Monday, February 25, 2013

மனம் மகிழும் மாசி மகம்




மாசி மகத்தன்று கடலோர சிவாலயங்களில் உள்ள சுவாமியையும் அம்பாளையும் நன்கு அலங்கரித்து, சிவசக்தி மூர்த்தங்களுடன் பல்லக்கில் இருத்தி கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வார்கள். 

பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து, அவர்களுடன் சக்கரத்தாழ்வாரையும் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்வார்கள். 
 சிவனுக்காக அஸ்திர மூர்த்தியையும், 
பெருமாளுக்காக சக்கரத்தாழ்வாரையும் கடல் நீராடச் செய்வதற்கு தீர்த்தவாரி என்று பெயர். 
 தூப, தீப, ஆராதனை செய்து குளிர்ச்சியான பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு தந்தபின் ஆலயம் திரும்புவார்கள்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்துகொண்டதன் மூலம் சமுத்திரராஜன் விஷ்ணுவின் மாமனார் ஆனார். 


தன் மகளை மணந்து கொண்டு மகாவிஷ்ணு வைகுந்தம் சென்றுவிட்டால் இனி நாம் அவரை எப்படி தரிசிப்பது என வருந்தினார் சமுத்திரராஜன். 
தந்தையின் மனக்குறையை லட்சுமி விஷ்ணுவிடம் கூறினாள். 

 திருமால் ஆண்டிற்கு ஒரு முறை தாம் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருவதாக வரம் தந்தார். அந்த புண்ணிய தினமே மாசிமகம்.
 கருணாசாகரியான அம்பிகை மீனவ குலத்தில் அவதரித்த போது. ஈசன் அம்பிகையை மணக்க காலம் கனிந்தபோது, அவர் மீனவர்போல் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடம் சென்றார். 

அங்கு அவரால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை தானே அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி கொடுத்தார். 

மீனவர் தலைவன், "தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்க அருள் புரிய வேண்டும்' என வேண்டினார்.
அதன்படி ஈசன், "மாசி மகத்தன்று கடல் நீராட வருவேன்' என்றநிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி.

மாசி மகத்தன்று ஈசன் வேடமூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்குச் செல்வர். 
அங்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலோர ஊர்களான மண்டபத்தூர், காளிகுப்பம், அக்கம்பேட்டை மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனுக்குச் சிறப்பு விழா நடத்தி மகிழ்வார்கள்.








33 comments:

  1. மாசி மக வரலாறு அறிந்து தெளிந்தேன்.
    நன்றி !

    ReplyDelete
  2. திருவிழா படங்கள் அருமை அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. அருமையான படங்கள்... நன்றி...

    ReplyDelete
  4. thanks for sharing useful information about masi magam

    ReplyDelete
  5. படங்கள், திருவிழா செய்தி அருமை

    ReplyDelete
  6. படங்கள் வழக்கம் போல் பரவசம் தருகின்றன.

    ReplyDelete
  7. மாசிமக சிறப்பை அறிந்துகொண்டேன்.அருமையாக இருக்கு.நன்றி

    ReplyDelete
  8. ;))))) ” மனம் மகிழும் மாசி மகம் “ என்ற தங்களின் இன்றைய பதிவினை மனம் குளிர பொறுமையாக படித்துப் பார்த்து மகிழ்ந்து மீண்டும் கருத்துச்சொல்ல வருவேன், வழக்கம் போல மிகத்தாமதமாக.

    >>> அதுவரை நீண்ட இடைவேளை >>>

    ReplyDelete
  9. படங்கள் எல்லாம் மிக அழகு.சிறப்பான தகவல்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. மாசி மகத்திற்கு போகமேலேயே போகவைத்து விட உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. அறிந்திராத பற்பல விஷயங்களை உங்கள் மூலம் நாமறியத் தந்தந்தருளும் இறை அருளை என்னவென்பேன்.

    மாசிமக சிறப்பினை அழகாக தொகுத்துத் தந்துள்ளீர்கள் சகோதரி!
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  12. மாசி மகத் தகவல்களும் படங்களும் வெகு சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  13. கடைசியாகக்காட்டப்பட்டுள்ள இரண்டு படங்கள் நல்லா ஜொலிக்கின்றன.

    இரண்டாவது படத்தின் மேலே ஒரு குதிரை மாட்டிக்கொண்டு விழிக்கிறது பாருங்கோ!.

    கொள்ளோ புல்லோ கொடுக்காமல் ஒரே ஜிகினா காகிதங்கள், வளையல் என எதையோ அதன் முன் இப்படி மலையாகக் குவித்து வைத்தால் அது விழிக்காமல் என்ன செய்யும்? பாவம்.

    >>>>>>>

    ReplyDelete
  14. பல்லாக்கும், பல்லாக்கில் ஸ்வாமியும், பல்லாக்கின் மேல் பகுதியும் பளிச்சுன்னு இருக்கு உங்க பதிவுகள் மாதிரியே ;))))))

    ரிஷப வாகனக்காட்சிகளும் ஜோர் ஜோர்.

    திருவேட்டக்குடி கடல் நீராடல் எனக்காட்டியுள்ள படம் படா ஜோருங்க.

    >>>>>>>

    ReplyDelete
  15. மனம் மகிழும் மாசி மகம் என்ற இன்றைய பதிவின் அனைத்துப் படங்களுமே அருமையாக உள்ளன.

    முதல் படத்தில் உள்ள குட்டியூண்டு பெருமாள் + தாயாரிலிருந்து, முரட்டு யானைப்படம் வரை அனைத்தும் அழகோ அழகு தான்.

    கருடாழ்வார் மீது பெருமாள் நல்ல கம்பீரம்.

    யானைக்கு மேல் உள்ள படம் இப்போது திறக்கப்படவே இல்லை.

    ஒரே ஒரு படம் மட்டும் இன்று மீண்டும் ரிப்பீட் ஆகியுள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ooooooo.

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மனம் மகிழும் மாசி மகம் என்ற இன்றைய பதிவின் அனைத்துப் படங்களுமே அருமையாக உள்ளன.

    முதல் படத்தில் உள்ள குட்டியூண்டு பெருமாள் + தாயாரிலிருந்து, முரட்டு யானைப்படம் வரை அனைத்தும் அழகோ அழகு தான். //

    வணக்கம் ஐயா..
    சிறப்பான கருத்துரைகள் அனைத்துக்கும் நிறைவான இனிய் நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  17. ஸ்ரவாணி said...
    மாசி மக வரலாறு அறிந்து தெளிந்தேன்.
    நன்றி !


    வாங்க ஸ்ரவாணி ..

    சிறப்பான கருத்துரைக்கு
    நிறைவான இனிய் நன்றிகள்


    ReplyDelete
  18. பழனி. கந்தசாமி said...
    ரசித்தேன்.//


    வணக்கம் ஐயா..

    கருத்துரைக்கு
    நிறைவான இனிய் நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  19. திண்டுக்கல் தனபாலன் said...
    திருவிழா படங்கள் அருமை அம்மா... நன்றி...

    வணக்கம் திண்டுக்கல் தனபாலன் அவர்களே ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  20. ஸ்கூல் பையன் said...
    அருமையான படங்கள்... நன்றி...



    வணக்கம் ஸ்கூல் பையன்
    அவர்களே ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  21. arul said...
    thanks for sharing useful information about masi magam

    வணக்கம் arul அவர்களே ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  22. Gnanam Sekar said...
    படங்கள், திருவிழா செய்தி அருமை

    வணக்கம் Gnanam Sekar அவர்களே ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  23. Advocate P.R.Jayarajan said...
    படங்கள் வழக்கம் போல் பரவசம் தருகின்றன.

    வணக்கம் ..Advocate P.R.Jayarajan அவர்களே ..

    தங்களின் பரவசமான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  24. priyasaki said...
    மாசிமக சிறப்பை அறிந்துகொண்டேன்.அருமையாக இருக்கு.நன்றி /


    வாங்க priyasaki ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ..



    ReplyDelete
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ;))))) ” மனம் மகிழும் மாசி மகம் “ என்ற தங்களின் இன்றைய பதிவினை மனம் குளிர பொறுமையாக படித்துப் பார்த்து மகிழ்ந்து மீண்டும் கருத்துச்சொல்ல வருவேன், வழக்கம் போல மிகத்தாமதமாக. //

    வணக்கம் ஐயா..

    மனம் குளிர படித்து நிறை குறைகளை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா..

    ReplyDelete
  26. RAMVI said...
    படங்கள் எல்லாம் மிக அழகு.சிறப்பான தகவல்களுக்கு மிக்க நன்றி.

    வாங்க ராம்வி ..!

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  27. malar balan said...
    மாசி மகத்திற்கு போகமேலேயே போகவைத்து விட உங்களுக்கு நன்றி

    வணக்கம் ..malar balan அவர்களே ..

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  28. malar balan said...
    மாசி மகத்திற்கு போகமேலேயே போகவைத்து விட உங்களுக்கு நன்றி

    வணக்கம் ..malar balan அவர்களே ..

    அழகான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ..

    ReplyDelete
  29. இளமதி said...
    அறிந்திராத பற்பல விஷயங்களை உங்கள் மூலம் நாமறியத் தந்தந்தருளும் இறை அருளை என்னவென்பேன்.

    மாசிமக சிறப்பினை அழகாக தொகுத்துத் தந்துள்ளீர்கள் சகோதரி!
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    வாங்க இளமதி ..!

    சிறப்பான அழகான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  30. s suresh said...
    மாசி மகத் தகவல்களும் படங்களும் வெகு சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!



    வணக்கம் . s suresh அவர்களே ..

    சிறப்பான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடைசியாகக்காட்டப்பட்டுள்ள இரண்டு படங்கள் நல்லா ஜொலிக்கின்றன.

    இரண்டாவது படத்தின் மேலே ஒரு குதிரை மாட்டிக்கொண்டு விழிக்கிறது பாருங்கோ!.

    கொள்ளோ புல்லோ கொடுக்காமல் ஒரே ஜிகினா காகிதங்கள், வளையல் என எதையோ அதன் முன் இப்படி மலையாகக் குவித்து வைத்தால் அது விழிக்காமல் என்ன செய்யும்? பாவம். //

    ஜொலிக்கும் கருத்துரைகளால் பதிவைப் பொலிவாக்கியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    அது பொம்மைக்குரைதானே ஐயா.. கொள்ளும் புல்லும் போட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது ..சொல்லுங்கோ ..

    அகவேதான் குதிரை விழிப்புடன் இருக்க இந்த அலங்காரங்களாக்கும் ..!

    ReplyDelete
  32. வை.கோபாலகிருஷ்ணன் said...
    பல்லாக்கும், பல்லாக்கில் ஸ்வாமியும், பல்லாக்கின் மேல் பகுதியும் பளிச்சுன்னு இருக்கு உங்க பதிவுகள் மாதிரியே ;))))))

    ரிஷப வாகனக்காட்சிகளும் ஜோர் ஜோர்.

    திருவேட்டக்குடி கடல் நீராடல் எனக்காட்டியுள்ள படம் படா ஜோருங்க./

    ஜோரான கருத்துரைகள் அளித்து உற்சாகப்படுத்தியதற்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  33. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மனம் மகிழும் மாசி மகம் என்ற இன்றைய பதிவின் அனைத்துப் படங்களுமே அருமையாக உள்ளன.

    முதல் படத்தில் உள்ள குட்டியூண்டு பெருமாள் + தாயாரிலிருந்து, முரட்டு யானைப்படம் வரை அனைத்தும் அழகோ அழகு தான்.

    கருடாழ்வார் மீது பெருமாள் நல்ல கம்பீரம்.

    யானைக்கு மேல் உள்ள படம் இப்போது திறக்கப்படவே இல்லை.

    ஒரே ஒரு படம் மட்டும் இன்று மீண்டும் ரிப்பீட் ஆகியுள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்..//

    இரண்டு படங்களும் வேறு வேறு கோணங்கள் அல்லவா..

    ReplyDelete