Saturday, May 19, 2012

ஸ்ரீஆஞ்சநேயர் கடாக்ஷம்



Chinku bajrangbali.gif 320 320 256 9223372036854775000 0 1 0[1]


Sriram 13129.gif 320 320 256 9223372036854775000 0 1 0[1]Hanuman 01 ani.gif 320 320 256 9223372036854775000 0 1 0[1]hanuman pictures mobile Jai hanuman animation pictures
Hanumaninfo


ஸர்வ  கல்யாண  தாதாரம் 
ஸர்வா பத்கந  வாரகம் 
கருணா  மூர்த்திம்
ஆஞ்சநேய  நமாம்யஹம்

ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா

ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய,

ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, 
பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, 
ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, 
ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய, 
அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, 
தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய 
ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம: 

சுக வாழ்வு அளித்து அகங்காரம் போக்கும் ஹனுமான். 
ஆஞ்சநேயர் சிவ கடாக்ஷம் பெற்றவர். மகேசனின் 
மற்றொரு ரூபம், சிரஞ்சீவி.
ஹனன் - அழிப்பவர், மன் - மனம், தான் எனும் அகங்காரத்தை மனதிலிருந்து அழிப்பவராதலால் அனுமன் என்று பெயர்.
கர்ணனைப் போலவே காதணிகளுடன் பிறந்தவர்.
வாயு, கருடனைவிட வேகமாகச் செல்லும் சக்தியை, 
நான்முக பிரம்மன் அனுமனுக்கு வரமாக அளித்தார்.
சூரியனைத் தன குருவாகக் கொண்டவர்.
நவவியாகரணங்களையும் சூரி யனின் வேகத்துக்கு ஈடுகொடுத்து குருவின் முன்னிலையில் கைகட்டி வாய்பொத்தி அடக்கத்தின் 
திரு உருவாக கற்றுகொண்ட கல்விமான் அனுமன் !

குருதட்சணையாகத் தன மகன் சுக்ரீவனுக்குக் 
கடைசி வரை துணையாக இருக்கும்படி சூரியன் கேட்டுக் கொள்ள, 
அதன்படி வாலியிடமிருந்து  அரசுரிமையைப் பெற்றுத் தந்தார் அனுமன் 

குருவணக்கமாக சூரிய நமஸ்காரத் தோத்திரத்தை பாடியவர். 

தகப்பனார் வாயுபகவானிடமிருந்து பிராணாயாமம் கற்று, பின் அதை மனித குலத்துக்கு அருளியவர்.

இலங்கேசுவரனின் பிடியிலிருந்து நவக்கிரகங்களை மீட்டதால், கோள்கள் அவருக்குக் கீழ்படியும் என்பது ஐதீகம்.

ஏழரை ஆண்டுச் சனியாக அனுமனைப் பிடித்த சனீஸ்வர பகவான், ஏழரை நிமிடங்கள் கூட இவரிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் விட்டுவிட்டான்.  அனுமனை வழிபட்டால் சனி பகவான் தோஷம் நீங்கும்.

மகாவீரராகிய அனுமன் முழுக்க முழுக்க புலன்களை வென்றவர். ஆச்சரியப்படத்தக்க அறிவுக் கூர்மை வாய்ந்தவர் அனுமன் ஒரு பக்கம் சேவையின் இலட்சியமாக விளங்குகிறார். 

மற்றொரு பக்கத்தில் உலகம் முழுவதும் நடுங்கச் செய்கின்ற சிங்கம் போன்ற தைரியத்தின் வடிவமாகவும் விளங்குகிறார்.
ஆஞ்சநேய பகவானை,கெட்டியாகப் பிடித்து நமக்கு நல்ல வழி காட்ட வேண்டி வழிபட்டு எல்லா வளமும் பெறலாம்..
இராமாவதாரத்தின் முடிவினில் “சீதாதேவி பூமியினில் சென்றுவிட்டால் மறுபடியும் என்னை எவ்வாறு அடைவாய்” என்று ஸ்ரீராமன் சீதையிடம் கேட்டார். 
அதற்கு சீதாதேவி, “நான் மறுபடியும் (திருத்துழாய்) துளசியாக வந்து உன் திருவடியை அடைவேன்” என்று கூறியதாக புராணங்கள் கூறுகிறது. 
எனவே, துளசி இருக்குமிடத்தில் ஸ்ரீ ராமர் இருக்கின்றார். ஸ்ரீராமன் இருக்குமிடத்தில் ஹனுமான் இருக்கின்றார் என்ற ஐதீகத்தினைக் கொண்டு, துளசியை மாலையாக ஸ்ரீ ராமனின் பிரசாதமாக ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், ஹனுமான் மிக்க மகிழ்வுற்று வேண்டுவோருக்கு வேண்டியவற்றைத் தந்து அருள்வார் என்பது நம்பிக்கை..
விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. நிர்மால்ய தோஷம் இல்லாதது துளசி .. 
துளசி மாடக் கோலம் -

மும்பை பாலாஜி மந்திர் அனுமன் தங்கக்கவசம்



Highly motivating

and inspiring

just recollected the Hanumath satha namavali and recited on dharsan of hanuman in your blog
http://youtu.be/hcDzb3BWOgA
subbu thatha
mena paatti 
YouTube - Videos from this email














38 comments:

  1. saniyin thaakkathai kuraikkum hanumanai patriya niraivana pathivu.jaisriram nanri amma.

    ReplyDelete
  2. thulasimada kolam veghu azhaghu pathivo adhi arputham

    ReplyDelete
  3. ஆஞ்ச்னேயர் கடாக்‌ஷம் கிடைக்கப்பெற்றோம். நன்றி

    ReplyDelete
  4. பிசிறு இல்லாமல், கருப்புப் பின்னனியில், நெளிநெளியாக, வெகு அழகாக வரையப்பட்டுள்ள, துளஸிமாடக் கோலத்தை வரைந்த பொற்கரங்களை வணங்கி மகிழ்கிறேன்.

    வரைந்தவருக்கும், வெளியிட்ட உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    வை கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  5. சனிக்கிழமை ஸ்திரவாரம் ஸ்ரீ ஆஞ்ஜநேயர் கடாக்ஷம் கிடைத்துள்ளது உங்கள் பாக்யம் தான். ;))))) மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. மும்பை பாலாஜி நகர் தங்கக் கவச ஹனுமான் தங்கமாய் ஜொலிக்கிறாரே!
    குட்டியூண்டாகவும் இருக்கிறார்.

    திருச்சி கல்லுக்குழி ஆஞ்ஜநேயர் மிகவும் பிரஸித்தம். மூர்த்தி மிகச்சிறியவர்தான் ஆனால் கீர்த்தி மிகப்பெரியது.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    அத்தனை படங்களும் அருமை.
    நன்றி.

    ReplyDelete
  8. Anonymous has left a new comment on your post "ஸ்ரீஆஞ்சநேயர் கடாக்ஷம்":

    ஸ்திர வாரம் சனிக்கிழமையான இன்று ஸ்ரீ ஆஞஜநேயர் கடாக்ஷம் கிடைத்துள்ளது மனதுக்கு ஒரே மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

    வை. கோபாலகிருஷ்ணன் /


    மகிழ்ச்சியான கருத்துரைகள் வழங்கி பதிவினைப்பெருமைப்படுத்தியமைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  9. ஸ்ரீ ஆண்டாளும், தனித்துளஸி மாலையும் எவ்ளோ அழகாக உள்ளன.

    மனதை கொள்ளை கொள்ளும் ஸ்ரீ ஆண்டாள் ரொம்ப ரொம்ப ஜோர் தான்.
    எவ்வளவு முறைதரிஸித்தாலும் மனதுக்கு மேலும் மேலும் களிப்பைத் தரும் படங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "ஸ்ரீஆஞ்சநேயர் கடாக்ஷம்":

    மும்பை பாலாஜி நகர் தங்கக் கவச ஹனுமான் தங்கமாய் ஜொலிக்கிறாரே!
    குட்டியூண்டாகவும் இருக்கிறார்.

    திருச்சி கல்லுக்குழி ஆஞ்ஜநேயர் மிகவும் பிரஸித்தம். மூர்த்தி மிகச்சிறியவர்தான் ஆனால் கீர்த்தி மிகப்பெரியது. /


    கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  11. //ஸர்வ கல்யாண தாதாரம்
    ஸர்வா பத்கந வாரகம்
    கருணா மூர்த்திம்
    ஆஞ்சநேய நமாம்யஹம்//


    ஸ்ரீ ஹனுமனின் கல்யாண குணங்களைச் சொல்லும் அழகான ஸ்லோகம்! ;))))) மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. //ஹனன் - அழிப்பவர், மன் - மனம், தான் எனும் அகங்காரத்தை மனதிலிருந்து அழிப்பவராதலால் அனுமன் என்று பெயர்//

    வெகு அற்புதமான விளக்கம்.

    ReplyDelete
  13. எனக்கு ஹனுமனைப்பிடிக்கும்.

    அதை விட வடை என்றால் கொள்ளைப்பிரியம்.

    வடை மிகவும் பிடிக்கும்.

    பல்வேறு ஹனுமன்களுடன், பல்லாயிரக்கணக்கான வடைகளைக் காட்டி என்னை அடிக்கடி வெடவெடக்கச் [வடைவடைக்க]
    செய்துவிடுகிறீர்கள்.

    நாக்கில் நீருடன் .........

    ReplyDelete
  14. முதல் படத்தில் பஜனை செய்யும் ஹனுமார்.

    அடுத்த பக்கத்துப்படத்தில் நெஞ்சை பிளந்து காட்டி, பகவானையும் தேவியையும் காட்டிடும் ஹனுமார்.

    கீழே தோள்மீது ஸ்ரீ ராம லக்ஷ்மணாளை தூக்கிச்செல்ல்ம் மாருதுஇ.

    பறக்கும் விமானம் போல் சஞ்சீவி மலையைப் பெயர்த்துச்செல்லும் ஹனுமார்.

    அடுத்து ஸ்ரீ இராமரையே வணங்குவது போல ஸ்ரீ ராமரிடமே குனிந்து குனிந்து வாலாட்டும் ஹனுமார்

    என்று ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே போகணும் என்ற ஆசை தான் எனக்கும்.

    ReplyDelete
  15. Anonymous has left a new comment on your post "ஸ்ரீஆஞ்சநேயர் கடாக்ஷம்":

    தங்கள் பதிவினில் கமெண்ட் பாக்ஸ் ஏனோ ஓபன் ஆகாமல் உள்ளது.

    ஸ்ரீ ஆஞ்ஜநேயர் வாலால் அதைத் தட்டி சரி செய்து கொடுங்களேன்.


    வை கோபாலகிருஷ்ணன் /

    தங்களின் நிறைய கருத்துரைகள் மெயில் பாக்ஸில் இருக்கின்றன..
    பப்ளிஷ் கொடுத்தால் பதிவில் வருவதில்லையே !

    ReplyDelete
  16. சுந்தரனாகிய பால ஹனுமானுக்கு, அஞ்சனைத்தாயார் சோறு ஊட்டிடும் படத்தில், நல்லதொரு பளபளப்பும் [Shining] அழகும் சேர்ந்து நன்றாக அந்தப்படம் தனியாக ஜொலிக்கிறது.
    ;)))))

    யாராலும் பிடிக்கமுடியாத ஹனுமனை அவர் தாயார் பிடித்து மடியில் வைக்க முடிகிறது.

    அதேபோலத்தான் யாராலும் தரமுடியாத அழகழகான படங்களை உங்களால் எங்களுக்காகத் தினமும் தர முடிகிறது.

    நீங்கள் என்ன சாதாரணமானவரா? என்னைப்போல?

    தெய்வீகப்பதிவராக்கும்! ;))))))

    ReplyDelete
  17. Very very pretty animation pictures. I spend a lot time to enjoy every bit.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  18. Very very pretty animation pictures. I spend a lot time to enjoy every bit.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  19. காட்டப்பட்டுள்ள அனைத்து ஹனுமன்களுக்கும், அனைத்து வடைகளுக்கும், என் அனந்தகோடி நமஸ்காரங்கள்.

    பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    அன்பான வாழ்த்துகள்.

    பகிர்வுக்கும், எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில ஆஞ்ஜநேயர் படங்களை இன்று மீண்டும் தரிஸிக்க வைத்து மகிழ்வித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள

    vgk

    [மெது வடைப்பிரியன்]

    ReplyDelete
  20. காட்டப்பட்டுள்ள அனைத்து ஹனுமன்களுக்கும், அனைத்து வடைகளுக்கும், என் அனந்தகோடி நமஸ்காரங்கள்.

    பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    அன்பான வாழ்த்துகள்.

    பகிர்வுக்கும், எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில ஆஞ்ஜநேயர் படங்களை இன்று மீண்டும் தரிஸிக்க வைத்து மகிழ்வித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள

    vgk

    [மெது வடைப்பிரியன்]

    ReplyDelete
  21. இராஜராஜேஸ்வரி said...
    Anonymous has left a new comment on your post "ஸ்ரீஆஞ்சநேயர் கடாக்ஷம்":

    தங்கள் பதிவினில் கமெண்ட் பாக்ஸ் ஏனோ ஓபன் ஆகாமல் உள்ளது.

    ஸ்ரீ ஆஞ்ஜநேயர் வாலால் அதைத் தட்டி சரி செய்து கொடுங்களேன்.


    வை கோபாலகிருஷ்ணன் /


    //தங்களின் நிறைய கருத்துரைகள் மெயில் பாக்ஸில் இருக்கின்றன..
    பப்ளிஷ் கொடுத்தால் பதிவில் வருவதில்லையே !//

    இருக்கலாம் .... இருக்கலாம் .

    இதையும் நான் அப்படியே நம்புகிறேன்.

    நீங்கள் என்ன என்னிடம் பொய்யா சொல்லப்போகிறீர்கள்.

    வாயு புத்திரா !

    உன் போன்ற வேகத்தில் நான் கருத்துக்கள் எழுதி கஷ்டப்பட்டு அனுப்பி வைக்கிறேன்.

    கண்டேன் ஸீதையை என்பது போல பப்ளிஷ் தராமல், இவங்க ஏதேதோ சமாதானம் சொல்லுகிறார்களே!!

    நீயே பார்த்து ஏதாவது செய்யப்பா!!!

    உனக்கு ஒரு பக்கெட்டோ அல்லது குறைந்த்பக்ஷம் ஒரு சாம்பிள் பாக்கெட்டோ வெண்ணெய் வாங்கி நெஞ்சில் சாத்துகிறேனப்பா!!!!

    OK யா ?

    ReplyDelete
  22. ஒண்ணே ஒண்ணு மறந்துட்டேன்!

    சூரியனைப் பார்த்து பிரார்த்திக்கும் ஹனுமாரின் காதணி ஜொலிக்கிறது.

    கைகளில் உள்ள ஆபரணங்களும் ஜொலிக்கின்றன.

    GHAதையும் ஜொலிக்கிறது,

    சூரியனும் ஜொலிக்கிறார்.

    கடல் அலைகளும் ஜொலிக்கின்றன.

    என்ன இருந்தாலும் ஜிமிக்கி போல எதுவும் ஜொலிப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    நேற்றைய உங்கள் பதிவில் அது ஜொலித்தது.

    தைப்பூசத்திலும் ஜொலிக்குது.

    என்ன இருந்தாலும் ஜிமிக்கி ஜிமிக்கி தான். அது பெண்கள் அணியும் ஆபரணம் அல்லவா!

    அதுவும் எதுசொன்னாலும் காதிலே போட்டுக்கொள்ளத பெண்கள், இதை மட்டும் [ஜிமிக்கியையும் வைரத் தோடுகளையும் மட்டும்] காதில் போட்டுக்கொள்வதால் அவை ஜொலிக்கின்றன, என்பது என் கண்டுபிடிப்பு.

    ReplyDelete
  23. சின்ன வயசில 'ஜெய் ஹனுமான்' தொடர் DD-ல சனிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும், ஒரு வாரம் கூட விடாம பார்த்திருவேன், ரொம்ப நாளைக்கு பிறகு இத்தனை ஆஞ்சநேயர் படங்களை ஒரு சேர ஒரே இடத்தில் பார்த்ததும் அந்த தொடர் ஞாபகத்திற்க்கு வந்தது.

    ஜெய் ஹனுமான் ..!

    ReplyDelete
  24. சனிக்கிழமை ஆஞ்சநேயர் தரிசனம் பெற்றேன் அது உங்களால்தான் அக்கா.

    நான் ஆஞ்சநேயரை வழிபடுவது வழக்கம் இப்போது வீட்டில் இருந்து வழிபட்டுகொண்டேன் .

    ReplyDelete
  25. அனைத்து படங்களும் அருமையாக இருக்கு.
    உங்கள் கருத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி அக்கா...

    ReplyDelete
  26. Highly motivating

    and inspiring

    just recollected the Hanumath satha namavali and recited on dharsan of hanuman in your blog
    http://youtu.be/hcDzb3BWOgA
    subbu thatha
    mena paatti

    ReplyDelete
  27. sury said...
    Highly motivating

    and inspiring

    just recollected the Hanumath satha namavali and recited on dharsan of hanuman in your blog
    http://youtu.be/hcDzb3BWOgA
    subbu thatha
    mena paatti


    சிறப்பான இனிய பகிர்வுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ..

    ReplyDelete
  28. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அனுமனைப் பற்றிய பதிவு அருமை. பல்வேறு நிலைகளில் உள்ள அனுமனின் படங்களுடன் அழகிய விளக்கங்களுடன் எழுதப்பட்ட பதிவு பாராட்டத் தக்கது. உழைப்பினிற்கு தலை வணங்குகிறேன்.

    அகங்காரத்தை அழிப்பதனால் அனுமன் எனப் பெயர் பெற்றவர்.

    கர்ணனைப் போல காதணிகளுடன் பிறந்தவர்.

    பிரம்மனின் வரமாக வாயு மற்றும் கருடனை விட வேகமாகச் செல்லும் சக்தி உடையவர்.

    சூரியனைக் குருவாகக் கொண்டவர்.

    குரு தட்சணையாக - சூரியனின் மகன் சுக்ரீவனுக்கு அரசுரிமையைப் பெற்றுத் தந்தவர்.

    குரு வணக்கமாக சூரிய நமஸ்காரம் படியவர்.

    பிராணாயாமத்தினை மனித குலத்திற்கு அருளியவர்.

    இவரை வழி பட்டால் சனி தோஷம் நீங்கும்.

    சீதாப் பிராட்டியார் மறு பிறவியில் துளசியாக வந்து இராமபிரானை அடைகிறார்.

    மனதில் இத்தனையையும் தக்க வைப்பது இயலாத செயல். தங்களின் உழைப்பும் ஈடுபாடும் நேரமும் பாராட்டுக்குரியவை.

    நண்பர் வைகோவின் அத்தனை மறுமொழிகலூம் அருமை.

    வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  29. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அனுமனைப் பற்றிய பதிவு அருமை. பல்வேறு நிலைகளில் உள்ள அனுமனின் படங்களுடன் அழகிய விளக்கங்களுடன் எழுதப்பட்ட பதிவு பாராட்டத் தக்கது. உழைப்பினிற்கு தலை வணங்குகிறேன்.

    மனதில் தங்கவைத்த தங்கக்
    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  30. ஆஞ்சினேயர் சுவாமிகளுக்கு அவங்க அம்மா சாப்பாடு ஊட்டுற மாதிரியான படம் புதுமை அருமை. பகிர்வுக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  31. உங்களுக்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு அருமையான படங்கள் கிடைக்குது?!

    ReplyDelete
  32. ஜொலிக்கும் ஆஞ்சனேயர்.. அணிகலன்களின் அனிமேஷன் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. நீண்ட நேரம் ரசித்துப்பார்த்தேன்.

    ReplyDelete
  33. ஆஞ்சநேயர் பற்றிய நிறையச் செய்திகள் அறிந்துகொண்டேன் என் அன்பான ஆன்மீகத் தோழி.சிலநேரம் படங்கள்தான் பயம் காட்டுது !

    ReplyDelete
  34. // cheena (சீனா) said...

    நண்பர் வைகோவின் அத்தனை மறுமொழிகலூம் அருமை.

    May 20, 2012 8:15 AM//

    தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete
  35. சுட்டிக்கு நன்றி.
    துளசிமாலை ரகசியமும் புரிந்தது.

    நடுவில் இருக்கும் படத்தில் ஐந்து தலை அனுமான் - புதிதாக இருக்கிறதே? இதற்கு ஏதாவது பின்னணி உண்டா?

    ReplyDelete
  36. Wonderful------started the day seeing the pic od lord hanuman.thank you for uploading such nice pic.

    ReplyDelete
  37. 3093+15+1=3109 ;)))))

    முத்தான மூன்று பதில்களுக்கு நன்றி.

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete