Saturday, June 30, 2012

ஓம் சிவோஹம் ! ஹர ஹர மஹாதேவா !!




 
அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா
பூரணா ஜகத் காரணா சத்ய தேவ தேவ ப்ரியா
 

ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா
 





  • கோனேரி ராஜபுர நடராஜர் சிலையில் மனிதர்களுக்கு ஏற்படும் மருவும், விரல் நகங்களும் தத்ரூபமாக காணப்படுகிறது.  இந்த நடராஜர் சிலைக்கருகில் உள்ள மண்ணை சிறிது எடுத்து வந்து சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று  எண்ணியபடி ஒரு துணியில் சிறிது முடிந்து விட்டு வாசலில் தொங்க விட்டால் எந்த தடையுமின்றி வீட்டை மளமளவென்று கட்டி விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.  
திருச்சிற்றம்பலம் 
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. ---கோளறு திருப்பதிகம்
 
கடலூர்மாவட்டம் அருகே அமைந்துள்ள நெய்வேலி நடராஜரின் 
உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம்.
 
எடை 2 ஆயிரத்து 420  கிலோ. இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை. இதை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற வைக்க முயற்சி நடக்கிறது.  ஐம்பொன்னால் ஆன நடராஜரின் அருகிலுள்ள சிவகாமி அம்பிகையின் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது.
 


போகர் நான்காயிரத்தில் கூறப்பட்ட விதிகளின்படி பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி, ஐம்பொன்னால் இந்த நடராஜர் சிலையை வடித்ததாகச் சொல்கின்றனர்.
சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் புரியும் திரிமூர்த்தி வடிவம், கோயில் முகப்பில் உள்ளது.
நடராஜர் கோயில் அமைக்கப்பட்ட பின் இப்பகுதி
"சிவபுரம்' என அழைக்கப்படுகிறது.

மற்ற தலங்களில் நடராஜரது பாதத்தின் கீழ் மாணிக்கவாசகர் இருப்பார்.
இங்கு திருமூலர் உள்ளார். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் நடராஜரின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர்.
சிவாலயங்களில் சிவனின் எதிர்ப்புறம் சூரியனும், சந்திரனும் அருள்பாலிப்பார்கள். இங்கு சூரியனும் பைரவரும் உள்ளனர்.
பத்து கரங்களுடன் அருளும் "தசபுஜ பைரவர்' இத்தலத்தின் சிறப்பம்சம்.
தசபுஜ பைரவர்  

சனிபகவான் தனி சன்னதியில் அருளுகிறார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான கோயிலை பன்னிரு திருமுறை வளர்ச்சிக்கழகம் நிர்வகித்து வருகிறது.


நால்வர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு பக்தர்களுக்கு சேவை செய்கிறது.

திங்கள்கிழமைகளில், மாலை 5.30 மணிக்கு நடராஜர் முன்பு கூட்டு பிரார்த்தனை செய்து, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரசாதம் தரப்படுகிறது.

நாயன்மார்களின் குருபூஜை தினத்தன்று அபிஷேகமும், அன்றிரவு நாயன்மார் புறப்பாடும், அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் நடக்கிறது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இங்கு வந்து சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள்.

மன அமைதி வேண்டுபவர்கள் இங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து நிம்மதி பெறுகிறார்கள்.
"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என அவ்வைப்பாட்டி கூறியது போல, சிவபெருமான் தன்னை வணங்குவதை விட, தன் அடியார்களை வழிபடுவதையே பெரிதும் விரும்புவார்.
அதன் அடிப்படையில் 63 நாயன் மார்களுக்கான தனிக் கோயில் அமைந்துள்ள தலம்.
நாயன்மார்களுக்கு தனிக்கோயில்
[Gal1]
சிவாலயங்களில் பிரகாரத்தில் வீற்றிருக்கும் நாயன்மார்கள்  இங்கு 9 கலசங்களுடன் "திருத் தொண்டர் திருக்கோயில்' என்ற பெயரில் உள்ள தனிக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

பக்தர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய நாயன்மார்களை பூஜை செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார் மற்றும் தொகை யடியார்களுக்கும் சிலைகள் உள்ளன.

பளிங்கு சபை :நடராஜருக்கு சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளிசபை, திருவாலங்காட்டில்ரத்தினசபை, குற்றாலத்தில் சித்திரசபை, திருநெல்வேலியில் தாமிரசபை என பஞ்சசபைகள் உண்டு. இங்குள்ள நடராஜர் ஆடும் சபை பளிங்கு கற்களால் ஆனது.
எனவே, இத்தலம், "பளிங்கு சபை' என அழைக்கப்படுகிறது.

சிவலிங்கத்தில் விபூதிப்பட்டை: நடராஜர் சன்னதியின் மேற்கே செம்பொற்சோதி நாதர் சன்னதி உள்ளது. இதன் நெற்றியில் மூன்று கோடுகள் விபூதிப் பட்டை போல் அமைந் திருப்பதை, அபிஷேகத்தின் போது காணலாம்.

சுற்றுப்பகுதியில் விநாயகர், அறம்வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தென்முகக்கடவுள், அண்ணாமலையார், துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.
அண்ணாமலையார்,

துர்க்கை
[Gal1]
தவம் செய்யும் நவக்கிரகம்: இங்குள்ள நவக்கிரக மண்டபம் வித்தியாசமா அமைந்துள்ளது. 
ஒரே கல்லால் ஆன வட்டவடிவ தேரில் சூரியன் நடுவில் தாமரை வடிவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத்திசையை பார்த்தபடி, அமர்ந்த தவக்கோலத்திலும் உள்ள தேரை தேர்ப்பாகன் ஓட்ட, ஏழு குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரைச்சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் உள்ளனர்.
ஒரே கல்லில் நவக்கிரகம்

 சூரியன்
[Gal1]
ஆராய்ச்சி மணி:கோயில் நுழைவு வாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. 


பக்தர்கள் தங்கள் தேவைகளை, எழுதி, பூஜை நேரத்தின் போது பெட்டியில் போட்டு பின் மூன்று முறை மணியை ஒலிக்கச்செய்கிறார்கள். 


இந்த மனுக்கள், தினமும் காலை பூஜையின் போது, தீட்சிதரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்பட்டு பின் எரிக்கப்படுகிறது. 


கோரிக்கை நிறைவேறியதும், மீண்டும் நன்றிக்கடிதம் எழுதி பெட்டியில் போட்டு செல்கின்றனர்.
ஆராய்ச்சிமணி
[Gal1]

[Gal1]
விதியை வெல்வது எப்படி? :மனிதர்களுக்கு பணக்கஷ்டம், மனக்கஷ்டம், நோய், வறுமை என பலவகையான கஷ்டங்கள் ஏற்படும். 
எல்லாம் விதிப்படி நடக்கிறது என நொந்து கொள்வார்கள்.

 ஒவ்வொரு வரும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட, அவற்றிற்குரிய பதிகங்களை பாடினால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட பதிகங்கள், அவரவர் ராசிக்கேற்ப கோயில் பிரகார சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ள திருமுறை அரங்கத்தில், மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமைகளில் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி நடத்தப் படுகிறது.

இலவச தேவார வகுப்புகள், திருமுறை விளக்க வகுப்புகள், மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி ஆகியவை இந்த அரங்கத்தில் நடத்தப் படுகின்றன.  திருமுறைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெல்லும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தமிழை ஆராய்ச்சி செய்பவர்களும் இங்கு வருகின்றனர்.

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிதம்பரம் கோயிலில் சிவபெருமான் எழுதி,""மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம்பலமுடையான்' எனக் கையெழுத்திட்டு நடராஜர் சன்னதியில் வைத்தார்.

இதன் அடிப்படையில் இத்தலத்து நடராஜருக்கு,
"அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடராஜர் இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் அன்னை சிவகாமி "ஓசை கொடுத்த நாயகி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

[Image1] 
 thermal station 

Chidambaram  Nataraja 
 
நவரத்தினத்தாலான கவசத்தை, குஞ்சிதபாதத்துக்குச் திருவாதிரை நாளன்று காஞ்சிப் பெரியவர் அளித்துள்ளார்...
ஸ்ரீ நடராஜப் பெருமான் பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது.. குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.
குஞ்சிதபாதத்தை தரிசிக்க ஆவல்கொண்ட மஹா பெரியவாளுக்கு சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் பெரியவரை தரிசித்து பிரசாதமாக அளித்த குஞ்சிதபாதத்தை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டார். 
 குஞ்சிதபாதத்துடன் காட்சியளிக்கும் மஹா பெரியவாளின் படம் நோய் நீக்கும் அற்புத தரிசனம் ஆகும்..
  "தேடி வந்த சிதம்பரம்'
 

Shiva Tandava Wallpaper
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
 

அதல சேட னாராட அகில மேரு மீதாட
     அபின காளி தானாட ...... அவளோடு அன்று 

அதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
     அருகு பூத வேதாளம் .....அவையாட 

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
     மருவு வானு ளோராட ...... மதியாட 

வனச மாமி யாராட நெடிய மாம னாராட
     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்   -முருகா ....

Free Yoga 

Friday, June 29, 2012

ஆடல் வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனம்



வானாகி,மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி அனைவரையும் கூத்தாட்டுவானாக விளங்கும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது.  
வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். 
இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. 

இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம். இதையே 
"ஆனி இலை அசங்க' என்பார்கள். கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி. 

வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதம் ஆனி மாதம். நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடுவதாக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது

தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், 
விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். 

நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் 
நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். 
நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. 

அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். 

இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் செய்து முடிப்பர்இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. 

ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சிறப்பிக்கிறோம். 

திருமஞ்சனம் என்றால் மகாஅபிஷேகம் என்று பொருள்

தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம்; 
காலைப்பொழுது மாசி மாதம்; 
உச்சிக் காலம் சித்திரை; 
மாலைப்பொழுது ஆனி; 
இரவு ஆவணி; 
அர்த்த சாமம் புரட்டாசி என்பர் 

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 

சிவ ஆலயங்களில் ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்.

 ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. 

 திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். 

கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். 
ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.


ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். 

அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் 
குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்; 
எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்; 
மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்; 
நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்; 
பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்; 
இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்; 
தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்; 
பால் அளித்தால் ஆயுள் வளரும்; 
தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; 
நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்; 
கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்; 
சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்;
 பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது; 
பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. 

அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்வர். 


9ம் நாள் விழாவான தேரோட்டம், 
world cup 2011
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகாபிஷேகத்தை முன்னிட்டு
அதிருத்ர மகாயாகம்
General India news in detail




Thursday, June 28, 2012

ஸ்ரீமத் ஆனந்த நடராஜர்



வில்லை வட்டப் படவாங்கி அவுணர் தம்
வல்லை வட்ட மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லை வட்டந் திசை கை தொழுவார் வினை
ஒல்லை வட்டங் கடந்தோடுடல் உண்மையே

என்று அப்பர் பெருமான் தில்லை திசை நோக்கி தொழுதாலே 
வினைகளை எல்லாம் நீக்கும் என அறுதியிட்டு உரைக்கிறார்..

ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் வெளியே வந்து நமக்கு எல்லா 
நன்மைகளையும் வழங்கி அருட்காட்சி தருகிறார்...

ஆனி உத்திர திருவிழா முதல் நாள் 
கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது .

நடராஜப் பெருமான் ,சிவகாம சுந்தரி தங்க மற்றும் 
வெள்ளி மஞ்சங்களில் திருவீதி உலா வருகின்றனர்.

தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின்
 திருவீதி உலா நடை பெறுகின்றது.

ஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும் ,
அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும்,
முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்,
சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர,

ஐயன் 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும்,
3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும்,
சூரிய பிரபையில் ஆனி உத்திர தரிசனம்

4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும்,
5ம் நாள் வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும்,
6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும்,
7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார்.
8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி சுந்தரர் கோலத்தில் கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்தி தங்க ரதத்தில் எழிற் கோலம் காட்டுகின்ற தினம் சித்சபையிலே நடராஜப் பெருமான் ,சிவகாம சுந்தரியின் முக தரிசனம் மட்டுமே கிடைக்கும்.

9ம் நாள் காலை உலகை உய்விக்க நடராஜப் பெருமான் ,சிவகாம சுந்தரியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர்.

பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கொண்டருளுகின்றார்.

ராஜ சபை என்னும் ஆயிரம் கால் மண்டபம்(Thousand Pillared Hall)

ஆனி உத்திரத்தன்று அருணோதய காலத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது,

பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம் நதியாகவே பாயும்  அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி.

அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலேதுன்பங்கள் எல்லாம் விலகி ஓடும்.

 சர்வ அலங்காரத்துடன், ராஜ சபையில் ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் ..

. சித் சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது.

பின் தீர்த்த வாரி கண்டருளிய பஞ்ச மூர்த்திகளுடன் ஆனி திருமஞ்சன மஹா தரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார்.

இந்த இரண்டு நாட்கள் மட்டுமே பெருமானின் ஜடா முடியை காண இயலும் ஐயனின் திருக்கோலத்தைக் காண கோடி யுகங்கள் தவம் செய்திருக்க வேண்டும் .

 பூசனைகள் முடித்து "ஆனந்த தாண்டவத்துடன்" பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலைச்சுற்றி வலம் வந்து சிற்றம்பலத்திற்கு எழுந்தருளூகின்றார்.

11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் 
ஆனி திருமஞ்சன மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது.



File:Natraja Car.jpg
File:Natraja Temple.jpg