Saturday, February 9, 2013

வலிமை சேர்க்கும் வால் வழிபாடு


அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன
உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி


அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி
வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறை யுணர்ந்தாய் போற்றி
மஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி
அன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயர் வழிபாடு சர்வமங்களங்களையும் அளிக்கக்கூடியது. 

அனைத்து உயர்ந்த குணங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயரின் வலிமை முழுதும் அவரது வாலில் இருக்கிறது. 


அனுமனது வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். 

ஆஞ்சனேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பான பூஜையானது நவகிரக பூஜைக்கு இணையானது ...

முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான  பீமன் செய்த வால் வழிபாடு பிரசித்தமானது ...

பீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து வழியின் குறுக்கே  ஆஞ்சனேயரின் வால் என்பதை அறியாத பீமன், ""பாதையை விட்டு உன் வாலை நகர்த்து'' என்று கோபமாகக் கூறினான்.

அதற்கு ஆஞ்சனேயர், ""முதுமையின் காரண மாக என் வாலை நகர்த்த முடியாமல் படுத் திருக்கிறேன். நீயே வாலை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டுப் போ'' என்றார்.

பலமுறை கடுமை யாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியவில்லை. அனுமனே தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, தான் வாயுபுத்திரனான அனுமன் என்று கூறி பீமனை ஆசீர்வதித்தார்.

பீமன், அனுமனின் வலிமையை வியந்து பாராட்டி, அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கினான்.

 வாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக்கும் சகல சௌபாக்கியங் களையும் அருள வேண்டும்'' என வரம் வேண்ட அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழி படும் வழக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீராம காரியத்தில் பங்குகொள்ள சிவபெருமானே ஆஞ்சனேய வடிவம் எடுத்ததாகவும், சிவபெருமானைப் பிரிய விரும்பாத பார்வதி தேவி அனுமனின் வாலாக உருவெடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 

அனுமனை வணங்குவது சிவபெருமானை வணங்குவதாகவும்; அனுமனது வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதாகவும் கருதப்படுகிறது.

அனுமனது வாலை வணங்குபவர்கள் தாங்கள் பூஜிக்கும் ஸ்ரீஅனுமன் படத்தில், உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியில் பொட்டு வைக்க வேண்டும். முதலில் சந்தனப் பொட்டு வைத்து அதன்மேல் குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். 

அடுத்த நாள் அதன் அருகே பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாலின் நுனி வரை பொட்டு வைக்க வேண்டும். 

 வால் நுனியில் பொட்டு வைத்து முடிக்கின்ற நாளில் ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி பூஜை செய்து ஆஞ்சனேயர் நாமத்தையும் ராம நாமத்தையும் ஜெபித்து அனுமன் வாலை வழிபட்டால் நினைத்த காரியத்தில் பூரண வெற்றி கிடைக்கும்.


திருமணமாகாத பெண்கள் ஆஞ்சனேயர் வால் வழிபாடு செய்வதன் மூலம் பார்வதி தேவியின் அருள் பெற்று விரைவில் திருமண பாக்கியம் பெறுவர்.


ராகிகுட்டா அனுமன் வஜ்ர கவசம்
ஸ்ரீ ஓனி ஆஞ்சநேயர்
வஜ்ர கவசம், அலங்காரம்

23 comments:

  1. புது விபரம் அறிந்தேன்.

    ReplyDelete
  2. அனுமன் வால் வழிபாடுப் பற்றிய விளக்கம் அருமை.
    வாலைப் பூஜித்து சகல செளபாக்கியங்களையும் அருள வேண்டும் வாயு புத்திரா என்று வேண்டிக் கொண்டேன்.
    படங்கள் எல்லாம் அழகு, தெய்வீகம். சனிக்கிழமை அனுமன் வழிபாடு செய்து விட்டேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. விளக்கங்கள் அருமை அம்மா... நன்றி...

    ReplyDelete
  4. nice information about anjaneyar

    ReplyDelete
  5. படங்கள் வெகு சிறப்பு. புதிய தகவல்கள் அறிந்தோம்.

    ReplyDelete
  6. ஸ்ரீ ஆஞ்சநேயரின் மகிமைகளை அழகான படங்களுடன் அருமையாகத் தொகுத்துத் தந்தீர்கள். அருமை.
    பல புதிய தகவல்களையும் இன்று உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.

    பகிர்விற்கு மிக்க நன்றி சோதரி!

    ReplyDelete
  7. அரிய தகவல்கள் அருமை !

    ReplyDelete
  8. Wow, this piece of writing is nice, my younger sister is analyzing these things, thus
    I am going to inform her.
    my page - chi hair products

    ReplyDelete
  9. ”வலிமை சேர்க்கும் வால் வழிபாடு”

    தலைப்பைப்பார்த்ததுமே புதிதாக எனக்கோர் வால் முளைத்து வலிமை கிடைத்தது போல ஓர் ஆனந்தம் அடைய முடிந்தது.

    புதிது புதிதாக தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தரும் தங்கத்தலைவி வாழ்க வாழ்கவே. ;)))))

    >>>>>>

    ReplyDelete
  10. படங்கள் அத்தனையும் அருமை.

    இன்று ஸ்திர வாரத்திற்கு ஏற்ற வால் பதிவு ;)))))

    தை அமாவாசையன்று வால் வழிபாடு .... பந்தியில் பால் பாயஸம் பரிமாறியது போலவே ;)))))

    இனிப்போ இனிப்பு !!

    >>>>>>>>

    ReplyDelete
  11. பராக்கிரம சாலியான அந்த பீமனாலேயே நகர்த்த முடியாத வால் கதையை மீண்டும் கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது.

    அதற்கான படங்களையும் மீண்டும் தரிஸிக்கும் வாய்ப்பினைப்பெற்றோம்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ;)))))

    >>>>>>>

    ReplyDelete
  12. அனுமன் = சிவன்

    வால் = பார்வதி

    ஆஹா, அருமை அருமை.

    அருமையான விளக்கம்.

    சக்தியில்லாமல் சிவன் இல்லை.

    வால் இல்லாமல் அனுமனும் இல்லை.

    >>>>>>

    ReplyDelete
  13. சந்தனம் இடுவதை எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்பதையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    இதனால் தானோ என்னவோ

    “சந்தனம் மிஞ்சினால் ________ இல் பூசு / தடவு”

    என்ற பழமொழி தோன்றியிருக்குமோ?

    இருக்கலாம் இருக்கலாம். ;))))))

    >>>>>>>>

    ReplyDelete
  14. ராகிகுட்டா அனுமனின் வஜ்ர கவசம் படம் புதிதாக உள்ளது. ஏற்கனவே பார்த்த ஞாபகம் இல்லை. அது அற்புதமாகவே உள்ளது.

    கடைசியில் ஜொலிக்கும் ஸ்ரீ ராம பட்டாபிஷேகப்படமும் வழக்கம் போல ஜோராக உள்ளது.

    எவ்வளவு முறை பார்த்தாலும் தெவிட்டாத இன்பமே.

    >>>>>>>>

    ReplyDelete
  15. இன்றும் மிக அழகான பதிவு கொடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள்.

    இனிய நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ooooooo

    ஸ்ரீ ஆஞ்சநேயா!

    ஸ்ரீ ராம் பக்தா!!

    ஸ்ரீ ராம் தூதா !!!

    சீக்கரமாக வந்து ‘கண்டேன் ஸீதையை’ என்பது போல நல்ல தகவக்ல்கள் அடிக்கடி கிடைக்கும்படி செய்யுங்களப்பா.

    ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!

    -oOo-

    ReplyDelete
  16. This is a great tip particularly to those new to the blogosphere.
    Short but very precise information… Appreciate your sharing this one.
    A must read article!
    Here is my web-site - cheap ray ban sunglasses

    ReplyDelete
  17. When someone writes an piece of writing he/she keeps the plan of a user in his/her mind that how a user can be aware
    of it. Therefore that's why this article is perfect. Thanks!
    Have a look at my web blog ; chi blow dryer

    ReplyDelete

  18. என் மனைவி அனுமனின் படத்தில் வாலில் பொட்டிட்டு வழிபாடு செய்திருக்கிறாள். நான் என் பேரக் குழந்தைகளுக்கு அனுமன் பீமன் கதையை நடித்துக் காட்டுவதன் மூலமும் நடிக்க வைப்பதன் மூலமும் விளக்கி இருக்கிறேன். அருமையான படங்கள். எங்கிருந்துதான் கிடைக்கிறதோ. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. கியா .. கியா,, கிளிகள்..

    கியா ஹுவா??????????? ;)))))

    ReplyDelete
  20. என் கணவரும், பிள்ளையும் கூட ஸ்ரீ அனுமனின் வாலுக்குப் போட்டு வைத்து பூஜை செய்திருக்கிறார்கள்.
    காரிய சித்தி கட்டாயம் ஏற்படுகிறது. கண்கூடாகக் கண்ட உண்மை இது.
    நன்றி அருமையான புகைப்படங்களுக்கும், அதிகப்படியான தகவல்களுக்கும்!

    ReplyDelete
  21. அற்புதமான புதிய தகவல்கள். படங்களும் பதிவும் மிக அருமை.

    ReplyDelete
  22. அனுமார் வாழ் பூசை பற்றித் தெரிந்து கொண்டேன். படங்களுடன் விளக்கம் அருமை

    ReplyDelete
  23. தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. படங்கள் அத்தனையுமே அருமை.

    ReplyDelete