Thursday, May 31, 2012

மகத்துவம் மலரும் மந்திராலய மகான்





lay
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

நம்மில் ஒருவராக பிறந்து உலக ஆசைகளைத் துறந்து துறவறம் பூண்டு மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்திய மகான்களைமாதா, பிதா, குரு, தெய்வம்.” என்று நம் அறிவு கண்களை திற்ந்து வைக்கும் குருவை தெய்வத்திற்கும் மேலாக வணங்குகிறோம். 

நம் நாட்டில் கோயில்களுக்கு இணையாக நிறைய மடங்களும் இருக்கின்றன.தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதல்லாமல் இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்திராலயத்தில் ஜீவ சமாதியடைந்தார் குரு ராகவேந்த்திரர். 

குரு ராகவேந்திரர் முன் அவதாரம் சங்கு கர்ணன் என்ற தேவன் 

ஒவ்வொரு யுகங்களிலும் சில அவதாரங்கள் எடுக்க எம்பெருமான் நாராயணன் விரும்பினார். இதை அறிந்த பிரம்ம தேவன், ஸ்ரீமன் நாராயணன் எடுக்கப் போகும் பத்து அவதாரங்கள் என்னவென்று அறிந்து, அந்த அவதாரங்களை மனதில் நினைத்துப் பூஜை செய்ய விரும்பினார்.  பூஜை செய்வதற்கான நறுமணமுள்ள மலர்கள் சத்திய லோகத்தில் கிடைப்பது அரிது என்பதால், தன்னுடைய தேவதைகளில் ஒருவரான சங்குகர்ணன் என்பவரை பூலோகத்திற்கு அனுப்பி மல்லிகை, ரோஜா, செம்பருத்தி, பாரிஜாதம், பவளமல்லி, தாழம்பூ போன்ற மலர்களை தினமும் எடுத்து வரப் பணித்தார்.

சங்குகர்ணனும் தினமும் பூமிக்கு வந்து மலர்களைப் பறித்துச் சென்று பிரம்மா விடம் கொடுத்தார். ஒவ்வொரு யுகத்திலும் நாராயணன் எடுக்கவிருக்கும் மூர்த்தங்களுக்கு ஏற்ப பூஜை செய்து வந்தார் பிரம்மா.

திரேதா யுகத்தில் எடுக்கப்போகும் ஸ்ரீ ராமாவதாரத்திற்கான பூஜைக்கு ஒவ்வொரு மலராக சங்குகர்ணன் எடுத்து பிரம்மாவிடம் கொடுக்க, பிரம்மா அர்ச்சனை செய்தார். .

ஸ்ரீராமனுடைய அழகிலும் கம்பீரத்திலும் தர்மத்திலும் தன் மனதைப் பறிகொடுத்த சங்குகர்ணன் மலர் கொடுப்பதை மறந்து மயங்கி நின்று கொண்டிருந்தார்.

கோபம் கொண்ட பிரம்மா, ""பூமியில் நீ பிறந்து, எந்த ராமனுடைய பெருமையில் மயங்கினாயோ- அவருடைய அவதாரப் பெருமையை மக்களுக்கு உபதேசித்து மீண்டும் சத்திய லோகத்திற்கு வருவாயாக!'' என்று சபித்தார்.
இந்த சாபத்தின் காரணமாக பூலோகத்தில் அரக்க மன்னன் ஹிரண்ணிய கசிபுவின் மகன் பிரஹல்லாதனாய் பிறந்தார்.

மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரஹல்லாதன் தன் தந்தை அரக்கன் ஹிரண்ணிய கசிபுவை வதம் செய்ய நரசிம்ஹ அவதாரம் எடுத்தார்.

தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் .

தன் அடுத்த பிறவியில் வியாசராஜராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார். அப்பிறவியில் தான் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.

Sri Moola Rama Archana !


திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வெங்கடாஜலபதியின் அருளால் மூன்றாவது பிள்ளையாக தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தார். அவர்கள் அந்த குழந்தைக்கு வெங்கடநாதன் என்று பெயரிட்டனர்.
வெங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். 
கும்பகோணத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் கற்று தேர்ந்தார்.

சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவராகவும், இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார்.

 குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். வறுமையில் வாடியும் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.
வெங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தர் 
வெங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று  பகவான் கூறியதாக கனவு கண்டார்.  

தஞ்சாவூரில் துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக
ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்

1671 ஆம் ஆண்டு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்ககு முன் தன் பக்தர்களுக்கு மனம் நெகிழவைக்கும் வகையில் அவர்களை நல்வழிப்படுத்த ஒரு உரையாற்றினார்.  
• சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.
சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்.

நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது.

அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது.

சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
• கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக   இருக்கக்கூடாது'. கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி . குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள் தனமே ஆகும்.

நமக்கு கடவுள் மேல் மட்டுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார்.

ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. 
அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.
ஆந்திர மாநிலம் ஆதோனி அருகே, துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த்துள்ளது மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த இடம். 

 பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம். அப்பொழுது மடத்திற்காக அளிக்கப்பட்ட நிலத்தைத் திரும்பபெற வேண்டி ஆயத்தங்கள் நடந்துக் கொண்டிருந்தது.

SWARNA MANTAPA FOR SRI MOOLARAMADEVARU

Swarna Mantapa for Sri Moolarama Devaru
அப்பொழுது அதை விசாரிக்க சர் தாமஸ் மன்றோ  நியமிக்கப்பட்டார். விசாரணைக்காக மடத்திற்கு சென்று பயபக்தியாக செருப்புகளை வெளியே கழற்றிவிட்டு, தொப்பியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு பிருந்தாவனத்திற்கு எதிரில் சென்று நின்றதுதான் தாமதம், அவர் சற்றும் எதிர்ப்பார்க்காத, சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அதிசயம் நிகழ்ந்தது. 

மடத்திற்கு அந்த இடம் எவ்வளவு அவசியம் என்று எடுத்துரைக்க அந்த ராகவேந்திர சுவாமிகளே தன் சமாதியிலிருந்து உயிர்பெற்று எழுந்து வந்து மன்றோவுடன் சரளமான ஆங்கிலத்தில் உரையாடினார்.

ஆனால் அங்கு கூடியிருந்த மற்றவர்களால் ராகவேந்திர சுவாமியைப் பார்க்கவும் முடியவில்லை, அவர் குரலைக் கேட்கவும் முடியவில்லை.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுடன் நேருக்கு நேராக ஆலோசனை நடத்திய மன்றோ உடனே அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.

ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.

""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.

""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.

""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!"" மூன்றாமவர் சொன்னார். 

"எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்...
என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்...
பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""

""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார்.

ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.
புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.


நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. 


நவாப்பிடம் மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான்.

துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார். 

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறுகிறது.

அழகு எழில் கொஞ்சும் துங்கபத்திரை நதிக்கரையோரம் அமைந்திருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மடத்திற்கு சென்று வந்தால் நிச்சயம் நம் பிரார்த்தனை நிறைவேறுவதோடு மன அமைதியும் கிடைக்கும்.
கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை.


Sri Guru Raghavendra: Sri Raghavendra Swamy Aradhane | itslife.inSri Guru Raghavendra: Sri_Guru_Raghavendra-image « Chiraan's Astrology






26 comments:

  1. இந்திராMay 31, 2012 at 6:37 PM

    குருராஜரை குருவாரம் சேவிக்க பதிவு தந்தமைக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  2. உங்களின் ஒவ்வொரு பதிவிலும் கடுமையான உழைப்புத் தெரிகின்றது. அர்ப்பணிப்பு உணர்வுடன் படைப்புகள் அளிப்பது மனதிற்கு நிறைவைத் தருகின்றது. நித்தம் நித்தம் இறைவனின் அருளால் மெருகேறட்டும் தங்களின் பணி!
    எல்லாம் வல்ல கண்ணன் துணை நின்று, மன நிறைவு அளிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. எத்தனை எத்தனை விவரங்கள், புகைப்படங்கள்... ரசித்தேன்....

    ReplyDelete
  4. மந்த்ராலயம் தகவல்களும் படங்களும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மிகவும் அற்புதமாக சுவாமி ராகவேந்திராவைப் பற்றி கூறியதற்கு நன்றி அக்கா...
    நான்தான் முதலில் வருகிறேன் என்று நினைக்கிறேன் அக்கா.....

    ReplyDelete
  6. மிகவும் அற்புதமாக சுவாமி ராகவேந்திரா உரை ஆற்றியுள்ளார் மூன்றும் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய கருத்து.
    * நல்ல சிந்தனை
    * தர்மம்
    * போலி வேஷம்

    ReplyDelete
  7. ஜோதிடர்கள் கூறியப்படி எல்லாம் உண்மையாகி விடவும் ராகவேந்திரர் கூறியது உண்மை ஆகிவிட்டது. ஆமாம் அக்கா இன்றும் அவரை பற்றி நாம் நினைத்து பெசிகொண்டுள்ளோம் அல்லவா 100 வருடம் அவரும், 300 வருடம் நூலும், 700 வருடங்கள் அவரது உயிருடன் கலந்த நினைவும் மிகவும் அற்புதமாக எடுத்து கூறியதற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் அக்கா ....

    ReplyDelete
  8. ஜோதிடர்கள் கூறியப்படி எல்லாம் உண்மையாகி விடவும் ராகவேந்திரர் கூறியது உண்மை ஆகிவிட்டது. ஆமாம் அக்கா இன்றும் அவரை பற்றி நாம் நினைத்து பெசிகொண்டுள்ளோம் அல்லவா 100 வருடம் அவரும், 300 வருடம் நூலும், 700 வருடங்கள் அவரது உயிருடன் கலந்த நினைவும் மிகவும் அற்புதமாக எடுத்து கூறியதற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் அக்கா ....

    ReplyDelete
  9. ”மகத்துவம்

    மலரும்

    மந்திராலய

    மஹான்” என்ற தலைப்பே

    மட்டில்லா

    மகிழ்ச்சி

    மலர்ச்சி

    மற்றும்

    மயக்கம் தருவதாக அமைந்துள்ளது

    ReplyDelete
  10. பூஜ்யாய ராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயச |

    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

    /இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்துவரும் குரு ராகவேந்த்திரர்./

    இன்று குருவாரத்திற்கு ஏற்ற பதிவு.

    ReplyDelete
  11. முன் அவதாரம் சங்கு கர்ணன்
    அடுத்த பிறவியில் பூலோகத்தில் அரக்க மன்னன் ஹிரண்ணிய கசிபுவின் மகன் பிரஹல்லாதனாய் பிறந்தார்.

    அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார்.

    அடுத்த பிறவியில் வியாசராஜராய் பிறந்தார்

    [ஸ்ரீ பாண்டுரங்கனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட புரந்தரதாஸரின் குருவாகவும் இருந்தவர் இந்த வியாசராஜர் என்று நினைக்கிறேன் - சரியா என தகவல் களஞ்சியம் தான் விளக்க வேண்டும்]

    அப்பிறவியில் தான் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.

    பலபிறவிகள் எடுத்தது பற்றி, எவ்வளவு ஆச்சர்யமான தகவல்கள்.!!

    ReplyDelete
  12. /சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்/

    /நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது/

    /அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை.

    அதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது/

    உண்மையான மஹான்களால் முடியாதது ஏதும் இல்லை.

    அதை அனாவஸ்யமாக பிரயோகித்து, மனிதர்களிடம் வித்தை காட்டி, மூளைச்சலவை செய்து அவர்களை மயக்கி, காசு பறித்து ஏமாற்றாமலும், படாடோப வாழ்க்கை வாழாமலும், மிகவும் எளிமையாக வாழ்ந்த மஹான்கள் இவரைப்போன்ற ஒரு சிலர் மட்டுமே.

    ReplyDelete
  13. /மடத்திற்கு அந்த இடம் எவ்வளவு அவசியம் என்று எடுத்துரைக்க அந்த ராகவேந்திர சுவாமிகளே தன் சமாதியிலிருந்து உயிர்பெற்று எழுந்து வந்து மன்றோவுடன் சரளமான ஆங்கிலத்தில் உரையாடினார்./

    அருமையான சம்பவம் தான்;
    கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது.

    ReplyDelete
  14. "என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்.....

    என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்.....

    பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!"

    இன்றும் மந்த்ராலயத்திற்குச் சென்று அவரின் ஜீவ சமாதியை வழிபட்டு,
    மகிழ்ச்சியுடன் திரும்பும் ஜனங்கள் ஏராளமாக உள்ளனரே!

    ReplyDelete
  15. /கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை./

    ஆஹா! ஸ்நானம்+பானம் பற்றி அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

    ReplyDelete
  16. /நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. /


    அழகிய படங்கள் மற்றும் தகவல்களுடன் இந்தத் தங்களின் பதிவும் பலவித புஷ்பங்களாக நறுமணம் பரப்பியுள்ளது.

    ReplyDelete
  17. 1] ஸ்ரீ மூலராம அர்ச்சனை விக்ரஹங்களும்,

    2] ஸ்ரீ மூலராமரின் ஸ்வர்ண மண்டபமும்,

    /கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை/

    என்ற வரிகளிகளுக்குக்கீழே காட்டியுள்ள

    3] துங்கபத்ரா நதியின் இயற்கை அழகும் ....

    இவை மூன்றும் இன்றைய படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகளாகும்.

    சிரத்தையுடன் கூடிய தங்களின் கடும் உழைப்புக்கு

    என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான ஆசிகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  18. Very interesting .Blessed to read it on a Thursday.Thank you.

    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன் said...
    1] ஸ்ரீ மூலராம அர்ச்சனை விக்ரஹங்களும்,

    2] ஸ்ரீ மூலராமரின் ஸ்வர்ண மண்டபமும்,

    /கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை/

    என்ற வரிகளிகளுக்குக்கீழே காட்டியுள்ள

    3] துங்கபத்ரா நதியின் இயற்கை அழகும் ....

    இவை மூன்றும் இன்றைய படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகளாகும்.

    சிரத்தையுடன் கூடிய தங்களின் கடும் உழைப்புக்கு

    என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான ஆசிகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.//

    மன மகிழ்ச்சிதரும் அத்தனை கருத்துரைகளுக்கும் , பாராட்டுக்களுக்கும் ,
    அன்பான ஆசிகளுக்கும்
    மனம் மலர்ந்த இனிய நன்றிகள் ஐயா

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    1] ஸ்ரீ மூலராம அர்ச்சனை விக்ரஹங்களும்,

    2] ஸ்ரீ மூலராமரின் ஸ்வர்ண மண்டபமும்,

    /கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை/

    என்ற வரிகளிகளுக்குக்கீழே காட்டியுள்ள

    3] துங்கபத்ரா நதியின் இயற்கை அழகும் ....

    இவை மூன்றும் இன்றைய படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகளாகும்.

    சிரத்தையுடன் கூடிய தங்களின் கடும் உழைப்புக்கு

    என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான ஆசிகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.//

    மன மகிழ்ச்சிதரும் அத்தனை கருத்துரைகளுக்கும் , பாராட்டுக்களுக்கும் ,
    அன்பான ஆசிகளுக்கும்
    மனம் மலர்ந்த இனிய நன்றிகள் ஐயா

    ReplyDelete
  21. நான் பல வருடங்களுக்கு முன் மந்திராலயம் போயிருக்கிறேன். உங்கள் பதிவு மீண்டும் செல்லும் ஆவலைத் தூண்டி விட்டது.

    ReplyDelete
  22. இந்த முறை படங்களை விட தகவல்கள் அதிகம். நான் மந்திராலயத்தை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  23. உங்களது ஒவ்வொரு பதிவுக்கு வந்து செல்லும்போதும் மனத்தில் ஒரு நிம்மதி கிடைத்தாற்போல இருகிகிறது. ஒரு பெரிய ஆலயச் சுற்று வந்து செல்வதாக உணர்கிறது. கண்களைப் பறிக்கும் வண்ணப் படங்களுடன் அழகான பகிர்வுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  24. Aha aha.........
    Guru......Raghavendra Guru......
    Thanks Rajeswari.
    Thanks for the post.
    viji

    ReplyDelete
  25. ஸ்ரீ குரு ராகவேந்திரர் பற்றிய பதிவு மிக அருமை....பிருந்தாவனம் செல்லவேண்டும் என்கிற எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தும் அழகான வர்ண புகைப்படங்களும் ஓவியங்களும்..வாழ்க!

    ReplyDelete
  26. 3236+9+1=3246 ;)

    ஒரு பதில் .... இருமுறை .... நன்றி.

    ReplyDelete