Friday, April 11, 2014

ஸ்ரீரங்கம் பங்குனிஉத்திர சேர்த்தி சேவை வைபவம்




பெரியபிராட்டியார் திருவடிகளே சரணம்.

பங்கயப் பூவிற் பிறந்த பாவைநல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே

மங்கையர்கள் திலகமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
Photo: பெரியபிராட்டியார் திருவடிகளே சரணம்.

பங்கயப்பூ விற்பிறந்த பாவைநல்லாள் வாழியே

பங்குனியிலுத்தரநாள் பாருதித்தாள் வாழியே

மங்கையர்கள் திலகமென வந்தசெல்வி வாழியே

மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே

எங்களெழிற்சேனைமன்னர்க் கிதமுரைத்தாள் வாழியே

இருபத்தஞ் சுட்பொருள்மா லியம்புமவள் வாழியே

செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே.

www.akilasathathasrivaishnavaramanujakootamtrust.com
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே.

வைணவ தலங்களில் முதன்மையாகத்திகழும்   ரங்கநாதர் திருத்தலமாம் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை வைபவம்   பங்குனி மாதம் நடைபெறும் 
"ஆதி பிரம்மோற்சவம்' விபீஷணனால் தொடங்கப்பட்டது 
Photo: ஸ்ரீமதே ராமானுஜாய 
திருவரங்கம் 108 வைஷ்ண்வ திவ்யதேசங்களில் முதன்மை பெற்றது.சரணம் புகுந்த ஸ்வாமி ராமானுஜர் முக்தி அடையும் வரை என்ன செய்ய வேண்டும் என கேட்க,நம்பெருமாள் இத்தலத்திலேயே நித்ய வாசம் செய்யச் சொன்னது திருவரங்கத்தையே.
இங்கு உடலை நீத்தவர் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்.
ஸ்ரீவைஷ்ணவ தலைமைப் பீடமான படியாலே அனைத்து பூர்வாச்சார்யர்கள் இங்கேயே வாழ்ந்தார்கள்.
ஸ்வாமி ராமானுஜரா இத்திவ்ய தேச நடைமுறைகள் செம்மைபடுத்தப்பட்ட சீர்மை வாய்ந்தது.
இத்தலத்தில் சித்திரை வீதி வரை சேர்ந்து கோயிலின் ஏழு ப்ராகாரங்கள் (சப்த ப்ராகாரங்கள்)வேறு எங்கும் காண முடியாத ஏழு பெரும் மதில்கள்.
ஸ்வாமி ராமானுஜர் எழுந்தருளியிருந்த மடம்,மாமுனிகள் எழுந்தருளியிருந்த மடம்,பெரிய நம்பிகள்,கூரத்தாழ்வான்,முதலியாண்டான் வேதாந்த தேசிகன் ஆகியோரின் திருமாளிகைகள் இன்றும் உள்ளன.பிள்ளை உற்ங்கா வில்லிதாசர்,பொன்னாச்சியர் ஆகியோர் இருந்து வாழ்ந்த இடமே பிற்காலதில் கந்தாடை ராமானுஜ முனி மடமாக நம்மவர் வசம் இன்றும்
உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகிலேயே அதிகமாக உற்சவங்களை காணும் பெருமாள் திருவரங்கனே.
இந்த அனைத்து உற்சவங்கள் நடைபெறும் போதும் திருவரங்கத்தினுள் உள்ள 50க்கும் மேற்பட்ட ராமானுஜ கூடங்கள்,திருமண மண்டபங்கள்,மடங்கள்,சத்திரங்கள் அனைத்தும் வைணவர்களுக்கான ததியாராதனத்துடனான தங்குமிடங்களாக பரிமளித்திதிருக்கும்.
1924ல் நம் இன முன்னோர்களால் வாங்கப்பட்டு,1932ல் அகில  சாத்தாத ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ கூடம் டிரஸ்ட் என முறைப்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நமது இடம் சுமார் 5000 சதுர அடி பரப்பில் சுமார் ரூபாய் 2 கோடிக்கும் மேல் மதிப்பில் நம்மவர் அனைவரும் வந்து செல்ல வசதியாக உள்ளது. சிறு கூட்டங்கள் நடத்தமட்டுமெ ஏதுவாக தற்ச்சமயம் இருக்கும் நம் ராமானுஜ கூடம் கூடிய விரைவில் நிறைய அறைகள்,மடப்ப்ள்ளி,டைனிங் மற்றும் சுபவிஷேசங்கள் நடக்க ஏதுவான ஹால்களுடன் புதுப் பொழிவு காண உள்ள்து.அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாவட்ட தலைவர்களை உள்ளடக்கிய புதிய டிரஸ்ட் தற்சமயம் திறம்பட செயல்பட ஆரம்பித்துள்ளது.நிதி உதவியும் தமிழ்நாடு,புதுவை,ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து வர துவங்கியுள்ளன.
திருவரங்க பெருமாளின் ஒரு விஸ்வரூபம்,ஒரு வீணை ஏகாந்தம், ஒரு இரவு அரவணையுடனான மங்கள ஹாரத்தி,ஒரு கற்பூர படியேற்ற சேவை,ஒரு அரையர் சேவை, ஒரு வையாளி,ஒரு கருட வாகனம், ஒரு தேர், ஒரு கைத்தல சேவை, ஒரு நம்மாழ்வார் மோட்சம்,ஒரு சேர்த்தி வைபவம்,ஒரு ரத்ணாங்கி,ஒரு முத்தங்கி,ஒரு பரம பத வாசல் நுழைவு, ஒரு வாகனம், ஒரு நெல் கண்டருளல்,ஒரு பந்த காட்சி,ஒரு தெற்போற்சவம் என வாழ்வில் ஒரு முறையேனும் இவைகளை அனுபவிக்க நம் இன மக்களாகிய நமக்கு ஆர்த்தி வர வேண்டாமா?  அப்படி ஆர்த்தி ஏற்ப்பட்டு திருவரங்கம் வந்தால் சௌகர்யமாக தங்கி சேவித்துச் செல்ல நவீன வசதிகளுடனான அறைகள் கூடிய நமது ராமானுஜ கூடம் எழும்ப வேண்டாமா?
இதை நனவாக்கி கூடிய விரைவில் அகில சாத்தாத ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ கூடம், புது பொழிவுடன் கட்டுமானம் காண நம் இன மக்களின் எழுச்சி, ஒத்துழைப்புடன் நிதி உதவி செய்ய டிரஸ்ட் உறுப்பினர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
                       இவண்,

