Showing posts with label ஐப்பசி மாத உற்சவம். Show all posts
Showing posts with label ஐப்பசி மாத உற்சவம். Show all posts

Wednesday, November 5, 2014

ஐப்பசி விஷு திருவிழா






srivilliputhur_swami.jpg (460×286)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று நடைபெறும் ஊஞ்சல்  உற்ஸவத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் ஸ்ரீரங்கமன்னார். 
மழையோ, வெயிலோ மனிதர்களும், இதர உயிரினங்களும் தாங்கும் சம அளவில் இருக்க வேண்டும்;, எது அதிகமானாலும், துன்பம் தான். 

 காலநிலையை சமநிலையில் வைத்திருக்குமாறு வேண்டும் திருநாளே, விஷு பண்டிகை! விஷு என்றால், சமம்.
இந்தியாவில், விஷுவை இரண்டு முறை கொண்டாடுகிறோம்.

சித்திரை விஷு;  மாதத்தில் கடும் வெயில் அடிக்கும். 

ஐப்பசி விஷு; மாதம் மழையின் தாக்கம் அதிகமாகும். அளவுக்கு மீறிய வெப்பம், மழை இரண்டுமே உயிர்களைப் பாதிக்கும். இது சமநிலையில் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் நாள் தான் விஷு!
ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால், ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் ஓட வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டுமென்று வேண்டுமுன், நதிகள் பிறந்த வரலாற்றையும், அதன் புனிதத்தையும் அறிந்து கொண்டால், ஆறுகளை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும்.

தமிழகத்தின் உணவு ஆதாரத்தை பாதுகாப்பது காவிரி; தெற்கே இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி. இந்த இரண்டு நதிகளையும் உருவாக்கியவர் அகத்தியர் என்கிறது, தாமிரபரணி மகாத்மியம் என்ற நூல்.

இமயமலையில், சிவபார்வதி திருமணத்தைக் காண உலகமே ஒன்று திரண்டது. இதனால், வடக்கே தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. உலகை சமநிலைப்படுத்த, அகத்தியரை தெற்கேயுள்ள பொதிகை மலைக்குச் செல்லும்படி சிவன் உத்தரவிட்டார். தன் திருமணக்காட்சியை அங்கேயே காட்டுவதாகவும் வாக்களித்தார். இதனால், தன் மனைவி லோபமுத்திரையை, நீர் வடிவாக்கி, கமண்டலத்தில் அடைத்த அகத்தியர், கமண்டலத்துடன் தெற்கே வந்தார். 
குடகுமலைக்கு வந்த போது, விநாயகர் காகம் வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டார். கமண்டலம் சரிந்து தண்ணீர் ஓடி, மிகப்பெரும் ஆறாக உருவெடுத்தது. அது சோலைகளின் நடுவே பரந்து சென்றதால், 'காவிரி' ஆனது. 'கா' என்றால் சோலை; 'விரி' என்றால் பரந்து செல்லுதல்.
கவிழ்ந்த கமண்டலத்தை எடுத்த அகத்தியர், அதில், மீதி தண்ணீர் இருப்பதைக் கண்டார். அதை எடுத்துக் கொண்டு பொதிகை வந்தவர், மலையின் உச்சியில் மீதமிருந்த தணிணீரை ஊற்றினார். அது, தாமிரபரணி என்னும் சிறு நதியாக உருவெடுத்தது.

இந்தப் புராணக்கதை மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்ட அறிவுரையையே கருத்தில் கொள்ள வேண்டும்.
உலக நன்மை கருதி, ஒரே ஒரு நபர் தன் ஆசையைத் தியாகம் செய்தால் கூட போதும், உலகமே பயன்பெறும் என்ற அரிய தத்துவம் இதில் புதைந்து கிடக்கிறது.
elephantgod.jpg (460×286)
நதிகளின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற 
எண்ணம் வந்தால்தான். நதிகளின் புனிதத் தன்மையும் புரியும்.

ஐப்பசி விஷு நன்னாளில், புனித நதிகளில் நீராடுவது புண்ணியம். இந்நாளில், நம் தேசத்திலுள்ள அத்தனை நதிகளின் கதையையும், புராண வரலாற்று பின்னணியுடன் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், அனைத்து நதிகளும் பெருகி ஓட நம் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்தித்துக்கொள்வோம்..!
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விஷு திருவிழாவில், நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுவது கண்கொள்ளாக்காட்சிகத்திகழுகிறது..!

குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா தொடங்கியதும் திருவிலஞ்சிக்குமாரர் குறறாலநாதர் கோயிலுக்கு வருகைபுரியும் நிகழ்ச்சி நடைபெறும்..!

நாள்தோறும் திருவிலஞ்சிக்குமாரர், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதியுலா வருதல் நடைபெறும்..
குற்றாலநாதர் கோயில் ஐப்பசி விஷு திருவிழாவையொட்டி  நடைபெறும் தேரோட்டம்.
குற்றாலநாதர் கோயில் ஐப்பசி விஷு திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
 விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் ஆகிய 4 தேர்களை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேர்திருவிழா சிறப்பாகும்..
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விஷு திருவிழாவில், நடராஜமூர்த்திக்கு நடைபெற்ற பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை.
தென்னகத்தின் அயோத்தி எனப் போற்றப்படும் கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமர், சீதை ஒரே பீடத்தில் பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். இந்தக் கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் ராமாயணக் காட்சிகள் மூலிகை வர்ணத்தால் வரையப்பட்டுள்ளன.

உற்சவர் ராமருக்கு ஒரு அடி உயரத்தில் பச்சைக்கல் பதித்த வெள்ளி கிரீடம்.

Saturday, October 19, 2013

ரிஷபத்துறை உற்சவம்




பார்வதி மயில் வடிவில் இருந்த காலத்தில், பரமன் பூவுலகைச் சுற்றிப் பார்க்க எண்ணி ரிஷபத்தில் ஏறிப் புறப்படும்போது, மற்ற தேவர்களும் தங்கள் வாகனங்களிலேறிப்பின்தொடர்ந்தார்கள்.
அனைவரையும் முந்திக் கொண்டு வேகமாகச் சென்று காவேரியின் நடுவில் நின்ற ரிஷபம், “சிவபெருமானைச் சுமக்கும் நான்தான் பெரிய வாகனம்’ என்ற கர்வத்துடன் மற்ற வாகனங்களைப் பார்த்ததை கவனித்த இறைவன் நந்தியின் கர்வத்தை அடக்க சிறிது அழுத்தம் தரவே, 
ரிஷபம் பாதாளத்தில் சென்று துன்பப்பட்டது.



உடனே ரிஷபம் பரமனிடம்  மன்னிப்புக் கேட்க, காவúரி நதியின் நடுவே மேற்கு முகமாய் இருந்து இங்கு நீராட வருபவர்களுக்கு வேண்டியதை அளிப்பாய்’  என்று ஆசி தந்து, ரிஷபம்  மேலே வர அருளினார்.

தென்னாட்டின் காசி எனப் புகழ் பெற்ற  இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலாஸ்னானமும், மாதம் முழுதும் மயூர நாதசுவாமி நகர்வலம் வந்து 'தீர்த்தம்' வழங்கும் விழாவும் இனிமையானவை.

அம்பாள் மயிலாக இருந்து தவம் புரிந்ததாகக் கூறுவதால், அந்த மயில் ஆடும் காவிரிக் கரை என்பதால் இவ்வூர் மயிலாடுதுறை என வழங்கப் படுகிறது.

ஐப்பசி மாதத்தில் இவ்வூர் காவிரியில் கங்கையும் சேர்ந்து வருவதாக புராணங்கள் சொல்வதால் அந்த மாதம் முழுவதும் காவிரி ஸ்னானம் புனிதமானது."ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது"

இதனால் மயிலாடுதுறையிலுள்ள  துறை ரிஷபத்துறை என்று பெயர் பெற்றது.
மக்கள் திணித்த பாவ மூட்டைகளின் விளைவால், உருமாறி கறுமை நிறத்துடன் பார்க்க அருவருப்பாகத் தோற்றமளித்த  கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவரும் மீண்டும் பழைய நிலைக்கு வர, ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மயிலாடுதுறை  தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதத்தில்   நீராடுமாறு அதிலும் ஐப்பசி அமாவாசை மிகவும் சிறப்பானது’ என்று  பிரம்மன் ஆலோசனை அருளினார். 

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவேரியில் ரிஷப கட்டத்தில் நீராடி தங்கள்மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள் என்று  புராணம் கூறுகிறது.
தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசையைப்போல்  ஐப்பசி மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக்  புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீர்க்கடன்களை அளித்து, தம் முன்னோர்களின் பாவங்களையும் போக்க சிறப்பு பூஜை செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள்.
ஐப்பசி அமாவாசையன்று  காவேரி ரிஷபக் கட்டம் விழாக் கோலம் காணும். அன்று கங்கையை விட மிக உயர்ந்தவளாகக் காவேரி திகழ்கிறாள். 

மயூர நாதர் கோவிலில் உற்சவமும் நடைபெறுவதால், சுற்று வட்டாரத்திலுள்ள கோவில்களிலிருந்து உற்சவமூர்த்திகள் ரிஷபக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரி காண்பார்கள்.
மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும்.

அமாவாசை தீர்த்தவாரியும்,  ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்த வாரியும் மிகச்சிறப்பாக நடைபெறும்.

தீர்த்தவாரியை முன்னிட்டு

அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி, 
அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்ப சுவாமி, 
விசாலாட்சி  சமேத காசி விஸ்வநாத சுவாமி, 
ஞானாம்பிகை சமேத வதானேஸ்வர சுவாமி, 
மாயூரம் பரிமள ரங்கநாத சுவாமி 

ஆகிய பஞ்ச மூர்த்திகளும் காவேரி துலாக் கட்டத்தில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

மயிலாடுதுறையில்  ஐப்பசி மாதம் முழு வதும்
துலா ஸ்நானம் மிகவும் விசேஷம்.

ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவேரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
ஐப்பசியில் காவேரியில் ஒருமுறை நீராடினால்- காவேரியில்  மூன்று முறை நீராடிய பலனும்; யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.

பாரதத்தில் உள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, தங்களிடம் மக்கள் கரைத்த பாவக் கறைகளைப் போக்கிக் கொள்வதால், காவிரி தன்னிடம் நதிகள், மக்கள் கரைத்த பாவச் சுமைகளை திருமங்கலக்குடி திருத் தலத்திலும் மாயூரத்திலும் உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து) போக்கிக் கொள்வதாக ஐதீகம்.