Showing posts with label அட்சயதிருதியை... Show all posts
Showing posts with label அட்சயதிருதியை... Show all posts

Thursday, May 1, 2014

சுபிட்சம் தரும் ஸ்ரீலட்சுமி குபேர சிறப்பு வழிபாடு




ஸ்ரீஸ்துதி

1.ஓம் நமோ லட்சுமியை மகாதேவ்யை பத்மாயை சததம் நம!  
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!! 

2.த்வம் சாட்சாத் ஹரி ஷஸ்தா சுரே ஜேஷ்டா வரோத்பவா! 
பத்மாட்சீ பத்ம சம்சா தாநா பத்ம ஹஸ்தா பராமயீ!! 

3.பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி! 
அருணா நந்தினீ லட்சுமி மகாலட்சுமி, திரி சக்திகள்!! 

4.சாம்ராஜ்யா சர்வ சுகதா நிதிநாதா நிதிப்ரதா! 
நிதீச பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோன்னதி:!! 

5.ஸம்பத்தி சம்மதா சர்வசுபகா சமஸ்து தேஸ்வரி! 
ரமா ரட்சாகரீ ரம்யா ரமணீ மண்ட லோத்தமா!

 16 வெள்ளிக்கிழமை காலையிலும் மாலையிலும் ஸ்ரீ கோலமிட்டு ஸ்ரீஸ்துதியை கூறுபவர்களுக்கு லட்சுமி குபேரரின் அருட்பார்வை  கிடைக்கும். 



12 குபேரன்கள் காட்சிதரும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் அபூர்வமானது  
உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் ஆட்சி செய்தபோது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வியாபாரம் செய்ய வடக்கு திசை நோக்கி பயணமானான்.

அந்த வணிகன் கடம்ப வனத்தை அடைந்தபோது இருள் சூழ்ந்துவிட்டது. . ஓர் ஆல மரத்தின் மீது ஏறி அயர்ந்து தூங்கத் தொடங்கினான்.
நள்ளிரவில் திடீரெனக் கேட்ட ஒலியால் எழுந்தவன் கண்ணெதிரே ஒளிமிகுந்த தீப்பிழம்பு தோன்றியது. அத் தீப்பிழம்பின் நடுவே ஒரு சிவலிங்கம் இருக்க, தேவர்களும் முனிவர்களும் வழிபடும் காட்சி பளிச்சென்று தோன்றி மறைந் தது.


விடிந்ததும் உறையூரை அடைந்த வணிகன், மன்னன் பராந்தக சோழனிடம் தான் கண்ட காட்சியை விவரித்தான்.

அப்போது சோழ மன்னனின் விருந்தினராய் அரண்மனையில் தங்கியிருந்த குலசேகர பாண்டி யனும் வணிகன் சொன்னதைக் கேட்டான்

உடனே சோழனும், பாண்டியனும் கடம்ப வனத்திற்கு வந்தனர். அந்த சிவலிங்கத்தை தேடி அலைந்தனர்.

அப்போது கையில் கரும்புடன் அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர், சிவலிங்கம் இருந்த இடத்தைக் காட்டிவிட்டு, ஜோதி வடிவாகி மறைந்தார்.
ஜோதி மறைந்த திசை நோக்கிய மன்னர்கள், தொலைவில் ஒரு குன்றின் மீது முருகபெருமான் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கக் கண்டு சிலிர்த்தனர்.

பக்திப் பரவசத்தில் ஆழ்ந்த சோழனும் பாண்டியனும் தண்டாயுதபாணி சுவாமிக்கு குன்றிமீது ஓர் ஆலயமும், சிவபெருமானுக்கு அதே இடத்தில் ஓர் ஆலயமும் கட்டினர்.

ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பில் அழகிய ஏழு நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

ராஜகோபுரத்தைக் கடந்ததும் முன் பிராகார மும், அதனைத் தொடர்ந்து ஸ்தபன மண்டபமும் உள்ளன. துவார பாலகர்களின் திருமேனிகள் நம்மை வரவேற்கின்றன.

உட்பிராகார மண்டப நுழைவாயிலின் மீது சிவபெருமானும் பார்வதியும் காளை வாகனத் தின் மீது அமர்ந்திருக்க, மயில் வாகனத்தில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்திருக்க, விநாயகரும் உடன் இருக்கிறார். இந்த குடும்ப சகிதமான காட்சியினை சப்த ரிஷிகள் வணங்க, சிவாச்சாரியார் பூஜை செய்யும் காட்சி அற்புத சுதை வடிவமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

உட்பிராகார மண்டபம். அழகிய வேலைப்பாடுடன் கூடிய இசைத் தூண்களை நளினமாய்  தட்டும் போது இனிய ஓசை எழுகிறது.

கன்னி மூலையில் வரகுண கணபதியும், ஐந்து தலை நாகரும் காட்சி தருகின்றனர்.

 கருவறையில் ஏகாம்பரேஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். .[Gal1]
தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை,  அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தில் நாயன்மார்கள், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. சண்டிகேசுவரர், சூரியன், பைரவர், நவகிரக சன்னதிகளும் இருக்கின்றன.
[Gal1]
இறைவிகாமாட்சி அம்மன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு!
[Gal1]
அன்னையின் கருவறை தேவகோட்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, லட்சுமிதேவி, பிரதோஷ நாயகர், சரஸ்வதி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. துர்க்கையின் எதிர்ப்புறம் சண்டிகேசுவரி சன்னதி உள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.

தேரோடும் வடக்கு வீதியில் வடமேற்கில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. சிவபெருமான் தலை யினின்று தோன்றிய கங்கை நீர் இக்குளத்தில் சேர்ந்துள்ளதாக ஐதிகம்.

இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபடுவதால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும், நம் மேனியில் உள்ள பிணிகளும் அகலும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.

தலத்திற்கே தனிச்சிறப் பான 12 குபேரன்களின் தரிசனம் பெறலாம்.
குபேரனின் உருவம் சிலாரூபமாகவோ சுதை வடிவிலோ இன்றி ஆலயத்தில் உள்ள கல்தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என பன்னிரண்டு இடங்களில் அற்புதமாக வடி வமைக்கப்பட்டுள்ளன.
[Gal1]
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என பன்னிரண்டு ராசிகளுக்கும் தனித்தனியே இந்த குபேர வடிவங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவர் ராசிக் குரிய குபேரனை வணங்குவதன் மூலம், வறுமைத் துன்பம் ஒழிந்து வற்றாத செல்வம் பெற்று வாழ இயலும் என்பது நம்பிக்கை.
குறிப்பிட்ட குபேரனுக்கு சிறப்பு பூஜை நடத்துவதால் தடைப்பட்ட திருமணமும், தள்ளிப் போகும் திருமணமும் நடந்தேறுவதுடன், இழந்த பொருளும், கைவிட்டுப்போன சொத்துகளும் மீண்டும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
12 ராசிகளுக்கு உரிய குபேரர்களைத் தவிர, 13வது குபேரனாக மகா குபேரனின் சிற்பம் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

இப்படி பதின்மூன்று குபேரர்கள் உள்ள அமைப்பு தமிழ்நாட்டில் வேறு எந்த ஆலயத்தி லும் இல்லை என்கின்றனர்.

ஆலயத்தின் உள்ளே சென்று இறைவனையும் இறைவியையும் தரிசித்த பின், நம் ராசிக்குரிய குபேரன் முன் சில நிமிடங்கள் அமைதியாக நின்று பிரார்த்தனை செய்கிறோம். பின்னர் ஆலய கோபுரத்தில் உள்ள மகா குபேரனை வணங்கி வெளியே வரும்போது மனச்சுமையும், கடன்சுமையும் நிச்சயம் தீரும் என்ற நம்பிக்கை ஒளி மனதில் படருவது நிஜம்!
திருச்சிக்கு அருகே உள்ள துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செட்டி குளம் என்ற இந்தத் தலம்.

[Image1][Gal1]

Tuesday, April 29, 2014

தங்கத் திருநாள் அட்சயதிருதியை..







சித்திரை மாதம் வரும் அமாவாசையை அடுத்த வளர்பிறையான மூன்றாம் நாளான திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்து விழாவாக கொண்டாடுகிறோம்.

அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.

அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. 

ஸ்ரீலட்சுமி வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும்,
இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும்,
மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும்,
வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும்,
குடும்பத்தில் கிரக லட்சுமியாக வும் விளங்குகிறாள்.

பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணைபிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும்

மகாலட்சுமி திருமால்  மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள்

பெண்கள் அட்சய திரிதியை அன்று ஸ்வர்ண கௌரி விரதம்
கடைப்பிடிப்பது விஷேசம்... 

அன்று பார்வதி பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறுநாள்
அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகரும் வருவதாகவும் நம்பிக்கை..

 கோதுமையில் இனிப்புகள் செய்து படைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து ஆடை தானமும் செய்வார்கள்.

குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும்
 பெற்ற நாள்  அட்சய திரிதியை

மஹா விஷ்ணுவின் அவதாரமான வியாசபகவான் மஹாபாரதத்தை சொல்லச்சொல்ல மஹாகணபதி தன் மேன்மைமிகு தந்தத்தை ஒடித்து மஹாபாரதம் எழுத ஆரம்பித்த திருநாள் அட்சய திருதியை...

குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்து அளவற்ற செல்வம் பெற்ற திருநாள்..

கௌரவர் சபையில் பாஞ்சாலி துச்சாதனனால் துன்புறும்போது, “அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் .

பரசுராமர் அவதரித்த நாள்..
 ..
பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான்.

மணிமேகலையும் அட்சய பாத்திரம் பெற்றுள்ளாள்.

பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்
அன்னபூரணி  தன் கையில் உள்ள அட்சய பாத்திரத்தில் இருந்த உணவை சர்வேஸ்வரனுக்கு தானமிட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட வைத்த நாள் அட்சய திரிதியை நாள்தான். எனவே காசியும் அட்சய திரிதியை தலமாகிறது

கேரள சொர்ணத்து மனை யில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம்  பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாள்...

.
 குருகுல வழக்கப்படி சங்கரர் யாசகத்திற்குப் புறப்பட்டார். அவர் முதல் முதல் யாசித்த வீடு படு ஏழை வீடு. 

பவதி பிட்சாந்தேஹி’ என குரல் கொடுத்த பாலகனுக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். 

 அவள் ஏழ்மையை உணர்ந்த பாலகன் அவளுக்கு உதவ விரும்பி, மகாலட்சு மியை நோக்கி மனம் உருகப் பாடினார். 

என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்கமழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்கக் கனி கள் குவிந்தன. அப்பாடல் தான் 
கனகதாரா ஸ்தோத் திரம்.
இது 8-ஆம் நூற்றாண்டில் நடந்த அதிசயமாகும். இச்சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32-ஆம் வயதில். எனவே அன் றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.
முன்னதாகப் பணம் கட்டி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை தரப்படும். இதனை வீட்டு பூஜையறையில் வைத்துப் பூஜித்தால் நலமும் வளமும் பெற்று இன்பமாய் வாழலாம்.
திருக்காலடியப்பன் ஆலய மூலஸ்தானத்தில் கண்ணன் ஒரு கையில் வெண்ணெயுடனும், ஒரு கையை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தரும்  கிருஷ்ண அம்பலம் வலப்புறம் சங்கரர் சந்நிதியும், இடப்புறம் சாரதாம்பாள் சந்நிதியும், சக்தி விநாயகர், கிருஷ்ணர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சமாதியும் சிறப்புடன் அமைத்துள்ளனர்.. ஆன்மிகத்தின் முதல் குருவான ஆதிசங்கரரின் தாய்க்கு  தரப்பட்டுள்ள சிறந்த புகழாக கல் விளக்கு ஒன்று நிரந்தரமாக அணையாதீபமாக ஒளிவீசித்திழ்கிறது..! .
ஆதிசங்கரர் அவதரித்த காலடியில்  அமைத்துள்ள கோவிலில் சங்கரரின் உருவத்தை தட்சிணாமூர்த்தியாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆலயத்தில் உள்ள பெரிய மண்டபத்தின் சுவர்களில் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.

கேரளா மாநிலம் அடுவாஞ்சேரி கிராமத்தில்- வாசுதேவபுரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த மகா விஷ்ணு கோவில் உள்ளது. பரசுராமர் பிரதிஷ்டை செய்யும்போது, லட்சுமி தேவியை திருமால் தன் கையால் ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது போல சங்கல்பம்  செய்து கொண்டே பிரதிஷ்டை செய்தார்.

ஆலயப் பொறுப்புகளை பரசுராமரிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்தணர்கள் பணிகளைச் சிறப்புடன் செய்ததால் லட்சுமி கடாட்சம் பெற்று செல்வந்தர்களாக மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். 

காலப்போக்கில் விஷ்ணுவிற்கு பூஜைகள் நடைபெறாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய லட்சு மியே வந்தாள். சாலக்குடி ஆற்றில் பூஜைக்கு நீர் எடுக்க வந்தபோது, அங்கு வந்த வில்வமங்கள சுவாமிகள் லட்சுமி தேவியைக் கண்டு ஆச்சரிய மடைந்து விவரம் கேட்டார். லட்சுமியும் நடந்த வற்றைக் கூறினாள்.
அதற்கு வில்வமங்கள சுவாமிகள், “”தாயே, உங்கள் கருணைப் பார்வையை அந்த பாவிகள்மீது செலுத்தி, அவர்களைத் திருத்தி ஆன்மிக வழியில் ஈடுபடுத்துங்கள்” என மனமுருகி கேட்டுக்கொண்டார்.
லட்சுமி தேவி, “”அட்சய திரிதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு  நான் அருள்பாலிக் கிறேன்” என உறுதி கூறினாள்.  அதன்படி இந்த எட்டு நாட்களும் அஷ்ட லட்சுமிகளாக- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லட்சுமியாக அருள்பாலிப் பதை அடுவாஞ்சேரி கோவிலில் ஆண்டுதோறும் காணலாம்.

ஆலய மூலவரான விஷ்ணு பகவான் சதுர்புஜங் களுடன் காட்சி தருகிறார். இவருக்குப்பின் லட்சுமிதேவி விக்ரகம் உள்ளது. அதை தினசரி பார்க்க முடியாது. இந்த எட்டு நாட்களில்- அவ்விக்ரகத்தை விஷ்ணுவின் இடபாகத்தில் எழுந்தருளச் செய்யும்போது பார்க்கலாம்.

முழையூர் தலத்தில் வருடந்தோறும் அட்சய திரிதியை நாளன்று ஆயிரக்கணக்கானோர் கூடிக் கொண்டாடுகின்றனர். இத்தல இறைவன் பரசுநாதர்; இறைவி ஞானாம்பிகை. இத்தலம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது.

திருக்கயிலாயத்தில் இசைக்கப்படும் முழை என்ற இசைக்கருவியின் ஒலி முதன்முதல் பூமியை அடைந்த தலம்  முழையூர்.. முழை  ஒலியைக் கேட்பதற்காகவே முப்பத்து முக்கோடி தேவர்கள் அட்சய திரிதியை நாளன்று இத்திருத்தலத்தில் கூடி  கேட்டு ஆனந்திக்கின்றனர்.

அட்சய திரிதியை அன்று 3, 12, 21 என்ற எண்ணிக்கை கொண்ட ஜலமதுரம் என்ற இளநீரால் அபிஷேகம் செய்து, புடலங்காய் கலந்த உணவை தானமளித்தால் அறிந்தோ, அறியாமலோ செய்த தீவினைகளில் இருந்து காக்கப்படுவார்கள். முழையூர் லிங்கம் பஞ்சாட்சர பீஜங்களாலான பரசுநாத லிங்கம்.  குபேர பூஜை செய்வது சிறப்பு.

சனிபகவானின் துயரைத் தீர்க்க இறைவன் தோன்றிய தலம் தஞ்சை மாவட்டம், பேராவூரணியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விளங்குளம் ஈஸ்வரன் சனியின் ஊனத்தை நீக்கிய நாள் பூச நட்சத்திர சனிக்கிழமையுடன் கூடிய அட்சய திரிதியை நாளில்தான்.
 அட்சய திரிதியை அன்று அட்சய புரீஸ்வரருக்கும், சனி பகவானுக்கும் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பக் கஷ்டம், குழப்பம் விலகும். 


திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திரிதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம்.   ஆடை தானமும் அன்ன தானமும் செய்வது சிறப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் தல பெருமாள் மரக்காலால் குபேரனுக்கு செல்வம் கொடுத்தாராம். பின் அந்த மரக்காலை தலைக்கு அடியில் வைத்தபடி சயன கோலத்தில் காட்சி தரும் வைத்த மாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் பெயர். இவரை அட்சய திரிதியை நாளில் தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.

தானத் திருவிழா என்று சிறப்பிக்கப்படும் அட்சய திரிதியையில்  செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும்.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்; புத்தகம் வெளியிடலாம்; வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம்; எந்த ஒரு புதிய செயலையும், 
புண்ணிய செயலையும் செய்யலாம். 
ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.
தயிர்சாத தானம்- ஆயுள் கூடும். இனிப்புப் பண்ட தானம்- திருமணத் தடையை விலக்கும். உணவு தானிய தானம்- விபத்து, அகால மரணத்தை தடுக்கும். கால்நடை தீவன தானம்- வாழ்வை வள மாக்கும். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்தால் பாபவிமோசனம் கிட்டும். லட்சுமி பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும். 
அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும்
. நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்...
உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம்.

மாதா மாதம்  வாங்கியே ஆகவேண்டிய மளிகையை. சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்..

தொடர்புடைய பதிவுகள்


மணிராஜ்: பொன்மழை பொழிக ...