Saturday, October 1, 2011

அருளும் ஆலத்தியூர் அனுமன்





கேரளமாநிம் ஆலத்தியூரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் 
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். 

கோயிலின் முலஸ்தானத்தில் ராமபிரான் சீதையில்லாமல் 
தனி தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.

சீதையை தேடிப்போகும் தனது உத்தம பக்தனான அனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுத்து, அதைக் கேட்கும் தோற்றத்தில் தான், மூலஸ்தானத்தில் பக்கத்தில் அமைந்துள்ள கோயிலில் அனுமான் வீற்றிருக்கிறார். 

ராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஆஞ்சநேயருக்கு முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியை அருளியிருக்கிறார்கள்..

சீதையை கண்டுபிடித்துவர ராமர், அனுமனிடம் சீதையைப்பற்றி கடந்த கால ரகசியம் சொல்லும் போது,அதைக்கேட்காமல் இருப்பதற்காக தம்பி லட்சுமணன் சிறிது தூரம் மாறி நிற்கும் இடத்தில் லட்சுமணனுக்கு ஒரு கோயில் இருக்கிறது.

alathiyur hanuman swami temple tirur malappuram


 சீதையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், ..கல்லில் கட்டிய திடலை தாண்டினால் அவர்களது ஆரோக்கியம் பாதுகாத்து ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கை.  குழந்தைகள் இரவில் தூங்கும் முன் "ஆலத்தியூர் அனுமானே நிம்மதியாக தூங்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.
Hanuman Jayanti Graphics and Scraps
விநாயகர், ஐயப்பன், துர்காபகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகிய தெய்வங்கள் தனி தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். 

சீதையைத் தேடி புறப்பட்ட அனுமன் சாப்பிடுவதற்காக ராமர், அவல் கொடுத்து அனுப்பினார். 

இதன் நினைவாகத்தான் இன்றும்  அனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.  
அவல் நைவேத்தியம் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது.
Desktop wallpaper god hanuman
 ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அனுமன் தன்னலமில்லாத வீரனாக, ராம பக்தனாக திகழ்ந்தார். 

சீதாப்பிராட்டியை மீட்டு வருவதற்காக அவர் ராமரிடம் எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தார். 

அனுமான் தனது பலத்தைப்பற்றியோ, ராமருக்காக தான் செய்யும் தொண்டைப்பற்றியோ யாரிடமும் பெருமை பேசியது கிடையாது.

ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனும் அவனது ராஜ்ஜியம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக முடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். \ 

மிகப்பெரிய சாதனைகளை செய்த அனுமானோ ராமரிடம் எதுவுமே கேட்க வில்லை. 

சீதை தொடுத்த முத்துமாலையை கூட அனுமான் பரிசாக ஏற்றுக்கொள்ளவில்லை. 
இதையெல்லாம் பார்த்த ராமர், ""நீ எனக்கு செய்த உதவிக்கான நன்றிக்கடனை நான் எப்படி திரும்பச்செலுத்துவேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே எல்லோரும் உன்னையும் வணங்குவர். எங்கொல்லாம் எனது கோயில் இருக்கிறதோ, அந்தக்கோயிலில் எல்லாம் முதலில் உனது சிலை வைக்கப்பட்டு, முதலில் உன்னை வணங்கிய பின்னரே என்னை மக்கள் வணங்கட்டும்'' என்று அருளாசி செய்தார். 
எனது பெயரை யார் உச்சரித்தாலும், எனக்கென யாராவது கோயில் கட்டி என்னை வழிபட்டாலும் அவர்களுக்கும் தங்களே அனுக்கிரகம் புரிய வேண்டும். என வரம் கேட்டவருக்கு  ராமரும்  அருளினார்.... 

 "ராமா' என்று யார் சொன்னாலும் , ஸ்ரீ ராமஜெயம் எழுதினாலும் ஓடி அருள்பாலிக்கிறார் அனுமான். 
Hanuman
இறைவனிடம் பக்தி மட்டுமே செலுத்தி பிரதிபலன் பாராமல் இருந்தவர் அனுமன். 

ராமாயணத்தின் நாயகன் ராமனின் வலதுகையாக திகழ்ந்தவர்அனுமான். 


அமாவாசை தினத்தில் அவதரித்தார். எனவே இவரை ஆடி அமாவாசை தினத்தில் வழிபட்டால் பல மடங்கு புண்ணியம் நமக்கு கிடைக்கும்.  

அனுமானை சிவனின் அவதாரம்   வாயுபகவானுக்கும், ஆஞ்சனாதேவிக்கும் பிறந்தவர்.  

பவனசுதன், பவனகுமார், மகாவீரர், மருத்சுதன், ஆஞ்சநேயன், பஜ்ரங்கபலி என்ற பெயர்களும் உண்டு
Hanuman Jayanti Glitters- Click to get more


Animated Spirits Fire Hanuman
அரக்கன் அனுமனின் வாலைத்தான் தீவைத்தான்
அனுமன் தீவைத்தான் இலங்கையின் தீவைத்தான்
Hanuman Jayanti Glitters- Click to get more
Hanuman.jpg


Desktop wallpaper god hanuman
 ,ஆஞ்சனேயர், FRUITS - VEGETABLES ALANKARAM. JAI HANUMAN!

PAPERCUP GANESHA, HYDERABAD


JAI GANESHA!!!LOKPAL BILL GANESHA-------

36 comments:

  1. மலை வீழ் நீர்வீழ்சியும்
    மலை தூக்கு அனுமனும்
    வலை வழியே தருகின்றீர்
    வரலாறும் தரு கின்றீர்
    நிலை யான புகழ்தன்னே
    நித்தமே பெறுகின் றீர்
    விலையி்லா மணிச் சரத்தை
    விதவிதமாய் தரு கின்றீர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. படங்களும் பதிவும் வழ்க்கம்போல நல்லா இருக்கு. தினசரி எப்படி பதிவு போட முடியுது?

    ReplyDelete
  3. श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !

    ”அருளும் ஆலத்தியூர் ஆஞ்சனேயர்”
    எல்லாப்படங்களும், விளக்கங்களும் கண்டு களித்தோம். அருமையான தரிஸனத்தில் மெய் மறந்து போய் இருக்கின்றோம். மீண்டும் பிற்பகல் வருவோம்.

    சந்தோஷத்தின் எல்லை ...
    உச்சக்கட்ட சந்தோஷம்!!

    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !
    श्री राम जयराम जयजय राम !

    ReplyDelete
  4. சகோதரி இடுகை சிறப்பு என்றால் படங்கள் சூப்புரோ சூப்பர் - மிக அருin இறை அருள் கிட்டட்டும்.. வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  5. அனுமனைப்பற்றிய செய்திகள் படங்கள்
    எல்லாம் அருமை. நீங்கள் படங்களை சிரத்தை எடுத்து போடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. படங்களும், பதிவும் அசத்தல்..
    நன்றி..

    ReplyDelete
  7. ஆஹா எடுத்ததுமே ஆஞ்சநேய பெருமாள் அலங்கார கோலம்...

    அது தரிசித்துவிட்டு வந்தால் அனிமேஷன்ல ஆஞ்சனேயருக்கு ராமர் அருள்பாலிக்கும் இடம்...

    அதன்பின் ஆஞ்சநேயரின் சாகசங்கள், வாலில் தீவைத்து அந்த புகை கூட அரக்கனைப்போல் முறைப்பது....

    ராமர் சீதை முன்பு நின்று ராமசீதா சீதாராம் சீதாராம் என்று தப்ளாக்கட்டையுடன் மந்திரம் ஜெபிப்பது....

    ராம லக்‌ஷ்மணர்களை இரு தோளில் வைத்து பின்புறம் நதி பெருகும் காட்சி....

    சஞ்சீவி மலையை அலேக்காக தூக்கிக்கொண்டு பறந்து போகும் காட்சி...

    யோகாஞ்சனேயர் ஜெய் பஜரங்கபலி, நெஞ்சை பிளந்து காட்டிய ஆஞ்சநேயர் அருமையான அனிமேஷன் காட்சிகளால் மிளிர்கிறதுப்பா பகிர்வு...

    சீதையை கண்டு வர அனுமனிடம் ரகசியம் சொல்வது போல் அமைந்த காட்சியை விளக்கும்போது நாம் அந்த காட்சியை கண்முன் நிறுத்தி பார்க்கிரோம்....

    பேப்பர் கப் வினாயகர் அசத்தல்பா...பிரம்மாண்டமாக இருக்கிறது அலங்காரமும்..

    லோக்பால் பில் கணபதி மூக்கு கண்ணாடி போட்டுக்கிட்டு ஜம்முனு இருக்கார்..

    இன்றைய பகிர்வு என் அம்மாவுக்கு ஜாக்பாட் பம்பர் பரிசு போல...

    அம்மா ஆஞ்சநேய பக்தை. அதனாலேயே என் மூத்த மகனை அஞ்சான் அஞ்சான் என்று தான் கூப்பிடுவாங்க அதுவே வீட்டில் எல்லோரும் டு கூப்பிடும் பெயராக நிலைத்துவிட்டது...

    அன்பு நன்றிகள்பா இன்றைய தரிசனத்திற்கு...

    ReplyDelete
  8. தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது

    ஜெய் வீர சூர பரக்கிரம ராமபக்த ஆஞ்சனேய மஹாபலசாலிக்கு
    அருமையான படங்கள் நல்ல விஷ்யங்கள் நன்றி.

    ReplyDelete
  9. ஆஞ்சநேயர் அருள். அருமை.

    ReplyDelete
  10. முதல் படத்தில் காட்டியுள்ள பெருமாள் அலங்காரத்தில் உள்ள ஹனுமாரை, நானும் பெங்களூருக்கு சமீபத்தில் மனக் கலக்கத்துடன் சென்ற போது (அதுவும் ஒரு சனிக்கிழமை)திவ்ய தரிஸனம் செய்த ஞாபகம் வந்தது.

    அவரின் அருளும் தங்களின் எனக்கான விசேஷப் பிரார்த்தனைகளும் அல்லவா என் மனக்கலக்கத்தைப் போக்கி கடைசியில் மன நிம்மதியைக் கொடுத்தது.

    மறக்க மனம் கூடுதில்லையே!

    ReplyDelete
  11. குழந்தைகளுக்கு கெட்ட கனவுகள் வராமல் இருக்க

    அவல் நைவேத்யம் .. நினைத்த கார்யம் கைகூடுதல்

    யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் வல்லமை
    பெற்றவர் ஹனுமார்

    ’ராமா’ என்று யார் சொன்னாலும்,
    ”ஸ்ரீராமஜெயம்” எழுதினாலும் ஓடி வந்து அருள் பாலிக்கிறார் ஹனுமார்.

    நம்பிக்கையளிக்கும் அருள் வாக்குகள் அன்றோ!

    ReplyDelete
  12. பிறருக்குத் தீங்கு செய்தால் நமக்கே அந்தத் தீங்கு வந்து சேரும் என்பதை அழகாகக் காட்டுவதே, அனுமனின் வாலில் தீ வைத்த அரக்கர்களின் கொடிய செயலால் இலங்கையே தீப்பற்றி எரிந்த சம்பவம்.

    ReplyDelete
  13. காய்கள்+கனிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஹனுமான் விக்ரஹரம் ரொம்ப ரொம்ப ஜோர்.


    சில படங்கள் ஏற்கனவே பதிவிட்டிருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் பக்திப் பரவசரம் ஏற்படுத்தும் தோற்றமாகவே உள்ளன.

    புரட்டாசி சனிக்கிழமையான இன்று ஆலத்தியூர் வரை அழைத்துச் சென்று ஹனுமாரின் சிறப்பு தரிஸனத்துடன், சஞ்சீவி மலையைத் தூக்கி வருவது போன்ற மேலும் பல அழகிய படங்களையும் அள்ளித்தந்து அசத்தி விட்டீர்கள்.

    பேப்பர் கப் வினாயகர் நல்லதொரு கற்பனை வளத்துடன், பொறுமையின் சிகரமானவர்களால் மிகச்சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. அதைத் தேடிக் கண்டுபிடித்து எங்களுக்கும் காணச்செய்துள்ளது தங்களின் தனிச்சிறப்பு - மிக்க நன்றி.

    ReplyDelete
  14. கடைசி படத்தில் விநாயகருக்கு அன்னா ஹஸாரேயின் தொப்பியையும், மூக்குக் கண்ணாடியையும் அணிவித்து, லோக்பால மஸோதாவையும் கையில் கொடுத்துள்ளது, காலத்துக்கேற்ற நகைச்சுவையாக உள்ளது.

    ReplyDelete
  15. எத்தனை முறை ஸ்ரீராமாயணமோ, ஸ்ரீமத் பாகவதமோ, கேட்டாலும், பார்த்தாலும், படித்தாலும் ருசி மேல் ருசியாகவே உள்ளது. அதுவும் அழகான அந்த சுந்தரகாண்டம் கேட்கவே வேண்டாம். அதில் தானே நம் ஹனுமார் என்ற ஹீரோவின் எல்லாவிதமான அருமை பெருமைகளும் உணர்த்தப்படுவதாக உள்ளது.

    அதே போன்ற ருசியோ ருசி தான் உங்கள் அனைத்துப்பதிவுகளிலும் எனக்கு ஏற்பட்டு வருகிறது.

    நான் என்ன ஹனுமனா; என் நெஞ்சைப் பிளந்து என் உணர்வுகளை உங்களிடம் வெளிக்காட்ட!

    மிகச்சாதாரணமானவன், தானே.

    பாசத்துடன், நேசத்துடன், அன்புடன், பிரியத்துடன், பிரியாவிடை பெற்றுக்கொள்கிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    என் மனமார்ந்த ஆசிகள், வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள்.
    நன்றிகள்.
    vgk

    ReplyDelete
  16. @வை.கோபாலகிருஷ்ணன் said...
    எத்தனை முறை ஸ்ரீராமாயணமோ, ஸ்ரீமத் பாகவதமோ, கேட்டாலும், பார்த்தாலும், படித்தாலும் ருசி மேல் ருசியாகவே உள்ளது. அதுவும் அழகான அந்த சுந்தரகாண்டம் கேட்கவே வேண்டாம். அதில் தானே நம் ஹனுமார் என்ற ஹீரோவின் எல்லாவிதமான அருமை பெருமைகளும் உணர்த்தப்படுவதாக உள்ளது.

    அதே போன்ற ருசியோ ருசி தான் உங்கள் அனைத்துப்பதிவுகளிலும் எனக்கு ஏற்பட்டு வருகிறது./



    அருமையான சிரத்தையான அத்தனை கருத்துரைகளும் பதிவிற்கு மணிமகுடம் சூட்டிய உணர்வைப் பெறுகிறேன்.
    மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  17. புலவர் சா இராமாநுசம் said...
    மலை வீழ் நீர்வீழ்சியும்
    மலை தூக்கு அனுமனும்
    வலை வழியே தருகின்றீர்
    வரலாறும் தரு கின்றீர்
    நிலை யான புகழ்தன்னே
    நித்தமே பெறுகின் றீர்
    விலையி்லா மணிச் சரத்தை
    விதவிதமாய் தரு கின்றீர்

    புலவர் சா இராமாநுசம்/

    அருமையாய் கவிதையாய்
    கருத்துரை அற்புதமாய்
    தந்ததற்கு மனம் நிறைந்த
    நன்றிகளை உரித்தாக்குகிறேன் ஐயா!

    ReplyDelete
  18. Lakshmi said...
    படங்களும் பதிவும் வழ்க்கம்போல நல்லா இருக்கு. தினசரி எப்படி பதிவு போட முடியுது?/

    கருத்துரைக்கு நன்றி அம்மா.
    ஏதோ என்னால் இயலுகிற
    எளிய முயற்சி!

    ReplyDelete
  19. kavithai (kovaikkavi) said...
    சகோதரி இடுகை சிறப்பு என்றால் படங்கள் சூப்புரோ சூப்பர் - மிக அருin இறை அருள் கிட்டட்டும்.. வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress./

    கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. கோமதி அரசு said...
    அனுமனைப்பற்றிய செய்திகள் படங்கள்
    எல்லாம் அருமை. நீங்கள் படங்களை சிரத்தை எடுத்து போடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    வாழ்த்துக்கள்./

    வாழ்த்துக்களுக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. வேடந்தாங்கல் - கருன் *! said...
    படங்களும், பதிவும் அசத்தல்..
    நன்றி../

    கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  22. SANKARALINGAM said...
    ஆஞ்சநேயர் அருள். அருமை./

    கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  23. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. மஞ்சுபாஷிணி said...
    ஆஹா எடுத்ததுமே ஆஞ்சநேய பெருமாள் அலங்கார கோலம்...

    அது தரிசித்துவிட்டு வந்தால் அனிமேஷன்ல ஆஞ்சனேயருக்கு ராமர் அருள்பாலிக்கும் இடம்...

    அதன்பின் ஆஞ்சநேயரின் சாகசங்கள், வாலில் தீவைத்து அந்த புகை கூட அரக்கனைப்போல் முறைப்பது....

    ராமர் சீதை முன்பு நின்று ராமசீதா சீதாராம் சீதாராம் என்று தப்ளாக்கட்டையுடன் மந்திரம் ஜெபிப்பது....

    ராம லக்‌ஷ்மணர்களை இரு தோளில் வைத்து பின்புறம் நதி பெருகும் காட்சி....

    சஞ்சீவி மலையை அலேக்காக தூக்கிக்கொண்டு பறந்து போகும் காட்சி...

    யோகாஞ்சனேயர் ஜெய் பஜரங்கபலி, நெஞ்சை பிளந்து காட்டிய ஆஞ்சநேயர் அருமையான அனிமேஷன் காட்சிகளால் மிளிர்கிறதுப்பா பகிர்வு...

    சீதையை கண்டு வர அனுமனிடம் ரகசியம் சொல்வது போல் அமைந்த காட்சியை விளக்கும்போது நாம் அந்த காட்சியை கண்முன் நிறுத்தி பார்க்கிரோம்....

    பேப்பர் கப் வினாயகர் அசத்தல்பா...பிரம்மாண்டமாக இருக்கிறது அலங்காரமும்..

    லோக்பால் பில் கணபதி மூக்கு கண்ணாடி போட்டுக்கிட்டு ஜம்முனு இருக்கார்..

    இன்றைய பகிர்வு என் அம்மாவுக்கு ஜாக்பாட் பம்பர் பரிசு போல...

    அம்மா ஆஞ்சநேய பக்தை. அதனாலேயே என் மூத்த மகனை அஞ்சான் அஞ்சான் என்று தான் கூப்பிடுவாங்க அதுவே வீட்டில் எல்லோரும் டு கூப்பிடும் பெயராக நிலைத்துவிட்டது...

    அன்பு நன்றிகள்பா இன்றைய தரிசனத்திற்கு../.

    அம்மாவுக்கு நமஸ்காரங்கள்!
    அன்பு அஞ்சானுக்கு வாழ்த்துக்கள்!!
    அற்புதமாய் நிறைவாய் அளித்த கருதுரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  25. மிக மிக அருமையான பதிவு
    படங்களும் அதற்கான விளக்கங்களும்
    மலைப்பூட்டுகின்றன
    எப்படி இத்தனை தகவல்களையும்
    படங்களையும் சேகரிக்கிறீர்கள்
    மிக அழகாக தினப்படி தருகிறீர்கள்
    என ஆச்சரியமாக இருக்கிறது
    உண்மையில் நீங்கள் பதிவுலக அதிசயம்தான்
    மனமார்ந்த நன்றி வேறென்ன சொல்ல
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. தி. ரா. ச.(T.R.C.) said...
    தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது

    ஜெய் வீர சூர பரக்கிரம ராமபக்த ஆஞ்சனேய மஹாபலசாலிக்கு
    அருமையான படங்கள் நல்ல விஷ்யங்கள் நன்றி./

    ஆழ்ந்த அற்புதமான செறிவான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  27. Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்./

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  28. என்னால் இயலுகின்ற எளிய முற்கு தங்களின் நிறைவான பாராட்டுக்கள் உற்சாகம் அளிக்கின்றன். ம்னம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ----------------
    என்னால் இயலுகின்ற எளிய
    முயற்சிக்கு தங்களின் நிறைவான பாராட்டுக்கள் உற்சாகம் அளிக்கின்றன். ம்னம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  29. அஞ்சிலே ஒன்று பெற்றான் பற்றிய அருமையான பகிர்வு;சனிக்கிழமையை இனிதாக்கியது.நன்றி.

    ReplyDelete
  30. ஜெய் ஆஞ்சனேயா... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  31. உத்தம பக்தன் பற்றி அருமையான ஆன்மீக பகிர்வு... அனுமன் படங்களை பார்க்கும்போது தானாகவே மனசுத்தி ஏற்படுகிறது... ஜெய் ஹனுமான்

    ReplyDelete
  32. Fensatic Rajeswari.
    Pretty Animations.
    It is always happy viewing and hearing stories about hunuman and Ganesha.
    The papaercup Ganesha is very cute.
    Rajeswari, whenever i am not able to browse the computer, i am not worrying about my mails, but much worry about missing your posts.
    Now i am happy reading all posts.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  33. Fensatic Rajeswari.
    Pretty Animations.
    It is always happy viewing and hearing stories about hunuman and Ganesha.
    The papaercup Ganesha is very cute.
    Rajeswari, whenever i am not able to browse the computer, i am not worrying about my mails, but much worry about missing your posts.
    Now i am happy reading all posts.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  34. JAI HANUMAN ;)

    VGK

    ReplyDelete
  35. 1091+8+1=1100 ;)))))

    ஒரே பதில்தான் என்றாலும் உன்னதமானது. உணர்வு பூர்வமானது. ஆத்மார்த்தமானது. ஆனந்தம் அளிப்பது. நன்றிகள். ;)))))

    ReplyDelete