Tuesday, October 28, 2014

வெண்ணந்தூர்"ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' ஆலயம்




பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான்முத்தென

நீளத் தாலோ தாலேலோ பாடாதே  தாய்மார் நேசத்து 
உனு சாரந் தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏசத் தகுமோதான்

ஆலோல் கேளா மேலோர் நாண்மாலானா தேனற் புனமேபோய்
 .ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே

சேலோ டேசே ராரால் சாலார்சீரா ரூரிற்  பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே  தேவே தேவப் ...... பெருமாளே.



நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், திருமணி முத்தாநதி சூழ்ந்த வெண்ணந்தூரில் அமைந்துள்ள திருக்கோயிலில் முருகன்,
 "ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' என்னும் நாமம் கொண்டு நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வெண்ணந்தூர் முத்துக்குமாரசாமி திருக்கோயில் 1920 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோயில்.  பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்காந்தத்தில் இடம் பெறுகிறது கந்தனின் வரலாறு. அதில் சூரபதுமன் வதை படலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெண்ணந்தூரில் 
"சூர சம்ஹார விழா' விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அசுர குலத்தைச் சேர்ந்த சூரபதுமன், ஈசனிடம் மிகுந்த பக்திகொண்டவன். அவன் தவம் செய்து ஈசனிடமே, ""உங்கள் சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் எனக்கு மரணம் நேரிடக் கூடாது'' என்ற வரத்தைப் பெற்றான். அதன் பின் தேவர்களுக்கும், இறையடியார்களுக்கும் பல தீங்குகள் செய்தான்.
பின்னர் தேவர்களின் வேண்டுகோளின்படி சிவ கிருபையால்,
"ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்' உலகம் உய்ய!  சூரனை எதிர்த்துப் போரிடப் புறப்பட்ட முருகப் பெருமானிடம் உலக அன்னையாகிய பராசக்தி, ""என்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி உருவாக்கிய வேல் உன்னுடன் என்றும் இருக்கட்டும்'' என்று ஆசி கூறி வேலாயுதம் தந்து அனுப்பினாள். 

முருகப் பெருமானும் சூரனை வென்று, உலகமனைத்தையும் காத்தார்.
வெண்ணந்தூர் முருகன் கோயிலில் சூர சம்ஹார விழா, கந்த சஷ்டியன்று மாலை 3.00 மணிக்குத் தொடங்கும். அப்போது முருகன் தனது தாய் பார்வதி தேவியிடம் சென்று சக்திவேலை பெற்றுக் கொண்டு புறப்படும் நிகழ்ச்சி முதலில் நடைபெறும். பின்னர் "சூர சம்ஹாரம்' முடிந்ததும், அதைக் கொண்டாடும் வகையில் வண்ண வண்ண வாணவேடிக்கைகளுடன் மிக கோலாகலமாக விழா நிறைவுறும்.

 இவ்விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள்  சுற்று வட்டாரத்திலிருந்து வெண்ணந்தூர் வருவார்கள்.
ஆடி மாத கடைசி வியாழக்கிழமையன்று சுப்பிரமணியருக்கு பெரிய விழா எடுத்து கோலாகலமாக நடத்தப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் விழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. சூரசம்ஹாரம் விழா திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறுவதுபோல் இங்கும் நடைபெறுகிறது.


வெண்ணந்தூரில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு முத்துக்குமாரசாமியின் பேரருளைப் பெறலாம்.

  சஷ்டியன்று நடைபெறும் விசேஷ வழிபாடு சிறப்பு பெற்றது..


திருமணத் தடையுள்ளவர்கள் சஷ்டியின்போது வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்பது  ஐதீகம்..




Monday, October 27, 2014

கருணையுடன் காக்கும் காளிப்பட்டி கந்தசுவாமி

























































SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் 
சேலம்-திருச்செங்கோடு சாலையில் ராசிபுரத்தை 
அடுத்துள்ள காளிப்பட்டியில் புகழ்பெற்ற  முருகன் கோவில் உள்ளது. 
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
தோகை மயிலேறிவரும் சேவற்கொடியோனாக, 
சுந்தரத் திருநீறு பூசிவரும் ஆறுமுகனாக ,
காவடிகள் ஏந்திவரும் பகதர்களின் மனகுறைகள் களைபவனாக , செல்வமும் புகழும் அள்ளித்ரும் பரம்பொருளாக, 
வள்ளிதெய்வானை மணாளனாக, நச்சுப்பாம்பால் தீண்டப்பட்டோரின் உயிர்காக்கும் உத்தமனாக  காளிப்பட்டி கந்தசுவாமி அருள்புரிகிறார்..

ஸ்தல வரலாறு விளக்கும் படங்கள்...
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
பழனி மலையிலிருந்து முருகனை காளிப்பட்டி வரவழைக்கும் வரலாறு..
தைப்பூசத்தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.. தேர்த்திருவிழாவில் வண்ண வண்ண தேர்மிட்டாய் மிகவும் பிரபலம் .. 











காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர்.
பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம். 
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
 கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். 

வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
ஆலய மேல் விதானத்தில்  கருத்தைக்கவரும் அற்புத ஓவியங்கள்
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் `மை' பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.
 SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )
வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது 
காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலையெல்லாம் 
பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.
SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )SRI KANDASWAMY TEMPLE,  KALIPATTI, ( distance from Salem 20kms )