Saturday, June 1, 2013

சுந்தரமாய் காட்சியளிக்கும் சுரேந்திரபுரி




ஹைதராபாத் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சுவாரசியமான அருங்காட்சியகம் சுரேந்திரபுரி.. 

புராண அம்சங்கள் குறித்த கல்வி மையம் என்று குறிப்பிடப்படுகிறது.

பாரதத்தின் பெருமைமிக்க  புராண  அம்சங்கள் குறித்த தகவல்கள் மேன்மைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன்  உருவாக்கப்பட்டுள்ளது. 

குண்டசத்யநாராயணன் என்பவர் தன் மகன் சுரேந்திராவின்
பெயரில் அருங்காட்சியகத்தை  அற்புதமாக உருவாக்கியுள்ளார்.
மிகவும் வித்தியாசமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள  அருங்காட்சியகத்தில் இந்தியாவிலுள்ள மிகப்பிரசித்தி பெற்ற சிறப்பான  கோயில்களின் மாதிரி வடிவமைப்புகள் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் தத்ரூபமாக  கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. 
மாதிரி வடிவமைப்பு’களில் இருந்தே அந்தந்த கோயில்களின் கட்டிடக்கலை பாணி மற்றும் தனித்தன்மைகளை புரிந்து கொள்ளும் வகையில்  துல்லியமாக  படைக்கப்பட்டிருப்பது அற்புதமான சாதனையாகும்.

புராணங்களின் கடவுள் தொடர்பான சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள சிற்பவடிப்புகள் ஓவியங்களும்  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
செழுமையான இந்து மத புராண பாரம்பரியம் பற்றிய  பல தகவல்களை இந்த மியூசியத்தில்  அறிந்துகொள்ளமுடிகிறது ....








11 comments:

  1. அற்புதமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அருங்காட்சியகம் சுரேந்திரபுரி பற்றிய தகவல்களும் படங்களும் அருமை... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    இணைப்புகளுக்கும் நன்றி...

    ReplyDelete
  3. அத்தனையும் அருமை எப்போதும்போல. தொடருங்கள்

    ReplyDelete
  4. சிறப்பான தகவல் மற்றும் படங்கள். ரசித்தேன்.

    ReplyDelete
  5. ”சுந்தரமாய்க் காட்சியளிக்கும் சுரேந்திரபுரி” என்ற தலைப்பே சுந்தரமானதாக உள்ளது. ;)

    அரிய புகைப்படங்களை அள்ளித் தந்து கீழிருந்து 7வது படம்போல அனைவரையும் வாய் பிளக்கச்செய்துள்ளீர்கள். ;)

    மேலிருந்து 2வது படத்தில் வானவில் போன்ற அமைப்பின் கீழ் உள்ள பெருமாளுக்கு, நான்கு யானையார்கள் மனிதர்கள் போன்று நின்ற நிலையில் அபிஷேகம் செய்வது, வித்யாசமாக, விசித்திரமாக, வியப்பளிப்பதாக உள்ளது.

    மேலிருந்து ஆறாவது படத்தில், ரத்தினக்கம்பளம் விரித்த சிங்கத்தின் வாய் பகுதிக்குள், நான் இதே ஹைதராபாத்தில் நுழைந்துள்ளேன்.

    ஆனால் இந்த அருங்காட்சி அகத்தில் இல்லை. ராமோஜி ராவ் ஃபிலிம் ஸிடி என்ற இடத்தில். அதன் இருபுறமும் 6+6 = 12 யானைத்தந்தங்கள் போன்ற அமைப்புடன் வரவேற்பு [WELCOME] ஜோர்..... ஜோர்.

    ”கொம்பா முளைத்திருக்கிறது?” என்பார்கள். உங்கள் பதிவுகளில் கொம்பு தான் முளைத்திருக்கிறது என்பேன். ;)))))

    ஒவ்வொன்றையும் பார்க்கப்பார்க்க பரவஸமாகத்தான் உள்ளது. ஏராளமான கமெண்ட்ஸ்களை தாராளமாக எழுதத்தான் எனக்கும் ஆசை. என்ன செய்வது? பிராப்தம் இல்லை. மெளன விரதம் அனுஷ்டித்து வரவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளேன். ;(

    அத்தனைப்படங்களும் அழகோ அழகு.

    நேரில் போய்வந்ததுபோல மனதில் ஓர் மகிழ்ச்சி.

    தங்கள் விளக்கங்களும் வழக்கம்போல அருமையோ அருமை.

    மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 927 ooooo

    ReplyDelete
    Replies
    1. நன்றாக ரசித்திருக்கிறீர்கள்.

      Delete
    2. To திரு வெங்கடேசன் அவர்கள்,

      வணக்கம்.

      என் மொத்த ரஸனையில் இது 0.0001 % மட்டுமே. என் ரசனையை தாங்களாவது ரஸித்துச் சொல்லியுள்ளதற்கு, தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  6. சுந்தரமாய் இருக்கிறது அருகாட்சியகம்.
    எல்லாவற்றையும் நன்கு சுற்றிப்பார்த்து விட்டோம்.
    அழகு. பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கதை சொல்லும் படங்கள் அருமை வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  8. Aha.....
    Pretty
    very pretty.
    Kadai chooluum padangal....
    Miga arumai.
    Thanks for the post dear.
    viji

    ReplyDelete
  9. சுந்தரமாகக் காட்சியளிக்கும் சுரேந்திரபுரி உண்மையிலேயே வியக்க வைக்கிறது. எத்தனை பிரம்மாண்டமான சிலைகள்! 7 வாசல்களுடன் வைகுண்ட லோகம், விஸ்வரூப லிங்கம் - மலைப்பாக இருக்கிறது. ஒரே இடத்தில் அத்தனை கோவில்களையும் பார்க்க முடியும் என்பது நல்ல செய்தி தான்!
    கண்ணைக்கவரும் புகைப்படங்களுடன் தகவல்களையும் கொடுத்த உங்களுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete