  75. வெகுதாமதமாக வருகிறேன்.இராஜராஜேஸ்வரி.
    எண்ணிக்கையைவிடத் தாங்கள் தந்திருக்கும் விவரங்கள் படங்கள் அனைத்தும் மிகமிக அருமை. இன்றுகூட விநாயகர் அகவலைப் படித்துவிட்டுப் போய்விட்டேன். மீண்டும் வந்து பின்னூட்டம் இடுகிறேன்.
    மஹா பெரிய சாதனையாளர் நீங்கள். அம்பளும் ,விநாயகரும் பெருமாளும் எப்பொழுதும் உங்கள் பதிவுகாளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். என் வணக்கங்களும் வாழ்த்துகளும். இன்னுமோர் ஆயிரம் படைக்க நிறைய நாளாகாது உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. லேட்டஸ்டான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  76. செந்தாமரைப்பூ என்றாலே தங்கள் நினைவு வருவது தவிர்க்க இயலாதது. இன்று சீதக்களபச் செந்தாமரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாட எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் பெருமை போற்றும் பதிவாய் தங்கள் ஆயிரமாவது பதிவு சிறப்பு! மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. பகலவனைக்கண்ட தாமரையாய்
      மனம் மலரவைத்த மனமார்ந்த
      வாழ்த்துகள் அளித்து சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  77. ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு தெய்வீக அருள் இருந்தால் தான் இப்படி தங்கு தடங்கல் இன்றி எழுத முடியும் தினமும் நானும் அப்படித்தான் நினைப்பேன் . தினம் தெய்வங்களின் அழகிய படங்களும் சிறப்பான செய்திகளும் தருவதில் அவர்களுக்கு நிகர்....

    அம்மா அவர்களுக்கு என்னுடை மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் தெரிவிக்கிறேன்......

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த வாழ்த்துகள் அளித்து சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்

      Delete
  78. ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு தெய்வீக அருள் இருந்தால் தான் இப்படி தங்கு தடங்கல் இன்றி எழுத முடியும் தினமும் நானும் அப்படித்தான் நினைப்பேன் . தினம் தெய்வங்களின் அழகிய படங்களும் சிறப்பான செய்திகளும் தருவதில் அவர்களுக்கு நிகர்....


    அம்மா அவர்களுக்கு என்னுடை மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் தெரிவிக்கிறேன்......

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த வாழ்த்துகள் அளித்து சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  79. பதிவுலகில் வெகு சிலர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர்.. அதிலும் எந்த காபி பேஸ்டும் இல்லாமல் அத்தனையும் சொந்த முயற்சியில், சொந்த எழுத்தில் சாதித்த உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பதிவிலும் ஒரு சுவாரஸ்யம், உயிரூட்டும் வண்ணப் படங்கள், கண்ணைக் கவரும் கடவுளின் படங்கள் என உங்களுக்கென தனி நடையில் பயணித்து தமிழ் பதிவுலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்து விட்டீர்கள்...

    உண்மையான, தனித்துவமான ஆயிரம் பதிவுகள்... தொடர்ந்து எழுதுங்கள். எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
    ( உங்களின் ஆயிரமாவது பதிவை எல்லோருக்கும் தெரியப்படுத்திய கோபாலகிருஷ்ணன் சாருக்கு மிக்க நன்றி)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் அளித்து சிறப்பித்தமைக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      ஐயா அவர்களுக்கு சிறப்புமிக்க நன்றிகள்..

      Delete
  80. கீதா சாம்பசிவம் என்னால ஏம்பா உங்க வலைப்பூவுக்கு வரவே முடியலை? :(

    ReplyDelete
  81. விநாயகர் வணக்கத்துடன் சிறப்புறும் உங்கள் ஆயிரமாவது பதிவுக்கு நல்வாழ்த்துகள்.

    தொடரட்டும் பதிவுகள். பல்லாயிரமாக வளர்க! அன்பான வாழ்த்துகள்.
    வெற்றிவிநாயகர் துணை இருப்பான்.

    ReplyDelete
    Replies
    1. வ்ந்ற்றிவிநாயகர் துணையுடன் நல்வாழ்த்துகள் நல்கி சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  82. ஆயிரமாவது பதிவுக்கு எனதன்பான வாழ்த்துக்கள் அக்கா ...

    Angelin.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  83. கொஞ்சம் தாமதமாக வந்து இங்கே சேர்ந்தேன் ..
    கோபு அண்ணா நிறைய விருந்தெல்லாம் படைத்துவைத்திருந்தார் அவற்றை உண்டு தூங்கிட்டேன் பஸ்ஸில் இடம் கிடைக்கலை !!!!!!

    ReplyDelete
    Replies
    1. லேட்டஸ்ட்டாய் திருப்தியுடன்
      விருந்துக்குப்பிறகு வருகைக்கு வாழ்த்துகள்..!

      Delete
  84. மஞ்சுபாஷிணி, எந்த வலைப்பக்கத்தைச் சொல்றீங்க?? :))))) எல்லாப் பதிவுப் பக்கங்களும் எல்லாரும் வந்து போறாப்போல் தானே இருக்கு! :))) முயற்சி செய்யுங்க.

    ReplyDelete
    Replies
    1. கூகுள் ப்ளஸ் போல இருக்குப்பா... என்னால உங்க போஸ்டிங் பார்க்க இயலவில்லை :(

      Delete
  85. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி. விநாயகரின் நல்லாசியுடன் மென் மேலும் தொடரட்டும் உங்கள் பதிவுகள்

    கடவுளின் அனுக்ரகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்றும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  86. ஆயிரம் பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  87. பல்லாயிரமாக பெருக மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies

    1. மனம் நிறைந்த நல்வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  88. 1000க்கு வாழ்த்துக்கள்...
    தொடர்ந்து எழுதுங்கள்...
    படமும் பகிர்வும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  89. ஆயிரம் பதிவுகள்..... நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பதிவிட எவ்வளவு பொறுமை வேண்டும் - அதுவும் பதிவுக்கு பதிவு ஏராளமான படங்கள் சேர்த்து சுட்டிகள் கொடுத்து இத்தனையும் செய்ய எத்தனை உழைப்பு தேவையாக இருக்கும் என நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது....

    ஆயிரம் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  90. மனம் கனிந்த வாழ்த்துக்கள் தோழி. விநாயகர் பற்றிய பிரம்மாண்டமான பதிவு வியப்பின் உச்சம்.

    வை. கோ. சார் கூத்தாடி இருக்கிறார்! பார்க்கப் பரவசம்.

    ReplyDelete
    Replies
    1. மனம் கனிந்த வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      பரவசமான கொண்ட்டாட்டத்திற்கு இனிய நன்றிகள்..!

      Delete
  91. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  92. ராஜிம்மா,
    வாழ்த்த வயதில்லை
    அனுபவமில்லை
    சாத்தியமும் இல்லை
    அதனால் வணங்குகிறேன்.
    பிரமித்துப் போய் நிற்கிறேன்.

    நீங்கள் எங்களுக்கு முன்னோடி
    இனி தினமும் உங்கள் தளத்திற்கு ஒரு முறை வந்து எட்டிப் பார்ப்பேன். அப்பொழுதுதான் எனக்கும் பதிவுகளைப் போடும் ஆர்வம் வரும்.

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி
    www.manammanamviisum.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விழா இனிது நடைபெற
      இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..!

      வருகைக்கும் கருத்துரைக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

      Delete
  93. தலைப்பில் [நிறைந்த் = நிறைந்த] ஓர் புள்ளி கூடுதலாக உள்ளது. அதை முடிந்தால் எடுத்து விடுங்கோ. அதாவது த் = த என மாற்ற வேண்டும்.

    அதன் கீழ் 4 சிறிய கட்டம் + 4 பெரிய கட்டம் தெரிகிறது. அவற்றில் எந்த நம்பர்களுமே தெரியவில்லை

    சிறிய கட்டங்கள் தாண்டி _ _ _ _ ”வது பதிவு “ என்பது மட்டுமே தெரிகிறது..

    அதன் பிறகு மூன்றாவது வரிசையில் நான்கு கட்டங்களில் மத்யானம் வரை ஏதோ உலக உருண்டைபோலத்தெரிந்தன.

    இப்போது சற்று நேரம் முன்பு தான் ஜோராக பூப்பூவாக 1000 என்ற நம்பர்கள் தெரிந்தன.

    இப்போது வெறும் 1 மட்டும் தெரிகிறது 0 0 0 காணாப்போச்சு !

    >>>>>>

    ReplyDelete
  94. முதல் பிள்ளையாரப்பா சும்மா ஜொலிக்கிறார். மின்னுகிறார்.

    இன்று சாயங்காலம் போய் பிள்ளையாருக்கு ஒரு சதிர் தேங்காய் அடித்துவிட்டு இப்போது தான் வந்தேன்.

    ஏதோ எல்லாம் இதுவரை நல்லபடியாக முடிந்த வரை சந்தோஷமே.

    >>>>>>>

    ReplyDelete
  95. காட்டியுள்ள எல்லாப்பிள்ளையார்களுமே அருமை தான்.

    உங்களிடம் பிள்ளையார்களுக்கும், அனுமார்களுக்கும் பஞ்சமே இல்லை போலிருக்கு. ஒவ்வொன்றிலும் ஒரு 500 படங்களாவது வைத்திருப்பீர்கள் போலிருக்கிறது.

    குடங்களைக்கவிழ்த்து அதையே பிள்ளையாராக ஆக்கியிருப்பது விசித்திரமாக உள்ளது.

    கஷ்டமான வேலை அல்லவா! அதுவும் தும்பிக்கைப்பக்கம் .... அப்பப்பா!

    >>>>>>

    ReplyDelete
  96. இன்றைய பதிவில் அந்தக் கணக்குப்பிள்ளையாக இருக்கும் பிள்ளையார் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்.

    அவரின் முத்துமுத்தான ஜொலிக்கும் ஆபரணங்களும், கை மோதிமும், ஜொலிக்கும் புட்டா போட்ட சிவப்பு சட்டையும், டெஸ்க், நாமம், மூக்கண்ணாடி, முத்துச்சொம்பு, இறகுப்பேனா, எலியார் என எல்லாமே ஜோர் ஜோரா ஜொலிக்குதே ;)))))

    >>>>>>

    ReplyDelete
  97. 27]

    ஒளவையார் அருளிய விநாயகர் அகவலை முழுவதுமாக ஆங்காங்கே எழுதி, அதற்கான விளக்கங்களும் கொடுத்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    மொத்தத்தில் இன்றைய பதிவு பிரமாதம்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo- 1000 -oOo-
    .

    ReplyDelete
  98. ஆயிரம் பதிவுகள் படைத்த தங்களுக்கு உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள். விநாயகர் அகவலோடு விநாயகரின் பலவித வடிவங்கள் வெகு அழகு..

    ReplyDelete
  99. aayiram என்பது இலகுவா. அதை அளித்திட்ட திறமைதான் இலகுவா . அழகுப் பதிவுகளும் அதில் ஆன்மீகச் செருகலுமாக அள்ளி வழங்கும் உங்கள் வலைப்பூவுக்குள் வாசம் மிக அதிகம் . வாயார வாழ்த்துகிறேன் தொடர வேண்டும் உங்கள் தொடரின் பயணம். நாம் சுவைக்க வேண்டும் உங்கள் பதிவுகளின் சுகந்தம் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  100. aayiram என்பது இலகுவா. அதை அளித்திட்ட திறமைதான் இலகுவா . அழகுப் பதிவுகளும் அதில் ஆன்மீகச் செருகலுமாக அள்ளி வழங்கும் உங்கள் வலைப்பூவுக்குள் வாசம் மிக அதிகம் . வாயார வாழ்த்துகிறேன் தொடர வேண்டும் உங்கள் தொடரின் பயணம். நாம் சுவைக்க வேண்டும் உங்கள் பதிவுகளின் சுகந்தம் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  101. வாழ்த்துக்கள், சேவை இனியும் தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  102. congratulations on your 1000 th post madam, such great job your really a great lady. I am really happy I got a chance to know about you and your achievements through Mr.Gopalakrishnan. It is a wonderful opportunity for me to know about the real indepth meaning of vinayagar agaval is simply fantastic...
    Keep going madam and keep spreading the knowledge to all of us madam.
    Thanks and Regards...

    ReplyDelete
  103. இது சாதாரண விசயம் அல்ல.சாதனையான விசயம்.வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.கணபதியின் படங்கள்,மிகவும் அழகு.

    ReplyDelete
  104. ஆயிரமாவது பதிவு மிக மிக அழகு. இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
    தொடருங்கள் நீங்கள். நாங்களும் தொடர்கிறோம்.

    ReplyDelete
  105. சக பதிவாளர் கேட்டு கொண்டதற்கிணங்க உங்கள் தளம் வந்தேன் உங்களது 1000 மாவது பதிவு கண்டு வியந்தேன். பெண்பதிவாளர்கள் தங்கள் குடும்பங்களை கவனித்து கிடைக்கும் நேரங்களில் பதிவு எழுதிவடுகிறார்கள் என்பதே அதிசயம் அதிலும் நீங்கள் தினசரி ஒரு பதிவு எழுதி 1000 த்தை தொட்டுள்ளீர்கள் அதற்காக உங்களுக்கும் உங்களை போல இதற்கு முன்பு முடித்த துளசி, கீதா மேடம் அவர்களுக்கும் எனத் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  106. ஹைய்யோ!!!!! ஆயிரம் அத்தனையும் ஆண்டவனைப்பற்றியே!!!!!

    அடடடா........... என்னென்னு சொல்வேன்!!!!!

    மனம் நிறைந்து வழியும் இனிய பாராட்டுகளும் இனி இவை ஆயிரமாயிரமாகப் பெருக வேண்டும் என்ற வாழ்த்துகளுடனும்

    நியூஸியில் இருந்து துளசியும் கோபாலும்.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  107. பதிவுகள் 1000! வியக்க வைக்கும் சாதனையாளர் நீங்கள் என்பதில் ஐயமில்லை! தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
    அருமையான பதிவுகள் தந்தமைக்கு நன்றி! வாழிய பல்லாண்டு! வளர்க நும் தொண்டு!

    ReplyDelete
  108. 1000 தரமான பதிவுகள்! ஆச்சரியமும், ஆனந்தமும் அடைகிறேன் தங்கள் சாதனையைக் கண்டு! தொடர்க! வெல்க!

    ஸ்ரீ....

    ReplyDelete
  109. அன்பின் வை.கோ - என்னை போலவே ஆனைமுகனை வணங்கித் துவக்கிய செயல் சிறப்புடன் நடைபெற்ற வுடன் ஆனைமுகனைத் தரிசித்து சிதர் தேங்காய் உடைத்தது நலல் செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு சீனா ஐயா,

      அன்பான வணக்கங்கள்.

      ஒவ்வொருவரின் பின்னூட்டத்தையும் கூட, [குறிப்பாக அடியேன் என் அம்பாளுக்குத் தந்துவரும் பின்னூட்டங்களை மட்டுமாவது] கூர்ந்து நோக்கிப் படித்து, அதற்கும் தங்கள் கருத்துக்கள் சொல்லிவரும் உங்களை நினைத்தால் எனக்குப் பெருமையாகவும் பொறாமையாகவும் உள்ளது ஐயா.

      நான் சின்னச்சின்ன விஷயங்கள் எதற்குமே, [பெரிய விஷயங்களான, முக்கியமாக குழந்தைகளின் வெளிநாட்டு விமானப்பயணங்கள் முதலியன வரை] பிள்ளையாருக்கு ஒரு சிதர் தேங்காய் அடித்து விட்டுத்தான் வருவேன். அதுபோல கருப்பர் உண்டியலில் பணம் போடுவேன். ஹனுமனுக்கு மார்பில் சாற்ற ஒரு வெண்ணெய் பொட்டலம் கொண்டுபோய்கொடுப்பேன். [இதனால் நம் நெஞ்சமும் குளிரும்]. இவைகள் அடிக்கடி நான் செய்துவரும் சிறுசிறு பிரார்த்தனைகள். இவை எல்லாமே என் வீட்டிலிருந்து மிக அருகில் உள்ள கோயில்களுக்கு மட்டுமே.

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html

      சிதர் தேங்காய் உடைத்து விட்டுப் பயணம் மேற்கொண்டால் மட்டுமே அது மிகுந்த பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைகிறது என்பது என் நீண்ட நாள் அனுபவத்தில் நான் உணர்ந்தது.

      உதாரணமாக, உங்களைப்போன்ற ஒரு சில நல்லவர்கள் என் வீட்டுக்கு வருகிறார் எனக்கேள்விப்பட்டாலே, நல்லபடியாக வந்து போனதும், பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக என் மனதில் உடனடியாக வேண்டிக்கொள்வேன்.

      வேண்டாத விருந்தாளியாக யாராவது வருவதாகச் சொல்லி, பிறகு அவர்கள் ப்ரோக்ராம் கேன்சல்டு எனத் தகவல் வந்தால், சந்தோஷத்தில் பிள்ளையாருக்கு இரண்டு தேங்காய்களாக உடைத்து விட்டு வருவேன்.

      அதாவது வந்தால் ஒரு தேங்காய் வராவிட்டால் இரண்டு தேங்காயகள் என்பதே என் பாலிஸி. ;))))) [யாரையும் நானாக அழைப்பதும் இல்லை.]

      அதுபோலவே சில விஷயங்கள் நடந்தால் ஒரு தேங்காய் நடக்காவிட்டால் இரண்டு தேங்காயகள்.

      சிலரின் விசேஷ அழைப்பிதழ்கள் என்னை நேரில் சந்தித்தோ அல்லது தபால் மூலமோ கொடுக்கப்பட்டால் ஒரு தேங்காய், கொடுக்கப்படாவிட்டால் இரண்டு தேங்காயகள்.

      எனக்கு எது நல்லதோ அது நடக்கட்டும், இல்லாவிட்டால் நடக்காமலேயே போகட்டும் என எல்லாப்பொறுப்புக்களையும் விநாயகரிடமும், ஹனுமனிடம், கருப்பரிடமும் ஒப்படைத்து விடுவேன். நான் ஜாலியாக இருப்பேன். எல்லாம் அவன் செயல்.

      நான் ஒரு தேங்காய் உடைக்கணுமா அல்லது இரண்டு தேங்காய்கள் உடைக்கணுமா என அவன் என் அப்பன் “பிள்ளையாரப்பா” தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

      அப்படியும் என்னை சோதனை செய்வதற்காக சில வேண்டாத நபர்களை என் வீட்டுக்கு வலுவில் அனுப்பி வைத்து வேடிக்கை பார்க்கிறான் அந்த விநாயகன். ;))))) எல்லாம் ஒரு தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் VGK

      Delete
  110. 1000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம்,தொடரடும் தங்கள் பணி!!

    ReplyDelete
  111. தாங்களின் 1000 மாவது பதிவுக்கு என் நல்வாழ்த்துக்கள் அக்கா. தாங்க்ள் இன்னும் நிறைய பதிவுகள் தந்து அசத்தவேண்டும். அதற்கு எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் தங்களுக்கு அருள் புரியட்டும்.
    இப்பதிவும் படங்களும் மிகமிகச்சிறப்பு. நன்றி.

    ReplyDelete
  112. தாமதமான வருகைக்கு மன்னிக்க.

    ReplyDelete
  113. ஆயிரமாவது பதிவுக்கு என் ஆயிரம் வாழ்த்துக்கள். நான் ஒரு தடவை வாழ்த்தினால் ஆயிரம் தடவை வாழ்த்தியதா எடுத்துக்கொள்ளோணும்:).

    தாமதமா வந்தமைக்காக நானே அந்த தொப்பைப் பிள்ளையார் முன்னாடி நின்று 10 தடவை தோப்புக்கரணம்.. போடு...சே..சே.. போட்டுவிட்டேன்:).

    இன்னும் பல ஆயிரம் பதிவுகள் காண, எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டி விடைபெறுகிறேன்.

    ReplyDelete
  114. ஆயிரம் பதிவிற்கு இனிய வாழ்த்து.
    இன்னும் பல ஆயிரங்களாக தொடர இனிய வாழ்த்து.
    இறையருளும் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  115. தங்களின் 1000மாவது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள். மிக அருமையான பதிவுகள் தந்தமைக்கு நன்றிகள். இன்னும் நிறைய பதிவுகள் தரவேண்டும்.
    தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  116. அன்புள்ள சகோதரி..

    ஹ ர ணி வணக்கமுடன்.

    மனம் மறந்துபோயிருக்கிறேன். உங்கள் பதிவுகளைப் பெரும்பான்மை படித்தவன். தெய்வீகத் தொடர்பான செய்திகளையும் அதற்கானப் படங்களையும் பார்த்துப் பொறாமைப்பட்டவன். இதற்கெல்லாம் கடவுள் கொடுப்பினை இல்லாமல் சாத்தியம் இல்லை. பூரண பாக்கியம் வாய்த்திருக்கிறது உங்களுக்கு. உங்களின் தொய்விலா தெய்விகப்பணி தொடர்ந்து இலட்சங்களை இலட்சியமாகக் கொள்ளட்டும். மனம் நிறைய வாழ்த்துகிறேன்.

    உங்களின் அனுமதியோடு உங்கள் பதிவிலுள்ள சில விநாயகர் படங்களை எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நான் ஒரு விநாயர்தாசன். நீங்கள் அனுமதி தந்தபிறகுதான்.

    வாழ்த்துகிறேன் சகோதரி. வாழ்க.

    ReplyDelete
  117. நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பணி.

    ReplyDelete
  118. 1000 பதிவுகள் பிரமிக்க வைக்கின்றன.வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  119. Congrats my dear........
    It is not an easy joke to complete 1000 posts.
    That too very very valuable.....
    I must thankyou dear for your posts....
    When I was at USA and missed my place at India, through your posts, i was cheeredup many times.
    Now days I was not able to move.
    Sitting at home, enjoying all the temples, viewing beautiful pictures is with the help of you and your posts...
    Do you know, some times i used to laugh loudly, try to dance(with one leg),
    shed tear with emotional,
    shout loudly with joy,
    Everything happened on seeing your posts.
    I mostly enjoy all the pictures most.
    You had taken me to places where i cannot imagine to visit at all.
    How can I say tell thanks to you dear?
    I prey, prey the almighty but for you, sure.
    All the best and expecting more and more from you....
    viji

    ReplyDelete
  120. Rajeswari,
    Nan seriyana pillayar paithiam...
    Enga veetela parthinganne enga parthalkum pillayar ethavathu posel ennai parthukondu irrupar.
    Ellavitha paintingelayum(reverse glass, glass, mural,Tanjorepainting,oil, fabric) oru Pillayar enga veetale enkoodave irrukar.
    Enga partha ennum vedaveedama pillayar.....
    OOOOOhhhhOOOOO enakku santhosham thanaley......

    ReplyDelete
  121. ஆயிரம் பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete