Sunday, July 6, 2014

திருவருளும் குருவருளும் அருளும் சதுர்மாத விரதம்




உருவா யருவா யுளதா யிலதாய் 
மருவாய் மலராய் மணியா யொளியாய் 
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய்  வருவா யருள்வாய் குகனே.

துறவிகளுக்கான விரதமாக சாதுர்மாஸ்ய விரதம் விளங்குகிறது.

சதுர் என்றால் நான்கு. இதுவே சாதுர் ஆனது. 

சாதுர்மாஸ்ய விரதம் என்பது மகான்கள், துறவிகள் மழைக்காலமாக விளங்கும் ஆடிமாதம், முதல் நான்கு மாதங்கள்வெளியில் செல்லாமல் ஓரிடத்தில் நான்கு மாதங்கள் தங்கி வேதங்களை ஆய்வு செய்வதாகும்  

விருப்பமிருந்தால் இல்லறத்தாரும் சதுர்மாத விரதத்தை மேற்கொள்ளலாம்.

.நமக்காக நாம் இருக்கும் விரதத்தால் ஏதோ ஒரு பலன் 
கிடைக்குமென நம்புகிறோம். 

முற்றும் துறந்த.....துறவிகள் தங்களுக்காக 
இந்த விரதத்தை அனுஷ்டிப்பதில்லை. 

மனித சமுதாயம் மட்டுமல்ல...பிற உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடனேயே இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். 

பொதுவாக இந்த விரதம் ஆடி பவுர்ணமியில் துவங்கி, 
ஐப்பசியில் முடிப்பார்கள். 
ஆடிப் பௌர்ணமியன்று சதுர்மாத  விரதம் தொடங்கும் 
நாளில் ஆச்சார்யர்களை வழிபட வேண்டும்.

ஆடி மாதப் பௌர்ணமியை "ஆஷாட சுத்த பௌர்ணமி' என்பர். இந்நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொள்வார்கள். 
அன்று துறவிகள் வியாச பூஜை செய்வார்கள்.. வியாச பவுர்ணமி என்றும், குரு பவுர்ணமி என்றும் சிறப்பிக்கப்படுகிறது..

குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில்
 (ஆடிப் பௌர்ணமி) குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞானச்செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பது யோகரகசியம்.
எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு. 
தனது அக வாழ்விற்கு வழிகாட்டித் தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமா.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள்,  

இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம், 
பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம்.  
குரு என்பது சுழுமுனை சுவாசம் 

இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகத்தத்துவம். 

சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும் 
ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா.   

இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிகொண்டு குருவின் துணையோடு யோகசாதனையைத் தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா.

யோகப்பண்பாட்டில் இந்தத் திருநாள் ஆனந்தமான ஒரு நாளாகக் 
கொண்டாடப் படுகிறது

முழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை 
உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா  

குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள். 

குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனதுகுருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கட்டியம் கூறுகிறது .

இந்தக் காலங்களில் மழை அதிகமாகப் பெய்யும். பூச்சிகள் அதிகமாக வெளியே நடமாடும். அந்த பூச்சிகள் தங்கள் காலில் மிதிபட்டு விடக்கூடாதே என்ற உயர்ந்த எண்ணம் ஒரு காரணம். 

இதன்மூலம், துறவிகள் மக்களுக்கு ஜீவகாருண்யத்தைப் போதித்தார்கள். 

கடவுளின் படைப்பில் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுமே சுதந்திரமாக வாழ வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள். 

தங்களைப் பார்த்து எல்லா மக்களும் இந்த புண்ணியச்செயலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மறைமுகமாக அறிவுறுத்துகிறார்கள்.

அது மட்டுமல்ல! இந்தக் காலத்தில் உணவுக்கட்டுப்பாட்டையும் அவர்கள் அனுசரிக்க சொன்னார்கள். 

குறிப்பிட்ட இந்தக்காலத்தில் மழை காரணமாக, சூரியனை பல நாட்கள் பார்க்காமல் போய்விடும் சூழ்நிலை உண்டு. 

சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே! என்று அவர்கள் போதித்தார்கள். 

குளிரோ, மழையோ, வெயிலோ...துறவிகள் . எல்லா சீதோஷ்ணமும் அவர்களுக்கு ஒன்று தான். அவர்கள் வழக்கம் போல், பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30 முதல்) தங்கள் அன்றாடப் பணியைத் துவங்கி விடுவார்கள்.

அது மட்டுமல்ல! சூரியன் அன்று உதித்தால் தான் சாப்பிடவே செய்வார்கள். 

ஒருவேளை, நாள் முழுக்க மழை பெய்து சூரியன் கண்ணில் படவில்லை என்றால், சாப்பிடவே மாட்டார்கள்.

துறவிகளின் இந்தச் செயலைப் பார்த்து, மகாத்மா காந்தியின் அன்னை கஸ்தூரிபாய் அம்மையார், சூரியனை தரிசித்தால் மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். 

தாய் பட்டினி கிடப்பதை பொறுக்க முடியாத காந்திஜி, வீட்டு வாசலில் வந்து நின்று, சூரியன் வானில் தெரிந்ததும், அம்மாவை அழைப்பார். சூரியன் தன் கண்ணில் பட்டால் தான், அவர் சாப்பிடுவார்.

துறவிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கும் காலத்தில், மக்கள் அவர்களைச் சந்தித்து ஆசி பெற வேண்டும். 

இடிந்த கோயில்களைப் புதுப்பிக்கவும், மடங்களுக்கும், வேதம் கற்கும் மாணவர்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் திருவருளுடன் குருவருளும், சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள்.

இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும்.

இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். 
மூன்றாம் மாதம் தயிர் சாப்பிட மாட்டார்கள்
இம்மாதம் முழுவதும் உளுந்து மற்றும் உளுந்தால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்களை விரதமிருப்போர் சாப்பிடக் கூடாது. 
இவையெல்லாம் அந்தக் காலத்தில் மேற்கொண்டதாக வரலாறு சொல்கிறது. இந்தக் காலத்திலும் ஒருசில துறவிகள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள். 

இந்த சாதுர்மாஸ்ய விரதமென்பது,  ருது சரியையைக் கருத்தில் கொண்டு திரிதோசத்தைச் சமப்படுத்தும் ஒரு மருத்துவ வழிமுறையே.

22 comments:

  1. சதுர்மாத விரதம் அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. பிற உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடனேயே இந்த விரதம் எனபது சிறப்பு... நன்றி அம்மா...

    ReplyDelete
  3. சதுர்மாஸ்ய விரதம் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. இவ்வாறான ஒரு விரதம் பற்றிகேள்விப்பட்டதில்லை. தற்போது அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  5. அடடா மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்று வகுத்த இந்த நான்கு
    நிலைகளுக்கும் இது தானா அர்த்தம் !!இதுவரை அறியாத விரதமும்
    அதன் பலா பலன்களும் கண்டு மகிழ்ந்தேன் .பல புதிய தகவல்களை
    இன்றைய பகிர்வினூடாகவும் தந்து மகிழ்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்புத் தோழி .வாழ்க வளமுடன் .

    ReplyDelete
  6. சதுர்மாஸ்ய விரதம் பறி மேலும் அறிய முடிந்தது - தங்களது இனிய பதிவினால்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  7. ’அவ்யாஜ கருணாமூர்த்தி’ போன்ற தங்களின் கருணையினால், ஞான செல்வத்தை தினமும் எங்களுக்கு அன்றாடப் பதிவுகளின் மூலம் அள்ளி அள்ளித்தருகிறீர்கள்.

    தினமும் தங்கள் பதிவினைப்பார்ப்பதில் அப்படியொரு சந்தோஷம் ஏற்படுகிறது.

    >>>>>

    ReplyDelete
  8. சமீபத்தில் தான் இதுபோன்ற ஒரு பதிவினைத்தந்து மகிழ்வித்திருந்தீர்கள்.

    இருப்பினும் இதில் மேலும் பல கூடுதல் விஷயங்களை அறிய முடிகிறது. மகிழ்ச்சியே.

    >>>>>

    ReplyDelete
  9. உருவா யருவா யுளதா யிலதாய் ........
    அருமையான ஸ்லோகத்துடன் ஆரம்பமே ஜோர் ஜோர்.

    >>>>>

    ReplyDelete
  10. முதல் படம் முத்தானது. இந்தப்பக்கம் 9 தலைகள் + அந்தப்பக்கம் 9 தலைகள் நடுவில் ஒன்று ஆக மொத்தம் 19 தலைகள்.

    ஒரு தலையுள்ள மனிதனே தலைக்கனத்துடன் இந்த ஆட்டம் ஆடுகிறான் !

    19 தலைகள் உள்ள இந்த பகவான் உலகில் நடக்கும் எல்லா நியாய அநியாயங்களையும் சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார், பாருங்கோ.

    >>>>>

    ReplyDelete
  11. முற்றும் துறக்கத்தான் பொதுவாக நமக்கும் ஆசையாக உள்ளது.

    ஆனால் எனக்கு எதையுமே துளிக்கூட துறக்க மனம் வருவது இல்லை.
    அதனால் மட்டுமே தாமதமானாலும் இந்தப்பதிவுப் பக்கம் ஆசையில் நான் ஓடி வந்தேன் ........

    இந்த ஆசை என்பதும் பகவானால் நமக்கு அளித்துள்ள வரம் தான்.
    பகவானின் லீலைகள் தான். ஆசையையும் இன்பத்தையும் கூடவே துன்பங்களையும் கொடுப்பவன் அவனே தான்.

    >>>>>

    ReplyDelete
  12. மாதா பிதா குரு பற்றி குரு பூர்ணிமா ஸ்வாச விளக்கம் அருமையாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  13. உளுந்து தான் சைவர்களுக்கு சக்தி தரும் மிக முக்கிய உணவாகும்.

    உளுந்து வடையை தயிர் பச்சடியில் தோய்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.

    அவ்வாறு சாப்பிட்டால் அது, வேறு ஏதோ விரும்பத்தகாத [அசைவ] பதார்த்தங்களைச் சாப்பிடுவதற்கு சமமாகச் சொல்லப்பட்டுள்ளது.

    >>>>>

    ReplyDelete
  14. அழகான படங்களுடன் அற்புதமான செய்திகளைத் தாங்கி வந்துள்ள இன்றைய தங்களின் பதிவுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். வாழ்க !

    ;) 1327 ;)

    oo oo oo oo

    ReplyDelete
  15. Madam, sorry to say gandhiji wife name kasthuri bai.

    ReplyDelete
  16. Gandhiji mother's name putli bai.

    ReplyDelete
  17. சாதுர்மாஸ்ய விரதம் பற்றிய பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  18. மெய் ஞானப் பகிர்வு! மெய் ஞானம் பெற வேண்டுமென்போர்க்கு தக்க வழிகாட்டும் ஒரு உன்னதப் பகிர்வு! சித்தப் புருஷர்கள் உறையும் ஆலயங்கள் சென்று மெய்யுருகி தக்க குரு அமையப் பிரார்த்திக்க வலியுறுத்தும் பதிவு! நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. சிறப்பான கட்டுரை அம்மா...

    ReplyDelete
  20. சாதுர் மாஸ்ய விதிமுறைகளை அழகாகக் கொடுத்து இருக்கிறீர்கள். துறவிகளுக்கே இந்த விரதம் என்று நினைத்தேன். வாழ்பவர்கள் அனைவரும் னேற்கொண்டால் எவ்வளவு நன்மை தரும் என்பதைப் புரிந்து கொண்டேன். நன்றி ராஜேஸ்வரி.

    ReplyDelete
  21. அருமையாக சொன்னீர்கள் சதுர்மாத விரதம்பற்ற.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. இவ்விரதம் பற்றி இப்பொழுதான் அறிகிறேன்.சாதுர்மாஸ்ய விரதம் பற்றி சிறப்பான தகவல்களை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete