Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Tuesday, January 15, 2013

செல்வப்பொங்கல் ...




Pongal Greetings, Pongal Orkut Scraps, GraphicsHistory Of Indian Festivals India Festival

Pongal Greetings, Pongal Orkut Scraps, GraphicsPongal Greetings, Pongal Orkut Scraps, GraphicsPongal Greetings, Pongal Orkut Scraps, Graphics



மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள்.. 

பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்..


Mattu Pongal 3rd DayAlbum Name Bhogi Pongal Posted By Admin On 03 Sep 2009Pongal Greetings, Pongal Orkut Scraps, Graphics
ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 
தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.
விழாக்கோலம் பூண்டிருந்த மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறும்..
Crowd at Marina beach
பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், வண்டலூர் மிருக காட்சி சாலை உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்..



Sunday, January 13, 2013

மங்களம் பொங்கும் மகரசங்கராந்தி


Pongal 2012 Pongal SMS & Greetings: Enjoy Pongal 2012


உலகம் உவப்ப வலனேர்ப்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாங்கு’

ஞாயிறு தோன்றும்போது உலகம் முழுவதும் உவப்பு அடைகிறது ..
 பொழுது புலரும் காலை நேரமாகிய தைத்திங்கள் தொடக்கமான மகர சங்கிராந்தி சிறப்புரக் கொண்டாடப்படுகிறது.

மார்கழிப் பெண்ணுக்கு விடை கொடுத்து, தைப் பாவை எனும் தையல் மெல்ல நடைபோடத் தொடங்கும் முதல் நாள்..

 தமிழர்களின் ஆண்டுக்கணக்கான "திருவள்ளுவர் ஆண்டு' தொடங்கும் முதல் நாளாகவும் திகழ்கிறது ...


தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் , 
ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும் கூறுகிறோம்.

 நமக்கு ஞாயிறு தோன்றும் காலை பொழுது போல, தேவர்க்கு தைத்திங்கள் தொடக்கம் காலை பொழுதாகும். இரவு மறைந்து பகல் தோன்றுங்கால் அனைவருக்கும் மகிழ்ச்சியே ...

தைத்திங்களே சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். மகர சங்கிராந்தியாகிய தைத் திங்கள் தொடக்கம் மிகவும் சிறப்பாகப் போற்றப் படுகிறது ...

வாழ்வியல் சிறப்பும், அறிவியல் கருத்தும் பொதிந்து கிடக்கும் ஒரு பண்டிகை நாள் ..

இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தை அறிவியல் ரீதியாக உணர்ந்து, "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்!' என்ற உணர்வெழுச்சியுடன் தமிழர்கள்  கொண்டாட்ட நாள் ...














South India- Tamil Nadu Pongal Festival -Boiling Rice Ceremony Pongal festival falls in the month... (thumbnail)
Pongal harvest festival is celebrated in Tiruvannamalai




Google India Logo – Makar Sankranti


11.01.14 kites10-hp

Saturday, January 12, 2013

புதியன புகுத்தும் போகித்திருநாள் ..








Pongal Sms New Hindi Messages Send Free To
மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.

"இன்று புதிதாய் பிறந்தோம்'' என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. 
பழயன கழிந்து புதியன புகுதலே  தை பொங்கலின தாத்பர்யம் 
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ
படிமம்:Festival crop India pongal Tamil word 14.jpg
தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
world4art.com - Orkut Pongal scraps, graphic and comments
bihu Cards, bihu Greetings and Glitter Graphics for Myspace, Orkut
கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. 
கரும்பின் ன் மேல்பகுதிஉப்புத்தன்மையுடனும்,  அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். 
Bogi Festival Or Bhogi Is The First Day Of Pongal
வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. 
அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.

தைமாச பல்லாக்கில் வருகிறது தித்திக்கும் திருவிழா
உள்ளங்கள் பொங்கி வழிய பொங்கல் திருவிழா
வாழ்விற்கு வசந்தம் சேர்த்த மகுடம் சூட்டி மகிழ்ந்த
பூமித் தாயே பெருமிதம்கொள்
பண்பட்ட கலாச்சாரத்தின் விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை ...
Surya Pongal Is The Second Day Of
திங்கள் பார்த்து பொங்கி வழியும் பொங்கல் பானைகளாக 
நம் அனைவரின் இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .












பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்..
சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. 
உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. 
பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.

பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள். 
வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை 
கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிக்கும் அன்புத்திருநாள் ...

பிழைப்புக்காக திரைகடல் ஓடி திரவியம் தேட திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள்  ஒன்றுகூடி மகிழும். திருநாள் ...
மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாக விவசாயிகள் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்...