Friday, January 4, 2013

கீர்த்தி தரும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு ...




shivlingshivling


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
திருக்கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளி அருள்பொழியும்  மிகப் பழைமையான திருத்தலங்களில்  தஞ்சை மாவட்டத்தின் திருக்கோயில் நகரமாம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அம்மாசத்திரம் என்னும் தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிறப்பு பெற்றது ....
பார்வதிதேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளானஅத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மரிசி ஆகிய 7 முனிவர்களும் முருகப்பெருமானால் சபிக்கப்பட்ட சாபம் நீங்க சப்தரிஷீஸ்வரர் கோவிலில் தவம் செய்து சாபம் நீங்கப்பெற்றதால், சிவபெருமான், சப்தரிஷீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஈடிணையற்ற சக்திவாய்ந்த சிவபெருமானைப் பூஜித்த சப்தரிஷிகளுக்கும்  சந்நிதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது சிறப்பு ..
ஸ்ரீ மாங்கல்ய மகரிஷி என்ற முனிவருக்கும் மற்றும் சப்தரிஷிகளுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் உடன் திருமணம் கைகூடி வரும் என்பது ஐதீகம்.
பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி  சிலைகள் உள்ளன.
 சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினால் குஷ்டம் மற்றும் தீராத நோய் நீங்கும் என்றும் கூறுகிறார்கள்.  
சித்தர்கள் போற்றிய செல்வனான சிவபெருமான் கருவறையில் கருணையே வடிவமாக ருத்ராட்சப் பந்தலின்கீழ் அமர்ந்து அருள்பாலிக்கும் திவ்ய திருக்காட்சி 




ஞானத்தின் வடிவமாக விளங்கும் ஸ்ரீ ஞானேஸ்வரனின் வாம பாகத்தைப் பெற்ற அம்பிகை, ஸ்ரீஞானாம்பிகை என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கின்றாள். 

தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு அபயம் அளித்து,வேண்டிய வரமெல்லாம் அருளும் வரப்பிரசாதியாக, ஞானஒளி பொங்கும் திருமுகத்தில் புன்னகை மலர, கண்களில் கருணை வெள்ளமெனப் பொங்கிவர, அருட்காட்சி கொடுக்கின்றாள் அம்பிகை ஸ்ரீஞானாம்பிகை.
ஸ்ரீ ஞானாம்பிகை சந்நிதியில் உள்ள மண்டபத்தில், உட்புறவிதானத்தில்  12 ராசிகள் பொறிக்கப்பட்டு இருப்பதோடு, நடுவில் பக்கத்திற்கு ஒன்பது கட்டம் எனும் அமைப்பில் 81 கட்டங்களுடன் ‘நவக்கிரக சக்கரம்’ கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்று முதல் ஒன்பதுவரை உள்ள எண்களின் தமிழ் வடிவம் இலக்கமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 

எந்த வரிசைக் கட்டத்திலும் எண்களைக் கூட்டினால் 45 என்ற எண்ணிக்கை வரும். இதன் கூட்டுத்தொகை  9 ஆகும். நவக்கிரகங்கள்(9) சுழற்சியைக் குறிக்கும் வகையில், விஞ்ஞான, வானியல் பூர்வமாக உணர்த்தும் அரிய  வடிவமைப்பு!
பன்னிரண்டு ராசிகளையும் உள்ளடக்கிய, தமிழ் எண்கள் கொண்ட ஒரே  நவ கிரக சக்கரம் கல்வெட்டு இதுவாகத்தான் இருக்க வேண்டும் ...

அம்மாசத்திரம் தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.

 காசியில் உள்ளவர்களுடைய பாவங்களையும் போக்கும் சக்தி அம்மாசத்திரம் ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு உள்ளது என்று ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணம் கூறுகின்றது. 

 ஸ்ரீ காலபைரவருக்குத் தேய்பிறை அஷ்டமி நாளில் விசேஷ ஹோமங்களும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.


பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது.

இங்கு பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பதும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

இந்த காலபைரவருக்கு ஜனவரி 4 அன்று காலை 10 மணிக்கு ருத்ராபிஷேகம், 12 மணிக்கு மகாதீபாரதனை, மாலை 5 மணிக்கு அஷ்டமி பெருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம், தீபாரதனை, வடமாலை அணிவித்தல் ஆகியவை நடைபெறும் ..

தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபாடு செய்வதால் அமைதியின்மை, மனோ வியாதிகள், செய்வினை தோஷங்கள், இனம்புரியாத பயம், பொறாமையினால் உறவினர் தொல்லைகள், நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் (Negative effects) ஆகிய கொடிய துன்பங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும் என்று மிகப் பழைமையான ஓலைச்சுவடிகளிலிருந்து அறியமுடிகின்றது. 

மனநிலை பாதிக்கப்பட்டோரும், தீயசக்திகளால் பீடிக்கப்பட்டவர்களும் இச்சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி நாளில் வந்து வழிபாடு செய்து தங்கள் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி பெறுகின்றார்கள்.

காலம் தாழ்த்தாது கைகொடுத்து, அருள்பாலிக்கும் இந்தக் காலபைரவர் திருச்சந்நிதியில் வழிபட்டால்,நமது கஷ்டங்கள் யாவும் தீரும் என்பது உறுதி.

தட்சிண கங்கை என்று பூஜிக்கப்படும் காவிரி நதிக்கரையின் தென்புறத்தில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குக் கிழக்கே ஐந்து கி.மீ. தூரத்திலும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி திருக்கோயிலுக்கு மேற்கே நான்கு கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளது அம்மாசத்திரம் திருத்தலம்.
 நன்றி :http://hinduspritualarticles.blogspot.in/
உற்சவர் ...
Devotees pulling the car of the Arulmigu Saptharisheeswarar Temple 
through the streets of Lalgudi 
Devotees pulling the car of the Arulmigu Saptharisheeswarar Temple through the streets of Lalgudi on Friday. SPECIAL ARRANGEMENT.

Thursday, January 3, 2013

நலமே நல்கும் நவக்கிரக விநாயகர்







ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை 
இந்திரன் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே! - 
விநாயகர் தன் திருமேனியில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது போல் நவக்கிரகங்களுக்கும் 
தனது உடலில் இடம் கொடுத்துள்ளார். 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! -ஔவை
வரம் தரும் நவக்கிரக விநாயகர் என்று போற்றபட்டு - திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்ரோட்டில் அமைந்துள்ள அமருதபுரி 
என்ற ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்......... 

பிரம்மாண்டமாக 8 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவக்கிரக விநாயகரின் உருவ சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.

உடலின் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ள நவக்கிரக விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது. 
நவக்கிரகங்களின் அதிபதியாக வீற்றிருக்கும் நவக் கிரக விநாயகர், தனது திருவுடலில் நவக்கிரகங்களை அடக்கி வைத்திருக்கும் பகுதிகள் 
நவக்கிரக விநாயகர் தனது குருவான சூரியனை நெற்றியிலும், 
குளுமை பொருந்திய சந்திரனை வயிற்றிலும், 
பூமிக்கு அதிபதியான செவ்வாயை வலது தொடையிலும், மகாவிஷ்ணுவின் அம்சமான புதனை வலது கீழ் தொடையிலும், உலகிற்கே குருவான வியாழனை தலையிலும், 
அசுர குருவான சுக்கிரனை இடது கீழ்கரத்திலும், 
தெற்கு பார்த்திருக்கும் காகத்துடன் கூடிய சனிபகவானை வலது மேற்கரத்திலும், 
ராகுவை இடது மேற்கரத்திலும், 
கேதுவை இடது காலிலும் கொண்டு அருள்புரிகிறார்.
நவக்கிரக விநாயகரை வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகுவதுடன், சகல செல்வங்களும் கிட்டும். 

எடுத்த காரியங் களில் வெற்றி பெறலாம். 

விநாயகரை மட்டுமன்றி, நவக்கிரகங்கள், யோக நரசிம்மர், அனுமன், கருடன் போன்ற தெய்வங்களையும் வணங்கியதற்கான பலனையும் பெறலாம்.

வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, சாதனை, சோதனைகளை தந்து மனிதர்களை ஆட்டிப்படைப்பது நவக்கிரகங்களே. 

இப்படி பாதிக்கப்படுபவர்கள் துன்பங்களில் இருந்து தெய்வ பலத்தால் மட்டுமே விடுபட முடியும். இதற்கு  நவக்கிரக விநாயகர் துணையாக அருள்பாலிக்கிறார். 
Karpaga_vinayagar_f_thangakamalavaahanam__pillayarpatti_largeGod - Vinayakar - Ganesh - Ganapati - Pillaiyar - விநாயகர் - பிள்ளையார் - கடவுள் - கணபதி
முருகன் விநாயகர் அர்த்தநாரீஸ்வரர் அற்புத தரிசனம்.