![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSUKEwgAChYobC-wt9SIO8DLtgiYItfw3OZJ3HdRyZ-yNAmacPjTHizAtuGfh5Np0qrp4B3fW5iRgZkM6aPrgvKtYsFwYmBI1h7JRn12mTXo_ISPs7WPl_UtlyB98wUgaYkRjJUd7uZkk/s400/Pongal2007.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMVwf45oTHJHhYEfDJIhjNkxWEtG0jXwHQSreP72Z_aGILm801oe8KcC6kZewi9XyoAag697rLwZJuD6ctefdaiFqfDGKH_jGq9vtmEXlq80si6Wy5lx-6RNx1Bi4SIjrevejMNZKYe4qa/s400/pomgal2011.jpg)
செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியே
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!"
"பரிதியே பொருள் யாவிற்கும் முதலே
பானுவே பொன்செய் பேரோளித் திரளே
கருது நின்னை வணங்கிட வந்தோம்"
ஏழு வர்ணக் குதிரைகளில் ஏறி உயர்வு தாழ்வு பாராது, நாம் உயிர் வாழ சக்தியையும், ஒளியையும் தரும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் உன்னதநாள்.பொங்கல் திருநாள் ...
"சங்க்ரமனம்' என்ற சொல்லுக்கு "நகர ஆரம்பித்தல்' என்பது பொருள்.
சூரியன் தென்திசையில் இருந்து வடதிசைக்கு நகரும் நாளே மகரசங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.
காலம் தவறாமல் தினமும் கீழ்வானில் உதிக்கும் சூரியனை வழிபட்டு
தெய்வமான சூரியனுக்கும் பொங்கலிட்டு அமுது படைக்கும் அபூர்வத் திருநாளாக இன்றுவரை இருந்து வருகின்ற தைப் பொங்கல் திருநாள்!
தமிழர்கள் பொங்கல் திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம் ...
உழைப்பின் பயனால் விளைந்த நெல்மணிகளைக் கொண்டு பொங்கல் இட்டு முதலில் கண்கண்ட தெய்வமான கதிரவனைப் பூஜிக்கிறோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு.
தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடுகிறோம் ..
உழவுத்தொழிலுக்கு மழையும் வெய்யிலும் கொடுத்து உதவிய சூரிய பகவானுக்கே படைத்து பொங்கலிட்டுப் பூஜைகள் புரியும் தைப்பொங்கல் (சூரிய பொங்கல்) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் உன்னத்திருநாளில் பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..
சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம். இதனால்தான் பொங்கல் பண்டிகையை “உழவர் திருநாள்’ என கொண்டாடப்படுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpUFlj44ktp7LdaUt-yki7axuFrYrckPW8DY3XW4OrLlP3zuVx7wHe0eDoTdFnNheJuZGPpPBMmDuZYV0hzAheWvz3bbwEDnrGB1xoQM5cYUSaI5D61NpcHi5NayNIaL4aGDLVbtJUB5M/s400/Pongal1.jpg)
பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDeletepongal vaazhthukkal..!
ReplyDeletepadangal piramaatham..!
படங்கள் அருமை..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி, நன்றி, நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவீரிய விதை எடுத்து
ReplyDeleteவீதி எல்லாம் விதைத்திடுவோம்...
விதையினின்று புறப்படும்
விருட்சத்தின் கிளைகளில்
வீடொன்று கட்டிடுவோம்
இனியும்
வீழாதிருக்க
வாழ்வாங்கு வாழ்ந்திடும்
வான்புகழ் வெய்யோனை
வாயார புகழ்ந்திடுவோம்....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...சகோதரி....
இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம்
வல்ல இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெருக
மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு மலர வாழ்த்துகின்றேன் .
இவ்வளவு பொங்கல் வாழ்த்து அட்டைகளையும் ஒரே இடத்தில் பார்க்கும்போது பல வருடங்களுக்குமுன்,கடைகளுக்குச் சென்று, அவைகளைத் தேர்வு செய்த நினைவுகள் வந்து போகின்றன.
ReplyDeleteஉங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புச் சகோதரி..
ReplyDeleteஉங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்!!!
இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்.
ReplyDeleteராஜி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteராஜேஸ்வரி அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எம் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்... தை பிறந்திட்டுது.. எல்லாம் நல்லதா நடக்கட்டும்.. எல்லோருக்கும் இன்பம் பொங்கட்டும்.
ReplyDeleteதிருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலயம் (அகத்தியர் கோவில்) மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்
ReplyDeleteஉங்களுக்கு வந்ததா?
கும்பாபிஷேகத்தில் அவசியம் கலந்து கொள்ளுங்கள்
ஓம் அகத்தீசாய நமஹ
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉழவர் திருநாள் வாழ்த்துகள் கண்ணையும், மனதையும் கவருகின்றன.
ReplyDeleteபாராட்டுக்கள்!
இனிய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteYour pictures and write up make my heart dance. So sweet.
ReplyDeleteThanks Rajeswari.
viji
By the by Pongal nalmaga kondadineerkala?
ReplyDeleteEntha santhoshamum, neeraium Andavan eppodum ungallukku aruluvaraka.
viji
வணக்கம்.இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள்.உங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ச்சி.ரொம்பநாளைக்குப்பிறகு.இப்பதான் வருகிறேன்.எப்படிம்மா இவ்வளவு வலைப்பதிவுகளையும் பார்த்து கருத்துகளும் எழுதமுடிகிறது? பெரிய சாதனைதான்!வாழ்கவளமுடன். நல்லது.
ReplyDeleteநன்றி.
ReplyDeleteஎங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
இனிய தைத் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDelete//தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு.
ReplyDeleteதை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாகக் கொண்டாடுகிறோம் ..//
தை பிறந்து விட்டது.
நல்வழியும் பிறந்து விட்டது.
நல்ல நட்புடன் கூடிய நம்பிக்கையும் பிறந்து விட்டது.
என்றும் நம் சந்தோஷம் தொடர்ந்து நீடிக்கட்டும்.
இனிய நல்வாழ்த்துகள்
-oOo-