அகில சாத்தாத ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ கூடம் டிரஸ்ட், ஸ்ரீரங்கம்.


Bank Details given below:

 

Contributions through’ Cheque / D.D / Direct Remittance to

Akila Sathatha Srivaishnava Ramanuja Kootam Trust,

S.B. A/c No. 0732301000049622

IFSC : LAVB0000732,

Lakshmi Vilas Bank, Srirangam Branch.
*SARVA 

MANGALANI BAVANTHU*

 Contact:

 S.Dhamodaran, President , Mobile : 94888 93456

 G.Thirumalai Narasimman, Secretary:  98424 70203

 K.Srinivasa Ragavan, Treasur : 98422 44568

www.akilasathathasrivaishnavaramanujakootamtrust.com
இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு நம்பெருமாள் செல்லும்போது புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார். 

பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொள்வார்.பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் சேவை சாதிப்பார்கள்.

 ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி வைபவம் மிகவும்  
சுவாரஸ்யமாக சிறப்பாக நடைபெறும்..!

ஸ்ரீரங்கநாதரான அழகிய மணவாளன், ஒரு பங்குனி மாதத்தில் உறையூர் அருகே வேட்டையாடச் சென்ற போது  கமலவல்லியைச் சந்தித்தார். 

ஸ்ரீ கமலவல்லியே சோழ மன்னனின் மகளாகப் பிறந்திருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். பின்னர் கமலவல்லியைத் திருமணம் செய்த ரங்கநாதர், இரண்டு நாட்கள் உறையூரில் தங்கிவிட்டு, ஸ்ரீரங்கம் திரும்பினார். 

அன்றைய தினம் பங்குனி உத்திரம்; ரங்கநாயகி தாயாரின் ஜென்ம நட்சத்திரத் திருநாள்!

ஸ்ரீரங்கநாதர்- கமலவல்லி தாயார் திருமணத்தகவல் ஸ்ரீரங்கநாயகி தாயாரை எட்டியது. எனவே ரங்கநாதர் மீது கடுங்கோபத்தில் இருந்தார் தாயார். 

ரங்கநாயகி தாயாரை சமாதானப் படுத்த ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்று எண்ணிய ஸ்ரீரங்கநாதர், "காவேரி ஆற்றைக் கடக்கும்போது, நீ அணிவித்த மோதிரம் தவறி விழுந்து விட்டது. அதைத் தேடிக் கண்டெடுக்க காலத்தாமதம் ஆகிவிட்டது' எனக் கூறினார். 

எனினும் தாயாருக்கு கோபம் தணியவில்லை. இந்த ஊடலை அறிந்த நம்மாழ்வார்,அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். 

பின்னர் ரங்கநாதர் உண்மையை ஒப்புக் கொண்டதால், நம்மாழ்வார் சொற்படி ரங்கநாயகி நாச்சியார், பெருமாளை ஏற்றுக் கொண்டார். 

இதையொட்டி கொண்டாடப்படும் வைபவத்தை
"சேர்த்தி' என்று போற்றுவர்.

ஆதி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான பங்குனி உத்திரத்தன்று "நம்பெருமாள்' சித்திரை மாதம் உத்திர வீதிகளில் வலம் வந்து தாயார் சந்நியில் எழுந்தருள்வார். அப்போதுதான்  சேர்த்தி வைபவம் 
பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும். 
பிறகு திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதிப்பார்கள். இந்த உற்சவத்தை 
"மட்டையடி உற்சவம்'என்றும் சொல்வார்கள்.

பத்தாம் நாள் ஸ்ரீ ரங்கநாச்சியாரை மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்த பின்னர், பெருமாள் "கோ' ரதத்தில் (சிறிய தேரில்) எழுந்தருளி 
திருவீதி உலா வந்து மூலஸ்தானத்தை அடைவார். 

ஸ்ரீரங்கநாயகி தாயார் படி தாண்டா பத்தினி என்பதால் கோ ரதத்தில் பெருமாளுடன் சேர்ந்து வருவதில்லை .

பதினோராம் நாளன்று பெருமாள், ஆடும் பல்லக்கில் புறப்பட்டு 
திருவீதி உலா வரும் காட்சி, அனைவரும் சேவிக்க வேண்டிய ஒன்று.

ஆதி பிரம்மோற்சவ விழாவில் தாயாரையும் பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். 

தொடர்புடைய பதிவுகள்:
* ஆச்சர்யம் நிறைந்தஸ்ரீரங்கம்

*மணிராஜ்: அற்புத ஆலயம் ஸ்ரீரங்கம்

[srirangam+temple.JPG]


15 comments:

  1. ஸ்ரீரங்கம் பங்குனி உத்தர சேவை வைபயம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமையான படங்களுடன் சிறப்பான வைபவ தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அறிந்தேன் - சேர்த்தி சேவையின் அருமையையும், பெருமையையும்

    கண்டேன் - கண் குளிரும் படங்களை !



    என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்

    மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்,

    பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்

    பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்,

    மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,
    மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,
    துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,

    மன்னும் மரகதக் குன்றின் மருங்கே..


    மனம் கவர்ந்த பதிப்பிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

    ReplyDelete
  4. பங்குனி உத்திர சேர்த்திசேவை தகவல்கள், படங்களுடன் சிறப்பானபகிர்வு.நன்றி.

    ReplyDelete
  5. ஆடும் பல்லக்கில் உலா கண்டது போன்றதொரு நிறைவை தரும் பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  6. ஸேவை சாதிக்கும் பெருமாளும் ... தாயாரும்

    பார்க்கப்பார்க்க அலுக்காத படங்கள்.

    >>>>>

    ReplyDelete
  7. கேட்கக்கேட்க இனிமையான செய்திகள்..

    படிக்கப்படிக்க மதுரமான விளக்கங்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. மிகுந்த ஆச்சர்யமும் அற்புதமும் சந்தோஷமும் அளிக்கும் தொடர்புள்ள பதிவுகள்.

    அவைகள் மட்டுமாவது, எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே இருப்பதில், ஓர் மட்டற்ற [சின்ன] மகிழ்ச்சி எனக்கு.

    >>>>>

    ReplyDelete
  9. பெருமாளுடன் தாயார் ’டூ’ விடாமல் ’சேத்தி’ யானதில் சந்தோஷமே.

    காணொளிக்காட்சிகளைச் சொன்னேன்.

    o o o o

    ReplyDelete
  10. சேர்த்தி உற்சவம் உருவான வரலாறும் உற்சவ விளக்கங்களும் படங்களும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. பங்குனி உத்திர சேர்த்தி வைபவத்தின் பதிவு - படங்களுடன் அருமை..

    ReplyDelete
  12. ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர சேவையை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி அம்மா.

    ReplyDelete
  13. வெள்ளிக்கிழமை தாயார் பெருமாள் சேவை அற்புதம். எத்தனி தடவை கேட்டாலும் அலுக்காத காவியம். நன்றி மா.

    ReplyDelete
  14. பங்குனி உத்திரம் போய் சேவிக்க முடியாத குறையை இங்கு தாயார் பெருமாள் சேர்த்திப் புகைப்படங்களைப் பார்த்துப் போக்கிக் கொண்டேன்.

    ReplyDelete
  15. பங்குனி உத்திர சேர்த்தி சேவை - மிகச் சிறப்பாக இங்கே சேவிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete