Saturday, December 31, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012



விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் 
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் – நித்தம் 
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் – சிவ 
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் – இவை 
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?


வசந்தங்கள் வந்து வாழ்த்தும் பொழுது கிளையில் பூவாகி
இலை உதிர் காலம் முழுதும் மகிழ்ந்து வேராகி.......
 பிறந்தது இனிய புத்தாண்டு



இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாய்.

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
பூத்த புத்தாண்டில் நலமும் வளமும் பெற இறையருள் நாடி பிரார்த்திப்போம்..

"
Happy New Year Sign, Exploding Stars Animated Happy New Year Text SignSmiley Fireworks Animation - Free clipart Smiley watching New Years fireworks Animated gif


பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
மலர் இல்லாத பூங்கொடியா
பதிவில்லாத புத்தாண்டா!!
animated gif space station free clipart
புத்தம் புதிதான பாதைகளில் முன்னடி வைத்து
இன்னும் இன்னும் என நகர்ந்து செல்லும் துணிவை
நெஞ்சுரத்தை தன்னம்பிக்கையை 
புத்தாண்டு வாழ்த்துகள் வழங்குகின்றன்.. 
புதுரத்தம் ஊற்றெடுக்கும் உற்சாக நாளை துவக்குக்கிறோம்..

பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுஅல கால வகையின்ஆனே.

இன்று நாம் புதிதாய் பிறந்தோம்,
இனியது பிறர்க்கே செய்ய!
நன்றிது என மனம் நினைக்கும்,

 பிறக்கும் இப்புத்தாண்டில்

புத்தொளி பரவி நிற்கபுது வசந்தம் வீசி வர

இன்னல்கள் பறந்தோடஇன்பத் தென்றல் எமை வருட

வல்லமைகள் கரம் சேர்ந்த வாழ்வெங்கும் மகிழ்ச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே.... வாழ்கையில் வளங்கள் பொங்க
வசந்த காற்று வீசி உற்சாக ஊற்றாய்  வளங்கள் பல பெற்று வாழ 
உவப்புடன் உளம் மகிழஉளமார வாழ்த்துகின்றேன்
இறைவனை வேண்டி.....இனிய இணைய நண்பர்களே....

வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்..

கோள்களின் கோலாட்டம் வாழ்வை கோலாகலமாக்கட்டும்..
ஹாய் எவ்ரி படி ...விஷ் யூ ஹேப்பீ நியூ இயர்
எங்கேயும், எப்போதும் பதிவுலகில் சந்தோஷம்.



New Year 2010 / 2011 Party Animals animation; Happy New Year clip art graphics Clipart Animaciones Gratis.

New Year 2010 / 2011 Party Animals animation; Happy New Year clip art graphics Clipart Animaciones Gratis.Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag, Free Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag Animated Clipart gif: Funny Clowns in Car with Happy New Year 2010 / 2011 Flag
Happy New Year Animated GreetingHappy New Year Animated Greeting
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் 
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் 
துணையிருந்த தெய்வம்

நெல்லுக்குள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
நம்பிக்கைதானே வாழ்க்கை!

விண்ணில் பறக்க ராக்கெட்டு ஆயத்தம்....
வாழ்க்கை உயரும் வேகம்..
வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி

பூமழைதூவி வசந்தங்கள் வாழ்த்த
மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த
இசைச்சோலை பூக்கும் நேரமே..
தமிழ் வந்து தாயமாடுமே..
நீர்வீழ்ச்சித் தாளிலே வண்ணங்கள் தீட்டி
ஒரு கோடி நாட்களை இனிதே வாழ்ந்திட ஒரு நாளில் வாழ்த்துகிறேன்!!




Amazing New Year Greeting

Friday, December 30, 2011

தெய்வக் கிளிகள்!


    
 



திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்


மார்கழியை ஆண்டாளைப் போல கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாள் தன் இடக்கையில் 
கிளி வைத்திருக்கிறாள்.

கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவள்ளிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி

நாகமல்லிகை இலை, நந்தியாவட்டை இலை, ஏழிலைக் கிழங்கு இலை, வெள்ளரளி, செவ்வரளி போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது ஆண்டாளின் கிளி. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்குச் சாத்துவதற்கு வெற்றிலையை ஓலையோடு மடக்கி தினமும் புதிதாக பச்சைக்கிளி செய்வார்கள்,
ஒவ்வொரு நாளும் ஆண்டாளின் கிளியைப் பெற கோயிலில் முன்னதாகச் சொல்லிவைத்து பக்தர்கள் அதை வாங்கிச் செல்கின்றனர். 

வெகுஅருமையாக இருக்கும், அதை எல்லோராலும் செய்துவிட முடியாது, அதற்கென தனிக்குடும்பங்கள் இருக்கின்றன, 

அக்கிளி பேரழகானது, அது தான் ஆண்டாளின் தோளில் இருக்கிறது, 

ஸ்ரீவில்லிபுத்தூரில் அக் கிளியை தத்தை என்று சொல்வார்கள்.

இக் கிளியை பூஜையறையில் வைத்துக் கொண்டால் நன்மைகள் பெருகுவதாக நம்பிக்கை. 

பக்தர்கள் தங்கள் வேண்டுதலை ஆண்டாளிடம் கூறும்போது அதைக் கேட்கும் கிளி, திரும்பத் திரும்ப அவரிடம் நினைவுறுத்துவதாக ஐதிகம். இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள்.
வியாசரின் மகனாகிய சுகப்பிரம்ம மகரிஷியே ஆண்டாளின் 
கையில் கிளியாக அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.


"சுகம்' என்றால் "கிளி'. அந்த முனிவர் கிளி முகம் கொண்டவர்.
தவ வலிமை மிக்கவர் 
ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
 ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி. 
தன் பாடலின் வழியே அவள் பனியைப் படரவிடுகிறாள், குளிர்ச்சி அவளது சொல்லின் வழி கசிந்தோடுகிறது,  ஆண்டாளின் பாடல்களுக்குள் உணர்ச்சிபூர்வமான நாடகம் ஒன்று ஒளிந்திருக்கிறது,

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்
சாட்சாத் பூமிப் பிராட்டியின் அவதாரம்....
ஆண்டாளும் துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். 
ஆண்டாளின் கிளி வேறு, மீனாட்சியின் கிளி வேறு, 
இரண்டும் மாறுபட்ட அழகுகள்...

ஆண்டாளின் கிளியும் அவள் அளவிற்குத் தமிழ் பேசும் என்பார்கள், அது சொல்லிக் கொடுத்துப் பேசும் கிளியில்லை, இயல்பாகப் பேசத்தெரிந்த கிளி,  அந்தக் கிளியை குயிலுக்குத் தோழியாக்குவதாக ஒரு பாடலில் ஆண்டாள் சொல்கிறாள், எதற்காக தெரியுமா, ஏதாவது ஒரு குயில் தனக்கு விருப்பமான கண்ணனை கூவி அழைத்து வரவழைத்துவிட்டால் அந்தக் குயிலை கிளிக்கு தோழியாக்கிவிடுவாளாம் !!??
ஆண்டாள் புள்ளினங்கள் மீது பேரன்பு கொண்டவள், அதன் ஒசைகளை அவள் வெகுவாக ரசிக்கிறாள்,  ஆனைச் சாத்தன் என்னும் வலியன் குருவியின் கீச்சு கீச்சு சப்தம், அவளுக்கு மிகவும் விருப்பமானது,
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ
!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

மதுரை மீனாட்சி அம்மனின் வலது கையிலும் கிளி இடம் பெற்றிருக்கிறது. துர்வாச மகரிஷி கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற இந்திரன் பூலோகம் வந்தபோது இத்தலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் கிளிகள் வட்டமிட்டபடி ஓம் நமசிவாய என்று சொல்லி பறந்து கொண்டிருந்தனவாம். 
இந்திரன் ஆச்சரியமுற்று கீழே நோக்க, அங்கே சுயம்பு லிங்கமாக சொக்கநாதர் எழுந்தருளியிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்று, அவரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.    
[babies_older_group-744875.jpg]
சொக்கநாதப் பெருமானை அடையாளம் காட்டிக் கொடுத்ததன் அடிப்படையில் மதுரையிலும் கிளி முக்கியத்துவம் பெறுகிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வடபத்ரசாயிக்கு, 
ஆண்டாள் சூடிய மாலை தினம் சாற்றப்படுகிறது. 


திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் கருட சேவையன்று, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படும் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாத்தப்படுகிறது.


ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜ பெருமாளுக்கு சித்திரை தேரோட்டத்தின் போதும் ஆண்டாள் மாலை, கிளி, வஸ்திரம் சாத்தபடுகின்றன.


ஆண்டு தோறும் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, வஸ்திரத்தை சூடி, மதுரையில் அழகர் வைகையற்றில் இறங்குவது வழக்கம். 

Red parrots Myspace Glitter Graphics Parrot Pics