Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Wednesday, October 22, 2014

உலகம் முழுவதும் கொண்டாடும் உல்லாசத்தீபாவளி



 
அஸத்தோமா சத்கமயா தமஸோமா ஜோதிர்கமயா 
ம்ருத்யோமா அமிர்தம்கமயா ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

 என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  

இருள் அகன்று, ஒளி ப்ரகாசிப்பதும். அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்குவதும்தான் தீபாவளிப்பண்டிகையின் முக்கியத்துவம்

 இன்ப ஒளியேற்றி தீமையென்னும் இருளகற்றி
திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள்.
Animated Diwali Computer Images
“தமஸோ மா ஜ்யோதிர்கமய’ எனும் வேதவாக்கிற்கிணங்க, இருளிலிருந்து பேரின்பப் பேரொளிக்கு அழைத்துச் செல்லும் தீபாவளித் திருநாளுக்கு தத்துவங்கள், காரணங்கள், வழிபாட்டு நியதிகள், நீராடும் முறைகள் ஏராளம் உண்டு
துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகத் தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞானமும், அறியாமையும், அஹங்காரமும் அழிந்ததற்கு அடையாளமாக எல்லோரும் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி தீபங்கள்   ஏற்றி   வாண வேடிக்கைகளுடன்  கொண்டாடவேண்டுமென்று அந்த அரக்கன் கேட்ட வரத்தின்படி கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய்   காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது..
.
இறைவனைப் பிரிந்து வருந்திய உமாதேவி, கேதாரகௌரி விரதம் கடைப்பிடித்து அவருடன் இணைந்ததும் தீபாவளி நாளில்தான்.

கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால் கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த் தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி.

சாவித்திரி, எமனோடு வாதிட்டு சத்தியவானை உயிருடன் மீட்ட நாளும் இதுவே.நசிகேதன், எமலோகம் சென்று வரம்பெற்று திரும்பிய நாளும் இதுதான்.

வாமனரால் பாதாள உலகத்திற்கு அழுத்தப்பெற்ற மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டு மக்களைக் காண பூமிக்கு வரும் நன்னாளே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

சமணர்கள் மகாவீரர் மகா நிர்வாணம் அடைந்த நாளாக
 தீபாவளியைக் கொண்டாடு கின்றனர்.

ராமபிரான் இராவணனை வென்று சீதையை மீட்டுவந்த  
திருநாளாக,ராமரின் வெற்றித்திருநாளாக  
தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது
தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து முதலில் விஷம் தோன்றியது. அதை உலகம் உய்யும் பொருட்டு சிவபெருமான் உண்டார். 

அடுத்து பல பொருட்கள் தோன்றின. அதில் பாற்கடலிலிருந்து மகாலட்சுமியும் தோன்றினாள். ஸ்ரீமகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். 

பிறகு, தன்வந்திரியானவர், கீழ் வலது கையில் அட்டைப்பூச்சி, இடது கையில் அமிர்த (மூலிகை) கலசத்துடனும், மேலிருகைகளில் சங்குசக்கரத்துடன் தோன்றினார். இவரே ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்த நிகழ்ச்சிகள் எல்லாம் தீபாவளித் திருநாளில் நடந்ததாகப் புராணம் கூறுகிறது.

பகீரதன், தன் முன்னோர்கள் புனிதமடையவேண்டி தேவலோக கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த நாளும் தீபாவளித் திருநாள்தான். 

துலா மாதமான ஐப்பசி மாதத் தேய்பிறையில் திரயோதசி நாளில், மகாபிரதோஷ வேளையில் பூஜை செய்து, எமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வழிபடவேண்டும். 

எமதர்மராஜனை மனதார பிரார்த்தனை செய்வதால் துன்பங்கள் நெருங்காது. அகால மரணம் ஏற்படாது.  தீவினைகளினால் நரகத்தில் துன்பப்படும் முன்னோர்கள் சுவர்க்கம் செல்லவும் இந்த எமதீபம் அருள்பாலிக்கும். வாழ்வு நலம்பெறும். எடுத்த காரியத்தில் தடைகள் ஏற்படாது” 

நரகசதுர்த்தியான தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடவேண்டும். அன்று எண்ணெயில் திருமகளும், எல்லா நீர் நிலைகளிலும் கங்கையும் உறைகிறது.

எனவே, எண்ணெய் தேய்த்து புனித நீராடினால் கங்கையில் நீராடிய பலனும், திருமகள் கடாட்சமும் கிடைக்கும். கங்கா ஸ்நானம் முடிந்ததும் புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்கள் படைத்து இறைவனை வழிபட்டால் எல்லாம் நலமாகும்.
தீபாவளிப் புனித நாளில் அரப்புப் பொடியில் கலைவாணியும், 
சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கௌரியும், 
மலர்களில் மோகினிகளும், புத்தாடைகளில் விஷ்ணுவும், 
பட்சணங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் உறைகின்றனர்..
புனிதமான தீபாவளித் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடி 
மனிதநேயம் வளர்க்கிறோம்..!.

Sunday, October 19, 2014

காசியில் தீபாவளி கொண்டாட்டங்கள்





அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||

 அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே! 
சங்கரனின் பிராண நாயகியே!

மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட
 பிட்சை இட்டு அருள்வாய்!


மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||

 எனக்குத் தாய் - பார்வதீ தேவீ! தந்தை - மகேஸ்வரன்!
சொந்தங்கள் - சிவபக்தர்கள்! என் தேசம் - மூவுலகமுமே!

தினமும் வீட்டில் அன்ன பூரணியின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால் தேவியின் திருவருளால் செல்வம் பெருகும், தான்ய வளம் கொழிக்கும், உணவுக்கு பஞ்சம் இருக்காது, நல் வாழ்வு கிட்டும்.

தேவி ஸர்வவிசித்ர ரத்னரசிதா தாக்ஷாயணீ சுந்தரீ
வாமாச்வாது பயோதரா ப்ரியகரி ஸெளபாக்ய மாஹேஸ்வரி
பக்தாபீஷ்டகரி சுதாசுபகரி காசிபுராதீஸ்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக கங்கை நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் காசி அல்லது பனாரஸ் அல்லது வாரணாசி நகரம் தேவ் தீபாவளி கொண்டாட்டத்தின் போது அழகு மிளிர காட்சியளிக்கும். 
வாரணாசியில் ஆண்டுதோறும் தேவ் தீபாவளி பண்டிகை கங்கை நதியையும், காசி விஸ்வநாதரையும் மரியாதை செலுத்தும் விதமாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 
இங்கு கொண்டாடப்படும் மஹாஉத்சவம் என்ற பண்டிகையின் கடைசி நாளான தேவ் தீபாவளியின் போது நகரமெங்கும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 
அதோடு கங்கை ஆற்றில் ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் மிதக்கவிடப்படும். அப்போது மாலைவேளையில் நடக்கும் கங்கா ஆர்த்தியை பார்க்க கண்கோடி வேண்டும்

கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் தேவ் தீபாவளி பண்டிகையின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படி 84 படித்துறைகளும் வண்ண விளக்குகளால் மிளிரும் போது படகுப்பயணம் மேற்கொள்வது சுற்றுலாப் பயனிகளைடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. 
இந்த அலங்கார விளக்குகளின் அணிவகுப்பு கங்கை நதிக்கு செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது. 
அதோடு பூமிக்கு வரும் தேவதைகள் இதன் மூலம் 
மகிழ்ச்சி அடைவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. 

Tuesday, November 13, 2012

தித்திக்கும் தீபாவளியில் திருமகள் பூஜை








ஒளி விளக்குகள் இல்லம் தோறும்  
ஒளிவீசிப் பிரகாசிக்க  உள்ளமெல்லாம் 
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி 
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரம ....
சித்திர பூப்போலே சிதறும் மத்தாப்புடன் 
தீயேதும் இல்லாமல் வெடித்திடும்  கேப்புடன்  
மகிழ்ச்சியாக  முகமோ மலரோ இது என்ன ரசிப்பு  என்று  குழந்தைகள் உற்சாகமாக  மின்னொளி வீசும் எழில் பிரவாகமாக கொண்டாடும் இனிய நாள் .தீபாவளி..
முத்திரை பசும்பொன்னாய் வல்லமை சேர வளமை பொங்க திருமகளின் அவதார நாளான தீபாவளியன்று  மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பானது.


திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் 

தீப வடிவில் தீப லக்ஷ்மி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்கச் செய்வாள்

இல்லங்களில் ல்க்ஷ்மி பூஜையும்  லக்ஷ்மி குபேர பூஜையும்  செய்வது சிறப்பான நன்மைகள் அளிக்கும் ... 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த போது மகாலக்ஷ்மி தோன்றியதால் தீபாவளியன்று செய்யும் லக்ஷ்மி பூஜை  மகாலக்ஷ்மியின் பரிபூரண அருள் கிடைக்கும் 

 வாமன அவதாரத்தில் கண்ணன் மூன்றடி மண் கேட்டு மாபலியை மண்ணுக்குள் தள்ளிய வரலாற்றின் நாள் ....

வடக்கில் இராவணனை இராமர் வென்று அயோத்திக்குத் திரும்பிய தினமாக தீபாவளி திகழ்கிறது...
அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்துகொண்டு இறையருளால் துன்பங்கள் எல்லாம் நீங்கி  மெய்ப்பொருள் தத்துவத்தை, தகுந்த குருநாதர் விளக்கிச் சொன்னால், அது தெளிவாக விளங்கும்’ என்கிறார திருமூலர். '
தனக்குப் பாழ்அற்றறிவு இல்லாத உடம்பு’ என்கிறது நான்மணிக் கடிகை. மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.


செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியின் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தை உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வில் செழிபடையலாம்...
ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள்   பொருள் செல்வம் , வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம்  ஆகிய அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் பரிபூரண ஆனந்தத்தை அடைய முடியும் 

ராஜாதிராஜனாக யட்ச கணங்களின் தலைவனாக,  செல்வத்தை வழங்கும் சங்கநிதி, பதுமநிதி என்னும் பிரதிநிதிகள்  இருபுறமும் வீற்றிருக்க வடதிசைக்கு உரியவராக அஷ்டதிக் பாலகர்களில் இடம்பெற்ற குபேரனை .தீபாவளி மட்டுமின்றி, வெள்ளிக்கிழமைகளிலும் இவரை ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம என 108 முறை சொல்லி மல்லிகை மலர் தூவி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 



ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மிம்யை

கமல ஹாரின்னைய சிம்ஹவாஹின்யை

தனகரிஷ்ன்யை ஸ்வாஹா.



செல்வத்தின் அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற நாள் தீபத் திருநாள்.
குபேரனை பூஜித்தால் செல்வம் தழைத்தோங்கும் 
திருவேங்கடவனுக்கே செல்வம் அளித்து கை கொடுத்து உதவிய குபேரன் விஷ்வரஸ் என்பவருடைய மகன். 

லட்சுமி தேவியின் பரமபக்தனாக  தேவியின் பூரண கடாட்சம் கிடைக்கப்பெற்று பெரும் செல்வந்தனாக மாறியவன்..

ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய 
தநதா ந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத் திம் மே 
தேஹி தாபா யஸ்வாஹா

 என்னும் - குபேர மந்திரத்தை 108 முறை ஜபித்து வாழ்க்கையில் வறுமையாகிய இருளை விரட்டி, செழிப்பாகிய ஒளியைக் கொண்டு வரலாம்...


காயேன‌ வாச‌ ம‌ன‌சேந்திரியை வா 
புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்


க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை 
நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி !1

பாற்கடலைக் கடையும்போது திருமாலின் அம்சமாக கையில் அமுத கலசம், வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய மருத்துவக் கடவுளான .  தன்வந்திரி பகவானை. வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட வேண்டும்.

பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதிகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோபூஜை செய்வது சிறப்பு.

துலாமாத அமாவாசை தினம் முன்னோர் வழிபாட்டிற்குரிய 
முக்கியமான தினம்...
 அவரவர் இல்லத்து முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடைதானம் செய்வதும் இல்லத்து இனிமையை  பொங்கச்செய்யும் ...

குல தெய்வ பூஜை  வாழ்வு பிரகாசிக்க வைக்கும் 

பூர்வஜென் மத்தில் பூமிதேவியாக இருக்கும்போது பிறந்த நரகாசுரன் பெற்ற வரத்தின்படியே தாயான தன் கையாலே  இறந்த நாளை மக்கள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடையுடன் இனிப்பு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் ; அன்று மட்டும் கங்கை எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிக்க வேண்டும் என்றும் திருமாலிடம் வரம் பெற்ற  நாள்  தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.....


பூமா தேவியின் அம்சமாக கிருஷ்ண டன் சென்று நரகாசுரனை அழித்த 
சத்யபாமாவை வீரலட்சுமியாக  வழிபடுவது வட இந்திய வழக்கம்.. வாழ்வில் வரும் தடைகள் விலகும் ...

கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், ரோகம் ஏற்படாது. 

. தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். 

அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான்.

அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.

எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில்அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.


தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்....
உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். 
மகாலக்ஷ்மியும் பாற்கடலில் தானே அவதரித்தாள் !

கங்கா ஸ்நானம் செய்தபின்  மகாலக்ஷ்மி  பூஜையில்  வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்க  வீட்டில் செல்வம் பெருகும்;

காசியில்  கங்கையில் நீராடி  அன்னபூரணியை தங்கமயமாக- முழுமையாகத் தரிசிக்கலாம். அன்று இரவு லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி வலம் வருவாள். 

பவனி முடிந்ததும் அந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். தங்கத்தாலான கால பைரவரும்  தீபாவளி  தினத்தில் மட்டுமே வீதியுலா வருவார்.

Sri Lakshmi Kubera Yanthra

Moola Mantra

Om Shreem Hreem Im Kubera Lakshmiai 

Kamaladharinyai Dhana Akrashinyai Swaaha


http://www.vallamai.com/special/deepavali/diwali-2012/160
வல்லமை சிறப்பிதழில் வெளியான ஆக்கம்..