Wednesday, May 25, 2011

இயற்கையின் எழிலில் இறைவன்






ஆள்காட்டிக் குருவி என்னும் பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும். 

ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, “கிரக்...கிரக்...” என அபாய ஒலி எழுப்பும். 

உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும். 

அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it? Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும் 

ஆதலால் இப்பறவைகளை ‘Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள். 

எவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கிறது ஆட்காட்டி குருவி இயற்கையின் அற்புதப்படைப்பு.

அடர்ந்த காடுகளில் புதர்களுக்கு இடையே புலி யார் கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து தன் இரை நொக்கிச் செல்லும்போது அதனைத் தன் அபாயச் சங்கினை ஊதி (Did you do it?....Did you do it? என்றபடி) பிறருக்கு அறிவிப்பது இந்த ஆள்காட்டிக் குருவி தான்.

இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தை

எண்ணமென்னும் வண்ணச்சிறகு விரித்து விண்ணில் பறக்கும் பறவை 

எழிலாய் கூடுகட்டி சிறுகக் கட்டி பெருக வாழ் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டு.
சிறகடித்து விண்ணில் பறக்கும் அழகுப் பறவைகள்
சின்னச்சின்ன அலகுகளால் அருமையாய்க் கட்டும்
சிங்காரக் கூடுகள் பார்க்கப் பார்க்க பரவசம் தருமே
சின்னச் சின்ன மண்துளிகள் சேர்த்து செய்த கூடிது..

ஒரு கூட்டில் அன்புப் பறவைகள்...

பார்த்துப் பார்த்து இழைக்கும் அன்புக் கூடு..

கூடி வாழ்வதால் அதன் பெயர் கூடோ..
ஏ.. குருவி.. சிட்டுக் குருவி.. சிங்காரக் குருவி..

கண்ணும் கருத்துமாய் கடின உழைப்பு..

பார்த்துப் பார்த்து அழகுபடுத்தும் நேர்த்தி..

உல்லாச உலகம் இவர்களுக்கே சொந்தமோ!



சிவப்பு ஆள்காட்டிக் குருவி:
         



See a crane ruffle threat!See a crane crouch threat.See a crane crouch threat.
See a crane crouch threat.







30 comments:

  1. ரொம்ப அழகா இருக்குதுங்க...

    ReplyDelete
  2. கூடுகட்டும் படங்கள் அவ்வளவு பொருமைய இருந்து எடுத்திருக்காங்க...

    பார்க்கவும் வியப்பாக இருக்கிறது...

    ReplyDelete
  3. @
    # கவிதை வீதி # சௌந்தர் //
    பொறுமையாய் கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  4. ஆட்காட்டி குருவி பற்றி அருமையான தகவல்கள் நன்றி

    ReplyDelete
  5. படங்கள்+பகிர்வு=சூப்பர்

    ReplyDelete
  6. குருவிகள் அனைத்தும் அழகோ அழகு.
    எப்படித்தான் இவ்வளவு அழகாக பொறுமையாகப்படம் பிடித்தீர்களோ?

    விளக்கங்கள் யாவும் வெகு ஜோர்.
    படங்களுக்கு கீழ் நீங்கள் கொடுத்துள்ள சினிமாப்பாடல் வரிகளும் ரொம்ப நல்லாயிருக்குதுஙக.

    குருவிகளின் அழகையும் கூடுகளின் தொழில்நுட்பத்தையும் பார்த்து ரசித்தபடியே வெகு நேரம் செலவழித்துவிட்டதால், பின்னூட்டமிட தாமதம் ஆகிவிட்டது.

    பொறுத்தருளவும், மேடம்.

    இயற்கையின் எழிலில் அழகிய பதிவாக இறைவனைக்காட்டியுள்ள தங்களுக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    தங்கள் மேல் மிகவும் தனிப்பிரியமுள்ள குருவி vgk

    ReplyDelete
  7. vERY NICE.
    enjoyed the post much.
    The animation pictures are very very beautiful.
    I wounder how you are selecting subjects.
    Thanks for sharing Rajeswari.
    viji

    ReplyDelete
  8. @ FOOD said...
    படங்கள்+பகிர்வு=சூப்பர்//
    Thank you sir.

    ReplyDelete
  9. @வை.கோபாலகிருஷ்ணன் said...//
    Thank you sir.for your kind attention.

    ReplyDelete
  10. அதோ
    அந்தப்பறவை
    போல
    வாழவேண்டும்!

    என்று
    ஆசை
    ஏற்படுகிறது.

    ReplyDelete
  11. நானும் ஓர் பறவைகள் ரசிகன்.. பார்க்கப்பார்க்க அலுக்காத படங்கள் ..
    வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  12. @ வை.கோபாலகிருஷ்ணன் //
    விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியாய் சிறடிக்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  13. @மோகன்ஜி said...
    நானும் ஓர் பறவைகள் ரசிகன்.. பார்க்கப்பார்க்க அலுக்காத படங்கள் ..
    வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி//
    அலுக்காத கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. எவ்வளவு பெரிய கூடு. அது வெளி நாட்டுக் குருவியா? நம்மூர் குருவி தக்கை போன்றவற்றை வைத்துதானே கூடு கட்டும். குருவி குடும்பம் இனிமையான இல்லறத்தின் குறியீடு.

    ReplyDelete
  15. @சாகம்பரி said...
    எவ்வளவு பெரிய கூடு. அது வெளி நாட்டுக் குருவியா? நம்மூர் குருவி தக்கை போன்றவற்றை வைத்துதானே கூடு கட்டும். குருவி குடும்பம் இனிமையான இல்லறத்தின் குறியீடு.//
    வாங்க சாகம்பரி. அது வெளிநாட்டுப் பறவைதான். இனிய இல்லறத்தின் குறியீடான பறவைகளை ரசித்து கருத்து அளித்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. @குணசேகரன்... said...
    nice picture collections//
    நன்றி.

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி said...
    @ வை.கோபாலகிருஷ்ணன் //
    //விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியாய் சிறடிக்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.//

    உங்களிடம் உள்ள தெய்வானுக்கிரஹத்தினால் எங்கோ உள்ள என் மனதில் தோன்றியதை நீங்கள் அப்படியே எழுத்தில் எழுதி விட்டது எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

    Routine Life உண்மையில் மிகவும் சலிப்பு ஏற்படுவதாகவே உள்ளது. தங்கள் பதிவுகள் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளன. நன்றி. vgk

    ReplyDelete
  18. குருவிகள் படங்கள் அனைத்தும் அழகு தகவல்களுக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  19. பறவைகள் பறக்கும் முதல் படம் அழகோ அழகு. தண்ணீரில் நிழலாடும் படமும் அழகு. கூடு கட்டும் படங்கள் குருவிகளின் உழைப்பைச் சொல்கின்றன.

    ReplyDelete
  20. ஐந்தறிவின் ஒற்றுமையும் சந்தோஷமும் தெரிகிறது பதிவில் !

    ReplyDelete
  21. How 'did you do it?'! Beautiful clicks.Your presentations are lovely.

    ReplyDelete
  22. @வை.கோபாலகிருஷ்ணன் //
    Routine Life உண்மையில் மிகவும் சலிப்பு ஏற்படுவதாகவே உள்ளது. தங்கள் பதிவுகள் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளன. நன்றி. vgk//
    தாங்கள் கூறும் கருத்துக்கள் மனதிறகு உற்சாகமளிக்கின்றன. நன்றி.

    ReplyDelete
  23. @r.v.saravanan said...
    குருவிகள் படங்கள் அனைத்தும் அழகு தகவல்களுக்கும் நன்றி //
    அழகுக் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  24. @ ஸ்ரீராம். said...
    பறவைகள் பறக்கும் முதல் படம் அழகோ அழகு. தண்ணீரில் நிழலாடும் படமும் அழகு. கூடு கட்டும் படங்கள் குருவிகளின் உழைப்பைச் சொல்கின்றன.
    விண்ணில் பறவையின் அழகு
    தண்ணீரில் நிழலாடும் பட அழகு
    கூடுகட்டும் உழைப்பு -அனைத்தும் நுணுக்கமான கவனிப்புடனான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. @ Chitra said...
    How 'did you do it?'! Beautiful clicks.Your presentations are lovely.//
    எப்படி இவ்வளவு அழகான ஒரு கருத்து கூறினீர்கள்!!. நன்றி.

    ReplyDelete
  26. ;)

    அச்யுதா!

    அனந்தா!!

    கோவிந்தா!!!

    ReplyDelete
  27. 511+4+1=516 ;)))))

    [என் பின்னூட்டங்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள பதில்கள் என் மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளன. மிக்க நன்றி. ]

    ReplyDelete