Saturday, August 31, 2013

ஸ்ரீலட்சுமி கணபதி








ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

ஸ்ரீலட்சுமி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 
12 வது திருவுருவமாகத் திகழ்கிறார்..!

எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம், இவற்றையுடையவரும் வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இருதேவிமார்களோடு விளங்கி அருள்புரிகிறார்..!.
லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், 
பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி 
ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், 
மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் 
ஏந்தி தன் இரு புறமும் இரு தேவிகளை அணைத்துக் 
கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். 
லட்சுமி கணபதியை வழிபடுவதால் பணம், பொருள்  அபிவிருத்தியாகும்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்கிர தேவதையாக விளங்கியபோது, ஆதி சங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்த வினாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்று பெயர்.  
மனசாந்தி வேண்டுவோர்  உக்கிரம் தணித்த விநாயகரை வழிபடுவது சிறந்த பலன்களைத்தரும்... 











Friday, August 30, 2013

யோகங்கள் அருளும் யோக ராமர்


Sita Ram
கும்பமகத்து வாயுமைந்தன் கோதண்டாத்தானொடு கூடியே 
பலித் தலமேகி தீர்த்தவாரியாடியே உத்திர மணக்கோலத்துமிருந்து
தொழுதேத்தக் கண்டோம் மெய்யே - வாயு மைந்தருக்கு நவவியாகரணபட்டமுங் கிட்ட கருவான தலமிதே’

-என திருமூலர் திருவாக்கில்  வியப்புடன் வணங்கிப்போற்றும் ஆஞ்சநேயருக்கு  சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் ஆச்சாரியனாய் இருந்து உபதேசிக்கும்  குரு அம்சமாய்  கோலம் கொண்டு கல்வி விருத்திக்கும் ஆரோக்ய மேம்பாட்டுக்கும் ஒருசேர ஞானமொடு சேர்க்க யோக  ராமச்சந்திர மூர்த்தியாக அருள்கிறார்..!
 Sita Ram
ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், சீதாபிராட்டியுடன் அமர்ந்து வீராசனத்தில் , சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கும் அரிய அமைப்பில் அருள்கிறார்...இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.

ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாகத்திகழ்கிறது.! .

கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமக்காக  ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
ராமர்-சீதை  மூர்த்திக்கு அருகில் ஆஞ்சநேயரும் அமர்ந்த நிலையில் கையில் ஓலைச்சுவடியைத் தாங்கி நிற்பது விசேஷம்.
தன்னைத்தியானிப்பவர்களுக்கு தாயார் செண்பகவல்லி நாச்சியார் இனிய மன அமைதியை அருள்கிறார்..
கடன் சுமை நீக்கி தீராத நோய் தீர்த்து  பிறவி இல்லாது இறைவனோடு உயிரை இணைக்கும் சக்தி உடையவள் செண்பகவல்லித் தாயார் தைரியத்தையும் தெம்பையும் ஊட்டுகிறாள்..!
[Gal1]
 கோயிலுக்கு நேரே வெளியில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் விஷ்வக்ஷேனர், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆளவந்தார், ராமானுஜர், தேசிகர் உள்ளனர். பிரகாரத்தில் வேணுகோபாலர், பரசுராமர், ஆஞ்சநேயர் உள்ளனர்
வால்மீகி மகரிஷி உள்ளிட்ட சப்தரிஷிகளும் பல்வேறு சித்தர்களும்  நாரத மகரிஷியும் பிரம்மதேவரும் கொங்கணர். கோரக்கரும் பிருகு மகரிஷியும். தொழுது பேறுபெற்ற புண்ணிய ஆலயம் இது.

ஆவணி மாதத்தில் இரண்டாம் வெள்ளிக்கிழமை, இன்றும் வால்மீகி மகரிஷி, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் முதலான பல சித்தர் பெருமக்களுடன் தசரத சக்ரவர்த்தி அரூபமாக திருக்கோயிலுக்கு எழுந்தருளி ராமச்சந்திரமூர்த்தி, தன் நாச்சியார் சீதாபிராட்டியுடனும் இளைய பெருமாள் லட்சுமணருடனும்  கருடன் மேல் எழுந்தருளும் காட்சியைக் கண்டு தொழுது இன்புறுகின்றனர். 
ஆவணி இரண்டாம் வெள்ளியன்று ராமர், சீதை, லட்சுமணருடன் கருட சேவை காட்சி தருவார். மாசி மகத்தன்று கோதண்டராமர், இங்கிருந்து மகாபலிபுரம் சென்று கடலில் தீர்த்தவாரி கண்டு திரும்புவார். பங்குனியில் நடக்கும் ராமநவமி விழாவில், உத்திரத்தன்று சுவாமி திருக்கல்யாணம் நடக்கும்.
யோகராமச்சந்திரமூர்த்தியை ஆஞ்சநேயர்  குருவாய் பெற்றதாலேயே. மிகுந்த ஞானம், கூரிய நுண்ணறிவு, வேகமாக சரியாகச் செயல்படுதல், மாறாத பிரம்மச்சாரியம், சத்யம் போன்ற சீரிய பண்புகள் நிறைந்து ஒழுக்கங்களையும்  ஒருங்கே அமைப்பெற்றார்..!

உலகத்தின் தோற்றத்திற்கும்  இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும்  வேதத்திற்கு மூலமாக இருப்பவர் யார்? அதை இயற்றியவர் யார்? அதன் சாரம் என்ன? என ஆஞ்சநேயருக்கு சந்தேகம் உண்டானது. தனக்கு சந்தேகம் தீர்க்கும்படி ஆஞ்சநேயர், ராமபிரானை வேண்டினார். 

சுவாமி சின்முத்திரை காட்டிய தனது வலது கையை நெஞ்சில் வைத்து, ""எல்லா உயிர்களுக்குள்ளும் பரமாத்மா என்னும் இறைவன் இருப்பதைப்போல, நானே வேதமாகவும், வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் இருக்கிறேன்' என்று உணர்த்தினார். இந்த அமைப்பில் அமைந்துள்ள கோயில் இது. யோக நிலையில் இருப்பதால் சுவாமிக்கு,
 "யோக ராமச்சந்திரமூர்த்தி' என்ற பெயர் ஏற்பட்டது.


அக்கினி பகவானும் வாயுபகவானும் வருண பகவானும் தொழுது போற்றிய தலவிருட்சமான செண்பக மரம், மிகவும் புண்ணியமானது. 

[Gal1]
மிகவும் சிறப்புற்றுத்திகழும் தல் விருட்சமான செண்பகமரத்தை சிரத்தையுடன் வணங்கித்தொழுது செல்வத்தில் குபேரனையும் மிஞ்சி இருப்பவர் நீருக்கு அதிபதியான வருணபகவான் ..!. 
ஞானத்தில் ஓங்கி இருப்பவர்கள் வாயுவும் அக்கினியும்.

கோயிலுக்குப் பின்புறமுள்ள கோட்டை மலையில்
வேணுகோபாலர் கோயில் உள்ளது..
[Image1]
 திருவண்ணாமலை - வேலூர் சாலையில் 48 கி.மீ.யில் (வேலூரில் இருந்து 32 கி.மீ.) உள்ள சந்தவாசலிலிருந்து 7 கி.மீ. சென்று படவேடு அடையலாம். பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவு..கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் கோயில் இருக்கிறது

Thursday, August 29, 2013

உற்சாகம் உலவும் உறியடி உற்சவம்










[sathya6.jpg]


மாணிக்கங்கட்டிவயிரமிடைகட்டிஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்பேணியுனக்கு பிரமன்விடுதந்தான் 
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
 
பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடலில் அலங்கரிக்கப்பட்ட குழந்தை கண்ணன் அவதரித்த தினத்தில் நிகழ்த்தப்படும் உறியடி உற்சவம் ஊற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது .. 
உறியடி உற்சவத் திருவிழாவினால்னிச்சிறப்புப் பெற்ற வரகூரில் 
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், - காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள் விழா நடைபெறும். 
உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக (நவநீதம் என்றால் வெண்ணெய் எனப்பொருள்)  உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். 
பின்னால் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் தொடரும்.

அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமுமாக, உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும். 

அடுத்து, பாகவதர்கள், நாராயண தீர்த்தர் இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடிக் கொண்டு வருவார்கள்.


இடையர் வேடம் அணிந்தவர்கள் உறியடி மரத்தை வந்தடைவார்கள். 

மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களை மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள்.

மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் உறியை எட்டிப் பிடிக்க முயலுகையில் ஊர் மக்கள் இந்தக் கயிற்றை  ஏற்றி இறக்கி ஆட்டம் காட்டுவார்கள்..
 தடிகொண்டு அடிப்பதற்கு இடையூறு செய்வதுபோல் தண்ணீரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்து, பார்வையை மறைப்பார்கள்.

முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெற்று கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
உறியடியை அடுத்து, வழுக்குமரம் ஏறுதல். 

உறியடி முடிந்தவுடன் உயரமான வழுவழுவாக்கப்பட்ட தேக்குமரத்தில் ஒருவர் மீது ஒருவராகத் தோள் மீது ஏறி வழுக்குமர உச்சியை அடைய முயலுவார்கள்.

எண்ணெய் வழுக்குவது போதாதென்று சுற்றியிருப்பவர்களும்ஏறுபவ்ர் மீது  தண்ணீர் அடித்து ஆரவாரம் செய்வார்கள். 

ஒரு வழியாக யாராவது ஒருவர் உச்சியை அடைந்து  மேலே கட்டி வைத்துள்ள பண முடிப்பையும் தின்பண்டங்களையும் கைப்பற்றி வெற்றியுடன் இறங்குவார். 

தின்பண்டங்களை நாலாபுறமும் வீசி எல்லோரக்கும் கொடுப்பது வழக்கம். 

விடியலில் நித்திய வழிபாடுகள் முடிந்து அலங்காரம் ஆராதனை முடிந்து, உஞ்சவிருத்தி, அதன்பின் முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற சம்பிரதாயங்களுடன் ருக்மணி கல்யாணம் நடைபெறும்.
இடையர் வேடமணிவது, உறியடி அடிப்பது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவை எல்லாம் வெறும் கேளிக்கையல்ல. 
கிருஷ்ண அவதார லீலைகள். 
அமைந்துள்ள செய்திகள் தத்துவார்த்தமானவை. 
உறியடி நமது ஆசைகள்; 
வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; 

தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் 
நமக்கு ஏற்படும் சோதனைகள். 
 
உறியடி உற்சவம் நடக்கும்போது பலர் கம்பத்தில் ஏறுவார்கள். 
பலர் வழுக்கி விழ, யாராவது ஒருவர் மட்டுமே உச்சியைத் தொடுகிறார். 

உச்சியை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி அவருக்கு மட்டுமின்றி, 
அவரை சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. 
அந்த ஒருவர் பெறும் வெற்றியை அனைவரும் 
தமக்கானதாக கருதி மகிழ்கிறார்கள். 

இதைப்போலவே, நம்மில் பூரணத்துவம் பெற்று சிறக்கும் 
ஒருவர் அடையும் நன்மையும் அனைவருக்கும் கிடைத்ததாகிறது.
நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.

உறியடி, ருக்மணி கல்யாணம், அனுமத் ஜெயந்தி என்ற மூன்றுநாள் விழா அமைப்பு முறையை உருவாக்கியவர் வரகூரில் வாழ்ந்து அங்கேயே முக்தியடைந்த நாராயண தீர்த்தரையே சாரும். 

அவரது கிருஷ்ண லீலா தரங்கிணியில் இவ்விழா பத்ததி 
(கொண்டாடும் முறை) தெளிவாக சித்திரிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள . வரகூர் மக்கள்,  
குலதெய்வமாக வெங்கடேசப் பெருமாள்   திகழ்கிறார் ..
வேலை கிடைத்து வெளியூர் , வெளிநாடு செல்லும் வரகூர் இளைஞர்கள், தங்கள் முதல் மாதச் சம்பளத்தை வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு அனுப்பி வைப்பதோடு முடி இறக்குதல், காது குத்துதல் வேண்டுதல்கள் எல்லாமே இந்தக் கோயில் தெய்வத்திற்குத்தான் என்று இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
Uriyadi Invitation 2009 - Page 2


[sathya6.jpg]

Uriyadi Invitation 2009 - Page 4
நிறைந்த நன்றிகள்  :  http://varagur.org/uriyadi/uriyadi-2013/

Uriyadi 2013 Invitation

Uriyadi 2013. invitation1.jpg