Sunday, September 11, 2011

தாயகமாய் கவர்ந்த தாய்லாந்து




[suvarnabhoomi03.jpg]
வடவரையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை கயிறாக்கி அமிர்தம் கடையும் அருமையான காட்சி சுவர்ணபூமி என்று பெயருக்கு ஏற்றார் போல் ஜொலித்து கருத்தைக்கவர்ந்தது தாய்லாந்து விமான நிலையம்.
அதுவும் ஒரு வெளிநாட்டு விமான நிலையக்காட்சி என்றால்
வியப்பிற்கு எல்லை ஏது?

தாய்லாந்தில் நிறைய "கருடன்"களைப் பார்த்தோம். நம் தேசீய இலச்சினை அசோகரின் சிங்கங்களைபோல அவர்களின் அடையாளக்குறியீடோ என்னவோ!

புத்தர்கோவில்களிலும், கோவில் முகப்புகளிலும் அலங்காரமாக கருத்தைக் கவர்ந்தது. கருடா என்கிற பெயரில் விமானங்களும் காட்சிப்பட்டது.
சரி கருடன்களைப்பார்த்தால் நல்லதுதானே!

சிறுவயதில் கருடா கருடா பூப்போடு என்று நிறையமுறை வேண்டியிருக்கிறோமே!! 

[DSC009773.jpg]
தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரே கடல் இருந்ததால் காலையில் நடந்து சென்று எங்களுக்காக காத்திருந்த அதிவேக விசைப்படகில் கோரல் ஐலேண்டை நோக்கிய பயணம் இனிமை.
Coral Island Sea and Ocean Animated wallpapers
கடற்கரைக்கு நடுவே ஒரு பெரிய மேடை போல் அமைத்து ஸ்பீட் போட் மூலம் பாராசூட்டில் செல்ல பல மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.


கடலின் மேலே சுமார் இரண்டு நிமிடங்கள் பறக்கும் இந்த 
பாராசூட் அட்டகாசமான அனுபவமாம்.


நான் வெற்றிகரமாக பின்வாங்கிவிட குடும்பத்தினர் 
அனைவரும் சென்றுவந்தனர்.
உலகிலயே மிகப்பெரிய நகைக்கடையான "ஜெம்ஸ் ஜூவல்லரி" க்கு சென்றோம்.

வைரம்,பவளம்,முத்து தங்கம்,வெள்ளி, யானை தந்தம் என அனைத்தினால் செய்யப்பட்ட நகைகள் கிடைக்கும்.

உள்ளே நுழைந்ததும் ஒரு குகைக்குள் ரயில் மூலம் சிறு பயணம் ஏற்பாடு செய்கிறார்கள்.

அந்த குகையில் பல்வேறு கனிமங்களை எவ்வாறு வெட்டி எடுத்து நகைகளாக ஆக்கப்படுகிறது என விளக்கம் கொடுக்கிறார்கள்.

தாய்லாந்தின் வரலாற்றில் அணிகலண்களின் பெருமையும் காண்பிக்கப்படுகிறது.

மிக அருமையான பயணம் அது.
பல கோடி செலவில் செயற்கையாக செய்யப்பட்ட குகை அது.

இங்கிருந்து உலகெங்கும் வைரக்கற்கள் ஏற்றுமதி ஆகிறதாம்!
சின்னகல்லு பெத்த லாபம்!!

வைரங்களை கொண்டு நகைகள் செய்யும் சிறிய தொழிற்சாலையும் காண்பிக்கப்படுகிறது.

நேரடியாக அதை கண்ட போது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அங்கிருந்து சிரித்த முகத்துடன் உலகின் மிகப்பெரிய நகைக்கடைக்குள் பணிப்பெண் அழைத்துச்சென்றாள்
வைரம் ஒரிஜினலாம்! எப்போதுவேண்டுமானாலும்
வந்து மாற்றிக்கொள்ளலாம் என்று சான்றிதழ் தந்தார்கள்!

