Saturday, March 30, 2013

ஈஸ்டர் லில்லி












ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஈஸ்டர் பண்டிகை நாட்களில் 
பூப்பதால்  ஈஸ்டர் லில்லி எனப் பெயர்பெயர்பெற்ற அழகு மலர் 

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே 
பூக்கும் தன்மை உள்ளது. 

பூத்து 15 நாட்களுக்கு வாடாமல் அப்படியே இருக்கும். 
கிழங்கு வகையை சார்ந்தது.
ஈஸ்டர் முயலும், வண்ண முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும், 
லில்லி மலர்களும்  மறுபிறப்பின் சின்னங்கள்!

வெள்ளைப்பனி படர்ந்த பூமியாக, இலைகளையெல்லாம் பறிகொடுத்து விட்டு மொட்டை மரங்களாக, பச்சை என்பதே அடியோடு பறந்துவிட்ட நிலையில் , மெல்ல மெல்லத் துளிர்த்து, பச்சைகளை இழுத்து வருவதுதான் வசந்தம்.

ஈஸ்டர் பெருநாள் வருவதும்  பூமி தன்னைப் புதுப்பிக்க 
ஆரம்பிக்கும் வசந்த காலத்தில்தான்! 

 ஈஸ்டர் பெண் தெய்வத்தெய்வத்தைச் சுற்றித்தான் புதிய பிறப்பும், 
சூரிய வெப்பம் அதிகரிக்கும்  காலமும் சுழன்று வந்தது. 
எனவே  ஈஸ்டர் என்ற கொண்டாட்டம் தொடங்கியது ..
ஏராளமான குட்டிகளைப் போட்டு வேகமாகப் பல்கிப் பெருகுவது முயலின் சுபாவம். , பல்கிப் பெருகுதலையும்-அதாவது நிறைந்த வளச்சியைக் குறிப்பதுதான் முயல். ஆகவே முயல் ஈஸ்டரின் ஒரு சின்னமாக, விளங்குகிறது ..
ஈஸ்டர் பெருநாளுக்கு முன்பு வரும் தபசு காலத்தில் கிறீஸ்தவர்கள் மாமிசம் உண்ணுவதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள். 

நீண்ட இடைவெளியின் பின்னர் முட்டையோ அல்லது மாமிசமோ உண்பதற்கு கிடைக்கும் முதல் வாய்ப்பு ஈஸ்டர் பெருநாள்தான்.




8 comments:

  1. அழகான படங்கள் + விளக்கங்களுடன் மிகச்சிறந்த பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  2. ஈஸ்டர் லில்லி பற்றி உங்க பதிவு மூலமாகத்தான் தெரிஞ்சுக்க முடிந்தது. பொருத்தமான படங்களுடன் பகிர்வு சுவாரசியமாக இருக்கு. நன்றி

    ReplyDelete
  3. அழகு மிளிரும் படங்களுடன் கூடிய தகவல்கள் நிறைந்த பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ஈஸ்டர் வெள்ளி செய்திகள் படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  5. அன்புச் சகோதரி...
    ஈஸ்டர் திருநாளைப்பற்றி நல்ல விளக்கமும் அழகான படங்களும்...
    அத்தனை படங்களும் மிகச்சிறப்பாக இருக்கின்றன.
    பல விஷயங்களை உங்களிடமிருந்து தெரிந்து கொள்கின்றோம்.
    மிக மிக அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி!
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. அழகான படங்கள் அம்மா...

    பல தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  7. Really??????
    So nice flowers. Liked the pictures.
    viji

    ReplyDelete
  8. பல தகவல்கள் இப்போது தான் தெரியும் .
    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete