Sunday, December 23, 2012

சீனிவாசா .. கோவிந்தா ..





திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள் 
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா 

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யைஊற்றிவைத்தேன் 

என் மனம் உருகிடவே பாடி வந்தேன் 
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன் 


நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா 

உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே



ஆண்டாள் பாடிய தமிழ் வேதமாம் திருப்பாவை பாசுரங்கள்   திருமலையில், சுப்ரபாத சேவைக்குப் பதிலாக மார்கழி மாதம் முழுவதும் கோவில் அர்ச்சகர்கள், மூலவரின் முன், திருப்பள்ளி எழுச்சி பாடலாக பாடி, ஐதீக முறைப்படி பூஜை செய்கிறார்கள் என்பது  தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது .
 திருமலையில் கோவில் அர்ச்சகர்களில் ஒரு பிரிவினர், தினமும் அதிகாலை, 3:00 மணிக்கு, தெப்பக்குளத்தில் நீராடிய பின், நான்கு மாட வீதிகளில், ஆண்டாளின் பாசுரங்களை தமிழில் பாடி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். 

திருமலையில் மட்டுமல்லாது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வரும், சீனிவாசமங்காபுரம், அப்பளாய குண்டா, நாராயணவனம், நாகலாபுரம், நகரி, சத்திரவாடாவில் உள்ள பெருமாள் கோவில்களிலும், திருப்பள்ளி எழுச்சி பாடலாக திருப்பாவை பாசுரம் பாடப்படும்
திருப்பதி ஏழுமலையானுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.




14 comments:

  1. திருமலை சென்று தரிசனம் செய்த்ததுபோல் இருந்தது படங்களும் விமர்சனமும் அருமை

    ReplyDelete
  2. சிறப்பான படங்கள். விஷ்ணுக்கும் வில்வ அர்ச்சனை - தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து

    ReplyDelete
  4. திருவாதிரை சமயம் திருப்பதியில் வில்வ இலையால் அர்சசனை செய்யும் விஷயம் புதிதாக இருக்கிறது.
    அருமையான படங்கள்.

    ReplyDelete
  5. வைகுண்ட‌ ஏகாத‌சிக்கு ஏற்ற‌ ஏழும‌லையான் காட்சிக‌ள்.

    ReplyDelete
  6. கவியாழி கண்ணதாசன் said...
    திருமலை சென்று தரிசனம் செய்த்ததுபோல் இருந்தது படங்களும் விமர்சனமும் அருமை...//

    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete


  7. பழனி.கந்தசாமி said...
    ரசித்தேன்.//


    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  8. வெங்கட் நாகராஜ் said...
    சிறப்பான படங்கள். விஷ்ணுக்கும் வில்வ அர்ச்சனை - தகவலுக்கு நன்றி.

    சிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  9. Lakshmi said...
    படங்களும் பகிர்வும் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து ..

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் அம்மா ..

    ReplyDelete
  10. கோமதி அரசு said...
    திருவாதிரை சமயம் திருப்பதியில் வில்வ இலையால் அர்சசனை செய்யும் விஷயம் புதிதாக இருக்கிறது.
    அருமையான படங்கள். //

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  11. vasan said...
    வைகுண்ட‌ ஏகாத‌சிக்கு ஏற்ற‌ ஏழும‌லையான் காட்சிக‌ள். //

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  12. உங்க பக்கத்தில் வைகுண்ட ஏகாதசியன்று ஏழும‌லையானை நல்லதொரு தரிசனம் செய்தேன் மிக்க நன்றிகள். படங்கள் அருமை.

    ReplyDelete
  13. ஸ்ரீநிவாஸனுக்கும் கோவிந்தனுக்கு கோபாலகிருஷ்ணனின் வந்தனங்கள்.

    பதிவினை வெகு அழகாகக் கொடுத்துள்ள அம்பாளுக்கும் தான் ! ;)))))

    ReplyDelete