அந்த தங்கம் மட்டும் 18 காரட்டாம். இந்தியா போய்
22காரட்டில் பதித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.
அங்கு பட்டை தீட்டும் வேலையில் இருந்த பெண்கள் காதில் ஐ பாட் போட்டுக்கொண்டு வாயில் பபிள்கம் மென்றுகொண்டு யாரைப்பற்றியும் கவலை இல்லாமல் கவனமாக மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தது கண்கொள்ளாக்காட்சி.

Suvarnabhumi Airport
விமான நிலைய கண்ணாடிகளை சுத்தம் செய்யும் காட்சி!



33 comments:

  1. சிறுவயதில் கருடா கருடா பூப்போடு என்று நிறையமுறை வேண்டியிருக்கிறோமே!!//

    சிரிப்புடன் படிக்க தொடங்கிவிட்டேன்.. ஹா ஹா

    ReplyDelete
  2. நான் வெற்றிகரமாக பின்வாங்கிவிட// ஹா ஹா

    ReplyDelete
  3. அங்கு பட்டை தீட்டும் வேலையில் இருந்த பெண்கள் காதில் ஐ பாட் போட்டுக்கொண்டு வாயில் பபிள்கம் மென்றுகொண்டு யாரைப்பற்றியும் கவலை இல்லாமல் கவனமாக மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தது கண்கொள்ளாக்காட்சி.//

    வேலையை சந்தோசமாக செய்கிறார்கள்... அது போல் தான் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  4. வைரங்களைவிட நீங்கள் தான அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்ல அவர்களுக்கு மிக சந்தோஷம்.//

    அவங்க தலையில் ஒரு கிலோ ஐஸ்கட்டிய வச்சுட்டீங்க போல ஹா ஹா

    ReplyDelete
  5. ஆயிரம் சுத்தம் பார்த்து வெஜிடேரியனாக தேடிப்பார்த்து சாப்பிடுபவர்களை விட பாம்பு,பன்றி, மாடு, குடி என்று குமட்டவைக்கும் உணவு சாப்பிடும் இவர்கள் எப்படி இத்தனை மொழு மொழு என்றிருக்கிறார்கள் என்பது என் மகளின் கேள்வி.//

    அத்தனையும் ஃபேட் உருவாக்க கூடிய அசைவ வகை உணவு போல அதனால் தான் அவர்கள் மொழு மொழு என இருக்கலாம் என நினைக்கிறேன்...

    ReplyDelete
  6. வழக்கமாக என்பிள்ளைகள் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் கூகிளில் தேடினால் கூட என்னால் விடை கண்டுபிடிக்க முடிந்ததில்லை! //

    உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் பிரமிக்கும் வகையில் தேடலுடன் கூடிய விசயங்களும் புகைப்படங்களும் இருக்கும் அது உங்க திறமையை காண்பிக்கிறது.... உங்கள் பிள்ளை அல்லவா... புலி 8 அடி பாய்ந்தால் புலி குட்டி 16 அடி பாயும் அல்லவா...பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பாற்கடலை கடையும் காட்சியை
    கண்முன்னே கொண்டுவந்திருக்கிறீர்கள்.
    பதிவு பகிதியையும்
    மகிழ்ச்சியையும் தந்தது.

    ReplyDelete
  8. மாய உலகம் said.../

    அனைத்துக் கருத்துரைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. விக்கியுலகம் said...
    படங்களுடன் அட்டகாசமான பகிர்வுக்கு நன்றிங்க மேடம்!/

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  10. மகேந்திரன் said...
    பாற்கடலை கடையும் காட்சியை
    கண்முன்னே கொண்டுவந்திருக்கிறீர்கள்.
    பதிவு பகிதியையும்
    மகிழ்ச்சியையும் தந்தது./

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. அஹ்ஹா என்ன அழகு என்ன சுகம் போகவேண்டிய இடம்தான்

    ReplyDelete
  12. படங்கள் அருமை. தாய்லாந்த்தை நேரில் கண்டது போல உள்ளது.

    ReplyDelete
  13. Thankyou Rajeswari.
    With your help(by reading your blog), i can visit so many places which can never never visit.
    Really nice post. I enjoyed the pictures and your writing and information s.
    சின்னகல்லு பெத்த லாபம்
    engayoo ketta mathri erukke?
    viji

    ReplyDelete
  14. படங்கள் அனைத்தும் அற்புதம்.
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  15. மிகவும் அழகான படங்கள்.மனதை கொள்ளை கொண்டுவிட்டது பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. படங்களுக்காக ரொம்ப சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்.நாங்களும் சுற்றிப்பார்த்து விட்டோம்.

    ReplyDelete
  17. தாய்லாந்தில் போய் லேண்ட் ஆனதுமே அங்க நீங்க பார்த்த காட்சிகளை அப்படியே எங்களுக்கும் காட்டி....

    போன தடவை வாங்காம விட்ட வைரக்கம்மலுக்காக இந்த முறை ரெண்டு ஜதை ஏம்பா? பெனால்ட்டி??? அப்டியே அங்க வேலை செய்றவங்க வைரத்தை விட அழகுன்னுசொல்லி அதனால டிஸ்கௌண்ட் கிடைச்சதையும் சொல்லி..

    ஆடுமாடு சாப்பிட்டு எப்படி கொழுக் மொழுக்குனு இருக்காங்கன்னு பிள்ளைகள் கேட்க பதில் சொல்லமுடியாம திணறி...

    குட்டியூண்டு அணில் என்ன க்யூட்டா ரெட் பாராச்சூட் வெச்சிண்டு பறக்கிறது...

    பாராசூட்ல பறக்கும் ஆட்களையும் காமிச்சு....

    அப்டியே ஏர்ப்போர்ட்ல ஒரு ஆள் கண்ணாடி துடைச்சுக்கிட்டே இருக்கும்போது போட்டோ எடுத்துட்டேளா? அந்தாள் திருதிருன்னு முழிக்கிறாரே....

    முதல் படமே ரொம்ப அசத்தல் பா...
    வாசுகிய கயிறா திரிச்சு அமிர்தம் வேண்டி கடையிற மாதிரி அழகா சிலைகள் தத்ரூபமா இருக்கு...

    ஹப்பா தாய்லாந்து போயிட்டு அப்டியே நானும் லேண்ட் ஆகிட்டேன் குவைத்துக்கு...

    ரொம்ம்ம்ப தாங்க்ஸ் ராஜேஸ்வரி.. கூட்டிண்டு போய் எல்லாம் சுத்தி காமிச்சது...

    அது சரி கேட்க மறந்துட்டேனே அந்த இன்னொரு ஜதை கம்மல் அதாம்பா வைரக்கம்மல் எனக்கு வேண்டாம் ப்ளீஸ்பா... எனக்கு நகைல அத்தனை இண்ட்ரஸ்ட் இல்ல கேட்டிங்ளா?

    அதை நீங்களே என்னோட கிஃப்டா வெச்சுக்கோங்க.....

    அழகு அழகு படங்களும் அதை நீங்க சொன்ன விதமும் அழகு அழகு...

    என் கண் பட்டிருக்கும் எல்லாரும் உட்கார்ந்து பக்கத்தாத்து மாமிய கூப்பிட்டு திருஷ்டி சுத்தி போடச் சொல்லுங்கோப்பா...

    அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி சுவாரஸ்யம் குன்றாமல் பகிந்தமைக்கு..

    ReplyDelete
  18. மிக அருமை.. எனது பயணம் நினைவில் ஒடியது.. அருமயான படங்களும். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. கலக்கல் அட்டாகாசமான பதிவு :-)

    ReplyDelete
  20. 'தாயகமாய் கவர்ந்த தாய்லாந்து' படிக்க தாமதமாய் வந்ததற்கு வருந்துகிறேன்.

    படங்களெல்லாம் வழக்கம் போல மிகவும் அருமை. சில படங்கள் ஏற்கனவே தங்கள் பதிவில் பார்த்த ஞாபகம் வந்தது.

    //நான் வெற்றிகரமாக பின்வாங்கிவிட குடும்பத்தினர் அனைவரும் சென்றுவந்தனர்.//

    ஆஹா! நீங்க நம்ம கட்சி.
    இருப்பினும் பதிவுலகில் தான் பாராசூட் இல்லாமலேயே கொடிகட்டிப் பறக்கிறீர்களே!

    //வைர கம்மலை அடுத்தமுறை இரண்டு ஜோடிகளாக வாங்கிக்கொண்டேன்//

    கற்பனை உருவத்தில் கம்மல் ஏற்கனவே உண்டு. இப்போது வைரமாக அது மின்னக்காண்கிறேன்.

    // வைரங்களைவிட நீங்கள் தான அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்ல அவர்களுக்கு மிக சந்தோஷம்.//

    உண்மையைச் சொன்ன அவர்களுக்கு நன்றி. எங்களுக்கும் சந்தோஷமே!

    //உங்கள் குழந்தைகள் க்யூட்டாக இருக்கிறார்கள் என்று கொஞ்சினார்கள்!//

    கொஞ்சக் கொடுத்து வைத்தவர்கள்!

    கீழிருந்து இரண்டாவது படம் மிகவும் அழகு.

    கீழிருந்து ஆறாவது படத்தில், ஒரு மிகப்பெரிய [கும்பகர்ணன் போன்றவன்] மனிதன் ஹாயாக இரண்டு கைகளையும், இரண்டு கால்களை விரித்துக்கொண்டு, ஜட்டியுடன் படுத்திருப்பது போல எனக்குத் தோன்றியது. அது போலத்தான் அமைத்திருப்பார்களோ!

    பாராட்டுக்கள்,
    வாழ்த்துக்கள்,
    நன்றிகள்.

    vgk

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said.../
    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  22. மஞ்சுபாஷிணி said.../

    முதல் தடவை வாங்காமல் வந்துவிட்டு வெளிநாட்டுப்பயணமே வேஸ்ட் -என்று சொல்லிவிட்டேன்.

    ஆகவே அடுத்தமுறை இரண்டாக கிடைத்தது.

    விரிவான கருத்துரைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  23. viji said.../

    வாங்க விஜி. கருத்துரைக்கு நன்றிங்க. பஞ்சதந்திரம் படத்தில் அடிக்கடி வரும் பிரபல் வசனம் அது.

    ReplyDelete
  24. RAMVI said...
    மிகவும் அழகான படங்கள்.மனதை கொள்ளை கொண்டுவிட்டது பதிவு. பகிர்வுக்கு நன்றி./

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  25. தமிழ் உதயம் said...
    படங்கள் அருமை. தாய்லாந்த்தை நேரில் கண்டது போல உள்ளது/
    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. Rathnavel said...
    படங்கள் அனைத்தும் அற்புதம்.
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் அம்மா./

    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  27. wow
    Fine pictures.
    Nice writing. Felt like visited over there.
    I cannot resist to remember our Thiruvarangan ulla by our writer SriVenugopalan.
    Thankyou for the post Rajeswari.I nejoyed much.
    viji

    ReplyDelete
  28. viji said...
    wow
    Fine pictures.
    Nice writing. Felt like visited over there.
    I cannot resist to remember our Thiruvarangan ulla by our writer SriVenugopalan.
    Thankyou for the post Rajeswari.I nejoyed much.
    viji/

    திருவரங்கன் உலா!
    அருமையான நாவல். அரங்கனைக்காக்க எத்தனை சிரமம்!

    கருத்துரைக்கும் நினைவூட்டலுக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  29. 1009+2+1=1012 ;)

    நன்றாக எனக்கு நினைவில் உள்ளது. என் நீ...ண்...ட பின்னூட்டத்திற்கு மேலும் சில பதில்கள் கொடுத்திருந்தீர்கள்.

    பிறகு இப்போது அவை நீக்கப்பட்டுள்ளன. ;( Quite Unjustified ;(

    ReplyDelete