Monday, September 2, 2013

தூண்டுகை விநாயகர்




ஸதா பால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா! 
விதீந்த்ராதிகம் ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி!!

குழந்தை வடிவமானவரே! 
தடைகளாகிய மலையை பிளக்கும் வலிமை கொண்டவரே! 
பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தின் அபிமானத்திற்குரியவரே! 
பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே! 
கணங்களின் அதிபதியான விநாயகரே! மங்களமூர்த்தியே! அருள் புரிவீராக.

ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம். புஜங்க' சந்தத்தில் உள்ளது. 
பாம்பு நெளிந்து செல்லும் நடை. 


திருச்செந்தூரில் கடற்கரைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது தூண்டுகை விநாயகர் கோயில். 

தனது தம்பியான முருகப் பெருமானின் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிப்பதால், விநாயகருக்கு தூண்டுகை விநாயகர் எனப்பெயர் ஏற்பட்டதாம். 

இவரை முதலில் வணங்கிவிட்டே இளையவரை வணங்குதல் வேண்டும்.

9 நிலைகளும், 137 அடி உயரமும் கொண்ட திருச்செந்தூர் ராஜகோபுரம் கட்டும் பணியை மேற்கொண்டவர் தேசிகமூர்த்தி சுவாமிகள். 

ஒருநாள், திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள் என்னும் ஒடுக்கத்தம்பிரான் ஸ்வாமிகளின் கனவில் தோன்றி, திருப்பணி செய்ய  முருகக்கடவுள். அழைத்ததன்படி, தேசிகமூர்த்தி சுவாமிகளும் கோயிலின் திருப்பணி மண்டபத்தில் தங்கியிருந்து, ராஜகோபுரத்தைக் கட்டியதாகக் கூறுகிறது தல வரலாறு. 

இந்தக் கோபுரம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குக் கூலியாக விபூதியைப் பொட்டலமாக மடித்துக் கொடுத்தார் சுவாமிகள். இங்குள்ள தூண்டுகை விநாயகர் கோயில் அருகே விபூதி பொட்டலத்தை அவர்கள் பிரித்துப் பார்த்தபோது, அது அவர்களுக்கு ஏற்ற கூலிப் பணமாக மாறியதாக வரலாறு. 

 ராஜகோபுரம் கட்டும் பணிக்கு வள்ளல் சீதக்காதி ஒரு மூட்டை உப்பு கொடுக்க, அது தங்கக்காசுகளாக மாறியதாகவும் கூறுவர். 

கிழக்கில் இருப்பதற்கு மாறாக மேற்கில் இருக்கும் காரணத்தால் எப்போதும் மூடியே கிடக்கும் இந்தக் கோபுரம், கந்தசஷ்டி விழாவில் இடம்பெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் அன்று நள்ளிரவில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். 

அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். 

கடலோரத்தில் இருக்கும் நாழிக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது அதிசயமாகும். 

கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று  நம்புகிறார்கள். 

ஏழு அடி ஆழமுடைய  நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.

சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக  கடலோரத்தில் முருகப்பெருமான் இந்த நாழிக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. 

 இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.

திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதியைப் பார்க்கலாம். 

அடுத்து அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது.  120 அடி நீளத்தையும் 86அடி அகலத்தையும் கொண்டது. 

தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், 124 தூண்களைக் கொண்ட ஷண்முக மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். 

தீராத வியாதி குணமடைய  திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள். 









Sunday, September 1, 2013

திருவருள் பொழியும் திருச்செந்தூர் திருமுருகன்.












அபஸ்மார குஷ்டக்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:
பிஸாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே


பன்னீர் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் எனகிறா  சுப்பிரமண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் 

பன்னீர்   இலையில் மொத்தம் 12 நரம்புகள் முருக பெருமான் தனது 12 கரங்களால் விபூதிப் பிரசாதத்தை வழங்கியதால் பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். 

பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று பெயர் பெற்றதாம் ..!

இறைவனுடைய பூஜைக்குரிய பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் 
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால்  தனி மகத்துவம் உண்டு..!

பன்னீர் இலை விபூதி பிரசாதம்  காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து  சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

பன்னீர் இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

திருநீற்றைப் பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது ஐஸ்வர்யமான செல்வத்தைச் சேமிப்பது போலாகும் 

திருச்செந்தூரின் கடலோரத்தில் அரசாங்கம் கொண்ட மாயோன் மருகன் -
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்  உள்ளத் துயரை ஒழித்தருள்வான் ..

ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் 
கடற்செந்தில் மேவிய சேவகன்..
வள்ளிக்கு வாய்த்தவனாய் மயிலேறிய மாணிக்கமாய் ஒளிர்பவன் ..

ஆவணி திருவிழாவின்போது  முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம் ..!

கோவிலில் 3 கொடி மரங்கள் உள்ளன. இரண்டு தங்க கொடி மரம் ஒன்று  செப்புக்கொடி மரம், திருவிழாவுக்கு செப்பு கொடி மரத்தில் கொடியேற்றுவர்.

கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைத்து கொண்டுவரப்பட்டு பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேதபாராயணங்கள் பாட, வானவேடிக்கை வெடிக்க அதிகாலை   செப்புக்கொடிமரத்தில் சிவாச்சாரியார் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றுவார்கள்..!

தொடாந்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத்திரவியங்கள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள்,  சிறப்பு அலங்காரமாகி  மகா தீபாராதனை நடைபெறும்..!

வேதவிற்பன்னர்கள் வேதபாராயணமும், திருக்கோயில் ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாட ஆவணித்திருவிழா துவங்கும் ..!.

அப்பர் சுவாமிகள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்தல் நடைபெறும் ..!

தங்கத்தேரில் எழுந்தருளும் உற்சவ மூர்த்தி ஜெயந்தி நாதர் ஆவார்.
திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட 
வண்ண மயில் ஏறி வருபவன் திருச்செந்தூர் முருகன்.

சுவாமி குமரவிடங்கபெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வருதல், சிவப்பு சாத்தி   ஊர்வலமும் sஇறப்பான காட்சி ..!

சுவாமி ஆறுமுகநயினார் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வருதலும் தேரோட்டமும்  சிறப்பாக நடைபெறுகிறது.
ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி, தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், சப்பரத்தின் பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் ..!

பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைசாத்தி எழுந்தருளி திருவீதிஉலா சுவாமிக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை கண்கொள்ளாகாட்சி..!

தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். 

சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. 
திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. 

திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். 

அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை  கூறினார். எனவே  "குரு தலமாக' கருதப்படுகிறது. 

 மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார்.
இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால்  
"ஞானஸ்கந்த மூர்த்தி' யாகத்திகழ்கிறார்..!
வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும்
தட்சிணாமூர்த்தி,  மான், மழுவுடன் காட்சி தருகிறார். 

குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால்,
குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.







Tiruchendur.Elephant