Thursday, November 13, 2014

பாகம்பிரியாள்-சங்கரராமேசுவரர் திருக்கல்யாண திருவிழா








 திருவெற்றியூர்  வன்மீகநாதர் பாகம்பிரியாள் ஆலயத்தில் இருக்கும் லிங்கத்தில் சக்தியின் வடிவமும் சேர்ந்து இருப்பதால் அன்னை பாகம்பிரியாள் என்று அழைக்கப்பட்டாள். இங்கு சுவாமி அம்மன் இருவருக்கும் இருஅர்ச்சனைகள் சேர்ந்தே செய்கிறர்கள்.

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விக்னேசுவர பூஜை, புண்யாகவாசநம், பஞ்சகவ்யம், தேவதாநுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்ஸங்கிரஹரணம், அங்குரார்பணம், ரட்சாபந்தனம் ஆகியநிகழ்ச்சிகளுடன் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.. கணபதி ஹோமம்சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. 

 அம்பாள் பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி கண்கொள்ளாக்காட்சியாகும்..!
 பாகம்பிரியாள் அம்பாள் தேருக்கு எழுந்தருளல், தேரோட்டம் நடைபெறுகிறது. 

பாகம்பிரியாள் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை,  அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், சங்கர ராமேசுவரர் விருஷப வாகனத்தில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு காட்சி தருதல், மாலை மாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் பாகம்பிரியாள்-சங்கரராமேசுவரர் திருக்கல்யாண திருவிழா நடைபெறும்..!

10 comments:

  1. பாகம்பிரியாள்! என்ன ஒரு நாமகரணம்!

    ReplyDelete
  2. பாகம்பிரியாள் ன்னதும் எனக்கு 'பிதாமகன்' படம் தான் நினைவுக்கு வந்தது. இந்த அம்மனைப் பற்றிய தகவல்களை இப்போதான் கேள்விப்படறேன்.. :)

    ReplyDelete
  3. தூத்துக்குடியில் இருந்தபோது வீட்டுக்கு பக்கம் கோவில் அடிக்கடி போவோம், எல்லா திருவிழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும்.

    பாகம் பிரியாள் என்று அநத ஊரில் பிறந்த என் தங்கைக்கு பெயர் வைத்தார்கள் என் அம்மா அப்பா. என் தங்கையை பாகம்பிரியாளே பத்து மாதத்தில் எடுத்துக் கொண்டார்.

    ReplyDelete
  4. ”பாகம்பிரியாள்” பொருள் நீங்கள் தரவில்லை சகோதரி!
    ஆயினும் இறைவனின் ஓர்பாகமான பிரியை இப்படிப்
    பொருள் இருக்குமோவென எண்ணுகிறேன்!..

    அறியாத பெயரும் படங்களும் அதிசயம்!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  5. பாகம் பிரியா கோவில் பற்றி தெரிந்து கொண்டோம். அவளின் ஆசி எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  6. அருமையான தகவல்களுடன் சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. இதுவரை கேள்விப்படாத ஆலயம் பற்றி ஆர்வத்துடன் அறிந்துகொண்டோம்...

    ReplyDelete
  8. இறைவனுக்கும் இறைவிக்கும் சேர்ந்தே அர்ச்சனை நடை பெறுவது பற்றி அறிந்தேன். இங்கு மட்டும் தான் அப்படி நடக்கிறதா?

    ReplyDelete
  9. படங்கள் அருமை தோழர்
    செய்திகளும் தான்

    ReplyDelete
  10. திருக்கல்யாண திருவிழா கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete