Wednesday, May 18, 2011

டெல்ஸ்ட்ரா டவர்




communications tower       The Australian flag has existed in its current state since 1909. It was officially adopted as the Australian flag in 1953.               communications tower

File:Canberra From Black Mountain Tower.jpg



Telstra Dome
telstra-mini

Telstra unveils $550m Brisbane HQ


விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி கருத்தரங்கு நடந்தபோது ஆஸ்திரேலியா, சிட்னி நகரை சேர்ந்த டெல்ஸ்டிரா கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் திமோட்டி சந்திரன், டேனியல் சந்திரன் சிறப்புரை நிகழ்த்தினர். 

கல்வி நிர்வாகத்தில் தலைமை வகிப்பவர்கள் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்வது, மாணவர்களிடத்தில் கல்வியை கற்றுத்தந்து அவர்களை கல்வியில் மேம்பாடு அடைய செய்வது, பெற்றோர்களிடத்தில் மாணவர்களின் நடைமுறைகள் பற்றிய அணுகுமுறை,சக பணியாளர்களிடத்திலும், மேலதிகாரிகளிடத்தில் பரிவுடன், பண்புடன் நடப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.  

பள்ளி, கல்லூரி முதல்வர்களிடம் பணியிட அனுபவ கருத்துக்களை கேட்டறிந்தனர்.

ஆஸ்திரேலியாவில் மின்னணு வழி நடவடிக்கைகள் டெல்ஸ்ட்ராஅர்ஜண்ட் மற்றும் ஆப்டஸ் டிரான்ஸாக்ட் பிளஸ் வலைப்பின்னல் மூலமாகவே நடைபெறுகின்றன.

கான்பெராவின் உயரமான இடமாக டெல்ஸ்டிரா டவர் என்னும் கோபுரம் விளங்குகிறது.. 

தொலைத்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட கோபுரத்தை 
ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்கியிருக்கிறார்கள்.




கோபுரத்தின் மேலே இருந்து கன்பெராவைப்பார்க்கையில் அதன் அமைப்பு அழகாக காட்சிப்படுகிறது ...

அடர்ந்த நீலபப்ச்சை காடுகள். நடுவே ஏரி. ஏரியைச்சுற்றி உயரமில்லாத வீடுகளால் ஆன அழகான சிறிய நகரம். 

கன்பராவின் அழகே அந்த ஏரியில்தான் இருக்கிறது ...

அத்தனை உயரத்தில் இருந்து அதை ஒரு மரகதப்பதக்கம் 
போல பார்க்கையில் மனம் நிறைந்து ததும்பியது.



File:Telstra Tower 2009.jpg

Sunset on Telstra Tower.

[20070915+Black+Mountain+8+-+Telstra+Tower+5+low+res.jpg]


view from Telstra tower:

Autumn Commonwealth Park Canberra a magnificent park, 
with Telstra Tower & Black mountain tower in the distance


File:Viewing platform - top right.jpg
நகரத்தில் இருந்து  ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நீலமலை. ஆங்கிலத்தில் பிளாக் மவுண்டன் என அழைக்கிறார்கள்.


கடல்மட்டத்தில் இருந்து ஆயிரத்தி இருநூறு மீடர் உயரம்.

அதிக மழைபெய்வதனால் இருசிறு ஆறுகள் உற்பத்தியாகின்றன.நீர்வளம் இருப்பதனால்  நெடுங்காலமாகவே பழங்குடிகள் வசித்து வந்திருக்கிறார்கள்.  

கிலென்புரூக் அருகே ஒரு குகையில் பழங்கால கீறல் ஓவியங்கள் உள்ளன. கல் ஆயுதங்களை தயாரிக்கும் கற்களும் கிடைத்துள்ளன.
மலைகளுக்கு அப்பால் பளபளவென்று தெரிந்த ஏரியைச் சுற்றி பச்சை ஆர்ந்து  அடர்ந்து செழித்திருந்தது.  

மலைக்கு அப்பால் உள்ள அந்த நிலம்தான் நியூசவுத் வேல்ஸிலேயே வளமான பகுதி. அந்தப்  பச்சைநிலம் சமவெளி கன்னிம்ப்லா சமவெளி என்று அழைக்கப்படுகிறது.

நீலமலையைக் கடந்துசெல்ல பாதை இல்லை என்றே வெள்ளையர் நம்பினார்கள். 

பழங்குடிகள் மட்டுமே நீல மலைகளைத்தாண்டி மறுபக்கம்செல்ல வழிகள்  அறிந்திருந்தார்களாம் .... 

பில்பின் பிளவு என்னும் மலை இடைவெளிவழியாகவும் கோக்ஸ் ஆறுவழியாகவும்  பயணம் செய்தார்கள்...  

ஏரியாக தேங்கியிருக்கும் ஆற்றின்பெயர் நேப்பியன் ஆறு, 
கோக்ஸ் ஆறு அதில் சென்று கலக்கிறது. 
அந்த ஏரி திர்ல்மீர் [Thirlmere] எனபப்டுகிறது.
நீல மலையைக் கடந்து சென்ற முதல் ஐரோப்பியர் என்று ஜான் வில்ஸன் என்ற முன்னாள் குற்றவாளியைச் சொல்கிறார்கள். 

அவர் சிட்னிக்கு வெளியே பழங்குடிகளுடன் இணைந்து வாழ்ந்தார்.அவர்களுக்கும் வெள்ளையருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். 

1797ல் அவர் மலைக்கு அப்பால் அந்த பசுமையான நிலத்தை தான் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார்.

சாலையோரமாக அப்பகுதியைப் பற்றிய தகவல்களும் வரைபடங்களும் வைக்கப்பட்டிருந்தன. 


பார்க்கப் பார்க்க பரவசமாக புல்வெளியின் பசுமைவேறு.  காட்டின் பசுமையே வேறு. சற்றே நீலம் கலந்த இருண்ட பசுமை அது. அது வளத்தின் அடையாளமாதலால் அதைக் கண்டதுமே நம் மனம் மலர்ந்துவிடும். 

பல இடங்களில் மலையுச்சிமேல் நின்று பார்த்தால் பச்சைமரகதப்பரப்பைக் கண்டு கண்நிறைய முடியும்.
மலைவிளிம்பில் நின்றுகொண்டு பனிமூடிய சமவெளியைப் பார்த்தால். பக்கவாட்டில் மலைநீட்சி ஒன்று உள்ளது. அதில் மூன்று சிகரங்கள். அவை மூன்று சகோதரிகள் என்று சொல்லப்படுகின்றன. 

 ஆந்திரபகுதி மலைகளை நினைவுபடுத்திய அவை. காற்று வீசி மலைகளில் உள்ள கனிமங்களை அரிப்பதனால் விதவிதமான வடிவங்களில்  அந்த மலைகள் எழுந்து நின்றன. 

மெக்கென்னாஸ் கோல்ட் படத்தில் காட்டப்படும் பொன்னிறமான கிராண்ட் கேன்யன் மலைச்சிகரங்கள் போல காட்சியளித்தன ......
மூன்றுசகோதரிகளும் வெள்ளைப்பனிமூட்டத்தால் முக்காடு போட்டிருந்தார்கள். 

மெல்ல மெல்ல பனி விலகியது. சகோதரிகள் தெரிய ஆரம்பித்தார்கள்.

பின்னர் மேகம் நீங்கி துல்லியமாகவே தெரிந்தார்கள். 

அவற்றுக்கு உருவச்சிறப்பு ஏதும் இல்லை. மூன்று குவைகள். 

ஆனால் அவற்றின் தொன்மை நம்மை  பரவசத்துக்கு ஆளாக்குகிறது.


மலைவிளிம்புவழியாகவே நடப்பதற்கு வழியமைத்திருக்கிறார்கள். 

மலைச்சரிவு முழுக்க அடர்த்தியான யூகலிப்டஸ் மரங்கள்தான். 

மரங்களால் அந்த மலைவிளிம்புகள் சரியாமல் அள்ளிப்பிடித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படும். 

மலைகளுக்கு நடுவே உள்ள ஆழமான பகுதி மலைக்காடுகள். 

 மழைக்காடுகள் குட்டையான மரங்களுடன் 
அவற்றுக்கு நடுவே செறிந்த புதர்களுடன் இருந்தன.
கயிற்றுவண்டியில் இறங்கிச்சென்று மழைக்காடுகளைப் பார்ப்பதற்கு வழிசெய்திருந்தார்கள்.. 

அங்கே ஒரு சிறிய வேடிக்கைப்பொருள் கடையும் இருக்கிறது.


காடு வழியாக நடந்து செல்லும் வழியில் அக்காலத்தில் நிலக்கரி எடுக்கப்பட்ட குகை ஒன்றை அபப்டியே வைத்திருக்கிறார்கள். 

நிலக்கரியுடன் தங்கமும் கிடைத்திருக்கிறது. 

மண்ணுக்குள் முயல்வளை போல செல்லும் சுரங்கவழியை அமைத்து அதனூடாகச் சென்று நிலக்கரியை வெட்டியிருக்கிறார்கள்– 

முழுக்க முழுக்க கையாலேயே அந்த உழைப்பு நிகழ்ந்ததாம் ..


பல இடங்களில் இடுப்பளவு நீரில் நின்று வேலைசெய்ய வேண்டும். 

எங்கும் நீர் ஊறிச் சொட்டிக்கொண்டே இருந்தது. 

காற்று புகுவதற்கு சில இடங்களில் வெளியே திறக்கும் சாளரக்குகைகளை வெட்டியிருந்தார்கள்.

உள்ளே விளக்குகளை அமைத்து அந்த வேலையைச்செய்யும் தொழிலாளர்களை சிலைகளாகச்செய்து வைத்து சாளரம் வழியாகப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.
Three Sisters Blue Mountains

17 comments:

  1. கடைசி படம் இன்னும் க்லக்கல்

    ReplyDelete
  2. எல்லா படங்களும் வியப்பு

    ReplyDelete
  3. பயணங்கள் முடிவதில்லை. இது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.
    நெல்லையில் பதிவர்கள் சந்திப்பு 17.06.11இல், மெயில் பார்த்தீர்களா?
    எங்கள் ஊருக்கும் வந்து பார்த்து எழுத வேண்டிய இடங்கள் நிறைய உண்டு.வாருங்கள்.

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான பதிவு. விளக்கங்கள் அழகு.

    ReplyDelete
  6. ஆஸ்திரேலியாவின்
    அழகை
    அப்படியே
    அள்ளி
    அளித்த விதம்
    அருமை.
    புகை படங்களும்
    அதனை சார்ந்த
    விஷயங்களும்
    மிகவும் பயனுள்ளதாக
    இருந்தது
    பணிவான நன்றி
    பகிர்ந்ததற்கு

    ReplyDelete
  7. இந்தப்பதிவும், வளத்தின் அடையாளமாதலால் இதைக் கண்டதுமே நம் மனம் மலர்ந்துவிடுகிறது.

    இந்தப்பதிவின் பல இடங்களிலும் நின்று படித்தால், பச்சை மரகதப்பரப்பைக் கண்டு கண்நிறைய முடிகிறது.

    மூன்று சகோதரிகள் போல உள்ள மலைகள்/குகைகள் அருமையான தகவல் தான். அப்படியே தான் தெரிகிறது.

    பதிவுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. உட்பக்கப்படங்கள் குஜராத் போரா குகைகளை நினைவுபடுத்துகின்றன. அருமையான விளக்கங்கள்.

    ReplyDelete
  9. கடைசியில் கொடுத்துள்ள டிசைனைப் பார்த்துக்கொண்டே இருந்தால், டெல்ஸ்ட்ரா டவர் மீது ஏறி நின்று கீழே குனிந்து பார்ப்பது போல ஒரே தலை சுற்றல் ஏற்படுத்துகிறது.

    அப்படியே கண்ணைக்கட்டுது;

    அருமையான டிசைன் தான். நீங்கள் எது கொடுத்தாலும் அது அருமையல்லவோ!

    ReplyDelete
  10. நிறைய விவரங்கள்-படங்கள். அருமை ஆஸ் யூசுவல்...!

    ReplyDelete
  11. இராஜராஜேஸ்வரி! எந்த விஷ்யம் தொட்டாலும்,நுனிப்புல் மேயாமல் ஆழ முழுகி முத்தெடுக்கும் உங்கள் உழைப்பு ஆச்சரியம் அளிக்கிறது. அற்புதமான படங்கள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அழைத்துச் சென்ற ஆஸ்திரேலிய சுற்றுலாவிற்கு நன்றி... :)

    ReplyDelete
  13. அரிய படங்களும் தகவல்களும்... ரெம்ப நன்றிங்க...last one...simply superb

    ReplyDelete
  14. Nisha SubramanianMay 21, 2011 at 8:50 AM

    Details about Canberra's Telstra tower is so true.. I am waiting to visit the place sometime soon :)You should be here sometime soon too:)
    Good work!! :)

    ReplyDelete
  15. ;)

    அச்யுதா!

    அனந்தா!!

    கோவிந்தா!!!

    ReplyDelete