Sunday, January 6, 2013

அழகுள்ள மரங்கள்...










மனித குலத்திற்கு வரமாய் வந்தவை தாவரங்கள்..
கம்பீரத்தின் உருவாய் வளர வேண்டிய விசுவரூப மரங்கள் ....
உயரம் குறைத்து கம்பீரம் கரைத்து வேர்கள் நறுக்கி சிறு தொட்டிக்குள் 
அடைக்கும் போன்சாய் ஆக குறுக்கப்பட்டு வளர்க்கப் படும் மரங்களின் 
சந்தை மதிப்பு மிக அதிகம்.
ஜப்பானிய கலையான போன்சாய்  ஆலமரம் , அரசமரம் போன்ற நூற்றாண்டு தாவரங்களையும் ஜாடிக்குள் வளர்த்து  வியப்பளிக்கிறது...
ஜப்பானிய மொழியில் போன் என்றால் ஆழமற்ற தட்டுக்கள் 
சாய் என்றால் செடிகள் என்று பொருள் .
  
போன்சாய் மரங்கள் அழகுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், வாஸ்துக்காகவும் அலுவலகங்களிலும் வரவேற்பறையிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. 
உணவு,மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பொதுவாக பயன்படுத்துவதில்லை அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் 

100 முதல் 200 ஆண்டுகள் வயது வாழும் தாவரங்களையும் , எந்த பல்லாண்டு தாவரத்தையும் போன்சாயாக வளர்க்க முடியும் 

போன்சாய் தாவரங்கள் பரம்பரை முறையில் குள்ளமாக்கப்படாமல்
வளர்ந்து கொண்டிருக்கும் தாவரம் ஒன்றின் குருத்து இலைகள் ,வேர்கள் போன்றவற்றை கத்தரித்தல் இராசயனங்களை தூவுதல் போன்றவற்றால்  
 குள்ளமாக்கப்படுகின்றது 

மரங்களின் தண்டுபாகம் தடிமனாகவும்,  கீழ்புறத்தில் அதிகமாகவும், மேற்புறத்தில் குறைந்ததாகவும் கிளைகள் கொண்டதாக இருக்க வேண்டும். 
கிளைகளுக்கு நடுவே இடைவெளி இருப்பது அவசியம். 
காய்ந்த இலைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். 
காலை, மாலை வேளைகளில் நீர் ஊற்ற வேண்டும். 
ஆனால், தண்ணீர் தேங்க கூடாது. 
Funny Doggy Young Akita Asleep Under a Bonsai no71127
மாதத்திற்கு ஒருமுறை தண்ணீரில் கரையும் உரங்களை இடலாம். மரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொட்டியை மாற்ற வேண்டும். 

அப்போது, தடிமனான வேரை வெட்டிவிட வேண்டும். 
Funny Kitty Precious Love no71096
அலுமினிய ஒயர்களை கொண்டு விரும்பிய வடிவத்திற்கு கிளைகளை வளைக்கலாம். 

வீடுகளில், எல்லா தட்ப, வெப்ப நிலைகளிலும் போன்சாய் மரங்கள் வளரும். 

ஆல், அரசு, வேம்பு, புளி, எலுமிச்சை, சப்போட்டா, மூங்கில், நாவல், சவுக்கு, கொன்றை போன்றவை போன்சாய் முறையில் வளர்க்க ஏற்றவை. 
ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய போன்சாய் மரங்கள் வளர்ப்பு கலை ஜப்பானில் முக்கிய கலையாக உள்ளது. 

தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் போன்சாய் வளர்ப்பு பிரபலம் அடைந்துள்ளது. 

உள்ளங்கையில் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில், விழுதுகள் கொண்ட ஆலமரம், இரண்டடி உயரமே கொண்ட எலுமிச்சை, சப்போட்டா மரங்கள் காய்த்து குலுங்கும் அதிசயத்தை ரசிக்கலாம் ...
குல்மொஹர், காகிதப்பூ, இம்பால் லில்லி உள்ளிட்ட பூ மரங்கள், பார்த்துக் கொண்டே இருக்கும் படி தோற்றம் கொண்ட அழகுக்காக வளர்க்கப்படும் மரங்களும், மா, சீத்தா, கொடுக்காப்புளி, சப்போட்டா உள்ளிட்ட பழவகை மரங்களும்  கண்களையும் கருத்தையும் கவருகின்றன..

சாதாரண மரங்களைப் போலவே பூத்துக் காய்த்து, கனிகள் தருகின்றன. எல்லாமே அளவில் மிகச் சிறியதாக இருக்கும்.

சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் மரம் 
Solar bonsaï Electree


போன்சாய் கலையையும், சோலார் தொழில்நுட்பத்தையும் சேர்த்து போன்சாய் சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.

 சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு எலக்ட்ரீ என்று பெயர்...

வீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளி படும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.

சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய சோலார் பேனல்கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

 இதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட பேட்டரி தக்கவைத்துக் கொள்ளும். 

முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் எலக்ட்ரீ 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.

இதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் ...

போஸ்கோ வெர்டிகல் என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக, . எதிர்காலத்தில் வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் பசுமைக் கட்டிடங்களாக  முன்மாதிரியாக வடிவமைக்கப்பட உள்ளது..
Vertical Forest.....at Milan, Italy.
Bosco Verticale (Vertical Forest) by Stefano Boeri Architetti

Saturday, January 5, 2013

ஜெயமே அருளும் ஜெயவீர ஆஞ்சநேயர்



யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம்||

எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர்ஹனுமான்.  

 ‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல்-ஆஞ்சநேயர்-கண்ணீர் மல்க நின்று கேட்பார்.

கி.பி. 15ம் நூற்றாண்டில் மகா முனிவராகத் திகழ்ந்த ஸ்ரீஸ்ரீ வியாஸராய மஹான் 732 ஆஞ்சநேய சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார். 

மத்வகுரு வியாசராய சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு  இன்றளவும் தினசரி பூஜைகள் நடந்து வரும் கோயில் பேரூரில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் ஆலயம்...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அற்புத ஆலயம் ..
கயிலாய மலையில் சிவ பெருமானும் பார்வதிதேவியும் வில்வமரத்தடியில் அமர்ந்திருந்த வில்வ மரத்தின் மீது இருந்த வயது முதிர்ந்த முசு (குரங்கு) ஒன்று வில்வ இலைகளை பறித்து அவர்கள் மீது போட்டு கொண்டே இருந்தது...
பரமன் அந்த முசுவுக்கு அஞ்ஞானத்தை அகற்றி மெஞ்ஞானத்தை அருளினார். 
ஞானம் பெற்ற குரங்கு கீழே இறங்கி வந்து அம்மை அப்பர் தாள் வணஙகி நின்றது.
 ஈசன் நீ சிறந்த வில்வ பத்திரங்களால் என்னை அர்ச்சித்தாய். யாம் அகம் மகிழ்ந்து போனோம். நீ மனுவம்சத்தில் பிறந்து உலகை அரசாள்வாயாக என அருளினார்.

 மானிடப்பிறவி எடுத்தாலும் உலக மாயையில் மயங்காதபடி இந்த குரங்கு முகத்துடன் பிறக்கும்படி அருளும்படி வேண்டியபடி அருள் புரிந்தார். 

அரிச்சந்திர மகாராஜா வம்சத்தில் குரங்கு முகத்துடன் மானிடப்பிறவி எடுத்து  முசுகுந்த சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு ராஜராஜ சோழன் பிரதிநிதியாக கோவை பகுதியில் அரசாட்சி புரிந்து வந்தார்.

குரங்கு முகத்துடன் இருக்கும் முசுகுந்தரை உடலில் குறைபாடு நாட்டிலும் குறைப்பாடு என சிலர் விமர்ச்சித்தது மிகவும் பாதித்தது.

பிருகு மாமுனிவர் காஞ்சிமா நதிக்கரையில் ஒரு கோயில் எழுப்பி, அதில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால் உடல் குறைபாடு நீங்கும். நீ அரசாட்சிபுரியும் நாடும் சுபிட்சம் பெரும் என்றார்.

 காஞ்சிமா நதிக்கரையில் (தற்போது நொய்யல் ஆறு) சிறிய கோயில் எழுப்பி அதில் முசுகுந்த சக்ரவர்த்தியின் விருப்பப்படி மத்வகுரு வியாசாரய சுவாமிகளால் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். 
ஆதியில் அனுமந்தராய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்கியவர் தற்போது ஜெயவீர ஆஞ்சநேயர் என அழைக்கப்படும் ஆஞ்சநேயரின் திருமேனி ஒரே கல்லால் உருவானது. 

அஷ்டாம்சம் பொருந்திய அவரது திருஉருவம் தனிப்பெருமை சிறப்பாகும்.

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஜெய வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதானைகள் நடைபெறுகிறது. 
வார நாட்களில் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் தரிசன நேரங்கள்.
 மார்கழி மாதம் மூல நட்சத்திர தினத்தில் கொண்டாடப்படும்.அனுமன் ஜெயந்தி  திருவீதி உலா சிறப்பான நிகழ்வாகும். 

அன்று நடைபெறும் ஆராதனைகளில் கலந்த கொண்டு அனுமனை தொழுது ஜெயத்தோடு திகழலாம் ...

கோவை மாநகரில் பட்டீஸ்வரர் கோயிலிருந்து நொய்யல் நதிக்கு செல்லும் பாதையில் நதிக்கரையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.


ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர்,காய்கறி அலங்காரம் ...