Thursday, September 29, 2011

ஆலப்புழையில் அருளும் அம்மன் ஆலயம்


[Image1]
சேரநாட்டின் அழகிய இயற்கை எழிலும் நீர்வளமும் நிரம்பி படகுவீடுகள் அழகாக மிதந்து தென்னகத்தின் வெனிஸ் எனச்சிறப்பிக்கபடும் 

ஆலப்புழையில் அருளும் முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி ஆலயம் சென்றிருந்தோம். 
செண்பகசேரி மகாராஜாவுக்கு இத்தலம் அரண்மனையாக இருந்தது. 
இந்த ராஜா காலத்தில் இத்தலத்தில் அம்பாள் பெண்ணாக, வனதுர்க்கையாக அவதரித்து, அவளது சகோதரியுடன் முல்லைக்கொடி அருகே தினமும் விளையாடி வந்தாள்.

ஒரு முறை அந்த கொடி அருகே அம்மனின் விக்ரகம் கிடைத்தது. ஆரம்பத்தில் துர்க்கையாக இருந்தவள் பின் பிரசன்னத்தில் இவள் அன்னதான பிரபு என்பதை அறிந்தனர். 

எனவே இவளுக்கு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் சூட்டி இத்தலத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டாள்.
[Gal1]
அம்பாள் அசரீரியாக மன்னனிடம், தான் இங்கு முல்லை கரை அருகே அருள்பாலிப்பதாவும், கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினார்.

மன்னனும் அப்படியே கோயில் கட்டி அம்பாளை பிரதிஷ்டை செய்யும்போது கர்ப்பகிரகத்தின் மேல்பகுதி மூடப்பட்டது.

அன்று இரவே மேல்கூரை தீப்பிடித்தது.

பிரசன்னம் கேட்டபோது, தான் குழந்தை வடிவில் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகாயம், காற்று, மழை ஆகியவற்றை பார்த்து நான்  நேரடியாக அனுபவிக்க வேண்டும். எனவே மேற்கூரை இல்லாமல் மூலஸ்தானத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதால் மேற்கூரை கிடையாது.
[Gal1]
மழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூரையை மூடுகிறார்கள்.

இந்த உலகையே ஆளும் அம்மன் மழையிலும், வெயிலிலும் நிற்க,
நாம் சுகமாக நிழலில் நின்றபடி அவளை தரிசிக்கிறோம்.

அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். 

இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க, அம்பாள் வெயிலில் நின்று அற்புதமாய் தரிசனம் தருவது கண்கொள்ளாக்காட்சி!.
கார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 11 வரை 41 நாள் களபாபிஷேகம் (சந்தனம்) நடக்கும்.

 மார்கழி 1 முதல்11 வரை உள்ள தேதிகளில் சிறப்பு பூஜை, அர்ச்சனை நடக்கும். மார்கழி 11ம் தேதி பீமா ஜுவல்லரி பூஜை.
சரஸ்வதி பூஜை நாட்களில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். 
தினமும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.
Alappuzha mullakkal temple
திருமண தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பிராத்தனை செய்யப்படுகிறது.

கணேசர், முருகன், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகம் ஆகிய சன்னதிகள் உள்ளன.
முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், 
ஆலப்புழை மாவட்டம்,
ஆலப்புழை - 688001,  
கேரளா மாநிலம்.
+91- 477 - 226 2025, 225 1756
[Gal1]
கொடிமரம்
மகா மண்டபம்
[Gal1]
Mullakkal rajarajeshwari temple alappuzha 2

Mullakkal Sree RajaRajeswari Temple
Mullakkal RajaRajeswari Temple Festival

Kollam
This is an animated gif of a woman on The Amazing Race trying to shoot a watermelon out of a medieval slingshot at a renaissance fair and melonballing
watermelon-of-pain.gif

41 comments:

  1. ஆலப்புழையில் அருளும் அம்மன் ஆலயம் தரிஸித்தோம். சந்தோஷம்.

    ReplyDelete
  2. ஆலப்புழை அம்மன் தரிஸனம் செய்தோம்
    படங்களும் பதிவும் அருமை
    பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  3. முதல் படத்திலேயே அருள் மற்றும் பொருள் செல்வத்தை வாரி வழங்கி விட்டீர்கள். படங்கள் வழக்கம் போல தூள் கிளப்புது ...
    அருள் பெற்றோம் சகோதரி.

    ReplyDelete
  4. ஆலப்புழையில் அருளும் முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி அம்பாள் போலவே, மேற்கூரை ஏதும் இல்லாமல் அமைந்துள்ள மூலவிக்ரஹம் உள்ளது எங்கள் திருச்சி உறையூர் அருகே அமைந்துள்ள “ஸ்ரீ வெக்காளி அம்மன்” ஆலயமும்.

    மிகவும் அழகிய ஆலயம். சமயபுரம் மஹாமாயீ போலவே மிகவும் சக்திவாய்ந்த அம்மன்.

    ஒவ்வொரு முறை தரிஸித்து வரும் போதும் மனதில் ஒரு இனம்புரியாத இன்பம் ஏற்பட்டு வருவது பிரத்யட்சமானதொரு அனுபவம்.

    ReplyDelete
  5. அருமையான படங்களுடன் நல்ல விளக்கம் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .........

    ReplyDelete
  6. ஆலயத்தின் வரலாறும் படங்களும் அருமை...,
    பகிர்வுக்கு நன்றி..... சகோ ...

    ReplyDelete
  7. முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி பற்றிய நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  8. படங்கள் அருமை. பெண்கள் rowing படம் பிரமாதம். இப்போது தான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. ஹை இன்னைக்கு அனுக்ரஹம் தெறிக்கிறதே அம்பாளின் உடலில் இருந்து... அழகு அழகு....

    ஆலப்புழையில் இருக்கும் ராஜேஸ்வரி கோவிலும் அதன் பெருமையும் படங்களும் மிக அருமை...

    சரியா நான் இந்த ஸ்தல வரலாறு படிக்கும்போதே வெக்காளியம்மன் கோவில் நினைவுக்கு வந்தது...

    சரியா வை கோபாலக்ருஷ்ணன் சாரும் அதையே சொல்லி இருக்கார்....

    எல்லாமே அருமைப்பா....

    அதென்னப்பா ஒரு பொண்ணு வந்து பாலை இழுக்க போய் அந்த பால் முகத்திலேயே அடிச்சு போய் விழுகிறது?

    அருமையா இருக்கு அனிமேஷன்....

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

    ReplyDelete
  10. அனிமேஷன் அற்புதம்.கோயில் பற்றிய தகவலும் படங்களும் நன்று.(சரி கோயிலுக்கும்,உங்கள் பெயருக்கும் சம்பந்தம் உண்டா? முருகனுக்கு வேண்டிக் கொண்டு பிறந்ததால் எனக்கு இந்த பெயரை வைத்தார்கள்.)

    ReplyDelete
  11. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. முல்லைகல் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் பற்றிய விவரம் அருமை. படங்கள் எல்லாம் மிக அழகு.படகு போட்டி படங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டது.

    ReplyDelete
  13. ஆகா!அம்மன் கையிலிருந்து கனக தாரை பொழியுதே!

    ReplyDelete
  14. அருமையான ஆன்மீக உலா. புகைப்படங்கள் நிறைய பேசுகின்றன. அழகான பதிவு.

    ReplyDelete
  15. திருப்தியாய் இருந்தது படிக்க... நான் சபரிமலை போகும் சமயங்களில், அவ்வப்போது ஆலப்புழை அம்மனை தரிசிப்பது உண்டு மேடம்.

    ReplyDelete
  16. @ shanmugavel said...
    அனிமேஷன் அற்புதம்.கோயில் பற்றிய தகவலும் படங்களும் நன்று.(சரி கோயிலுக்கும்,உங்கள் பெயருக்கும் சம்பந்தம் உண்டா? முருகனுக்கு வேண்டிக் கொண்டு பிறந்ததால் எனக்கு இந்த பெயரை வைத்தார்கள்.)/

    http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_30.html
    பெயர் சூட்டும் வைபவம் பகிர்வில் பெயர்க்காரணம் இருக்கிறது.

    தங்கள் பெயர்க்காரணத்திற்கு வாழ்த்துக்கள். கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆலப்புழையில் அருளும் அம்மன் ஆலயம் தரிஸித்தோம். சந்தோஷம்./

    தங்களின் இனிமையான முதல் வருகைக்கும் வெக்காளியம்மன் தகவலுக்கும் கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  18. Ramani said...
    ஆலப்புழை அம்மன் தரிஸனம் செய்தோம்
    படங்களும் பதிவும் அருமை
    பதிவிட்டமைக்கு நன்றி/

    அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  19. ஆலப்புளை அம்மன் தரிசனம் கண்டு மகிழ்வு. படங்களும் பெண்கள் படகு ஓட்டம் மிக நல்லது. பாராட்டுகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  20. sundarmeenakshi said...
    tamil nadill ammana illaya?/

    வாய்ப்பு கிடைக்கும் போது மாநிலம் என்னதடையா கடவுள் தரிசனத்திற்கு?

    ReplyDelete
  21. அம்பாளடியாள் said...
    அருமையான படங்களுடன் நல்ல விளக்கம் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ........./

    அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  22. வேடந்தாங்கல் - கருன் *! said...
    அம்மன் தரிசனம்..
    நன்றி../

    கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  23. சின்ன தூறல் said...
    ஆலயத்தின் வரலாறும் படங்களும் அருமை...,
    பகிர்வுக்கு நன்றி..... சகோ .../

    சின்னத்தூறலின் சிறப்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. கோவை2தில்லி said...
    முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி பற்றிய
    நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க./

    சிறப்பான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  25. அப்பாதுரை said...
    படங்கள் அருமை. பெண்கள் rowing படம் பிரமாதம். இப்போது தான் பார்க்கிறேன்./

    ஆணுக்கிங்கே இளைத்தவர்களா சேர நன்நாட்டிளம் பெண்கள்!

    கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  26. மஞ்சுபாஷிணி said...
    ஹை இன்னைக்கு அனுக்ரஹம் தெறிக்கிறதே அம்பாளின் உடலில் இருந்து... அழகு அழகு....//////


    அருமையான சிறப்பான அழகான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  27. Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்./

    வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  28. RAMVI said...
    முல்லைகல் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் பற்றிய விவரம் அருமை. படங்கள் எல்லாம் மிக அழகு.படகு போட்டி படங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டது./

    அருமையான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  29. சென்னை பித்தன் said...
    ஆகா!அம்மன் கையிலிருந்து கனக தாரை பொழியுதே!/


    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  30. சாகம்பரி said...
    அருமையான ஆன்மீக உலா. புகைப்படங்கள் நிறைய பேசுகின்றன. அழகான பதிவு./

    அழகான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  31. மோகன்ஜி said...
    திருப்தியாய் இருந்தது படிக்க... நான் சபரிமலை போகும் சமயங்களில், அவ்வப்போது ஆலப்புழை அம்மனை தரிசிப்பது உண்டு மேடம்./

    அருமையான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  32. kavithai (kovaikkavi) has left a new comment on your post "ஆலப்புழையில் அருளும் அம்மன் ஆலயம்":

    ஆலப்புளை அம்மன் தரிசனம் கண்டு மகிழ்வு. படங்களும் பெண்கள் படகு ஓட்டம் மிக நல்லது. பாராட்டுகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com


    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  33. அருமையான படங்களுடன் நல்ல விளக்கம்...

    ReplyDelete
  34. When our health permits us, we have to enjoy all the beauty and ofcourse get all graces of all dieties of all places.
    So let me waiting for a chance to enjoy the beauty of Alabulai if time and health permits.
    Nice post Rajeswari.
    Thanks for sharing

    viji

    ReplyDelete
  35. அழகிய ஆலப்புழை அம்மன் தரிசனம் கிடைத்து மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  36. ;)
    குறையொன்றும் இல்லை
    மறை மூர்த்தி கண்ணா!
    குறையொன்றும் இல்லை கண்ணா
    குறையொன்றும் இல்லை கோவிந்தா!!

    ReplyDelete
  37. 1084+3+1=1088

    ஓர் பதிலுக்கு நன்றி.

    ReplyDelete