![[pic24.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqVrb8ErAZRju1pnYDbPcl1dxVH2B1BgZASVWe6n-DTrFE_GA_QUfyjqOas0XSuwyoSCQCsCfaMNB8JuMK-xk08kERccJ9_cmu-koEBHIjSjfumtvwmZw41kxBEtR6xElZEwOt6UB4VI-B/s320/pic24.jpg)
அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய |
![[pic21.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHE4MCTQe8I0Udr_JRptGaoyskc69g-aghEsL4wgoEHbnXqcP4omlK9vkbLZV9v9pbgra71wTpm6KiRGZFJWjhqIeAy0lvdLzNrBw7vSMVOVxhiZXRj-TPRXM-2qfg6x1u-wuvIsM5FJOc/s320/pic21.jpg)
ஆடும் மயிலேறி ஆன்ந்த நடமாடிவந்த முருகன்
சிட்னி மாநகரில் வைகாசிக்குன்று என்று அழைக்கப்படும்
Mays Hill இல் எழுந்தருளியுள்ள எம்பெருமான சிட்னி முருகனின்
மகோற்சவம் இந்திய மற்றும் ஈழத்தவர் அயலெங்கும்
செறிந்து வாழும் பிரதேசமாக மாறிவிட்ட இவ்வூரில் எம்பெருமான்
முருகனுக்கே தனித்துவமான வைகாசி மாதத்தினையும்
குறிஞ்சி நிலக்கடவுளாகச் சிறப்பிக்கப்படும் அடையாளமாகவும்
இணைத்து ஆங்கிலத்திலேயே Mays Hill என்று வழங்கப்பட்டு
வரும் இவ்வூரில் இந்த ஆலயம் எழுந்தருளியிருப்பது வெகு சிறப்பு.
வள்ளிக்கு வாய்த்தவன்
தேவமகள் தெய்வயானை நாயகன்
திருமணகோலத்தில்.......
கற்பூர ஜோதியில் கருணை பொங்கும் கந்தன்
வெகு சிறப்பாக சப்பரத்தில் முருகப்பெருமான் பவனி
வர மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து
சிறப்பித்தார்கள்.ஈழத்தின் புகழ்மிக்க தவில் வித்துவான்களான
அமரர் சின்னராசாவின் மகன் சுதாகரன், மற்றும்
தட்சணாமூர்த்தியின் மகன் உதயசங்கர்
தம் நாதஸ்வரக்குழுவினரோடு வந்து இவ்விழாக்காலத்தைச்
சிறப்பித்தனர். இவர்களின் நாதமுழக்கத்தோடு விழா சிறப்பிக்கப்பட்டது.
.வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிகச்சிறப்பாக
அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் வள்ளி தேவசேனா
சமேதராக வலம் வந்தார்.
![[pic22.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfF97byzFhwjlzN_thGqpr_5DPqIVJUOW52P3LJI81PXsOZbXWRy960YPMsWQhDb_noaYAqmJ-ElFVDVJmyT727-pFuJB51-2h7XxBdMbqPyu40Te2dbe2Id_PBOHLHzSF16CqSMe250S_/s320/pic22.jpg)
நாத உபாசனையில் நாதன் முருகன்..
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலே இன்பஒளி வீசாதோ??
சேவல் கொடியோனுக்கு ஷோடஷோபசாரம்
நடைபெறுகிறது...
அருமை அருமை
ReplyDeleteகோவிலையும் திருவிழாவையும்
நேரடியாக கண்டுகளிப்பதைபோல
மிகச் சிறப்பான புகைப்படங்கள்
விளக்கங்கள்
மிகச் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உலகத்து கோயில்களை எல்லாம் கண்முன் கொண்டு வரகிரீர்கள்... நன்றி..
ReplyDelete//பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலே இன்பஒளி வீசாதோ??//
ReplyDelete[மேலே உள்ள வரிகள் என் இடுகைப் படிக்க இப்போதெல்லாம் உடனே உடனே வராமலிருக்கும் உங்களுக்கும் பொருந்துமே !]
However, என் பாராட்டுக்கள்.
ராஜ அலங்காரத்தில் வேலவன் - அழகுப் படங்கள் - பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபாலோயர் விட்ஜெட்டை ரொம்பவும் கீழே வைத்துவிட்டீர்கள்... தேடவேண்டியதாக போய்விட்டது...
ReplyDelete// வலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே //
இந்த மேட்டர் சூப்பர்...
மற்றபடி ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு இல்லாததால் இந்த இடுகைக்கு நோ பின்னூட்டம்...
மிகச் சிறந்த பதிவு
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.. அருமையான படங்கள்
ReplyDeleteமுருகனின் ஆனந்த உற்சவத்தை கண்டேன் களித்தேன்... அருள் பெற்றேன்..
ReplyDeleteநன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
நானூம் முருகனின் அருள் பெற்றேன்..!!!
ReplyDeleteமிகச் சிறந்த பதிவு
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
@ Ramani said...//
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ஐயா.
@வேடந்தாங்கல் - கருன் said...
ReplyDeleteஉலகத்து கோயில்களை எல்லாம் கண்முன் கொண்டு வரகிரீர்கள்... நன்றி..//
வருகைக்கு நன்றி ஐயா.
@ வை.கோபாலகிருஷ்ணன் s//
ReplyDeleteரசித்தவரிகளுக்கு நன்றி ஐயா.
@ middleclassmadhavi said...
ReplyDeleteவருகைக்கு நன்றி அம்மா.
@ Philosophy Prabhakaran said.//
ReplyDeleteமனம் திறந்த கருத்துக்கு நன்றி.
@Mahalashmi said...//
ReplyDelete@ தம்பி கூர்மதியன் said...//
வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
;)
ReplyDeleteஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
கெளரி கல்யாண வைபோகமே !!
248+2+1=251
ReplyDelete