Friday, July 6, 2012

ஸ்ரீ ஜாபாலி ஆஞ்சனேயர்



ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே 



அசேஷ லங்காபதி ஸைத்யஹந்தா 
ஸ்ரீராமஸேவா சரணைகக்ர்த்தா

அசேஷ து:காஹத லோக கோப்தா
த்வஸௌ ஹநுமாம்ஸ்த்வ ஸௌக்யகர்த்தா
ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய,
ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, 

பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, 

ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ
ஸமாநயந ஸம்ர்த்தாய,அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய 

ப்ராணநிர்வாஹ்காய,  தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுகி ஹநுமதே நம: 

திருப்பதி திருமலையில் வேங்கடேசப் பெருமாள் ஆலயத்திலிருந்து பாபநாசத் தீர்த்தத்துக்குச் செல்லும் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஜாபாலி ஆஞ்சனேயர் ஆலயம் அமைந்துள்ளது. திருமலை தேவஸ்தான பேருந்துகள் செல்கின்றன.
ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா

ஜாபாலி முனிவர் தவமிருந்ததால் அவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் 250 படிகள் ஏறிச்சென்றால், எழிலார்ந்த இயற்கைச் சூழலில் அமைந்துள்ள ஆலயத்தில் தவக்கோல
ஸ்ரீ ஜாபாலி ஆஞ்சனேயர் மிகுந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் ....

சந்நிதிக்கு நேரெதிரே உள்ள ஜாபாலி தீர்த்தம் குளத்தில் நீராடிவிட்டு வந்து வணங்கினால், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட எல்லா தீவினைகளும் அகன்று விடும். 

ஏழரைச்சனி நடப்பவர்களின் துன்ப மும் நீங்கும். மகப்பேறில்லாதவர்கள் மழலைச் செல்வத்தை அடைகின்றனர் என்பது நம்பிக்கை ! 
ஆஞ்சனேயரை வணங்கினால் தீராத துயரமில்லை.




18 comments:

  1. ஜாபாலி ஆஞ்சநேயர் என்று இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.

    திருப்பதி ம்லையருகில் உள்ளது என்பது திருப்தியாக உள்ளது ! ;)

    வாயு [காற்று] இல்லாத இடமே இல்லை.

    அதுபோல நீங்கள் செல்லாத கோயிலோ குளமோ இல்லை.

    நாளை சனிக்கிழமைக்கு ஏற்ற ஹனுமனைப்பற்றிய மற்றொரு பதிவு.

    சந்தோஷம்.

    ReplyDelete
  2. அருமையான ஆஞ்சநேயர் கோயில் பற்றிய பதிவு! சிறப்பான பதிவு!

    ReplyDelete
  3. உங்களுக்கு பிடித்ததையும் படித்ததையும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது ரொம்ப நல்லா இருக்கு. நன்றி

    ReplyDelete
  4. உங்களுக்கு பிடித்ததையும் படித்ததையும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது ரொம்ப நல்லா இருக்கு. நன்றி

    ReplyDelete
  5. அருமையான புகைப்படங்களுடன் வழக்கம் போல் அருமையான பதிவு!

    ReplyDelete
  6. Near my house a temple called Singaperumal Koil. HE shown HIS grace to Jabali Rishi.It is Narasimhar temple.
    But this Anjaneya temple is new to me. To my next visit to Trupathi sure I will visit here. Thanks for the post.
    viji

    ReplyDelete
  7. ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே

    ஜாபாலி ஆஞ்சநேயர் பற்றிய பதிவு அருமை

    ReplyDelete
  8. ஜாபாலி ஆஞ்சநேயர் பற்றிய பதிவு தந்தமைக்கு மிகவும் நன்றி.இத்தனை ஆலய தரிசனமும் இத்தனைபதிவுகளும் தெய்வஅனுக்ரஹம் நிறைந்த தங்களைப் போன்றவர்களால் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete
  9. ஆஞ்சநேயர் கோயில் பற்றி அறிந்துகொண்டோம்.

    ஆஞ்சநேயாக நமக.

    ReplyDelete
  10. அக்கா ஸ்ரீ ஹனுமான் பற்றிய அனைத்தும் பகிர்ந்தமைக்கு என்னுடைய நன்றி .. படங்கள் அனைத்தும் அருமை அக்கா....

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு ! வாழ்த்துக்கள் சகோதரி ! நன்றி !

    ReplyDelete
  12. பார்க்காத கோவில், கேள்வி படாத கோவில் உங்கள் பகிர்வுக்கு நன்றி.
    படங்களும், கருத்தும் பார்க்க தூண்டுகிறது.

    ReplyDelete
  13. திருப்பதி ம்லையருகில் உள்ளஅனுமன் பற்றி திருப்தியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete