Monday, March 31, 2014

யுகாதி சுபக்காஞ்சலு







யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது..!

"யுகாதி'என்றால் "புதிய பிறப்பு'.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப்பெறுகிறது..!

சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி கொண்டாடப்பட்டது.

பிற்காலத்தில் சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பு கணிக்கப்பட்ட போது, யுகாதி கொண்டாட்ட நாளில் மாற்றம் ஏற்பட்டது.

யுகாதித்திருநாளில் திருப்பதியில் விசேஷ பூஜைகள் நடக்கும்.
ஏழுமலையான் பவனி சிறப்பாக நடக்கும்.

யுகாதி நாளில் லட்சுமி குபேரருக்கு செல்வ அலங்கார சிறப்பு பூஜைகள்  நடைபெறும். 





நம்ம ஊர் மாவிளக்கு போல ஆந்திரத்தில் பிரபலமான இனிப்பான சலுவுடி என்னும் மாவுப்பண்டம் . தெலுங்கு வருடப்பிறப்பிற்கு வீட்டுக்கு வீடு அவசியம் செய்வார்கள் .

அதிரசம் யுகாதி அன்று செய்யடும் சிறப்பான இனிப்பு..!




“தெலுங்கு தேவதை”.ஒரு கையில் அமிர்த கலசம் மறுகையில் விவசாயிகளின் உயிர் “நெற்பயிர்” கொண்டு யுகாதி – யுகத்தின் தொடக்கம் (யுகம்  + ஆதி = யுகாதி) என்று பொருள். 


, ஒரு சில இடங்களில், சந்திர நாட்காட்டியின் வழியே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது... 

சூரிய நாட்காட்டியின் வழியே, தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டாகவும், அசாமில் பிஹுவாகவும், பஞ்சாபில் வைசாஹியாகவும், ஒரிஸாவில் பாண சங்கராந்தியாகவும், மேற்கு வங்கத்தில் நாப பார்ஷாவாகவும் 
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் யுகாதி,  மகாராஷ்டிராவில்  குடி பட்வா, 
சேடி சந்த் (Cheti Chand)   என்றும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 

இது பெரும்பாலும், ஏப்ரல் 14 அல்லது இரு தினங்கள் முன்னரோ அல்லது இரு தினங்கள் பின்னரோ கொண்டாடப்படுகிறது.

கோவில்களில், சர்க்கரை மற்றும் வெண் பொங்கலுடன் யுகாதி பச்சடியும் வழங்கப்படும்....
 ""யுகாதியின் போது, அறுசுவை கொண்ட யுகாதி பச்சடி பரிமாறப்படும். இந்த பச்சடியை ஆண்டுக்கு ஒரு முறை சாப்பிடுவது நல்லது. 

பச்சடியில், இனிப்புக்கு வெல்லம், புளிப்புக்கு புளி தண்ணீர், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், காரத்திற்கு மிளகு மற்றும் உப்பு சேர்த்து வழங்கப்படும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது

மக்கள் தத்தம் வீடு வாசல்களை தூய்மையாக்கி, வெள்ளையிட்டு, புத்துணர்வு பெற என்னை குளியல், உற்சாகத்துக்கு புது துணிமணிகள் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக புது வருடத்தை வரவேற்று பிரார்த்தனை செய்வர்.

யுகாதி பச்சடி எனப்படும், ஆறு சுவை கொண்ட  பாரம்பரியமிக்க உணவினை உண்ட பிறகே மற்ற இனிப்பு வகைகளைக் கூட அருந்துவர்.

அந்த நாள் முழுவதும், வண்ணங்களால் சூழ வாசலில் ரங்கோலி கோலமிட்டு, “பஞ்சாங்க சரவணம்” என்னும் “பஞ்சாங்கம்” படித்து அந்த வருடத்தின் தன்மையை தெரிவிப்பார்கள்..!

யுகாதித் தினத்தில் , நல்ல காரியங்கள் துவங்கினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்றும் நம்பப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 அனைவருக்கும், “யுகாதி சுபக்காஞ்சலு”
யுகாதித் திருநாள் வாழ்த்துகள்...

 யுகாதி ஆன்று ராமாயணக்கதை ஒன்றை உதாரணமாகச் சொல்வார்கள். 

ராமர் காட்டிற்கு புறப்பட்டார். மகனின் பிரிவைத் தாங்காத தாய் கவுசல்யா அவருடன் காட்டுக்கு வருவதாக அடம் பிடித்தாள்."

"அம்மா! கணவருக்குப் பணிவிடை செய்வதே மனைவிக்குரிய தர்மம். நீங்கள் அப்பாவைக் கவனித்துக் கொண்டு இங்கேயே இருங்கள்,'' என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி தாயை சமாதானப்படுத்தினார் ராமர்..!

இதையடுத்து சீதையும் அவருடன் வருவதாக கிளம்பிய போது, ""சீதா நீ அங்கே வராதே. கல்லிலும் முள்ளிலும் சிரமப்படுவாய். வேண்டாம்,'' என்றார். 

""ஸ்ரீராமா! என்ன நியாயம் இது? உங்கள் அம்மா உங்களுடன் கிளம்பிய போது, கணவனைக் காப்பது மனைவியின் கடமை என்று தர்மத்தைப் போதித்தீர்கள். அதே தர்மம் தானே எனக்கும் பொருந்தும்! அம்மாவுக்கு ஒரு விதி, மனைவிக்கு ஒரு விதியா! நானும் உங்களுக்கு சேவை செய்ய வேண்டுமல்லவா! நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி, நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு ...! அதனால் உங்களோடு வருகிறேன்,'' என்று சாதுர்யமாக பதிலளித்தாள்.

ராமரால் பேச முடியவில்லை. மனைவியை அழைத்துச் செல்ல சம்மதித்தார்...

எந்தக்காலத்தில் தான் தன் மனைவியை கணவனால் 
பேச்சில் வெல்லமுடிந்திருக்கிறது..!??

கணவனுக்காகமனைவி, மனைவிக்காக கணவன், குடும்பத்துக்காக பிள்ளைகள் என்ற ஒற்றுமை தத்துவத்தை இந்தக்கதை போதிக்கிறது. 

யுகாதியன்று இதுபோல ராமாயண சம்பவங்கள்  மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். குடும்ப ஒற்றுமை ஓங்க யுகாதி நன்னாளில் சபதமேற்கும் நன்னாளாகும்..!


தொடர்புடைய பதிவுகள்

யுகாதித் திருநாள்

வசந்தத்திருநாள் யுகாதி..








  



Sunday, March 30, 2014

கலங்காமல் காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி







 முத்தீ கொளுவி முழங்கொ வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே

- திருமூலர் திருமந்திரம்


சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கும் அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில். அட்ட வீரட்டத் தலங்களில் 6வது தலமாக விளங்குகிறது.நாகப்பட்டினம், வழுவூரில் அமைந்துள்ளது..

தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவம் கொண்டனர். 

அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர்.

முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை மறந்தனர். 

பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். 

முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். 

வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர். 

பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார்.  உலகம் இருள அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள். 

பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வந்தாராம்..!
Gajasamharar
அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹராம் செய்தவர் என்பதால் இறைவன் “கஜசம்ஹாரமூர்த்தி’ எனப்படுகிறார். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.
 மாசிமகம் – யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா – தினமும் இரண்டு வேளை வீதியுலா. 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி. 10ம் நாள் தீர்த்த வாரி இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். 

 மார்கழி – திருவாதிரை – 3 நாட்கள் திருவிழா புரட்டாசி – நவராத்திரி திருவிழா – 10 நாட்கள் திருவிழா கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும், 

இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது.

அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர். திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.

இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது. இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.


கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், 
சுவாமிக்கு சங்காபிசேகமும்,கலசாபிசேகமும் செய்யலாம் 

அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

 சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்வதும்  அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு 
அர்ச்சனைசெய்து வழிபடுவதும் விஷேசம்..!


: இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி   போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.
சிவபெருமான் உள்ளங்கால் தரிசனம் கொடுக்கும் திருத்தலம்
திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார்.
4
 அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். 

கையிலுள்ள முருகனோ தன் தந்தையை 
ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். 

சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் 
அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு.


இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கி ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே, இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.

சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்ததில் விக்கிரமராஜா தோற்றுப்போய் இத்தீர்த்தத்தில் வந்து விழுந்து. தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபட சுவாமி அவருக்கு 
அருள் பாலிக்கிறார். 

சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார். இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார். சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம். 

சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. 

முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். 
Shri Virateshwaranaswami, Valuvur by <a href='http://www.panoramio.com/photo/25701278' target='_blank'>R G Kulkarni</a>
கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும்.

கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும்.யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார். 
48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது.
Shri Virateshwaranaswami,Valuvur by <a href='http://www.panoramio.com/photo/25701339' target='_blank'>R G Kulkarni</a>
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகாவனம் என்று குறிப்பிடப்படுகிறது.

 அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளும் நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது. 
திருமண வரம் , குழந்தை வரம் ஆகியவை வேண்டிக் கொண்டால் 
நிச்சயம் நிறைவேறுகிறது. 

தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வீக யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும். 

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
Shri Virateshwaranaswami,Valuvur by <a href='http://www.panoramio.com/photo/25701294' target='_blank'>R G Kulkarni</a>
திறக்கும் நேரம்:  காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.

இத்தலத்தின் முகவரி:  அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், 
வழுவூர் – 609 401, நாகப்பட்டினம்

1


6


32



Saturday, March 29, 2014

சிம்லாவில் சிகரமாய் விஸ்வரூப ஸ்ரீஅனுமன்



 வாயு புத்திரா அஞ்சனை மைந்தா 
ராம பக்தா சூரியன் சிஷ்யா
சீதா ராம லக்ஷ்மணரோடு வருவாய்
அடியேன் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய்

சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் குருவே சரணம்
சரணம் சரணம் அறிவே சரணம் சரணம் சரணம் அருளே சரணம்

சிலு சிலு என்று குளிர் காற்று வீசி ஜில்லிட வைக்கும் குளிர் பூமியின் தலைமையகமாய் திகழும் சிம்லா இமாசலப் பிரதேசத்தின் தலைநகரமாகும்..!

கனவுதேசமான சிம்லா, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ள அற்புதமான மலை நகரம்.

சுமார் 5 கி.மீ. நீளமுள்ள  - மால் ஸ்ட்ரீட்- என்று அழைக்கப்படும் கடைவீதியில், சுட்டெரிக்கிற வெயிலையும் ஜில்லிட வைக்கிற குளிரையும் உள்வாங்குவதற்காக, ஆங்காங்கே பலரும் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

சிம்லாவின் உயரமான சிகரமாகத் திகழும் ஜாக்கூ மலையின்
பிரமாண்டத்தை இங்கிருந்தபடி பார்த்து ரசிக்கலாம். 
மலை முழுவதும் மரங்கள் அடர்ந்திருக்க, அந்தப் 
பிரமாண்டமான மலையின் உச்சியில், பூமிக்கும் வானுக்குமாக 
நின்றபடி விஸ்வரூபக் காட்சி தருகிறார் ஸ்ரீஅனுமன்!

108 அடி உயரம், செந்தூர நிறம் என அழகு மிளிரக் காட்சி தரும் ஸ்ரீஅனுமனை, சிம்லாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.

சிம்லாவில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். 
1817-ஆம் வருடம், கேப்டன் அலெக்சாண்டர் ஜெரால்டு என்பவரின் டைரியில், ஜாக்கூ மலை குறித்தும், ஸ்ரீஅனுமன் கோயில் குறித்தும் குறிப்புகள் உள்ளனவாம்.

சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வரும்போது, அதில் இருந்து 
சந்தன மரத்தின் கிளை ஒன்று முறிந்து இங்கு விழுந்ததாம்.

ஆகவே, இமாசலப் பிரதேசத்தில் எங்கு புதிய கோயில் கட்டினாலும், ஸ்ரீஅனுமன் கோயிலைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து கிளையை ஒடித்துக்கொண்டு வந்து, அங்கு நடுவது இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளதாகத் தெரிவிக்கின்றன, இங்கேயுள்ள கல்வெட்டுக்கள். 
ஸ்ரீஅனுமன் சஞ்சீவி மலையைத் தேடிச் சென்ற போது, இந்த மலையில் தவத்தில் இருந்த யாக்கூ மகரிஷி இடம் 'சஞ்சீவி மலை எங்கே இருக்கிறது?' என்று விசாரிப்பதற்காக, ஜாக்கூ மலையில் அனுமன் இறங்க... அனுமனின் உடல் பளுவைத் தாங்க முடியாமல், மலையின் ஒரு பகுதி அப்படியே அமுங்கிப் போனதாம்.

பிறகு, முனிவரிடம் சஞ்சீவி மலை இருக்கும் இடத்தைக் கேட்டறிந்த அனுமன், 'திரும்பி வரும்போது சந்திக்கிறேன்' என உறுதியளித்துச் சென்றார். 
ஆனால், திரும்பும் வழியில் அசுரன் ஒருவனுடன் போரிட நேர்ந்ததால் முனிவரைச் சந்திக்க இயலாமல் போனது.

பிறகு, தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, மீண்டும் 
இங்கு வந்து, தனக்காகக் காத்திருந்த யாக்கூ முனிவரைச் 
சந்தித்தாராம் அனுமன்.

அதன் பிறகு, அந்த மலையில், ஸ்ரீஅனுமனின் சுயம்புத் திருமேனி தோன்றியதாகவும், அந்தத் திருமேனிக்குச் சந்நிதி அமைத்து, சிறியதொரு ஆலயமும் எழுப்பி வழிபட்டார் யாக்கூ முனிவர் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

 கடந்த நவம்பர் 4-ஆம் தேதி, 108 அடி உயர ஸ்ரீஅனுமனின் விக்கிரகத்தை, இந்தப்பிரதேசத்தின் முதல்வர்  திறந்து வைத்து வழிபட்ட தினம், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. 
சிம்லாவின் ஸ்பெஷல் தலமான ஜாக்கூ மலையையும் 108 அடி உயர ஸ்ரீஅனுமன் விக்கிரகத்தையும்  தரிசித்து  உள்ளம் பூரிக்கலாம்
சேட்டைக் குரங்குகளை மிரட்டும் வேட்டை நாய்கள்! 
ஆலயத்துக்குச் செல்லும்போது, குச்சி ஒன்றை
5 ரூபாய் வாடகைக்குக் கொடுக்கின்றனர்.
காரணம்... வானரங்கள்! பார்ப்பதற்கு மிரட்சியை ஏற்படும் விதத்தில் கொழுக் மொழுக் என்றிருக்கும் இந்தக் குரங்குகள், நம் கையில் வைத்திருக்கும் தேங்காய், பழங்கள், செல்போன் ஆகியவற்றை மட்டுமின்றி, கண்களில் அணிந்திருக்கும் மூக்குக்கண்ணாடியையும் பறித்துக்கொண்டு ஓடுவதில் கில்லாடிகளாம்! 
ஆகவே, குரங்குகளை மிரட்டுவதற்காகவே 
குச்சியை வாடகைக்குத் தருகின்றனர். 

அதுமட்டுமின்றி, சேட்டைக்காரக் குரங்குகளை அடக்கி ஒடுக்குவதற்காக, கட்டுமஸ்தான வேட்டை நாய்களை வளர்த்து வருகிறது 
கோயில் நிர்வாகம்.


 Pictures of Hanuman Statue images, pictures of Shimla Images
 Pictures of Hanuman Statue images, pictures of Shimla Images