Friday, June 24, 2011

தாமரைத்தண்டு லிங்கம்..

imgTag   வலைச்சரத்திற்கும் வருகை தந்து வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கு மிகவும் நன்றி.

lotus-flower

பேராவூரணி அருகில் பெருமகளூரில் அருளும் மிகவும் விசேஷமான தாமரைத்தண்டினால் ஆன சிவலிங்கத்தை தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் திரிபுவன சித்தர் தவம் செய்த இடத்தில் குந்தளாம்பிகை உடனுறை சோமநாதர், பெருமகளூரின் நடுவில் கோயில் கொண்டு அருளுகிறார். தாமரை விளங்கும் குளிர்ந்த பொய்கை அருகே திகழ சோமநாத சுவாமியின் திருக்கோயில் சிறப்பாக விளங்குகிறது.

lotus flower in pond

தாமரைத் தண்டு லிங்கம் - பெண் குழந்தை இல்லாதோர் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் பெண்கள் வேண்டிக்கொண்டு வழிபட்டால் குறைகள் நீங்கும் என கூறப்படுகிறது. திருமணத்தில் தடைஉள்ள பெண்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதனால் பெண் மருத்துவர்கள் பலர் இங்கு வழிபாடு செய்ய வருகிறார்கள்.

[Gal1]

லெட்சுமி தீர்த்தம்

lotus flower wallpaper. Free Lotus Flower Wallpapers

கிழக்கு நோக்கிய திருவாயில், திருமதில் திருச்சுற்று, பரிவாராலயங்கள், இடப்பக்கத்தில் நந்தி மண்டபம், பலிபீடம் ஆகியவை அழகு செய்ய, சிதிலமடைந்த நிலையில் மூலவர் விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது.

நந்தி மண்டபம்
[Gal1]
மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும், புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன. விநாயகப்பெருமான் அருள் காட்சி நல்க, குந்தளாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சிவனது மூலஸ்தானத்தில் சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்கமாக பாணம் விளங்க, சோமநாதரின் மூலவர் திருமேனி காட்சி தருகின்றது.
Keefers_beautifulflowers3031-1-1
குந்தளாம்பிகை உடனுறை சோமநாதர், இவ்வூரின் நடுவில் கோயில் கொண்டு அருளுகிறார். விநாயகப்பெருமான் அருள் காட்சி நல்க, குந்தளாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சிவனது மூலஸ்தானத்தில் சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்கமாக பாணம் விளங்க, சோமநாதரின் மூலவர் திருமேனி காட்சி தருகின்றது.

சுயம்பு லிங்கம்:
ஆவுடையார் என்னும் கருங்கல்லால் அமைந்த சதுர பீடத்தில், விடங்க மூர்த்தியாக சோமநாதர் பாண வடிவத்தில் காட்சி தருகிறார். பொதுவாக கல்லால் அமைக்கப்பெறும், லிங்கத்திருவுருவங்களின் பாணம், வட்ட வடிவில் தான் இருக்கும். பல்லவர் கால தாரா லிங்கங்கள் மட்டும் பட்டை பட்டையான வடிவில் பாணம் காணப்பெறும், சகஸ்ரலிங்கங்களில் ஆயிரம் சிறு லிங்க வடிவங்கள் ஒரே பாணத்தில் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு விடங்க வடிவமாகும். விடங்கம் என்பது, சிற்பியால், உளி கொண்டு செதுக்கப்படாத திருவடிவமாகும். திருவாரூர் கோயிலில் புற்றே லிங்கமாக மாறி விட்டதால், விடங்க மூர்த்தியாக காணப்படுகிறார். இவரை வன்மீகர் என்றும், புற்றிடங்கொண்டார் என்றும் அழைப்பார்கள். திருநல்லூரில் உலோகப் படிவுப்பாறையே  லிங்க பாணமாக விளங்குகிறது.
முருகன்
[Gal1]
திருவையாற்றில் பிருத்வி எனும் மண்ணே லிங்க பாணமாக, பாறையாக மாறி காட்சி தருகின்றது. சில இடங்களில் மட்டுமே, மிக அபூர்வமாக கல்லாக மாறிய மரத்தின் அல்லது செடிகளின் பகுதிகளே லிங்க பாணமாக விளங்குகின்றன.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடிக்கு  அருகில் உள்ள, மஞ்சக்குடி சிவாலயத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மரமாகத்திகழ்ந்த ஒரு பகுதி கல்லாக மாறி அதுவே அங்கு சிவலிங்க பாணமாக காட்சி தருகின்றது.
மூலவர் சோமநாதர்

தாமரைத்தண்டு லிங்கம்:
இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து  விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்த்ததிலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும்.  இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது.
 சுந்தராம்பிகை
[Gal1]
இந்த அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லால் அமையப் பெற வில்லை. தாமரைத்தண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத்தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல், வேறு எங்கும் காண இயலாது. மிகவும் விசேஷமான தாமரைத்தண்டினால் இந்த சிவலிங்கத்தை தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்
beautiful_lotus_flower.jpg

தல வரலாறு:
முன்னொரு காலத்தில் பெருமகளூர் கிராமத்தில் உள்ள பொது குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது.  இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழமன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித்தழுவியபோது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து, வைரம், வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன.
சோழர் கால கல்வெட்டு
[Gal1]
இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
பைரவர்
மேலும் தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி, புத்திரகாமேஷ்டி யாகம் தொடங்கும் முன், மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வஷிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார்.  திரிபுவன சித்தர் தவ செய்த இடமான, பெருமகளூரே,  பூலோகம், பூவர்லோகம், சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களினும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன்  அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர், இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட, தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவலத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லுகையில் ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், 
பேராவூரணி தாலுகா
 தஞ்சாவூர் மாவட்டம்
பெருமகளூர்-614 612 ,

12 comments:

  1. //விடங்கம் என்பது, சிற்பியால், உளி கொண்டு செதுக்கப்படாத திருவடிவமாகும்.//

    இது புதிய தகவல். மிக்க நன்றி.

    ஆஹா; தாமரைப்பூக்கள் தான் எவ்வளவு அழகு!

    நீரில் மிதப்பதுபோல நீர் அசைவதுபோல அழகோ அழகு.

    விரிந்த தாமரையின் நடுவே அந்த மஞ்சள் நிற மொட்டு, ஆஹாஹா அதுவும் வெகு அழகு.

    அதனுள் இருக்கும் குட்டிக்குட்டி பருப்புக்களைப் பிரித்து சிறுவயதில் நான் திண்ணதுண்டு.

    தாமரை என்றுமே அழகென்றாலும், இப்போ கொஞ்ச நாட்களாக அது மிகமிக அழகாக எனக்குத் தோன்றுகிறது.

    அடிக்கடி மலரும் அதனை ஆசையுடன் தரிஸிக்கும் பாக்யம் பெற்றதாலோ என்னவோ!

    தாமரைத்தண்டு லிங்கம் என்பதும் கேட்கவே புதுமையான செய்தியாக உள்ளது.

    மலையிலிருந்து கொட்டும் அருவிபோலத் தகவல்களைக் கொட்டிக் கொடுத்து வருகிறீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  2. தாமரை பூத்த தடாகம் அருமை. தல வரலாறுடன் சிறப்பாக காண உதவும் தங்களுக்கு என் பணிவான வாழ்த்துக்கள்...பத்மாசூரி.

    ReplyDelete
  3. கண்ணாடித் தரையின் மீது
    கண்கவர் பச்சைத் தட்டு
    என்ற, பாரதிதாசன் பாடலுக்கு
    இங்கு உள்ள படங்கள் நல்ல எடுத்துக்
    காட்டு.
    மேலும் இக் கட்டுரை பலரும்
    அறியாத செய்திகளைத் தருவது
    பெரும் சிறப்பாகும்
    வாழ்த்துக்கள்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. வை.கோ சார் சொன்னமாதிரி
    விடங்க திருவருவம் பதிய தகவல்
    படங்களும் பதிவும் அருமை
    நீங்கள் குறிப்பிடுகிற ஸ்தலங்கள் எதற்கும் நான்
    போகாத காரணத்தால் அனைத்தும் புதிய தகவல்களாக
    இருப்பதால் விரிவாக பின்னூட்டமிட இயலவில்லை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எத்தனை கோவில்கள்...எத்தனை விஷயங்கள்...இவ்வளவு கோவிலையும் எப்படி பார்த்து வரப் போகிறோம்...முடியுமோ முடியாதோ...உங்கள் பதிவுகள் மூலம் பல கோவில்கள் பற்றி தெரிந்து கொள்கிறோம்.

    ReplyDelete
  6. புதிய தகவல்கள் பல தந்து
    கொண்டிருப்பதர்க்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. //விடங்கம் என்பது, சிற்பியால், உளி கொண்டு செதுக்கப்படாத திருவடிவமாகும்.//


    இதுவரை நான் அறிந்திடாத விஷயம்
    ஆன்மீகப் பதிவில் புதுமைப் பல செய்திடும் உங்களுக்கு
    என் வளமான வந்தனங்கள்

    ReplyDelete
  8. புதுதகவல்களுடன் அழகானப் படங்களுடன் வழக்கம் போல ஒரு ஆஹா பதிவு...

    எதுக்கும் ராமர் பற்றி ஒண்ணு போட்டுடுங்க.. எதுக்கு வம்பு?

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    புதிய புதிய செய்திகளாக குவிக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அரிய தகவல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  11. ;)

    குருர்-ப்ரும்மா குருர்-விஷ்ணு
    குருர்-தேவோ மஹேஷ்வர:

    குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
    தஸ்மை ஸ்ரீ குரவே நம:

    ReplyDelete