Monday, March 7, 2011

ஆஸ்திரேலிய காகம்

அபூர்வமாப் பறந்த வெள்ளைக் காக்கை ஒன்றை மற்ற கருப்புக் காக்கைகள்
துரத்த அதனை மீட்டு பொது மக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
முதலில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகும் பறவை காகமாகத்தான்
இருக்கும். சின்னச் சின்னக் கற்களைப் பொறுக்கிப் பொறுக்கிப் போட்டு,
தண்ணீர் மேலே வரக் குடித்துத் தாகம் தணிந்து, சந்தோஷமாய்ப் பறந்ததும்,
ஸ்ட்ரா போட்டு தண்ணீர் உறிஞ்சிக் குடிக்கும் ந்வீன காக்கையும்,
காகம் காட்டி சாதம் ஊட்டும் தாயும், காக்கா.. ஊ.ஷ்..என்று கையில்
இருக்கும் தின்பண்டத்தைத் தட்டிப் பறிக்கும் திருட்டுக் காகமும்,
வற்றல் ,வடாம் என்று காயப் போட்டிருப்பவற்றைக் கொத்திப் பறக்கும்
காகமும்,நாம் அறியாதவை அல்ல.  
காக்காய் பிரியாணி தின்று உண்ணிகிருஷ்ணன் குரலை வரவழைக்க
முயற்சிக்கும் காமெடி சிரிப்பூட்டும்.
ஆகாயத்தோட்டியாக இயற்கைச் சுற்றுச்சூழல் காவலனாக எச்சத்தால்
தாவரங்கள் வளர்க்கும் தோழனாகத் திகழும் காகங்கள் விஷ உணவால்
பிடிக்கப்பட்டு, அசைவ உணவாக மாற்றப் படுவது கொடுமை.
அமாவாசைகளிலும், சனிக்கிழமைகளிலும்,முன்னோர் வழிபாடுகளிலும் காகத்திற்கு உணவு படைப்பது ஐதீகம்.சனிபகவானின் வாகனமாக
அமைந்திருப்பது காகமே. காக்கைச் சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று பாரதியார்
பார்க்கும் இடமெல்லாம் கண்ணனைக் கண்டவர்.

இராமாயணத்தில் ஜயந்தன் சீதையின் மடியில் தலை வைத்து ராமன்
வனவாசக்காலத்தில் படுத்திருந்த போது,  காகத்தின் வடிவில் வந்து
கொத்தித் தொல்லை தர, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று
அருகில் இருந்த புல்லை பிம்மாஸ்திர மந்திரப்பிரயோகம் செய்து
எய்த போது எந்த உலகத்திலும், யாரிடமும் காப்பாற்ற முடியாத போது
ராமனிடமே சரணாகதி அடைந்தது.
அப்போது கருணையே வடிவெடுத்த சீதாப் பிராட்டி காகத்தின் தலை
ராமனின் பாதத்தில் சரியாக இருக்குமாறு செய்து மன்னிக்க அருளினாளாம்.
எய்த அஸ்திரம் எய்ததுதானே! காகத்தின் ஒரு கண்ணை மட்டும் பறித்து
உயிர் பிழைக்க வழிவகுத்ததாம்.ஆகவே காகத்திற்கு ஒரு கண் குருடு என்பார்கள்.காகம் எப்போதும் ஒரு பக்கம் சாய்ந்தே பார்ககும்.

அண்டங்காக்கை முழுவதும் கரு நிறமாயிருக்க,கழுத்தில்
சாம்பல் நிறத்தில் சாதாரணக் காக்கை காணலாம்.


ஆஸ்திரேலியாவில் காணப்படுபவை
 torresian crow (Corvus orru) என்ற இனமாகும்.இது ஒரு அண்டங் காகத்தின்
 இனமாகும். இதன் வெள்ளைக் கண்களின் கண்மணியைச் சுற்றி ஒரு நீலநிற
 வளையம் இருக்கும். இதன் கறுப்புச் செட்டைகளில் நீலஉதா நிறப் பளபளப்பு
 இருக்கும். பிறிஸ்பேன் காகங்கள் நகரங்களில் மட்டுமே கூட்டமாக
 இருக்கின்றன எனவும், கிராமப் புறங்களில் அப்படி கூட்டமாகத் தங்குவதிலை
 எனவும் கிரிபித் பல்லகலைக் கழக சுற்றுச்சூழல் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
Griffith University ecologist Darryl Jones ) 
[bris+crow+2.jpg]

காகங்களுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என மாநகரசபை நகர மக்களை
 வேண்டிக் கொள்கிறது 

















ஏனெனில் அவை
இயற்கையாகவே தமக்குரிய உணவை தேட வேண்டும் என்பதாகும்.
 படத்தில் காகம் எதையோ மரங்களுக்கு இடையில் இருந்து எடுத்து
 உண்பதக் காணலாம்.
மேலும், வீட்டுக் குப்பைத்தொட்டிகளை மூடி வைத்திருக்க வேண்டும்;
வீட்டுக்கு வெளியே செல்லப் பிராணிகளின் எஞ்சிய
 உணவுகளையோ,நீர் பருகக் கூடிய வசதிகளையோ வைக்க வேண்டாம்
எனவும் மாநகரசபை நகர மக்களை வேண்டிக் கொள்கிறது.
இவ்வாறு செய்வதன்மூலம் காகங்களின் தொகையை கட்டுப்
 படுத்த முடியும் என மாநகரசபை நம்புகிறது.
அதேவேளை, ஆவணி-மாசி வரை இவற்றின் கரையும் சத்தம் இருக்கும்; 
, யாரும் காகங்களை துன்புறுத்தக் கூடாது ; அவற்றின் கூடுகளையோ , 
முட்டைகளையோ கலைக்கக் கூடாது; கூடுகளில் இருக்கும் 
குஞ்சுகளையும் கலைக்கக் கூடாது எனவும் மேலும் மாநகரசபை
 நகர மக்களை வேண்டிக் கொள்கிறது.
 torresian crow (Corvus orru) ஆஸ்ரேலியாவுக்குரிய பறவை இனத்தில் ஒன்று.
 அது இயற்கைப் பாதுகாப்புச் சட்டத்தின் (1992)கீழ் பாதுகாக்கப்படுகிறது.
 காகம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதால்
 காகத்தைத் துன்புறுத்துவோர் இச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்.
இந்தக் காகங்கள் இறந்த விலங்குகளை உண்டு சூழலை சுத்தப்படுத்துகிறது;
 அதன் எச்சத்தில் உள்ள பழங்களின் விதைகள் மீண்டும் தாவரங்கள் 
முளைக்க உதவுகின்றன என்பதால் இப் பறவை இனத்தின்
 நீண்டகாலப் பாதுகாப்பு மிக அவசியம் எனப்படுகிறது.

12 comments:

  1. நீலக் கண் காகம் போன்ற புதிதான தகவல்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  2. @middleclassmadhavi said...//
    கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    [எங்கு தான் போய் எப்படித்தான் இவ்வளவு ’காக்காப்பிடிக்கிறீங்களோ’ ?]

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. @ வை.கோபாலகிருஷ்ணன் said...//
    ஆஸ்திரேலியா
    சென்றிருந்த போது மகன் காகத்தைப்பற்றிக் கதையாகக் கூற, கோவை வந்த பின் பார்த்த கேட்ட விஷயங்களும் காக்காய் பிடிக்க ஏதுவாயிற்று.
    தங்களின் மேலான கருத்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  5. [எங்கு தான் போய் எப்படித்தான் இவ்வளவு ’காக்காப்பிடிக்கிறீங்களோ’ ?]

    சும்மா நகைச்சுவைக்காக எழுதிய பின்னூட்டம். கோபித்துக் கொள்ளாதீர்கள்.

    உங்கள் வலைப்பூவினைத் தொடரும் வண்டாக வந்தமருந்து விட்டேன், பார்த்தீர்களா ! இனி நீங்கள் எழுதும் எல்லாமே தேனாக வந்து பாயுமோ என் டேஷ் போர்டில் ?

    ReplyDelete
  6. நானும் நகைச்சுவையாகத்தான் பதில்
    அளித்திருந்தேன்.
    இனி நீங்கள் எழுதும் எல்லாமே தேனாக வந்து பாயுமோ என் டேஷ் போர்டில் ?//
    தேனாகப் பார்ந்த பின்னூட்டத்திற்கு
    நன்றி ஐயா.

    ReplyDelete
  7. அருமையான காகத்தைப் ப்ற்றிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. நல்ல செய்திகள், படங்கள் நிறைந்த நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் அம்மா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @Rathnavel said...//
    @Darshan said...//
    நன்றி ஐயா

    ReplyDelete
  10. வெள்ளைக்காகம் அரிதான் காட்சி.

    ReplyDelete
  11. Kaaka kaaka karupu paaru...
    kaaka muttai karupillai...

    ReplyDelete