Showing posts with label மயில். Show all posts
Showing posts with label மயில். Show all posts

Sunday, September 14, 2014

அபிநயங்கள் சூடும் அழகு மயில்








viji thegreat's profile photoviji thegreat's profile photoviji thegreat's profile photoviji thegreat's profile photoviji thegreat's profile photoviji thegreat's profile photo
viji thegreat's profile photo
viji thegreat's profile photoviji thegreat's profile photoviji thegreat's profile photoviji thegreat's profile photoviji thegreat's profile photoviji thegreat's profile photo


அழகன் முருகனின் வாகனம் அழகு மயில்..
உள்ளம் கவர் கள்வனாம் கண்ணனின் மகுடத்தில் வீற்றிருப்பதும் மயிலிறகு..
கல்விக்கடவுளாம் கலைமகள் வீற்றிருப்பதும் மயில் மீதுதான்..
நம் தேசீயப்பறவையும் மயில்தான்..!


சென்னை: வடபழனி முருகன் கோவில் கொடி மரத்தில், மயில் வடிவத்தில் வந்து அமர்ந்த தேனீக்கள் பரவசமடைய வைத்தன..கோவிலில் மூலவருக்கு எதிரே அமைந்துள்ள கொடி மரத்தை தேனீக்கள் பல சுற்றி வலம் வந்து கொடி மரத்தில் மயில் போன்ற வடிவத்தில் தேனீக்கள் அமர்ந்து ஆச்சரியமடையவைத்தன..குறிப்பாக, மயில் போன்ற உடல் அமைப்பு, கழுத்து, தோகைகள் என மூலவரை பார்த்த வண்ணம். மயில் தோற்றத்தில்  தேனீக்களை கண்டு ரசித்து பரவசமடைந்து, "அரோகரா' கோஷமிட்டு முருகனையும், தேனீக்களையும் வணங்கிச் சென்றனர். 
வடபழனி முருகன் கோவிலுக்குள் தேன்கூடு எங்கும் இல்லாத நிலையில்,  திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள், மயில் தோற்றத்தில் வந்து அமர்ந்து ஆச்சர்யமளித்தன..! இந்தியாவில் மட்டுமல்ல ஆச்சர்யக்காட்சி..!ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் உள்ள பாலமுருகன் கோயிலில் சஷ்டியன்று, ஒரு மயில், சுவாமி சன்னிதானத்திற்கு வந்து சிறிது நேரம் நின்ற அந்த மயில், பின்னர் வெளியே வந்து, சுவாமி முன் வைக்கப்டடிருந்த தீர்த்தத்தைப் பருகியது. சுவாமிக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த மயில் வாகனத்தைப் பார்த்தவாறே சிறிது நேரம் நின்றிருந்த அந்த மயில், சன்னிதானத்தை வலம் வந்து பின்னர் பறந்து சென்றது. மயிலின் இந்த செயல்  கூடியிருந்தவர்களை ஆச்சர்யப்பட வைத்தது...