Thursday, January 31, 2013

கார்த்த வீர்யார்ஜுனன்






 ஓம் ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நம: |
கார்த்த வீர்யார்ஜுனோ ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்  ||
தஸ்ய ஸ்மரந  மாத்ரேன கதம் நஷ்டம் ச லப்யதே ||

    கார்த்த வீர்யார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள். இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்பதால் தன ஆயிரம் கைகளால் நஷ்டம் வராமல், காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்க உதவ  உதவிக்கழைக்கும் சுலோகம் இது.

ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்

ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே
மஹாசூஷ்மாய தீமஹி
தந்நோஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்.

 திருமாலின் சுதர்சன சக்கரம் திருமாலின் ஆணையின்பேரில் 
கார்த்தவீர்யார்ஜுனனாகப் பிறந்தது. 

கிருதவீர்யன் என்ற அரசன் வினாயகரை நோக்கி செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹரசதுர்த்தியன்று வினாயகருக்குவிரதமிருந்து அங்காரக
பூஜையையும் சந்திர பூஜையையும் செய்து வினாயகரை வழிபட்பிள்ளைவரம் வேண்டி தவமிருக்கும் கிருதவீர்யனுக்கு மகனாக சுதர்சனம் பிறந்தது...

சுதர்சனச் சக்கரத்துக்கு ஆயிரம் ஆரங்கள். ஆயிரம் சுவாலைகள்.

அந்த ஆயிரம் ஆரங்கள்தான் கைகளும் கால்களுமில்லாமல் பிறந்து விநாயக ஏகாக்ஷரி என்னும் மந்திரத்தை பன்னிரண்டு ஆண்டுகள் ஜபம் செய்து தவமியற்றின கார்த்தவீர்யார்ஜுனனுடைய
ஆயிரம் கைகளாக தரணீதர விநாயகரால் கொடுக்கப்பட்டிருந்தன

தேவர்களை வென்றடக்கிய ராவணனையே வெல்லக்கூடிய
வலிமை மனித க்ஷத்திரியனாகிய கார்த்தவீர்யனுக்கு இருந்தது.


நர்மதை ஆற்றில் கார்த்தவீர்யார்ஜுனன் ஜலக்கிரீடையாக ஆற்றின் குறுக்கே தன்னுடைய ஆயிரம் கைகளையும் வைத்து தண்ணீரை அணை போல் தேக்கிவைத்து அதில் நீந்திக்குளித்துக்கொண்டு திடீரென்று கைகளை எடுத்துவிடும்போது அடைபட்ட தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளப்பெருக்கு போல் ராவணனின் சிவபூஜையைக் குலைத்துவிட்டது. 

கோபப்பட்ட ராவணன் கார்த்தவீர்யனைக் குத்தச்சென்றான். 

                
கார்த்தவீர்யன் திரும்பிக்கூடப் பார்க்காமல் குத்தச்சென்ற கையைப் பிடித்துக்கொண்டான். 

இராவண்னுக்கு இருபது கைகள்...  ஒவ்வொரு கையையும் கால்களையும் பிடித்துக்கொண்டுவிட்ட பின்னரும் கார்த்தவீர்யனின் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டு கைகள் மீதமிருந்தன. 

                ராவணன். கொஞ்சமும் அசைய முடியவில்லை. மூச்சு முட்ட. பார்க்குமிடமெல்லாம்   எல்லாமே கார்த்தவீர்யனின் கைகள்.

ராவணனிடம் இருக்கும்  வரங்கள்  அவனைக் கொல்ல விடவில்லை ..கார்த்தவீர்யன் கடைசியில் ராவணனின் பரிதாப நிலையைப் பார்த்து ராவண்னை விரட்டிவிட்டான். 


                
            
கார்த்தவீர்யன் தன்னுடைய படைகளுடன்  நர்மதைக் கரையிலிருந்த ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில்  விருந்து உண்ட கார்த்தவீர்யன்,  நினத்ததையெல்லாம் கொடுக்கக்கூடிய காம் தேனுவைக் கேட்டதற்கு ரிஷி மறுத்துவிட அவரை வாளால் வெட்டிவிட்டு தேனுவைக் கவர்ந்து சென்றான்.

 ஜமத்னி முனிவரின் மகன் பரசு ராமன்  கார்த்தவீர்யனின் ஆயிரம் கைகளையும் தலையையும்  கிரீடத்துடன் வீழ்த்தினார் ...


திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. கடன்பிரச்னை நீங்க, தொலைந்தபொருட்கள்  மீண்டும் கிடைக்க, மரணபயம் நீங்க, நியாயமான வழக்குகளில் வெற்றி பெற, கல்வியில் சிறந்தோங்க என்று பக்தர்களின் பல்வேறு குறைகளை நீக்க  பல்வேறு பூஜைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன. 









Wednesday, January 30, 2013

பச்சை சாத்தி முருகன்









பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்ரமண்யனே வா வா - 
நெஞ்சமெனும் கோவிலமைத்தே - அதில் நேர்மையெனும் தீபம் வைத்தே 
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - வாவா சேவல் கோடி மயில் வீரா.  


அலைகடல் ஓரத்திலே எங்கள் அன்பான சண்முகனே - நீ 
அலையாய் வரம் தருவாய் - உனக்கு 
அனந்த கோடி நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.   (பச்சை).


Murugan 03.jpg
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழாக் காலங்களில் சிறப்பு வாய்ந்த எட்டாம் திருவிழாவன்று காலையில் முருகப்பெருமான் எழுந்தருளும் கோலம் கண்கொள்ளாக் காட்சி ..!


சுவாமி ஆறுமுகநயினார், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உலா வருகிறார் ..
பச்சை சாத்தி வரும் போது சுவாமிக்கு பக்தர்களால் செய்யப்படும் 
பன்னீர் அபிஷேகத்தால், தேரோடும் வீதிகள் சேறாகின்றன. 
General India news in detail
பச்சை  செழுமையைக் குறிக்கும். 

தன்னைத் தரிசித்தவர்கள்  வீட்டிலும், தரிசிக்க வராவிட்டாலும் 

வீட்டில் இருந்தே நினைத்தவர்கள் வீட்டிலும் 
செல்வச்செழிப்பு ஏற்படுவதற்காகவும் விவசாயம் செழிக்கவும் 
பச்சை சாத்தி  நிகழ்ச்சியை நடத்தப்படுகிறது ...
Peacock graphics




சிட்னியின் வைகாசிக்குன்றில் (Mays Hill) எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமா\ன் பார்க்க பரவசம் தரும் பச்சை வண்ணத்தில் பச்சை சாத்தி நம் இச்சைதணிவிக்க்
பச்சைக்கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புத்ததிருக்காட்சி ..



கற்பக விநாயகர், பச்சை சாத்தி, அலங்காரம்.

சுயரூப பச்சை சாத்தி அனுமன் அலங்காரம்..

Tuesday, January 29, 2013

ஸ்ரீ லலிதாம்பிகை கோவில்






மாங்காடு தன்னிலவள் காமாட்சி!
மதுரை மண்ணிலவள்  மீனாட்சி!
காஞ்சியிலே இன்றைக்கும் காமாட்சி!
காசியிலே என்றென்றும் விசாலாட்சி!
கோவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அனுவாவி மலையடிவாரத்தில்  லலிதாம்பிகையாக வீற்றிருந்து அருள் பொழிகிறாள்...

சாட்சாத் அம்பிகையே நம்முடன்  நேரில் தோன்றுவது போன்ற அமைப்பில் மனதில் நிறைந்து எழில்பொங்க அருளாட்சி நடத்துகிறாள் அன்னை ..
ஆறாக அவளருள் ஓடிவரும்  தேராக அவளுருவம் ஆடிவரும்!
தேனாக மனத்தினில் நின்று விடும்! தேடும்வரம் எல்லாமே தந்துவிடும்!
பூவாக மலர்கின்ற மென்மையவள்! நானென்றும் அவளழகை பாடிடுவேன்! நலமோடு பலகாலம் வாழ்ந்திடுவேன்; அம்மா!!!

ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் வளாகத்தில் குருகணபதி, செல்வமுத்துக்குமார சுவாமி, காமேஸ்வரர், லட்சுமி நரசிம்மர், விஷ்ணு துர்கை, ஆனந்த பைரவர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, சரஸ்வதி, நாககன்னி, கன்னிமார் மற்றும் வன பத்திரகாளி சன்னதிகளும், ஸ்ரீ லலிதாம்பிகை பீடம் மற்றும் அலுவலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டும், அனுக்கிரக நவகிரக நாயகர் சன்னதி, ஆஞ்சநேயர், தன்வந்திரி சன்னதிகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ வித்யா தியானப் பயிற்சி ஆரம்ப நிலை முதல் ஐந்தாம் நிலை மூல மந்திர தீட்சை வரை பெற சென்னையிலும்  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன ...

Sri Maha Meru is the three dimentional realization in Samayachara Sri Vidya
Shri Lalithambika Jyothish Gurukulam has brought out a perfect carving of 
Maha Meru made out of five elements Gold,Silver,Copper,Brass and Iron. 




Scenes from Navaratri Samayachara Sri Vidya Meditation Camp







Contact us for directions at wisdom@srilalithambika.org.
We also work with volunteer student groups at universities across the cities, who arrange their own collection modes. Get in touch with us to find out if there’s one near you.



Monday, January 28, 2013

எண்ணம் நிறைக்கும் வண்ணத்தீவு ..







வர்ணமயமான பல்வேறு மணற் குன்றுகள் பிரேசர் தீவுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்து எண்ணம் கொள்ளை கொள்கிறது...

பிரேசர் தீவு, பிரிஸ்பேன் நகருக்கு வடக்காக , ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்திற்கு அண்மையில் வடக்காக எழிலாக அமைந்துள்ள
 மிகப்பெரிய தீவாகவும் விளங்குகின்றது.

ஆஸ்திரேலியாவின் 6 வது மிகப்பெரிய தீவாகவும் , உலகில் மிகப்பெரிய மணல் தீவாகவும்  ஆஸ்திரேலியாவின் பிரேசர் தீவு விளங்குகிறது.

பிரேசர் தீவு, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மிகப்பெரிய தீவாகும்,

பிரேசர் தீவில் நூறுக்கும் மேற்பட்ட நன்னீர் ஏரிகள் அமைந்துள்ளது..

உலகில் காணப்படுகின்ற தூய்மையான ஏரிகளில் சில, பிரேசர் தீவிலேயே அமைந்துள்ளன.

 சில ஏரிகள் வெள்ளை மணற் கரைகள் சூழ தேயிலையின் நிறத்திலும், சில தெளிவாகவும், நீல நிறத்திலும் அமைந்து ககொள்ளாக்காட்சியாகத்திகழ்கிறது

பிரேசர் தீவில் அமைந்துள்ள மணற் குன்றுகள், கடல் மட்டத்திலிருந்து 240மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டவை..

பிரேசர் தீவில், தங்குதடையற்ற நீண்ட வெள்ளை மணற்கரைகள், ஆச்சரியத்தக்க நிறமுள்ள மணல் குன்றுகளினால் அசாதாரணமான அழகு நிறைந்த இடமாக காட்சியளிக்கின்றன.



பல்வேறு வகையான பாலூட்டிகள், ஊர்வன, , பறவைகள், மீனினங்கள் வாழ்கின்றன.


ஜெல்லி மீன்கள் அதிகம் காணக்கிடைத்தன..
bouncebouncebouncebouncebouncebouncebouncebouncebouncebouncebounce
நிறைய தவளைகளும் காட்சிப்படுகின்றன...



பிரேசர் தீவில் வாழ்கின்ற டிங்கோ(Dingo) நாய்கள் சிறப்பிடம் பெறுகின்றன.
ஜனவரி மாதம் தங்கள் குழந்தைகளுக்கு அந்த காட்டு நாய்கள் பயிற்சி அளிக்கும் பருவமாம் .. ஆகவே அதிகம் காணக்கிடைக்காதாம் ..
பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்திருக்கிறார்கள்...



இயற்கை சுற்றுலா இடமாக விளங்கும் பிரேசர் தீவு 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமையத்தினால் உலகப் பாரம்பரிய  -மரபுரிமை இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ..

பசுமையைப் பாதுகாக்க வெளிநாடுகளிருந்து தருவிக்கப்பட்ட 
விதைகள் மூலம் மரங்கள் வளர்க்கிறார்கள்..


நான்கு சக்கர இயக்கமுள்ள ஜீப் போன்ற வாகனங்களே 
இங்கே பயணிக்க ஏற்றவை ..

பிரிஸ்பேனிலிருந்தே பெர்ரி என்னும் படகுகளில் சொந்த ஜீப்,
 ஜீப்பின் பின்னால் இணைக்கப்பட்ட சகல வசதிகளுடனான படகுகள் சகிதம் குடும்பத்தோடு வாரக்கணக்கில் விடுமுறையைக்களிக்க வரும் ஆஸ்திரேலியர்களைக்காண முடிந்தது .. 


Coral Bay Panorama, St John, US Virgin Islands Photographic Print