Saturday, July 23, 2011

பக்தருக்கருளும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்



அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ



அசாத்யமான செயல்களையும் சாத்தியமாக்கும் அருளைத்தருபவர் ஆஞ்சநேயர்.

கோவையில் இருந்து மருதமலை செல்லும் வழியில் நவாவூர் பிரிவில் இருக்கும் ஸ்ரீராம்நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்  கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கம்பீரமாக காட்சியளிக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள் பாலிக்கிறார்.
பக்த ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயராக அவதாரம் எடுத்தது ஏன்?

பஞ்ச பூதங்கள் கொண்ட இந்த உலகில் காக்கும் தொழிலை செய்பவர்
பகவான்  நாராயணன்.

அவரது கையில் உள்ள சுதர்சன சக்கரத்தை அபகரிக்க முயன்றான்
மயில் ராவணன்.
 
அவன் எண்ணிய படியே அபகரித்தும் சென்று விட்டான்.

அதை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.

நேர்மைக்கு பெயர் போன ஆஞ்சநேயருடன் எதிரில் நின்று
போர் புரிந்து யாராலும் வெற்றி காண முடியாது.
 
 சகல சக்திகளிலும் உருமாறும் நிலையில் உள்ள மயில் ராவணனாலும் ஆஞ்சநேயரை போரில் எதிர்கொள்ள முடியவில்லை. 

எனவே பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கிய 
தாக்குதலை அனுமனால் எதிர்கொள்ள முடிய வில்லை.

இதை அறிந்த  நாராயணன் ஆஞ்சநேயரை அழைத்து உபதேசித்தார். மயில்ராவணன் சகல சக்திகளாக உருமாறும் நிலையை கொண்டவன். அவனை உன்னால் மட்டும் எதிர் கொண்டு வெற்றியடைய முடியாது. ஆதலால் அவன் பறவையாக மாறினால் அதை எதிர் கொள்ள நீ கருடனாகவும், மிருகமாக மாறினால் மிருகமாகவும் அவதாரம் எடுக்க வேண்டும்.

மயில் ராவணன் பூமிக்கு அடியிலோ, கடலுக்கு அடியிலோ மறைந்து  தாக்கினால் அதனை துச்சமாக மதித்து தாக்க வராக மூர்த்தியாக அவதரிக்க வேண்டும். 

சமயோசிதமாக யோசித்து செயல்பட ஹயக்ரீவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து கொடுக்கிறேன்.
 
இந்த 4 சக்திகளோடு உன் பலத்தையும் கொண்டு மயில் ராவணனை நீ வெல்வாய் என்று சொல்லி கருடன், நரசிம்மர், வராகமூர்த்தி, ஹயக்கிரிவர் ஆகிய தனது 4 அவதார சக்திகளை வழங்கினார்.

மறுகனமே ஆஞ்சநேயர்  பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.

இந்த அவதாரத்தை கண்ட பார்வதி பத்மத்தையும், பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணையும், கருடன் தனது இறக்கைகளையும், ராமன் தனது வில் மற்றும் அம்பையும், சரஸ்வதி தனது ஸ்படிக மாலையையும், லட்சுமி தனது சக்திகளையும், மற்ற தெய்வங்கள் தங்கள் சக்திகளையும், ஆயுதமாக வழங்கினார்கள்.

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் இந்த சக்தியையும், ஆயுதங்களையும் கையில் ஏந்தி மயில் ராவணனை எதிர்கொண்டு வெற்றி பெற்று ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் பாதக் கமலங்களில் சமர்ப்பித்து தலை வணங்கினார்.என்பது பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஆன்மீக வரலாறு

மருதலை ரோடு நவாவூர் பிரிவு ஸ்ரீராம் நகரில் குடிகொண்டுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் சகல தெய்வங்களையும் வணங்கி அருள்பெற்ற பலன் கிடைக்கும்.

ஆஞ்சநேயரை வணங்கினால் தோஷம், தடை, சத்ரு இல்லாமல்
இருந்தால் மட்டும் காரியசித்தி அருளுவார்.

ஆனால் பஞ்சமுக ஆஞ்சநேயரோ தடை, சத்ரு, தோஷம் இருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து காரியசித்தி அருளுவார்.     

கோவில் பூஜை முறை - தினமும் காலை 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
 மதியம் 12 மணி வரை நடை திறந்திருக்கும். பின்னர் நடை சாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும் வரை பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கிறார்கள். சனிக்கிழமை ஆஞ்ச நேயருக்கு உகந்த நாள் என்பதால் அன்று கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.

அன்று பக்தர்கள் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி மனமுருக அனுமனை வேண்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் வெற்றிலை மாலை அணிவித்தும், வெண்ணை சாத்தியும் வழி படுகிறார்கள்.  வடை மாலை அலங்காரம் செய்து மகிழ்கிறார்கள்.

சந்தனம் மற்றும் செந்தூர அலங்காரத்திலும் ஆஞ்சநேயர் அருள் பாலிப்பது கண் கொள்ளா காட்சியாகும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

 பசியாற அன்ன தானம் வழங்கப்படுகிறது.. புரட்டாசி 3-வது சனிக்கிழமை பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மிகவும் சிறப்பான நாளாகும்.

அன்று 10 ஆயிரத்து 8 வடை மாலை அவருக்கு சாத்தப்படுகிறது. இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அழகுற ஜொலிப்பதை தரிசிக்க திரளான பக்தர்கள் வருவார்கள்.

தீபாவளியன்று காசியில் அன்னபூரணிக்கு லட்டுத்தேர் போல சென்னை அனுமனுக்கு வடைமாலை(1,00,008) தேர். 
வடைமாலை அலங்காரம் 

தேரின் ஒரு பக்க அழகும்  பின்னழகும்...


விழுப்புரத்திற்கு அருகில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலில் 
ஆடி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது

 பிரம்மச்சரியம் சற்றும் பிசகாத ஆஞ்சநேயர்-- ராம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவிற்கு உதவுவதற்காக, மகேஸ்வரனின் அம்சமாகப் பிறந்தவர் வாயு புத்திரனான அனுமன்.

கேசரி - அஞ்சனை தம்பதியருக்கு வாயுபகவான் வரம்தர, அவர்களது மகனாக சிவனின் அம்சமாகப் பிறந்தார்  ஆஞ்சநேயர்.

ராமராவண யுத்தத்தின்போது, ராவணனுக்கு உதவ வந்தவன்,  அவனது உற்ற நண்பனான மயில்ராவணன். மாயைகளில் வல்லவனான அவன், விபீஷணன் போல் வடிவமெடுத்து, ராம - லக்ஷ்மணரை தன் இருப்பிடமான பாதாள உலகிற்கு கடத்திக் கொண்டு போனான்.

ராம-லக்ஷ்மணரை மீட்டுக் கொண்டு வருவதற்காக பாதாள உலகிற்குப் போனார் அனுமன்.

மயில் ராவணனின் அரண்மனையைக் கண்டுபிடித்து, அதனுள் நுழைய முயன்றார். அப்போது அவரைத் தடுத்தான் ஓர் இளைஞன். தன்னை வென்றாலே அரண்மனைக்குள் நுழைய முடியும் என்று சொல்லி எதிர்த்தான். 

விளையாட்டாய் அவனை வென்றுவிடலாம் என்று நினைத்தார் அனுமன். ஆனால் அவனோ, கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டான்.

முடிவே இன்றி சண்டை நீண்டுகொண்டே போக, சற்றே நிறுத்திவிட்டு, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் இளைஞனே, நீர் யார் ? உன் பெற்றோர் யார் ? கேட்டார் அனுமன்.

அவன் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது.

வல்லமை மிக்க வானர வீரரான அனுமனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் பிறந்தவன் நான். மகரத்துவஜன் என் பெயர். கம்பீரமாகச் சொன்னான், இளைஞன்.

திடுக்கிட்டுப் போன அனுமன், தான் யார் என்பதை அவனுக்குச் சொன்னார். பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கும் தனக்கு அவன் எப்படிப் பிள்ளையாவான் ? என்று கோபத்தோடு கேட்டார்.

அப்போது, அங்கே வந்தாள் சுவர்ச்சலாதேவி. அனுமனைப் பணிந்தாள். பராக்ரமம் மிக்கவரே.... தாங்கள் பிரம்மச்சரியம் பிசகாமல் வாழ்பவர் என்பது உண்மைதான். அதேசமயத்தில், இவன் உங்கள் மகன் என்பதும் உண்மைதான். சீதாபிராட்டியைத் தேடி தாங்கள் இலங்கைக்குச் சென்றபோது, உங்கள் வாலில் தீ மூட்டப்பட்டதல்லவா? அத்தீயால் இலங்கையை எரித்துவிட்டு, கடலிலே உங்கள் வாலை நனைத்து தீயை அணைத்தீர்கள். 
அப்போது, உங்கள் வியர்வை, கடலில் விழுந்தது.

மகரமீன் வடிவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த நான், அந்த வியர்வையை விழுங்கினேன். அதன் விளைவாக என் கருவில் உருவாகிப் பிறந்தவன் இவன். நம் மகன் !

ஆச்சர்யத்தோடு ஆஞ்சநேயர் கேட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்த சுவர்ச்சலாதேவி, மயில்ராவணன் மாயையால் மயக்கி மகரத்துவஜனை அடிமைப்படுத்தி வைத்திருப்பதையும் சொன்னாள். 
பிரம்மச்சரிய விரதம் கெடாமலே தனக்கு ஒரு மகன் பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார் மாருதி.

பின் மயில்ராவணனின் மாளிகைக்குள் நுழைந்து மாயைகளை அழித்து அவன் மரணத்துக்கும் வழிவகுத்தார்.

ராமரின் ஆசியோடு தன் மகனை பாதாள உலகிற்கு மன்னனாக்கினார். 

பிள்ளையாரும் முருகனும் எப்படி சிவசக்தியின் நேரடி ஐக்கியமில்லாமல் பிறந்தார்களோ, அப்படியே சிவனின் அம்சமான அனுமனுக்கும், அம்பிகையின் அம்சமான சுவர்ச்சலாதேவிக்கும் பிறந்தவன், மகரத்வஜன்.

வாழ்த்தலாம் வாங்க....


http://moonramkonam.com/2011/07/moonramkonam-poem-and-journey-essay-contest-results/#comment-782

மூன்றாம்கோணம் – கவிதை, கட்டுரைப் போட்டி முடிவுகள்

--1. முதல் பரிசு -ரூபாய் ஆயிரம் பெறும் பயணக் கட்டுரை
ராஜராஜேஸ்வரி அவர்களின் இன்னொரு கட்டுரை, “வியத்தகு விமான நிலையங்களும்” மிகச்சிறப்பான முறையில் எழுதப்பட்டிருந்தது..படங்களும் அருமை..பாராட்டுக்கள்
பரிசுகள் அனுப்பப்படும் விவரங்கள் வெற்றி பெற்றவர்களுக்கு மெயிலில் அனுப்பப்படும் !
இந்த போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகள் பல! அவர்கள் கலந்து கொண்டமையைப் பாராட்டி கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு இ-புக் அனுப்பபடும்!
வாழ்க நற்றமிழ் ! வளர்க அதன் புகழ் !
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சாகம்பரி அவர்களுக்கு 
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பாராட்டுக்கள்.

60 comments:

  1. மயில் ராவணன் பற்றிய செய்திகள்
    அருமை..

    அந்த வடை மாலை ...
    பார்க்க பார்க்க. பரவசம்..

    சாப்பிடவேணும் னும் தோணுது..

    எங்க ஆத்துக்காரி கிட்டே கேட்டா
    என்ன சொல்லுவாளே ?

    ஹ ஹ ஹா
    ஹி ஹி ஹீ



    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  2. My Heartiest Congratulations for winning the First Prize. vgk

    ReplyDelete
  3. வாழ்த்த வயதில
    இருந்தாலும் வாழ்த்துக்கள்
    ட்ரீட் குடுக்க வேண்டும்
    அனைவருக்கும்.

    ReplyDelete
  4. @ கவி அழகன் said...
    அருமை அருமை//

    நன்றி... நன்றி..

    ReplyDelete
  5. @சிவ.சி.மா. ஜானகிராமன் said.//

    கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  6. @வை.கோபாலகிருஷ்ணன் sai//

    வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. @siva said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  8. பரிசு பெற்றதற்கு எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. பல நல்ல பதிவுகளுக்கு அங்கீகாரமாக பரிசு .....வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. wow, great to see the active involvement, prizes for the best writings, etc, etc, from your bloggers circle....

    Panjamuga Anjaneyar story and Vadaimaalai pictures are really great.....

    Congrats madam....I enjoy reading your postings, though I don't write comments frequently.....
    you have to reserve the treat for me, when I meet you in coimbatore, for winning this prize !!!

    cheers,
    sanju.

    ReplyDelete
  11. இன்று காலை எழுந்தவுடன் கணினியில் முதலாக அனுமனைத் தரிசிக்கும் பாக்கியம்
    தங்களால் கிடைத்தது. நன்றி. பெரிதும் மகிழ்ச்சி .பஞ்ச முக ஆஞ்சனேயர் பஞ்சேந்திரியங்களையும்
    தன் வயப்படுத்தி, ராமனை தியானிப்பதிலேயே தன் வாழ் நாளைச் செலவிட ஊக்குவிக்கும்
    நிதர்சன தெய்வம். அஸாத்ய ஸாதகன். எதெயெல்லாம் இயலாதென நினைக்கிறோமோ
    அவை யாவற்றையும் இயலுமென நிரூபித்துக் காண்பிப்பவர் அந்த வாயுபுத்ரன் அனுமன்.
    அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனுமத் த்யானத்தையும் அனுமத் பஞ்சரத்னத்தையும்
    இங்கு பாடியிருக்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  12. பக்தி பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி
    பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அட என்னோட ஃபேவரை ஆஞ்சி பற்றி சுவையான தகவல்கள்.

    போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. தகவல் + பகிர்வு = நன்றி.

    ReplyDelete
  15. படங்கள் சூப்பரா இருக்கு ..

    ReplyDelete
  16. அருமையான பதிவு.
    ஆஞ்சநேயர் பற்றி புதிய சுவையான செய்திகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ஆஞ்சநேயர் பற்றி இதுவரை கேள்விப்படாத ஒரு சில புதுத் தகவல்கள் அறிந்து கொண்டேன். நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

    ReplyDelete
  18. ஆகா ஆஞ்சநேய சாமி இந்த வடமலையை என்னிடமே
    கொடுத்துவிடுங்கள். நான் நல்லபிள்ளை எல்லோருக்கும்
    பகிர்ந்தளிப்பேன் எங்கள் இராஜேஸ்வரி அம்மாவின் ஆக்கங்கள்போல்
    எக்குறையும் இன்றி இதை நீங்களே அறிவீர்கள்.முதல்ல மாலையோடு
    வந்துதித்த தங்களைப்பற்றி அழகான கருத்துப் பகிர்வைத் தந்த
    தாய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!....
    நன்றி நன்றி மிக்க நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சகோ. ஆஞ்சநேயர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  20. //கருடன், நரசிம்மர், வராகமூர்த்தி, ஹயக்கிரிவர் ஆகிய தனது 4 அவதார சக்திகளை வழங்கினார்//
    //ஹயக்ரீவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து கொடுக்கிறேன்.// //4 சக்திகளோடு உன் பலம் //.
    //பார்வதி பத்மத்தையும், பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணையும், கருடன் தனது இறக்கைகளையும், ராமன் தனது வில் மற்றும் அம்பையும், சரஸ்வதி தனது ஸ்படிக மாலையையும், லட்சுமி தனது சக்திகளையும், மற்ற தெய்வங்கள் தங்கள் சக்திகளையும், ஆயுதமாக வழங்கினார்கள்.//
    இவ்வளவு சக்திகளையும் பெற்றுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் வணங்குவது நாம் வாழ்வதற்கு சக்தி கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை... அழகு தரிசனம்... நன்றி

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்...நல்ல பின்னூட்டத்துக்கு ஏதாவது பரிசு கொடுப்பீங்களா?

    ReplyDelete
  23. புதிய தகவலுடன் இன்றைய பதிவையும் ரசித்தேன்...

    நன்றி...

    ReplyDelete
  24. ஆஞ்சநேயர் பதிவு அருமை.மூன்றாம் கோணம் பரிசுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. @ ஸ்ரீராம். said...
    பரிசு பெற்றதற்கு எங்கள் வாழ்த்துகள்.

    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  26. @ koodal bala said...
    பல நல்ல பதிவுகளுக்கு அங்கீகாரமாக பரிசு .....வாழ்த்துக்கள் !//

    வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  27. @ sury said...//

    அனுமத் த்யானத்தையும் அனுமத் பஞ்சரத்னத்தையும்
    இங்கு பாடியிருக்கிறேன்.//

    இனிமையான குரலில் அருமையாகப் பாடி பெருமை சேர்த்தமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  28. ஆஞ்சனேயருக்கு வடைமாலை ஏன் சாத்துகிறோம்? இதன் பின்னணி தெரிந்தால் சொல்லுங்களேன்.

    எல்லாக் கடவுளையும் ஒண்ணாக்கி ஒரு ஆஞ்சனேயக் கடவுள் - தெரியாத விவரம். சித்திரங்கள் பிரமாதம்.

    ReplyDelete
  29. @ வெங்கட் நாகராஜ் said...
    அட என்னோட ஃபேவரை ஆஞ்சி பற்றி சுவையான தகவல்கள்.

    போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.//
    கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  30. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    தகவல் + பகிர்வு = நன்றி.//

    நன்றி..

    ReplyDelete
  31. பரிசுக் கட்டுரை முன்பே படித்திருக்கிறேன். truly deserving. வாழ்த்துக்கள்.

    (மூன்றாம்னதும் சட்னு பயந்துட்டேன்..:)

    ReplyDelete
  32. @ கந்தசாமி. said...
    படங்கள் சூப்பரா இருக்கு ..//

    நன்றி..

    ReplyDelete
  33. @ மாய உலகம் said...//
    இவ்வளவு சக்திகளையும் பெற்றுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் வணங்குவது நாம் வாழ்வதற்கு சக்தி கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை... அழகு தரிசனம்... நன்றி//

    அருமையான கருத்துரைகளுக்கு நன்றி...

    ReplyDelete
  34. @Rathnavel said...
    அருமையான பதிவு.
    ஆஞ்சநேயர் பற்றி புதிய சுவையான செய்திகள்.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  35. @வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஞ்சநேயர் பற்றி இதுவரை கேள்விப்படாத ஒரு சில புதுத் தகவல்கள் அறிந்து கொண்டேன். நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!//

    வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!..

    ReplyDelete
  36. @ அம்பாளடியாள் said...//

    வடைமாலையைப்பகிந்தளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நல்ல பிள்ளைக்கு நன்றி.
    கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  37. @ SANKARALINGAM said...
    வாழ்த்துக்கள் சகோ. ஆஞ்சநேயர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  38. @ மாதேவி said...
    வாழ்த்துக்கள்//
    நன்றி.

    ReplyDelete
  39. @ Reverie said...
    வாழ்த்துக்கள்...நல்ல பின்னூட்டத்துக்கு ஏதாவது பரிசு கொடுப்பீங்களா?//

    பதிவுகளே பரிசுகள் மாதிரிதானே...

    ReplyDelete
  40. @ # கவிதை வீதி # சௌந்தர் said...
    புதிய தகவலுடன் இன்றைய பதிவையும் ரசித்தேன்...

    நன்றி..//

    ரசிப்புக்கு நன்றி..

    ReplyDelete
  41. @ shanmugavel said...
    ஆஞ்சநேயர் பதிவு அருமை.மூன்றாம் கோணம் பரிசுக்கு வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  42. @அப்பாதுரை said...
    ஆஞ்சனேயருக்கு வடைமாலை ஏன் சாத்துகிறோம்? இதன் பின்னணி தெரிந்தால் சொல்லுங்களேன்.

    எல்லாக் கடவுளையும் ஒண்ணாக்கி ஒரு ஆஞ்சனேயக் கடவுள் - தெரியாத விவரம். சித்திரங்கள் பிரமாதம்.//

    விரைவில் ஒரு பதிவிட்டு பதிலளிக்கிறேன். கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  43. @ அப்பாதுரை said...
    பரிசுக் கட்டுரை முன்பே படித்திருக்கிறேன். truly deserving. வாழ்த்துக்கள்.

    (மூன்றாம்னதும் சட்னு பயந்துட்டேன்..:)//

    அருமையான வாழ்த்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  44. அருமையான பதிவு...
    பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. அடடா..இன்றைய பதிவும் சரி..அரிய படங்களும் சரி..ரொம்ப நல்லாருக்கு..உங்க பதிவுகளை pdf -ல கன்வெர்ட் பண்ணுங்க.. நான் சேமித்து வைக்கிறேன்..
    மற்றவங்களும் செய்வார்கள்.

    ReplyDelete
  46. Seenivasan KalaiyarasiJuly 23, 2011 at 9:48 PM

    Pancha Muga Anjaneyarin Avathara Magimaiyai Vilakkum Arumaiyana Aanmiga Manam Kamazhum Pathivu.. Moondram Konam Katturai Pottiyil Vetri Vaagai Soodiyamaikku Manam Niraindha Vaazhthukkal..Thodarattum Thangalathu Pathivugalum, Parisugalum..

    ReplyDelete
  47. மயில்ராவணன்,கல்யாண ஆஞ்சநேயர் இரண்டும் நான் அறிந்திராத விஷயங்கள். இப்பொழுது அறிந்துகொண்டேன்.பகிர்வுக்கு நன்றி, மேடம்.படங்கள் அருமை..

    ReplyDelete
  48. @மதுரன் said...
    அருமையான பதிவு...
    பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  49. @ குணசேகரன்... said...
    அடடா..இன்றைய பதிவும் சரி..அரிய படங்களும் சரி..ரொம்ப நல்லாருக்கு..உங்க பதிவுகளை pdf -ல கன்வெர்ட் பண்ணுங்க.. நான் சேமித்து வைக்கிறேன்..
    மற்றவங்களும் செய்வார்கள்.//

    பயனுள்ள கருத்துக்கு நன்றி.
    சேமித்துவைக்கிறோம்.

    ReplyDelete
  50. @ Seenivasan Kalaiyarasi said...//

    வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  51. @RAMVI said...
    மயில்ராவணன்,கல்யாண ஆஞ்சநேயர் இரண்டும் நான் அறிந்திராத விஷயங்கள். இப்பொழுது அறிந்துகொண்டேன்.பகிர்வுக்கு நன்றி, மேடம்.படங்கள் அருமை..//

    கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  52. ஆஞ்சநேயர் பற்றிய புதிய தகவல்களுக்கு நன்றிகள்!!

    ReplyDelete
  53. நல்ல பதிவு..படித்து முடித்தவுடன் கோவிலுக்கு சென்று விட்டு வந்த உணர்வு...நன்றி

    அன்புடன் அனந்து ...

    ReplyDelete
  54. நல்ல பதிவு..படித்து முடித்தவுடன் கோவிலுக்கு சென்று விட்டு வந்த உணர்வு...நன்றி

    அன்புடன் அனந்து ...

    ReplyDelete
  55. அழகான படங்களுடன் பதிவு அருமை. பரிசு பெற்றதற்கும் வாழ்த்துகள்!

    ஸ்ரீராமஜெயம்.

    ReplyDelete