மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே…
ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே!
நதி காய நேராமல் நீருற்று தாயே! நல் நிலம் பார்த்து தாயே!
எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே! என் வளமான தாயே!
பசி தாகம் காணாமல் பயிராக்கு தாயே!
ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே!
இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே!
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள ஓர் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும் பல வீடு பல நாடு பல தேசம்
என்றுஉணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே!
உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே!
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
சிட் சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
கரைக்கொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைத்தட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்
சித்ரா பௌர்ணமியை ஒட்டி பத்துப் பூக்கள் பூத்து சந்தோஷம் கொண்டாடிய எங்கள் இல்ல நிஷாகந்திப்பூக்கள் ஆனி பௌர்ணமியையும் சிறப்பிக்க பதினைந்து பூக்கள் வரை பூத்து சங்கீதம் இசைத்து ஆனந்தப்படுத்தின.செடியை எனக்குப் பரிசளித்த மகன்களின் வருகையை மலர்ந்து கொண்டாடி நடனமாடிக் களித்தன ...
http://jaghamani.blogspot.in/2011/05/blog-post_12.html
நிஷாகந்திப்பூ
http://jaghamani.blogspot.in/2011/05/blog-post_12.html
நிஷாகந்திப்பூ
முதலில் மலர்ந்து மணம் பரப்பிய மூன்று பூக்களையும்
குடும்பத்தோடு கண்டு களித்து வீடியோ படமும் எடுத்தோம்..
அடுத்த நாள் மலர்ந்த மலர்களையும் படம் எடுத்தோம் ..!
நாகலிங்கப்பூக்களின் நடுவில் சிவ லிங்க தரிசனம் காண்பது போல நிஷாகந்திப்பூக்களின் நடுவே மஹாவிஷ்ணு ஆயிரம் தலைகளைகளைக் கொண்ட ஆதிசேஷனின் மேல் அறிதுயில் கொள்ளும் திருமாலின்
ஆனந்த சயனத் தரிசனம் காணக் கிடைப்பதால்
அனந்த சயனப் பூ என அழைக்கப்படுகிறது..
ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரவில் மட்டுமே பூக்கும்
சிவப்பு நிற நிஷாகந்தி மலர்கள் பூத்துள்ளன.
இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர்.கள் வெள்ளை நிறம்,
மஞ்சள் நிறத்தில் மட்டுமே காணப்படும்.
சிவப்பு நிற பூக்கள் குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் மட்டுமே மலரும். "கேக்டை' தாவர குடும்பத்தை சார்ந்த "எப்பி-பிள்ளம்' என்பது தாவரவியல் பெயர்...
ஜப்பானியர் இந்த மலரை "வளம் கொழிக்கும்' மலராக நம்புவதால்,
வீடுகளில் அதிகளவில் வளர்க்கின்றனர்.
சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வீடுகள்; ஓட்டல்கள்
ஆகியவற்றில் வளர்க்கிறார்கள்..
இரவில் மட்டுமே பூ மலர்வதால், நைட் குயின்' என அழைக்கப்படுகிறது..
இனிய மணம் வீசுகிறது..
நிலாவின்றே நாட்டிலே நிஷாகந்தி பூத்தல்லோ
மானச மைனே வரூ.. மதுரம் நுள்ளி தரூ..
The flower can be seen only at night.Its the most beautiful flower in my house
Queen of the Night
Dutchman's Pipe
Night-blooming Cereus
Wijaya Kusuma (Indonesian)
Nishagandhi (Hindi, India)
Gul-e-Bakavali (Urdu)
Kadupul (SriLanka)
Night-blooming Cereus
Wijaya Kusuma (Indonesian)
Nishagandhi (Hindi, India)
Gul-e-Bakavali (Urdu)
Kadupul (SriLanka)
Profusion of blooms in an hanging potted plant.
Epiphyllum oxypetalum
Epiphyllum oxypetalum
வண்ணம் கொண்ட வெண்ணிலவு வானம் விட்டு வந்ததோ !
வண்ண வண்ன மலர்கள் எண்ணம் நிறைய மலரவே!