Monday, January 31, 2011

ஆதித்ய துதி


ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி


தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிகட்கெல்லாம்
துணைக்கரம் தருவாய் போறி


தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்துச்
சாரத்தைத் தருவாய் போற்றி


ஞாயிறே நலமே போற்றி
நாயகன் வடிவே போற்றி
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம்!
போற்றி !!   போற்றி !!!

7 comments:

  1. "ஆதித்ய துதி" அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி .

      Delete
    2. மிக்க நன்றி .

      Delete
  2. ஆதித்யா!
    சூர்ய ப்கவானே,
    நீயே பிரத்யக்ஷ தெய்வம்!!

    ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி
    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
    இருள் நீக்கம் தந்தாய் போற்றி
    ......
    ........
    ...........

    நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம்!
    போற்றி !! போற்றி !!!

    அருமையான பாடலல்லவோ இது!

    பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஹனுமத் ஸ்துதி

    [பயணங்கள் இனிமையாக அமைய]

    ஹனுமான் அஞ்ஜனாஸூனு:
    வாயுபுத்ரோ மஹாபல:

    ராமேஷ்ட: பல்குணஸக:
    பிங்காக்ஷ: அமிதவிக்ரம:

    உதிதக் கிரமண ஸ்சைவ
    ஸீதா சோக வினாசன:

    லக்ஷ்மண ப்ராணதாதாச
    தசக்ரீவஸ்ய தர்பஹா

    த்வாத சைதானி நாமானி
    கபீந்த்ரஸ்ய மஹாத்மன:

    ஸ்வாபகாலே படேந்நித்யம்
    யாத்ராகாலே விசேஷத:

    தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி
    ஸர்வத்ர விஜயீபவேத்!

    அபராஜித பிங்காக்ஷ
    நமஸ்தே ஸ்ரீராம பூஜித !

    ப்ரஸ்தானம் ச கரிஷ்யாமி
    ஸித்திர் பவதுமே ஸதா!!

    -oOo-

    ReplyDelete