Monday, March 31, 2014

யுகாதி சுபக்காஞ்சலு







யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது..!

"யுகாதி'என்றால் "புதிய பிறப்பு'.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப்பெறுகிறது..!

சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி கொண்டாடப்பட்டது.

பிற்காலத்தில் சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பு கணிக்கப்பட்ட போது, யுகாதி கொண்டாட்ட நாளில் மாற்றம் ஏற்பட்டது.

யுகாதித்திருநாளில் திருப்பதியில் விசேஷ பூஜைகள் நடக்கும்.
ஏழுமலையான் பவனி சிறப்பாக நடக்கும்.

யுகாதி நாளில் லட்சுமி குபேரருக்கு செல்வ அலங்கார சிறப்பு பூஜைகள்  நடைபெறும். 





நம்ம ஊர் மாவிளக்கு போல ஆந்திரத்தில் பிரபலமான இனிப்பான சலுவுடி என்னும் மாவுப்பண்டம் . தெலுங்கு வருடப்பிறப்பிற்கு வீட்டுக்கு வீடு அவசியம் செய்வார்கள் .

அதிரசம் யுகாதி அன்று செய்யடும் சிறப்பான இனிப்பு..!




“தெலுங்கு தேவதை”.ஒரு கையில் அமிர்த கலசம் மறுகையில் விவசாயிகளின் உயிர் “நெற்பயிர்” கொண்டு யுகாதி – யுகத்தின் தொடக்கம் (யுகம்  + ஆதி = யுகாதி) என்று பொருள். 


, ஒரு சில இடங்களில், சந்திர நாட்காட்டியின் வழியே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது... 

சூரிய நாட்காட்டியின் வழியே, தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டாகவும், அசாமில் பிஹுவாகவும், பஞ்சாபில் வைசாஹியாகவும், ஒரிஸாவில் பாண சங்கராந்தியாகவும், மேற்கு வங்கத்தில் நாப பார்ஷாவாகவும் 
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் யுகாதி,  மகாராஷ்டிராவில்  குடி பட்வா, 
சேடி சந்த் (Cheti Chand)   என்றும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 

இது பெரும்பாலும், ஏப்ரல் 14 அல்லது இரு தினங்கள் முன்னரோ அல்லது இரு தினங்கள் பின்னரோ கொண்டாடப்படுகிறது.

கோவில்களில், சர்க்கரை மற்றும் வெண் பொங்கலுடன் யுகாதி பச்சடியும் வழங்கப்படும்....
 ""யுகாதியின் போது, அறுசுவை கொண்ட யுகாதி பச்சடி பரிமாறப்படும். இந்த பச்சடியை ஆண்டுக்கு ஒரு முறை சாப்பிடுவது நல்லது. 

பச்சடியில், இனிப்புக்கு வெல்லம், புளிப்புக்கு புளி தண்ணீர், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், காரத்திற்கு மிளகு மற்றும் உப்பு சேர்த்து வழங்கப்படும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது

மக்கள் தத்தம் வீடு வாசல்களை தூய்மையாக்கி, வெள்ளையிட்டு, புத்துணர்வு பெற என்னை குளியல், உற்சாகத்துக்கு புது துணிமணிகள் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக புது வருடத்தை வரவேற்று பிரார்த்தனை செய்வர்.

யுகாதி பச்சடி எனப்படும், ஆறு சுவை கொண்ட  பாரம்பரியமிக்க உணவினை உண்ட பிறகே மற்ற இனிப்பு வகைகளைக் கூட அருந்துவர்.

அந்த நாள் முழுவதும், வண்ணங்களால் சூழ வாசலில் ரங்கோலி கோலமிட்டு, “பஞ்சாங்க சரவணம்” என்னும் “பஞ்சாங்கம்” படித்து அந்த வருடத்தின் தன்மையை தெரிவிப்பார்கள்..!

யுகாதித் தினத்தில் , நல்ல காரியங்கள் துவங்கினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்றும் நம்பப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 அனைவருக்கும், “யுகாதி சுபக்காஞ்சலு”
யுகாதித் திருநாள் வாழ்த்துகள்...

 யுகாதி ஆன்று ராமாயணக்கதை ஒன்றை உதாரணமாகச் சொல்வார்கள். 

ராமர் காட்டிற்கு புறப்பட்டார். மகனின் பிரிவைத் தாங்காத தாய் கவுசல்யா அவருடன் காட்டுக்கு வருவதாக அடம் பிடித்தாள்."

"அம்மா! கணவருக்குப் பணிவிடை செய்வதே மனைவிக்குரிய தர்மம். நீங்கள் அப்பாவைக் கவனித்துக் கொண்டு இங்கேயே இருங்கள்,'' என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி தாயை சமாதானப்படுத்தினார் ராமர்..!

இதையடுத்து சீதையும் அவருடன் வருவதாக கிளம்பிய போது, ""சீதா நீ அங்கே வராதே. கல்லிலும் முள்ளிலும் சிரமப்படுவாய். வேண்டாம்,'' என்றார். 

""ஸ்ரீராமா! என்ன நியாயம் இது? உங்கள் அம்மா உங்களுடன் கிளம்பிய போது, கணவனைக் காப்பது மனைவியின் கடமை என்று தர்மத்தைப் போதித்தீர்கள். அதே தர்மம் தானே எனக்கும் பொருந்தும்! அம்மாவுக்கு ஒரு விதி, மனைவிக்கு ஒரு விதியா! நானும் உங்களுக்கு சேவை செய்ய வேண்டுமல்லவா! நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி, நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு ...! அதனால் உங்களோடு வருகிறேன்,'' என்று சாதுர்யமாக பதிலளித்தாள்.

ராமரால் பேச முடியவில்லை. மனைவியை அழைத்துச் செல்ல சம்மதித்தார்...

எந்தக்காலத்தில் தான் தன் மனைவியை கணவனால் 
பேச்சில் வெல்லமுடிந்திருக்கிறது..!??

கணவனுக்காகமனைவி, மனைவிக்காக கணவன், குடும்பத்துக்காக பிள்ளைகள் என்ற ஒற்றுமை தத்துவத்தை இந்தக்கதை போதிக்கிறது. 

யுகாதியன்று இதுபோல ராமாயண சம்பவங்கள்  மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். குடும்ப ஒற்றுமை ஓங்க யுகாதி நன்னாளில் சபதமேற்கும் நன்னாளாகும்..!


தொடர்புடைய பதிவுகள்

யுகாதித் திருநாள்

வசந்தத்திருநாள் யுகாதி..








  



17 comments:

  1. யுகாதித்திருநாள் வாழ்த்துக்கள்.
    (ஒவ்வொரு)வருடப்பிறப்பின் சிறப்பினை அறிந்துகொண்டேன். படங்கள் தகவல்கள் எல்லாம் அருமை.நன்றி.

    ReplyDelete
  2. யுகாதி நன்னாள் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி!யுகாதி வாழ்த்துகளும் அருமை!

    ReplyDelete
  3. ’யுகாதி சுபக்காஞ்சலு’

    சுந்தரத்தெலுங்கினில்
    கிளிகொஞ்சும் தலைப்பு
    அழகோ அழகு !

    >>>>>

    ReplyDelete
  4. அனைத்துப்படங்களும்
    விளக்கங்களும்
    வழக்கம்போல அருமை.

    >>>>>

    ReplyDelete
  5. இதுவரை கேள்விப்படாத
    ச லு வு டி
    இனிப்போ இனிப்பு !

    சடுகுடு போன்றதோர் பெயர் !!

    >>>>>

    ReplyDelete
  6. அதிரஸங்கள் நெய் மணமாக
    வாய்க்கு மிருதுவாக
    உதிர் உதிராக
    நாக்கில் பட்டதும் கரைவதாக
    ருசியோ ருசியாக இருக்கிறன.

    >>>>>

    ReplyDelete
  7. சர்க்கரைப்பொங்கல்,
    வெண்பொங்கல் +
    யுகாதிப்பச்சடி ஆகியவை
    மேலும் திருப்தியளித்தன,

    >>>>>

    ReplyDelete
  8. குடும்ப ஒற்றுமை தத்துவக்கதை சொன்னவிதம் அருமை.

    ஸ்ரீ இராமாயண காலத்திலிருந்தே, எந்த காலத்திலும் மேலிடம் சொல்வதற்கு அப்பீலே இல்லை என எல்லாக் கணவர்களும் நடந்து கொண்டு வருகிறார்கள் என தாங்களே எழுதி விட்டீர்கள்.

    ஆண்களின் மேலிடம் [மேல் மாடி ...... அதாவது மூளை] பெண்களைக்கண்டால் சுத்தமாக இயங்க மறுக்கின்றதோ ?

    >>>>>

    ReplyDelete
  9. இன்றைக்கு தொடர்பு ஏதும் அதிகம் இல்லாவிட்டாலும் தொடர்புடைய
    பதிவுகள் பக்கமும் சென்று வந்தேன்.

    ooo o ooo

    ReplyDelete
  10. யுகாதி - நல்வாழ்த்துக்கள்..
    அழகிய படங்களுடன் யுகாதி புது வருட செய்திகள்.
    யுகாதி விருந்து உண்டதைப் போல இருக்கின்றது.

    ReplyDelete
  11. நம் நாட்டிலெங்கும் எதிலும் வேற்றுமையில் ஒற்றுமை...பண்டிகை கொண்டாடுவதிலும்தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அனைத்து படங்கள் அருமை அம்மா.. யுகாதித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. யுகாதி தின வாழ்த்துகள்

    ReplyDelete
  14. யுகாதி தகவல்கள் சிறப்பு! இனிய யுகாதி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. யுகாதி தகவல்கள் சிறப்பு! இனிய யுகாதி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. யுகாதி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அருமையான யுகாதி பண்டிகை செய்திகள் படங்கள் எல்லாம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete