Friday, July 29, 2011

வைபவங்களை வழங்கும் வைபவலட்சுமி




புதிதாகத் திருமணமான மணமக்களை, "பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என வாழ்த்துகிறோம். 

அந்தப் பதினாறு பேறுகளோடு அஷ்டலட்சுமிகள் தரும் எட்டு ஐஸ்வரியங்களையும் சேர்த்து, தன்னை வணங்குபவர்களுக்கு அருள்பவள்தான் வைபவலட்சுமி.

வைகுண்டத்தில் செந்தாமரை மலர்மீது அமர்ந்திருந்த மகாலட்சுமியை கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் தங்கள் தீர்த்தத்தால் நீராட்டின. 

எட்டுத் திக்குகளிலுள்ள அஷ்ட கஜங்கள் (யானைகள்) தங்கள் துதிக்கையால் நீரை முகர்ந்து லட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. 

பாற்கடல் ஆண் உருவம் எடுத்து லட்சுமி தேவிக்கு தாமரை மாலைகளையும் திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது. 

கந்தவர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.லட்சுமிதேவிக்கு நடக்கும் இந்த வைபவத்தைப் பார்த்து மகாவிஷ்ணு மகிழ்ந்து கொண்டிருந்தார். 

சூரியனின் மகனான ரேவந்தன் பாற்கடலில் தோன்றிய உச்சிஸ்ரவஸ் என்ற குதிரைமீது அமர்ந்து வைகுண்டம் வந்தான். 

அந்த அழகான குதிரையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. 

பெண் குதிரையாகப் பிறக்கும்படி லட்சுமியைச் சபித்தார்.அதன்படி காளந்தி, தமசா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பெண் குதிரையாகத் தோன்றி வாழ்ந்து வந்தாள் 

மகாலட்சுமி.தேவி இல்லாத வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு மகிழ்ச்சியில்லை. அதனால் அவளை அழைத்துப் போக ஆண் குதிரை வடிவமெடுத்து வந்தார் விஷ்ணு, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
.
அக்குழந்தையை பிள்ளை வரம் வேண்டித் தவமிருக்கும் யயாதியின் மகன் துர்வசுவுக்கு தானமாகக் கொடுக்க விரும்பினார் மகாவிஷ்ணு. 

இதற்கு மகாலட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை. 
அப்போது விஷ்ணு, ""தேவி! நீ இந்த ஆண் குழந்தையை துர்வசுவுக்குக் கொடுத்தால் உனக்கு எல்லா வைபவங்களையும் வழங்கும் ஆற்றல் கிடைக்கும். 

அதைக் கொண்டு பூலோகத்தில் வாழும் மக்களுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் வழங்கலாம். 

அதனால் உன்னை வைபவலட்சுமி என்று போற்றித் துதிப்பார்கள். 

நான் உன்னைத் தேடி வந்ததுபோல் உன்னை வணங்கும் பெண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும்; இணைபிரியாமல் கணவனோடு சேர்ந்து வாழும் மகிழ்வையும் நீ கொடுக்கலாம். 

வைபவலட்சுமியாகிய உன் பெருமை உலகெங்கும் தெரியும்'' என்றார்.

 ""நான் உன்னோடு கூடியிருந்து பக்தர்கள் வேண்டும் எல்லா வரங்களையும் கொடுப்பேன்'' என்றும் உறுதி கூறி, லட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார். 

அப்போது, ""நான் அருளிய இந்த சுலோகத்தை தினமும் திருவிளக்குமுன் அமர்ந்து ஒன்பது முறை சொல்லும் பக்தைகளின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதோடு, மாங்கல்ய பலம் பெற்று புத்திரப் பேறுகளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்'' என்ற் லட்சுமிதேவி அருளிய அந்த சுலோகம்:"
மங்களே மங்களதாரே

மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

இத்துடன் ஸ்ரீசூக்தம் மற்றும் விருப்பப்பட்ட லட்சுமி சம்பந்தப்பட்ட சுலோகங்களையும் சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.

41 comments:

  1. லஷ்மி வராமல் ஆடி வெள்ளியா? வரவேண்டும் வரவேண்டும் லஷ்மி !

    ReplyDelete
  2. நல்ல பதிவு...வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  3. வைபவலட்சுமி வரலாறு இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். வைபலட்சுமிக்கு கோவில் உண்டா? அஷ்டலட்சுமியில் ஒருவரா?

    ReplyDelete
  4. @ சந்திர வம்சம் said...
    லஷ்மி வராமல் ஆடி வெள்ளியா? வரவேண்டும் வரவேண்டும் லஷ்மி !//

    ச்ந்திர வம்சத்தின் அருமையான வரவேற்புக்கு ந்ன்றி.

    ReplyDelete
  5. @ Reverie said...
    நல்ல பதிவு...வாழ்த்துக்கள் ..//

    வாழ்த்துகளுக்கு நன்றி..

    ReplyDelete
  6. தினமும் காலை உங்க ஆன்மீக பதிவுகளை படிப்பது நல்ல மன அமைதியை தருகிறது.ஆடிவெள்ளியான
    இன்று வைபவலஷ்மியை பற்றி அறிந்துகொண்டேன்.நன்றி

    ReplyDelete
  7. @அப்பாதுரை said...
    வைபவலட்சுமி வரலாறு இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். வைபலட்சுமிக்கு கோவில் உண்டா? அஷ்டலட்சுமியில் ஒருவரா?//

    சிந்திக்கவைத்த கேள்விப் பிரசாதத்திற்கு நன்றி. கண்டடைந்தவுடன் பதிவாகப் பகிர்ந்துவிட முயற்சிக்கிறேன்.
    வடைமாலை , ஐயனார் -ஐயப்பன்- போன்ற கேள்விகள் என்ன்னை பக்குவப்ப்டுத்தின.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. @ RAMVI said...
    தினமும் காலை உங்க ஆன்மீக பதிவுகளை படிப்பது நல்ல மன அமைதியை தருகிறது.ஆடிவெள்ளியான
    இன்று வைபவலஷ்மியை பற்றி அறிந்துகொண்டேன்.நன்றி//

    கருத்துரைக்கு மிக நன்றி.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. படங்கள் தானாக பக்தியை வரவழைக்கின்றன ......

    ReplyDelete
  11. @குணசேகரன்... said...//
    நன்றி.

    @ koodal bala said...
    படங்கள் தானாக பக்தியை வரவழைக்கின்றன ......//

    கருத்துரைக்கு நன்றி.

    @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    Thanks for sharing..//
    நன்றி.

    ReplyDelete
  12. 22வை.கோபாலகிருஷ்ணன் said//

    வைபவலக்ஷ்மியின் அருளால் அனைத்துப் பெண்மணிகளின்
    இல்லத்திலும் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்யட்டும்! மாங்கல்ய பலமும் புத்திரப் பேறுகளும் பெற்று ஆரோக்கியமாக வாழட்டும்!//

    அழகான அருமையான வாழ்த்துக்களுக்கு நன்றி. நன்றி..

    ReplyDelete
  13. பாற்கடலில் 24 தலைப்பாம்பின் உடல் மேல் (வழுக்கிவிடாதோ?) அமர்ந்திருக்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியும், பார்க்கவே பரவசம் அளிப்பதாகவும், பிரமிப்பாகவும் உள்ளது.

    கடைசியில் காட்டியுள்ள கோலமும் நல்ல அழகு.

    ReplyDelete
  14. ஆடி வெள்ளியில்..
    அற்ப்புத பதிவு....

    பரவசத்துடன்..

    ReplyDelete
  15. வைபவ லட்சுமி பற்றி அறியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்.தினமும் படிக்கும் ஆவலை தூண்டும் உங்கள் ஆன்மீக பதிவுகளுக்கு நன்றி!

    ReplyDelete
  16. உங்கள் பக்தி பதிவுகள் ....ஆச்சர்யம்

    ReplyDelete
  17. .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. கடைசி போட்டோவில் உள்ள ரங்கோலி கொள்ளை அழகு.

    ReplyDelete
  19. வெள்ளிகிழமை விடிவது உங்கள் பதிவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  20. இப்பொழுதுதான் வைபவலட்சுமி பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன். உங்க பதிவு படிக்க நேர்ந்தது. மிக்க நன்றி

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    விளக்கேற்றி வைக்கிறேன்.....
    விடிய விடிய எரியட்டும்.......

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    மங்களே மங்களதாரே
    மாங்கல்ய மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேஹி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

    வைபவலக்ஷ்மியின் அருளால் அனைத்துப் பெண்மணிகளின்
    இல்லத்திலும் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்யட்டும்! மாங்கல்ய பலமும் புத்திரப் பேறுகளும் பெற்று ஆரோக்கியமாக வாழட்டும்!

    அழகான இந்தப்பதிவுக்கு
    நன்றி, நன்றி, நன்றி!

    July 29, 2011 10:10 AM//

    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  22. மனதில் நினைத்தது நிறைவேற வேண்டிக் கொண்டு 11 வெள்ளிக்கிழமை வைபவ லட்சுமி பூஜை செய்து சுமங்கலிகளுக்கு (11,21...) போன்ற எண்ணிக்கையில் மாங்கல்யசரடு,வெற்றிலை பாக்கு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்கல பொருட்களை வழங்கிவர, 11 வது வெள்ளிக்கிழமை பூஜை நிவர்த்தியாகிவிடும். பூஜைக்கு வைபவ லட்சுமி படம் கிடைக்கவில்லையெனில் தங்கனகை வைத்தும் செய்வார்கள். கடும் நியமனங்கள் இல்லாத பூஜை. குபேரனுக்கு சங்க நிதி பதும நிதியை பெற்றுத்தந்தது இந்த பூஜையாகும். இந்த பூஜையை நினைவுபடுத்தியதற்கு நன்றி ராஜேஸ்வரி.

    ReplyDelete
  23. ஆன்மீக‌ நாட்ட‌முள்ளோருக்கு இத‌ம் த‌ரும் ப‌திவு. வைப‌வ‌ ல‌க்ஷ்மி விர‌த‌ம் ப‌ற்றி நினைவுப‌டுத்த‌ வ‌ந்தேன். சாக‌ம்ப‌ரி வேலையை மிச்ச‌ம் செய்து விட்டார்.

    ReplyDelete
  24. ஆடிவெள்ளிக்கு
    மங்களமான பதிவு
    பக்தியுடன்
    நன்றி சகோதரி.

    ReplyDelete
  25. புதிய விவரங்கள்.நன்றி.முதல் இரண்டு படங்களும் கண்ணைக் கவர்கின்றன.

    ReplyDelete
  26. நல்லதொரு ஆன்மிக பதிவுபாரட்டுக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  27. //வடைமாலை , ஐயனார் -ஐயப்பன்- போன்ற கேள்விகள் என்ன்னை பக்குவப்ப்டுத்தின.//

    ஆ!
    உண்மையிலேயே எனக்குத் தெரியாமத் தான் கேட்டேங்க.

    ReplyDelete
  28. இந்தப் புராணக் கதை எல்லாம் எனக்குப் புதிது மேடம். எப்படி இவ்வளவு பதிவு உங்களால் முடிகிறது என்று யோசிக்கிறேன். எல்லாம் இறையருள் என்றி வேறென்ன ?

    ReplyDelete
  29. இந்தப் புராணக் கதை எல்லாம் எனக்குப் புதிது மேடம். எப்படி இவ்வளவு பதிவு உங்களால் முடிகிறது என்று யோசிக்கிறேன். எல்லாம் இறையருள் என்றி வேறென்ன ?

    ReplyDelete
  30. மீண்டும் ஒரு வெள்ளி.மீண்டும் ஒரு லட்சுமி.இப்போதெல்லாம் எங்கள் வெள்ளிகள் உங்களால் லட்சுமி கரமாக்கப் படுகின்றன!

    ReplyDelete
  31. லட்சுமிகரமான ஆன்மீக பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. வைபவ லட்சுமியின் அருள் கிடைத்தது நன்றி மேடம்

    ReplyDelete
  33. அச்யுதாநந்த கோவிந்த

    நாமோச்சாரண பேஷஜாத்!

    நஸ்யந்தி ஸகலா ரோகாஸ்

    ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!-7


    ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்ய

    முத்ருத்ய புஜமுச்யதே!

    வேதாசாஸ்த்ரம் பரம் நாஸ்தி

    நதைவம் கேசவாத்பரம்!!-8


    ஸரீரே ஜர்ஜரீபூதே

    வ்யாதிக்ரஸ்தே களேபரே!

    ஒளஷதம் ஜாஹ்நவீதோயம்

    வைத்யோ நாராயணோ ஹரி:!!-9


    ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி

    விசார்ய ச புந: புந:!

    இதமேகம் ஸுநிஷ்பந்நம்

    த்யேயோ நாராயணோ ஹரி:!!-10

    -oOo-

    ReplyDelete
  34. உங்கள் ஆன்மிக பதிவுகள் . மனதுக்கு இனிமையாகவும் அருளுடனும் இருக்கின்றது . நன்றி

    ReplyDelete
  35. 818+4*+1=823 ;)))))

    * 2 out of 4 are not appearing but they are in your LOTUS reply as mail message. Thanks a Lot ;)))))

    ReplyDelete