Showing posts with label மஹாவிஷ்ணு. Show all posts
Showing posts with label மஹாவிஷ்ணு. Show all posts

Friday, November 7, 2014

திருநந்திபுர விண்ணகரம்’ செண்பகவல்லி தாயார்







செயற்கரிய செய்வோமைச் செய்யாம நெஞ்சே
மயக்கு வாரைவர் வலியா —- னயக்கலவி
சிந்திபுர விண்ணகரமென்பர் திருச்செங்கண்மா
ணந்திபுர விண்ணகர நாடு



திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் 
திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார்.

அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற தலத்தில் வந்து தவம் செய்தாள்.

 திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.

கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால்,   
மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
Nathan Kovil_Pavitrotsavam_2013_21
செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் 
தாயாரின் திருநாமம் “செண்பகவல்லி’ ஆனது.

 பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். 
இவர் திருநாமத்திலேயே“நாதன் கோயில்’ என்று ஆனது

நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்ற 
போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, 
கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால்  
கோபம் கொண்டு,  சாபமிட்டனர்.

சிவன்.“பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,” என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார்.

தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், 
“நந்திபுர விண்ணகரம்’ என தனது தலம் வழங்கப்படும்,”என்று அருள்பாலித்தார்.

சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

 பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார்.

ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.

 சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.

 விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது



.Nathan Kovil_Pavitrotsavam_2013_15Nathan Kovil_Pavitrotsavam_2013_07

Friday, October 31, 2014

செல்வம் அருளும் ஸ்ரீசென்றாயப் பெருமாள்



திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் 
சேலம்-திருச்செங்கோடு சாலையில் ராசிபுரத்தை 
அடுத்துள்ள காளிப்பட்டியில் புகழ்பெற்ற  முருகன் கோவில் உள்ளது

காளிப்பட்டி கந்தசாமி ஆலயத்திற்குப் பின்புறம் சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட சுயம்புவான புற்றினால் ஆன 
ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயில்  அமைந்துளளது..

மூலவரைசுற்றி கோபுரத்தில் தசாவதாரசிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கர்ப்பகிரஹத்துக்குள் புற்று மூன்று பிரிவாக அமைந்திருக்கிறது .. நடுவில் சற்றே உயரமாக இருக்கும் புற்று சென்றாயப்பெருமாளாகவும் , இருபுறமும் உள்ளவை ,ஸ்ரீதேவி பூதேவியாகவும் வழிபடப்படுகின்றன. புற்றின் முன்புறம் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


ஆலய வளாகத்தில் சுற்றுப்புறத்தில் எங்குமே காணப்படாத குளத்தி மரம் மிக விஷேசமாக வளர்ந்துளளது  சிறப்பாகும் ..

மரத்தைப்பற்றி தாவரவியாலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்களாம்..

ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வீரபக்த ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி, சொர்க்க வாசல் அமைக்கப்பட்டுள்ளது..
ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சிற்பங்கள்..



.
துவஜ ஸ்தம்பத்தில் சௌகந்திகா மலருடன் அனுமனும் ,, 
மறுபுறம் கருடனும் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது..

[hindugod_laxmi1.jpg]Ganesh Laxmi Devi Puja Tirupati Balaji Lord Wallpapers Ipad

Wednesday, October 15, 2014

ஊஞ்சக்காட்டு பெருமாள் கோவில்


ஊஞ்சமரங்கள் அடர்ந்த காட்டில் அமைந்திருப்பதால் ஊஞ்சக்காட்டுப்பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும் ஆலயம் திருச்செங்கோட்டில் இருந்து ராசீபுரம் செல்லும் வழியில் காளிப்பட்டிக்கும் ,ஆட்டையாம்பட்டிக்கும்  அருகில் அமைந்திருக்கும் ஆலயமாகும் .. 

ஆலயத்தில் சுயம்புவான புற்றில் பெருமாள் மூலவராக அமைந்திருக்கிறார்..

வலம்புரி விநாயகர் , லஷ்மி , சரஸ்வதி ஆகிய தெய்வங்களும் தரிசனம் தருகிறார்கள்..

கருடன்  காலடியில் நாகங்களுடன் பெருமாளை வணங்கும் காட்சி..
ஆலயவளாகத்தில் கிணறு..
ஆலயத்தின் முன்புறம் நூற்றுகணக்கான வருடங்கள் பழமைவாய்ந்த ஆலமரத்தில் நாவல் இச்சிம்ரம் , அரசமரம் போன்ற பஞ்சவிருட்சங்கள் செழித்துவளர்ந்து கவனத்தை ஈர்த்தது..



Saturday, October 11, 2014

ஸ்ரீ வாமன நாராயண சுவாமி ஆலயம்











ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த 
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!


வாமன நாராயண சுவாமி அருளும் அற்புத ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்.

வாமனன் தமிழில் குள்ளப்பா என்று அழைக்கப்படுகிறார்.

ஶ்ரீ குள்ளம்மா- குள்ளப்பா- அருளம்மா அருள்புரியும் ஆலயத்தில் 
ஆவாரம் செடி ஸ்தலவிருட்சமாகத்திகழ்கிறது.. மிக்ப்பெரிய மரமாக காட்சிரும் ஆவாரம்செடி  இங்கு விஷேசமாக அனைத்துக் காலங்களிலும் பூக்கும் அபூர்வத்தை அறியத் தந்தார்கள்..
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது
ஒருபுறம் தும்பிக்கை ஆழ்வாரும் ,மற்றொருபுறம் அனுமனும் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்..
துளசிமாடம் அருமையாக அமைந்திருந்தது.. 
திருமண மண்டபமும் உண்டு.
திருப்பதி பெருமாளைப்போல உயரத்திலும் ,திண்டுமாலை ,மலர், நகை அலங்காரங்களிலும் சுவாமி ஜொலித்துக்கொண்டிருந்தார்..

அதிதி காஷ்யபர் தம்பதியருக்கு வாமனராக அவதரித்த பெருமாளின் சிறப்பு வானளவிய பெருமை பெற்றது..

அதிதி ,கஷ்யபர் ,வாமனர் மூவரும் ஒரே கல்லில் சிற்பமாக இருந்த அதிசய உருவம் புனருத்தாருணத்தின் போது பின்னமாகிவிட்டதாம்.. எனவே புதிய உற்சவர் செய்து அதனடியில் பின்னமான விக்ரஹத்தை புதைத்துவிட்டார்களாம்..
தாயார் வஜ்ரவல்லி விக்ரஹம் சமீபத்தில் புதிதாகச் செய்திருக்கிறார்கள்.
கன்னட தேவாங்கர்களின் குலதெய்வமாக ஆலயம் விளங்கிவருகிறது..

சொர்க்கவாசல் அமைந்திருக்கிறது..

மிகப்பெரிய சக்கரத்தாழ்வாரும்  மஹாலஷ்மி தாயாரும் அற்புதக்காட்சி அளிக்கிறார்கள்.

சிறிய ஒரு கிராமத்தில் இத்தனை சிறப்பான ஒரு ஆலயத்தை எதிர்பாராமல் தரிசித்ததில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது..

மிகச்சிறு ஆலயமாகப் பார்த்தது இன்று பெரும் வளர்ச்சி கண்டு மக்களை ஈர்த்து வருகிறது..

திருச்செங்கோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் ஆட்டையாம்பட்டி ஏரிக்கரையில் சிறிது தூரத்திலேயே வெண்ணந்தூர் -மின்னக்கல் சாலையில் ஆலயம் அமைந்திருக்கிறது..!

பல ஆண்டுகளுக்கு முன் ஆலயம் சுற்றுச்சுவர் எழுப்பப்படாமல் கர்ப்பக்கிரஹம் மட்டும்  இருந்த நிலையில் அர்ச்சகரும் அவர் தந்தையும்  ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திவைத்துவிட்டு நள்ளிரவில் ஊர் வந்து சேர்ந்து ஆலயத்தில் களைப்புடன் உறங்கிக் கொண்டிருந்தார்களாம்..

அப்போது வழிப்போக்கர்கள் இருவர் ஆலயத்தின் முன்புறம் வந்து  ஆலயக்கதவுகள் திறந்திருக்கிறதே இந்த நள்ளிரவில் ..பெருமாள் திண்டுமாலையும் , நகைகளுமாக திருப்பதியில் உள்ளது போலவே ஜொலிக்கிறாரே .. என்று நின்று வணங்கிவிட்டுப் போனார்களாம். அர்ச்சகரின் தந்தை கோவில் கதவைச் சார்த்த மறந்துவிட்டோம் போலிருக்கிறதே என எண்ணி உறக்கம் கலைந்து எழுந்து பார்த்தால் கதவு பூட்டியபடியே இருந்ததாம்..

தன்னை உண்மையான பக்தியுடன் வழிபடும் அன்பர் கண்களுக்கு பிரத்யட்சமாகக் காட்சி கொடுக்கும் பெருமாள் என்று அன்றுமுதல் போற்றப்படுகிறார்..புரட்டாசி சனிக்கிழமைகள் , மற்ற விஷேச நாட்களில் சிறப்பான அலங்காரங்கள் விஷேச வழிபாடுகள் நடைபெறுகின்றன..