Tuesday, March 8, 2011

சர்வதேசப் பெண்கள் தினம்

1911 ம் ஆண்டு தொடங்கி நூறுமுறை கொண்டாடியாகிவிட்டது

மகளிர்தினத்தை. சில நாடுகளில் இன்று விடுமுறை. இந்தியாவில்தான் நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை என்றகோட்பாட்டின் படி மும்முரமான வேலை நாள்..

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்கொளுத்துவோம் என்றார் முண்டாசுக்கவி.

காந்திஜி ந்ல்லவற்றை நாடும் துணிவும்கெட்டவற்றிற்கு அஞ்சும் பண்பும்
உடையவளாகக் காண்கிறார்.

படிப்பும், பண்பும் நிறைந்த பெண்ணை தலைவியாகக் கொண்ட குடும்பம் நல்ல பல்கலைக் கழகமாகும்.

காற்றைவிட கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்.

மனிதனை அடக்கிப் பண்படுத்தவே பிரம்மன் பெண்களை உள்ளத்தை மலர்களால் ஆக்கிப் படைத்திருக்கிறான்.

பெண்ணின் அன்பை நீக்கிவிட்டால் மண்ணுலகம் வெறும் கல்லறையே!
பரிபூரணமடைந்த பெண்ணே உலகிலேயே மிக உன்னதமானதாகும்.

பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் புதுயுகம் படைக்கவும் வந்த பெண்களின் ச்மீபத்திய புதுமைப்பெண்களின் சில சாதனைகள் இங்கே படங்களாக....

300_55983.gif (300×323)

மார்ச் 8 -ம் சர்வதேச மகளிர் நாள் என்பதால், முற்றிலும் பெண் ஊழியர்களே இயக்கும் விமான சேவையை மும்பை - டொராண்டோ தொலை தூர விமான மார்க்கத்தில்  திங்கள் இரவு இயக்க உள்ளது. இத்திட்டமானது இவ்வரிசையில் இரண்டாவது தொடர் வருடமாகும். கடந்த வருடமும் பெண் ஊழியர்களே நிரம்பிய விமானம் மும்பையிலிருந்து நியுயார்க் தடத்தில் பயண சேவை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வருடங்களாக, பெண் ஊழியர்கள் மட்டுமே கொண்ட ஏர் இந்திய விமானங்கள் பல பன்னாட்டு, உள்நாட்டுத் தடங்களில் தடங்கல் இன்றி பயணித்து வந்துள்ளனவாம்.


முதல் விமானமான  AI -187   (மும்பை - டொராண்டோ) சேவையை, குடிமைப் பறணைத்துறை (Civil Aviation) யின் செயலர் நசீம் ஜய்தி  கொடி அசைத்துத்  தொடங்கி வைக்கிறார்.

AI 409/410  Delhi-Patna-Delhi , AI-469  Delhi-Raipur-Nagpur-Delhi ,
AI-811/812   Delhi-Lucknow-Delhi , AI-603/604  Mumbai-Bangalore-Mumbai 
, AI-569/167 Chennai-Mumbai-Chennai, AI804/506  Bangalore-Delhi-Bangalore
மற்றும்  Air India Express flight IX302  Kozhikode and மும்பை ஆகியவையும் முற்றிலும் பெண் ஊழியர்களுடனே பெண்கள்தினத்தில் பெருமையுடன் பறந்தன...















உலகப் பெண்கள் தினம் பிரான்ஸ் தமிழ் பெண்கள் அமைப்பினரால்
 
75020 Paris என்னும்  இடத்தில் நடைபெற்றிருந்தது.

பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர், பேங்கடி நாட்டுப் பெண்கள்
 அமைப்பினருடன் இணைந்து பாரிஸ் 20 மாநகரசபை ஆதரவுடன்
 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



இந் நிகழ்வில் தமிழீழத்தில் பெண்கள் படும் இன்னல்களை எடுத்துக்காட்டும் முகமாக புகைப்படக் கண்காட்சி, வீடியோ விபரணம், பிரெஞ்சு மொழியில் உரை, பிரெஞ்சு மக்களுடன் தமிழ்ப் பெண்கள் பற்றிய கருத்துப் பகிர்வு, பாரிஸ் 20 மாநகர சபை நகர பிதா அவர்களின் சிறப்புரை, மாநகர சபை உறுப்பினர்களின் உரைகள், வேறு பல அமைப்பினர்களின் உரைகள் எமது கலைகலாச்சார நடனம்,வேறு நாட்டவர்களின் நடனங்கள், நாடகங்கள், பாடல்கள் என்பன சிறப்பாக நடைபெற்றன. 


























இறுதியில் தமிழீழ பெண்கள், குழந்தைகள், மக்கள் படும் துயரங்களை தாங்கிய துண்டுப் பிரசுரம், பிரெஞ்சு மொழியில் துண்டுப் பிரசுரங்கள் குறுந்தகடுகள் என்பன அனைவருக்கும் வழங்கப்பட்டது. அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அத்துடன் இந்நிகழ்வுநிறைவு பெற்றது.

























பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர், பேங்கடி நாட்டுப் பெண்கள் அமைப்பினருடன் இணைந்து உலகப் பெண்கள் தினம் பிரான்ஸ் தமிழ் பெண்கள் அமைப்பினரால் 4 Rue D’Annam 75020 Paris என்னும்  இடத்தில் நடைபெற்றிருந்தது.

28 comments:

  1. வாழ்த்துக்கள்..
    பெண்மையை போற்றுவோம்...

    ReplyDelete
  2. நான் ஒருதரம் ஆப்ரிக்காவிலிருந்து இண்டியாவுக்கு ஏர் இண்டியாவில் தான் வந்தேன். பைலட் தொடங்கி எல்லாருமே பெண் பணியாளர்கள்தான். மிகவும் பெருமையாக இருந்தது. தடைகளை உடைத்து சாதிக்கப்பிறந்தவர்கள் பெண்கள்.

    ReplyDelete
  3. சாதிக்கப் பிறந்தவர்கள். :-)
    nice post. :-)

    ReplyDelete
  4. உங்களுக்கும் மற்ற பெண்[கண்]மணிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. @ வேடந்தாங்கல் - கருன் s
    @ Lakshmi said...
    @Chitra said...
    @ வெங்கட் நாகராஜ் said...
    varukaikkum vaazththukkum Thanks.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மகளிர் தின வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  8. @கோவை2தில்லி sa//
    @உழவன்" "Uzhavan" said...//
    நன்றி வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  9. நல்ல ஆக்கம் தரும் பதிவு.

    மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஆஹா வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் - என்ற பாரதியின் புதுமைப் பெண்களைப் பற்றிய செய்திகள் பெருமையாய் இருந்தது.
    மகளிர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு
    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    ReplyDelete
  14. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    ReplyDelete
  15. மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அருமையான புகைப்படங்கள்.

    ReplyDelete
  17. @ பாரத்... பாரதி... said...
    ரோஜாப்பூந்தோட்டம்.-- Thank you very much.

    ReplyDelete
  18. Qசிவகுமாரன் said...//
    பெருமையாய் இருந்தது. //
    Thank you.

    ReplyDelete
  19. @middleclassmadhavi said...//
    Thank you.
    @தம்பி கூர்மதியன் said...//
    @ r.v.saravanan said...//
    @Darshan said...//
    Thank you very much.

    ReplyDelete
  20. //மகளிர்தினத்தை. சில நாடுகளில் இன்று விடுமுறை//
    அது எந்த நாடுகனு சொல்லுங்க...ரங்க்ஸ்கிட்ட சொல்லி அங்கன ஒரு வேல தேட சொல்லுவோம்... நானும் இருக்கானே ஒரு ஊரு... ஒன்னத்துக்கும் லீவ் இல்ல...ஹும்...:))

    ஜோக்ஸ் அபார்ட்... நெறைய புது விஷயங்கள், படங்கள் பகிர்ந்து இருக்கீங்க... நன்றிங்க..:)

    ReplyDelete
  21. இந்நாள் China, Armenia, Russia, Azerbaijan, Belarus, Bulgaria, Kazakhstan, Kyrgyzstan, Macedonia, Moldova, Mongolia, Tajikistan, Ukraine, Uzbekistan and Vietnam மற்றும் சில நாடுகளில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது//.
    @ அப்பாவி தங்கமணி said...//
    Thank you.

    ReplyDelete
  22. @அப்பாவி தங்கமணி said..
    //மகளிர்தினத்தை. சில நாடுகளில் இன்று விடுமுறை//
    அது எந்த நாடுகனு சொல்லுங்க...ரங்க்ஸ்கிட்ட சொல்லி அங்கன ஒரு வேல தேட சொல்லுவோம்... நானும் இருக்கானே ஒரு ஊரு... ஒன்னத்துக்கும் லீவ் இல்ல...ஹும்...:))//
    Do it Now. Thank you.

    ReplyDelete
  23. @Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...//
    பன்மொழி வித்தகரின் வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  24. அருமையான பதிவு தாங்க.
    பெண்களால் எதையும், பொறுமையாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும், திறமையாகவும் செய்திட முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெண்களே கண்கள். வாழ்க!

    ReplyDelete
  25. ;)
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
    கெளரி கல்யாண வைபோகமே !!

    ReplyDelete