Showing posts with label நரசிம்மர். Show all posts
Showing posts with label நரசிம்மர். Show all posts

Thursday, May 15, 2014

மெலட்டூர் பாகவத மேளா ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி




ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே! - நம்மாழ்வார் பாசுரம் ..!

தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில்    நரசிம்ம ஜயந்தியையொட்டி, பாகவத மேளா அபிஷேகம், லஷ்மி நரசிம்ம ஹோமம், லட்சார்ச்சனையுடன் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது..!

ஆண்டுதோறும் 5 நாடகங்களை தேர்வு செய்து தொடர்ந்து 5 நாட்களாக இந்த பாகவதமேளை நடைபெறுகிறது

மிகப்பிரசித்தி பெற்ற பிரகலாத சரித்திர நாட்டிய நாடகம்   வள்ளி திருமணம், சதி சாவித்ரி, ருக்மணி கல்யாணம் என பல்வேறு நாடகங்கள் நடைபெறும்.. 

பாகவத மேளா நடக்கும் சமயம் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது, நாடகம் பார்க்க வருபவர்களுக்கும் நாடகத்தை நடத்துபவர்களின் வீட்டிலேயே உணவளிக்கப்பட்டு, தங்கும் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவது சிறப்பு..!

மெலட்டூர் நரசிம்ம ஸ்வாமிகள் சுவாமிகள் ஆலயத்திலிருந்து நரசிம்ம அவதார முகமூடி (மாஸ்க்) ஒரு சப்பரத்தில் எடுத்துவரப்படுகிறது. அதற்கு சில பூஜைகள் செய்யப்படுகிறது. 
தஞ்சையிலுள்ள மெலட்டூரில் நிகழ்த்தப்படும் பாகவத மேளாவில் நரசிம்ம வேடம் தரிப்பவர் அணிந்து கொள்ளும் நரசிம்ம முகம் ஆண்டு முழுவதும் வழிபடப்படுகிறது.

முறையான கர்நாடக சங்கீதத்தில் அமைந்த தெலுங்கு கீர்த்தனைகளைப் பாகவதர்கள் பாட, முறையாக பரதம் கற்றவர்கள் பாத்திரங்களாய் மாறி நடிக்கும் அந்த நாடகத்தில் எள்ளளவுகூட தமிழுக்கும், பெண்களுக்கும் இடமில்லை. ஆண்கள்தான் பெண் வேடமிடுகின்றனர். 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளவர்கள் 
என பலரும் நடிப்பது வழக்கம்.

நடத்துபவர்கள், நடிப்பவர்கள், பாடுபவர்கள் அனைவருமே பாகவதர்கள்,  நடிக்கப்படும் கதைகள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து எடுக்கப்பட்டவை, எனவே இதற்கு பாகவத மேளா என்று பெயர் ஏற்பட்டது."
சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும் பாகவத மேளா நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்திருக்கிறார்..

முதலில் விநாயகர் வழிபாடு முடிந்து பாத்திர பிரவேசம் ஆரம்பத்தில் பாகவதர்கள் பாட ஆரம்பிக்கின்றனர்
ஹிரண்யகசிபுவின் பிரதாபங்கள் தெலுங்கு கீர்த்தனைகளாக வெளிப்பட அவைக்கு வரும் ஹிரண்யகசிபுவின் வீரம், பராக்கிரமங்கள், திமிர், ஆணவம் அத்தனையும் நடனமொழியில், உருளும் பார்வையில்  கண்முன் விரிகிறது. 

அடுத்து லீலாவதியின் அறிமுகம்... அத்தனை அழகான பெண், அவளது குணம், திறமைகளை அடுத்து பிரகலாதனின் பண்பும் பக்தியும், தொடர்ந்து அசுரகுரு சுக்ராச்சாரியார் எனப்பாத்திரப்பிரவேசங்கள் முடிந்து கதைக்குள் நுழையும் போது நேரம் நள்ளிரவைத்தாண்டிவிடுகிறது.

கணவனுக்கும் பிள்ளைக்கும் மத்தியில் சிக்குண்டு லீலாவதி நடத்தும் பாசப்போராட்டம், உலகிடம் ஜெயித்து மகனிடம் தோற்றுப்போகும் ஹிரண்யகசிபுவின் அவஸ்தை அதைதொடர்ந்து அவனுக்கு எழும் ஆத்திரம், பிரகலாதனின் பரிபூரண பக்தி என் பிரகலாத சரித்திரம்  கண்முன்னே நிகழ்வதான உணர்வையும் -பிரகலாதனிடம் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு மவுனசாட்சியாக பார்வையாளர்களை  கலைஞர்கள் மாற்றிக்கொண்டிருப்பது விந்தைதான்...!. 
ஹிரண்யனைக் கட்டுபடுத்தவும் முடியவில்லை, லீலாவதியின் கண்ணீரையும் நிறுத்தமுடியவில்லை கையறுநிலையில் தவிக்கவைக்கிறார்கள்.. 

 நாடகத்தின் உச்சகட்டமாக தூணிலிருந்து நரசிம்மஸ்வாமிகள் எழும் காட்சி நிகழும்போது கிழக்கில் சூரியன் எட்டிப்பார்க்க  பொழுது விடியு ஆரம்பித்துவிடுகிறது..!. 

சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் நரசிம்மஸ்வாமிகளின் முகமூடி அணிந்துகொண்டு அவதாரமெடுக்கிறார். "கலைஞன் முதிர்ச்சியடைய அடைய அவனது கலை இளமையாகிறது

பொங்கி.. ஆர்ப்பரித்து, திமிறி ஹிரண்யனின் நெஞ்சைக்கிழிக்க பரபரத்த அவரை இருக்கையோடு சேர்த்து இறுக்கி கட்டிவைக்கிறார்கள்...

ஐந்து இளைஞர்கள் நரசிம்மரை இறுக்கிப்பிடித்தும் அவரை ஒன்றும் செய்யமுடியாமல் அவர்  ஆக்ரோஷமாய் உறுமிக்கொண்டிருப்பது நடுக்கம் தரும்..! 

ஹிரண்யகசிபு வேடமணிந்தவரை மேடையை 
விட்டு அகலச்சொல்லிவிடுகிறார்கள். 

சாந்தி.. சாந்தி எனப் பார்வையாளர்களும், நடிகர்களும் 
அவரிடம் கெஞ்ச ஆரம்பிக்கிறார்கள்... 

அவரது திமிறலை  அடக்க இயலாமல்.  பிரகலாதனை 
அவரது மடியில் அமரச்செய்கின்றனர்...

பிரகலாதன் "ஆசிர்வாதம் பண்ணுங்கோ... சாந்தமூர்த்தி நீங்க.. 
அமைதி.. அனுக்கிரகம் பண்ணுங்க" என்று தமிழில் கெஞ்ச ஆரம்பித்தும் நரசிம்மரது ஆவேசம் அடங்குவதாகத் தெரியவில்லை.
நரசிம்மஸ்வாமிகளுக்கு தீப ஆராதனைகள் காட்டப்பட்டபின் 
கொஞ்சம் ஆசுவாசமாகிறார். 
பார்வையாளர்கள் அவரிடம் குங்குமபிரசாதம் வாங்கிக்கொள்வார்கள்... 
நரசிம்மஸ்வாமிகளும், அவரது முகமூடியும் சிறிய சப்பரத்தில் 
மேளம் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது..!

ஆண்டாள் திருக்கல்யாணம்

வாரணம் ஆயிரம்..






Wednesday, April 23, 2014

உடனே உதித்த உத்தமர் உக்கடம் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹா





 உக்கடம் கோயம்புத்தூர் நரசிம்ஹர் லக்ஷ்மி நரசிம்மர் லட்சுமி ஸ்ரீ
Sri Lakshmi Narasimhaswami temple, Ukkadam, (Rahu Parihara Sthalam)
மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்யா நரசிம்ஹா, த்ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்யே

SRI LAKSHMI NARASIMHAR, UKKADAM, COIMBATORE, 

சர்வம் விஷ்ணுமயம் ஜகத்”.

புண்ணிய ஸ்தலங்களை மனிதர்கள் தாங்கள் நினைத்த இடத்தில் ஏற்படுத்துவதில்லை.

பூமியின் உள்ளே மனித ஜீவாதார சக்திக்கு தேவையான ஒரு நரம்பு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறுக்கே ஓடி இருக்குமாம். அதற்குத் தான் தரித்ரீசாரம் எனப் பெயர். அது நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு சக்தியின் பெரும் பகுதியாகும்.  

இத்தகைய இடம் நம் இந்தியாவில் சிறப்பாகத் தென்பகுதியில் அதிகமாக இருப்பதால்தான் இந்தியாவையே உண்மையான ப்ருத்வி (பூமி) என மகாகவி காளிதாசனும் கூறினார்.

ஆகவேதான் அந்த நரம்பு இழையோடும் தென்னாட்டின் பகுதியில்
ஆலயங்கள் பல தோன்றின.

தானே உகந்து எழுந்தருளிய தலம் சுயம்வர்த்தம் எனப்படும்.

புராணங்களின்படி ஏற்பட்ட  தலம் புராண ஸ்தலம்.

பெருமாள் மீது ஏற்பட்ட பக்தி மேலீட்டால் கோவையின் இதயப்பகுதியான உக்கடம் தலத்தில்  கட்டப்பட்டுள்ளதால்  அபிமான தலமாகத்திகழ்கிறது..

ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப் பட்டதை அபிமான ‘ஸ்தலம்’ என்பர்.

அதிலும் ஸ்ரீ நரசிம்மாவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. 

நரசிம்மப் பெருமானுக்கு முன்னே இருந்தவர்களெல்லாம் மிருகமாக மட்டும் அவதரித்தவர்கள். நரசிம்மருக்குப் பின்னே இருந்தவர்கள் எல்லாம் மனுஷ்யர்களாகவோ தேவர்களாகவோ அவதரித்தவர்கள். 

ஆனால் நரசிம்மாவதாரம்தான் மிருகத்வம் நரத்வம் மிருகமான தன்மை, மனிதனான தன்மை இந்த இரண்டும் சேர்ந்திருக்கிற அவதாரம். 
இதை ‘சிதாக்ஷீர நியாயம்’ என்று சொல்வார்கள்.

உக்கடம்  ஸ்ரீலஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் தற்போது புண்ருத்தாரணப்பணிகள் நடைபெற்று ராஜகோபுரமும் கட்டப்பட்டு வருவதால் பக்க வாயிலின் வழியே ஆலய தரிசனம் செய்யலாம் .. இன்னும் மூன்று ஆண்டுகளில் பணி நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெறுமாம்.. சிறுதுளி அமைப்பினரால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இப்போது எண்டோமெண்ட் குழு திருப்பணிகளை தொடர்ந்துகொண்டிருக்கிறதாம்..!


எதிரே புன்னை மரமும் வன்னிமரமும் இணைந்திருக்க சக்தி மாரியம்மன் ,  சக்தி விநாயகர் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன..
Displaying altAjqv0rQVU5lJohTpgmLlUIX8yOmd_9iGlmkPmuEoxJeT.jpg
நரசிம்மர் கோவிலுக்கு உள்ளே பிரம்மாண்டமான அரசமரமும் , விநாயகர் , நாகர் சிலைகள் உண்டு..சுமார் 450 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் என்று சொல்கிறார்கள்.. அரசமரத்தைப்பார்த்தால் நம்பத்தோன்றுகிறது..!

சர்வதோஷப்பரிகாரமாக  ஆலயங்களில் தீபமேற்றுதல் திகழ்கிறது..
ஆலயத்தின் உள்ளேயே விளக்குகளும் ,நெய்யும் ,திரியும் கட்டணத்துடன் கிடைக்கிறது.. வெளியிலிருந்து கொண்டுவரப்படுபவை அனுமதியில்லை.. விளக்குகளுக்கு அலங்கரிக்க மஞ்சள் குங்குமம் ,ஏற்றுவதற்கு பிரதான தீபம் , தீபங்கள் வைக்க வசதியான தனி அடுக்குகள் என வசதியாக அமைத்திருக்கிறார்கள்..!

நரசிம்மரின் மந்திரராஜபத ஸ்தோத்திரம் ,மற்ற துதிகளையும் எழுதி அமர்ந்து பாராயணம் செய்ய ஏற்பாடுசெய்திருக்கிறார்கள்..!

நரசிம்மர் ஸ்தம்பத்தில் ஆவிர்ப்பித்த சுவாதி நட்சத்திரத்தில் மாதம் தோறும் சுதர்சன ஹோமம் காலை வேளையில் நடைபெறுகிறது..கலந்துகொண்டு நலம் பல பெறலாம்..!

திருமணம் ,உத்தியோகப்பிராப்தி, புத்திரப்பிராப்தி போன்ற வேண்டுதல்களுக்காக நாற்பத்தி எட்டு நாட்கள் பெயர் ,நட்சத்திரம் , வேண்டுதல் ஆகியவற்றைக்குறித்தறர்ச்சனை செய்ய 96 ரூபாய் கட்டணமாம்..
Displaying image.jpeg
அர்ச்சனை 48 நாட்கள் முடிந்தபிறகு ஆலயத்திற்கு வந்து தரிசித்து பிரசாதம் பெற்றுக்கொண்டால் எண்ணிய செயல்கள் தடங்கலின்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை..!

ஆலயத்தில் அர்ச்சகர் பெயரும் லஷ்மி நரசிம்மர்.. சிரத்தையாக அர்சனை செது தகவல்களும் தந்தார்..



Thursday, April 3, 2014

பேரானந்தம் அருளி பரிபாலிக்கும் பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள்.







sri lakshminarasimha prahlada




துன்பங்களிலிருந்து   விடுவித்து  வெற்றியையும், சக்தியையும் 
அளித்து கண்கண்ட பலன்களை அள்ளித் தரும் தெய்வமாக 
பரிக்கல் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார் 
ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள்.

 குதிரை முகம் கொண்டவன்  பரிகலா சூரன் என்ற அரக்கன். 

திருவதிகையில் திரிபுர அரக்கர்களை சிவபெருமான் தகனம் செய்தபோது, விண்ணிலோ மண்ணிலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றபரிகாசுரன் அசுரன், பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான திருமுதுகுன்றம் பகுதியில் மறைந்து தப்பித்துக்கொண்டான். 
திருமால் நரசிங்கமாக வெளிப்பட்டு பரிகலா சூரனை 
வதம் செய்த இடம்தான் பரிக்கல் திருத்தலம்.
[pkuppam+narasimha.jpg]
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, பாளையங்கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர் இத்தலத்து பெருமாளை வழிபட்டு எதிரிகளை வீழ்த்தி பல வெற்றிகளைப் பெற்றதாக வரலாறு.

விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திற்கு தெற்கில் சுமார் 20 அல்லது 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பரிக்கல்  மிகவும் அமைதியான, அழகான கிராமம். 

கிழக்கு பார்த்த ராஜகோபுரம். கருவறையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கம்பீரமாகக் காட்சி கொடுத்து அருளாசி வழங்குகிறார். 






















தாயாரின் திருநாமம் ஸ்ரீகனகவல்லி. 






















கருவறையில் மூலமூர்த்தியின் இடது பக்கத்தில் ஸ்ரீவியாச ராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் திருவுருவச் சிலை இருக்கிறது.

கடன், நோய், எதிரி இவற்றுக்கு பரிக்கல் 
பரிகாரத் தலமாக விளங்குகிறது. 
மிகப் பெரிய கடன் தொல்லையிலிருந்து விரைவாகவும், எளிதாகவும் மீளவும், தம்மை வருத்தும் நோய், பிணிகளிலிருந்து விரைவில் குணமடையவும், எதிரிகளால் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஏற்படும் அபாயங்களிலிருந்து மீண்டு எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறவும் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வழிபட்டு பலனடையலாம்..!

விரதமிருந்து, ஈர ஆடையுடன், “ஓம் நமோ நாராயணா’ என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்த வண்ணம் இந்த ஆலயத்தை 48 முறை வலம் வந்து வழிபட  பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் - பரிக்கல்